-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். சினி தரவரிசை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் PrevNext அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார். நடிகை கண்ணாம்பா எம்.கே-. தியாகராஜ பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் (தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர். இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலிபாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார். இந்தப் படத்திற்கு டைரக்டராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப்படம் என்பதால் தானே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலிபாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார். இந்தப் படத்தை கண்ணாம்பா எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள். ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந் தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார். அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன் தான் மாப்பிள்ளை என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமண நாளும் வந்தது. தாலிகட்டும் போது தான் தெரிய வருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளை செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகிறது. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகிறது. இப்படி போகிறது இந்த படத்தின் திரைக்கதை. 'தாலிபாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்துக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர்., எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என். நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன. ஒரு நாள் இதே போன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுது தான் தெரிய வந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?- இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி. நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ்நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலிபாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார். படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள் என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்றார். கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.
Read more at: [https://tamil.filmibeat.com/news/nen...html)...Baabaa
-
ஓட்டுப் போட மாட்டோம்???!!!
-------------------------------------
எம்.ஜி.ஆர்., சந்தித்த அந்தத் தேர்தல்--
இரப்போர்க்கும்,,எதிரியாகி மறப்போர்க்கும்--
கொடுத்தபடி இருந்த எம்.ஜி.ஆரைக்
கெடுத்த படிப் பேசி,,தான் ஜெயிக்க வேண்டுகோள்
விடுத்தபடி வீதி வீதியாய் அலைந்த கருணா நிதி
அடுத்தபடி முதல்வர் தாமே என் அகம்கிழ்ந்தாலும்
படுத்த படிப் பறங்கி மலையார் வெற்றி மாலையை
தொடுத்த படி எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய--
1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல்
எம்.ஜி.ஆர் மேலுள்ளப் பற்றினால் தேர்தல் விதியே ஓரிடத்தில் மாறிய சம்பவத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்!
திருச்செந்தூர் பாராளுமன்றத்துக்கும்,,சேரன் மா தேவி சட்டமன்றத்துக்கும் அன்றைக்கு வாக்குப் பதிவு
திருச்செந்தூர் எம்.பிக்கு தனுஷ்கோடி ஆதித்தனும்-
சேரன் மா தேவி எம்.எல்.ஏவுக்கு பி.எச்-பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.!
கல்லிடக் குறிச்சியில் திலகர் வித்தியாலயா உள்ளிட்ட பத்து பூத்துகளில் காலையிலிருந்தே மக்கள் ஓட்டுப் போட குவிந்தவர்கள் வாக்களிக்க மறுக்கிறார்கள்??
அத்தனைக் கட்சி ஏஜெண்டுகளும் சமாதானம் சொல்லியும் மக்கள் ஏற்பதாயில்லை?
அப்படி என்ன அவர்களுக்குப் பிரச்சனை??
முதலில் பாராளுமன்றத்துக்கான ஓட்டைப் போட்டு விட்டு பிறகு சட்டமன்றத்துக்குப் போட வேண்டும்!
மரபே அது தான்!
இங்கே தான் மக்கள் வேறுபடுகிறார்கள்?
எங்க எம்.ஜி.ஆருக்கு இரட்டை இலையில முதலில் போட்டுட்டு,,அப்புறமா எம்.பி.க்கான ஓட்டப் போடறோம்??
தேர்தல் விதி அப்படி இல்லேங்க--அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கெஞ்சாதக் குறையாய் சொல்ல--
எங்களுக்கும் விதி பத்தித் தெரியுமுங்க. ஆனால் எங்க மவராசனுக்கு முதலிடம் கொடுக்க நாங்க விரும்பறோம்!
நீங்க மறுத்தா--
எம்.பி.க்கான காகிதத்தை அப்படியே பொட்டிலே போட்டுட்டு அப்புறம் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடறோம்?? மக்கள் கொஞ்சங்கூட
தாட்சண்யம் காட்டாது தீட்சண்யமாகக் கூற--
பதினோரு மணி வரைக்கும் இப்படியே நேரம் போக--
வேறு வழியின்றி,,அனைத்துக் கட்சி ஏஜண்டுகளும் தங்களுக்குள் கலந்து பேசி அந்தக் குறிப்பிட்ட பூத்துகளில் மட்டும்,,மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்க வகை செய்ய வேண்டியக் கட்டாயம்???
தருகின்ற வெற்றியில் மட்டுமல்லாது ஓட்டைப் பெறுகின்ற வரிசையிலும் --
முதலாவது இடம் எங்கள் எம்.ஜி.ஆருக்கே!--இப்படி-
தமிழகத்தில்,,--இல்லை இந்தியாவில்-,,-இல்லையில்லை உலகத்திலேயே எந்த ஒரு தலைவனுக்காகவாவது நடந்திருக்குமா???இல்லை இனி நடக்குமா???!!!.........vtr.........
-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும்
என் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்...
