https://scontent.fyto1-2.fna.fbcdn.n...0c&oe=5EC02F96
Printable View
முல்லை ரவி எழுத்தில்...
நாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..
யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள்..
’’ஆமா இவரு பெரிய சிவாஜி..’’
தங்கைப் பாசத்தைப் பொழிய யாரேனும் வந்தால் நாம் சொல்வது "இவரு அப்படியே பாசமலர் சிவாஜி..."
தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு அந்த படத்தில் சிவாஜி அப்படி அசத்தினார்.
அதனால்தான் கே.பாலச்சந்தர் முதல் மணிரத்னம் வரையிலான ஜாம்பவான் டைரக்டர்களில் யாரைக்கேட்டாலும் அவர்களது டாப்டென் லிஸ்ட்டில் சிவாஜியின் பாசமலர் தவறாமல் இருக்கும்..
பாசமலர் படத்தை எடுத்தது நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகர் சந்தான பாரதியின் தந்தையுமான எம்ஆர் சந்தானம், இவரும் நடிகரே.
பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும் சிவாஜி போன்றவர்களுக்கு..
அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர் என்ற நாடகம்..
முன்னணி நடிகர்கள் இருவர் கடைசிநேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்கு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் அவரின் திரையுலக பயணத்திற்கே அது வெற்றிப்பாதையையும் அமைத்தது…
நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் கடைசி நேரத்தில், நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார்.
அரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள் தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற இளைஞன்.
90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் எம்ஜி ஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள், கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன. நாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு அந்த மராட்டிய சிவாஜியாகவே தெரிந்தார்..பெரியாரின் வாயால் கணேசன் என்பவர் அன்றைய தினமே "சிவாஜி" கணேசனாக மாறிப்போனார்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...e5&oe=5EC3366E
Thanks ..Palaniappan Subbu