*****************************************
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..
******************************************
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..?
மாபெரும் வீரம் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....
இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே. வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு,
ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்..இருப்பார்..!......Baabaa
-
#கேமராவையும் #தாண்டிய #கண்கள்
மக்கள்திலகம், பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களுக்கு மக்கள்திலகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம். ஆனால் தலைமை ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்து அமைதியாக இருந்தனர்... மாணவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மக்கள்திலகம், தன்னுடன் புகைப்படமெடுக்க பேட்ச் பேட்சாக அனுமதி வாங்குகிறார்...
முதலில் சில மாணவர்களுடன் எம்ஜிஆரை வைத்து புகைப்படமெடுக்கிறார் போட்டோகிராபர்...
எம்ஜிஆர், போட்டோகிராபரிடம், 'இப்ப நீங்க எடுத்த போட்டோ சரியா வரல...இன்னொரு போட்டோ எடுங்க...' என்கிறார்...இன்னொரு போட்டோவும் எடுக்கப்பட்டது...
ஆனால்,
போட்டோகிராபருக்கு வியப்பு....'பார்க்காமலேயே சரியா வரலைன்னு சொல்றாரு...!!!'
போட்டோக்களைப் ப்ரிண்ட் போட்ட அந்த போட்டோகிராபருக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்...முதலில் எடுக்கப்பட்ட போட்டோவில், 'எம்ஜிஆரின் முகமே விழாமல் கழுத்துதான் தெரிந்தது...!'
அந்த போட்டோகிராபர் வியப்பின் உச்சிக்கே போய்விட்டார்...
ஒரு புகைப்படம் எடுக்கப்படும்போதே, அது எடுக்கப்படும் கோணத்தை வைத்து, 'அந்தப்படம் சரியாக வராது...' என்று உறுதியாகச் சொல்லுவதென்பது சாதாரண விஷயமா என்ன?
அதற்கு எவ்வளவு அபார ஆற்றல்!!!
எந்தளவு நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு இருக்கணும்...!!!
வாத்தியார்னா சும்மாவா!!!.........bsm...
-
புரட்சித் தலைவரால் எனக்கு கிடைத்த
மதிப்பிற்குரிய அண்ணன் திரை உலகம்
துரைராஜ் மகன் பொன்ராஜ் :
1962 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால்
தொடங்கி வைக்கப்பட்டது திரை உலகம் பத்திரிக்கை.அதன் ஆசிரியர் மதிப்பிற்குரிய
ஜி.கே துரைராஜ் அவர்கள் புரட்சித் தலைவரின் அதி தீவிர அபிமானி.புரட்சித் தலைவர் மறையும்வரை திரை உலகம் பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தியவர்.
அதன் பிறகு எத்தனை பேரோ வற்புறுத்தியும்
புரட்சித் தலைவரை எழுதிய கைகள் வேறு எவரையும் எழுதாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார்.அப்பேற்பட்ட நல்லவரின் புதல்வர் என் மதிப்பிற்குரிய அண்ணன் துரை.பொன்ராஜ் அவர்களின் நட்பு சில நாட்களுக்கு முன் கிடைத்தது.அவருடைய அன்பு என்னை நெகிழச் செய்து விட்டது.மிகவும் இயல்பாக எளிமையான அன்பே உருவான வார்த்தைகளால் என்னிடம் உரையாடி அவர் அன்பால் என்னை கட்டிப்போட்டு விட்டார்.அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய அய்யா திரை உலகம் துரைராஜ் அவர்களின் எழுத்து புரட்சித் தலைவரின் புகழுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அவருடைய குடும்பத்தின் புதல்வர் எனக்கு அன்பான அண்ணணாக அமைத்துக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு
என் வணக்கங்கள்!!
புரட்சித் தலைவர் புகழின் ஏணியில் இருந்தபோதும் தனக்காக எந்த பெரிய எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கோரிக்கை வைக்காமல் புரட்சித் தலைவர் அன்பே போதும் என வாழ்ந்த அந்த தன்னலமற்ற
நல்லவரின் குடும்பத்திற்கு புரட்சித் தலைவரின் பக்தன் என்ற முறையில் ஒரு
சல்யூட்.....
-
தாங்கள் கருத்துகள் உண்மையானவை....... உண்மையிலேயே நடந்து முடிந்தவை .......அதுமட்டுமல்ல அந்த பத்திரிக்கையாளர் என்று கிடையாது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சித்தலைவரின் மிக நெருங்கிய நண்பர் ஆவார் .......புனிதமான நட்பு அவர்களுக்கிடையே உண்டு ........ஆனாலும் துக்ளக் பாத இதழில் புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1983-ம் ஆண்டு முதல் நான் அப்பொழுது மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்....... ஒவ்வொரு மாதமும் துக்ளக் பத்திரிக்கை வாங்கி படிப்பேன் .....ஏனென்றால் என் தந்தையார் துக்ளக் பத்திரிக்கை என்றால் மிகவும் உயிர் .......மிகவும் ஆர்வமாக ஒரு எழுத்து விடாமல் படிப்பார்....... எனது தகப்பனாருக்கு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை மிகவும் பிடிக்கும் .........எல்லாம் ஒரு ஜாதி பாசம் தான்......... 1986ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சி கீதை என்ற பெயரில் தனது துக்ளக் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதுவார் நமது பொன்மனச்செம்மல் அவர்களை செய்யாத கேலி கிடையாது ........பண்ணாத கிண்டல் கிடையாது......... புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார் ........பகவான் கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல ஒரு தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உபதேசிப்பது போல அந்த புரட்சி கீதை அமைந்திருக்கும் ............ஒருவகையில் பார்த்தால் துக்ளக் ஆசிரியர் அவர்களின் நகைச்சுவை மனப்பான்மை பாராட்டுக்குரியது........... என்றாலும் புரட்சித்தலைவர் அவர்களைத்தானா அப்படியெல்லாம் விமர்சிக்கவேண்டும்........ கூடவேகூடாது........ புரட்சித்தலைவர். அல்லாமல் வேறு ஒருவர் முதலமைச்சராக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு .........புரட்சித் தலைவர் அவர்கள் பெருந்தன்மையுடன் சகிப்புத்தன்மையுடன் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்துக் கொண்டார் .........அது அவரின் பெருந்தன்மைக்கு அடையாளமாகவும் திகழ்ந்தது ...........அது மட்டுமல்ல ஒரு காலத்தில் தன்னை படுகொலை செய்ய முயற்சித்த அந்த தீய சக்தியை அவர் பதவிக்கு வந்தபிறகு பழிவாங்கவே கிடையாது.......... அந்த தீய சக்தி 17 9 1979ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தது......... மிகச் சிறந்த நடிப்பு திறமை கொண்ட அந்த தீய சக்தி ஏன் அந்தக் கொடிய செயலை செய்தது ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பது தெரியவில்லை ......பொன்மனச் செம்மலின் பெருந்தன்மை உயர்ந்த மனப்பான்மைக்கு அவரின் சொந்த வாழ்வில் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்....... பொன்மனச்செம்மல் அவர்களின் உயர்ந்த வரலாற்று சம்பவங்களை தொடர்ந்து முகநூலில் பதிவு செய்யும் நெல்லை மணி அவர்கள் உண்மையில் நெல்லை மாணிக்கம் விலைமதிப்பு மிகுந்த ரத்தினம்...... புரட்சித்தலைவரின் ஆசீர்வாதத்தால் பரம்பொருளின் அருள் கடாட்சத்தால் அந்த சகோதரர் தனது சேவையை தொடர்ந்து நடத்துவார் .......நிறைய செய்திகளை இனிய சம்பவங்களை முகநூலில் பதிவு செய்யுமாறு பொன்மனச் செம்மலின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்........ வாழ்க வளமுடன்...Sri.Kann
-
எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா.. ஸ்டாலின்
அன்பழகன் யாரு..??
நாவலர் நெடுஞ்செழியன் யாரு..??
சத்தியவாணி முத்து யாரு..??
EVKS சம்பத்..??
சாதிக்பாட்சா யாரு..??
மதியழகன் யாரு..??
இவங்க எல்லோருமே உன் அப்பா கூட இருந்தவங்க தானே.. இவங்களை எல்லாம் உறவுமுறை வச்சி இப்போ பேச வேண்டியது தானே..
அது என்ன எம்ஜிஆர் மட்டும் இப்போ பெரியப்பா வா தெரியறாரு..
உன் அப்பா கட்சியை விட்டு நீக்கனப்போ தெரியலே.. அவர் படங்களை ஓடவிடாம தடுத்த போது தெரியலே..
அவரை மலையாளத்தான், அட்டைகத்தி வீரன்.. இன்னும் சொல்ல கூடாத வார்த்தைகளில் அசிங்கமா ,கேவலமா முரசொலியில் எழுதிய போதும் அவர் பெரியப்பா ன்னு தெரியலே..
இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது இப்போ அவர் பெரியப்பா ன்னு ஞாபகம் வந்திடுச்சி.. நீ பேசற பேச்சை எல்லாம் பத்து வயசு பையன் கேட்டா கூட அட சே.. நீ எல்லாம் ஒரு ஆளுய்யா.. கேவலம் பதவிக்காக கண்டபடி பேசி திரியறே.. இந்துக்களுக்கு நாங்க எதிரானவனங்க இல்லை ன்னு சொல்றே.. வேல் கையிலே பிடிச்சிட்டு விபூதியை வாயிலே போட்டுக்கறே.. பதவி மோகம் உன்னை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பார்த்தாயா..?? ன்னு காறி துப்புவான்..
அதுசரி.. அப்பாவுக்கு பிறகு தானே பெரியப்பா.. உன் அப்பவே அரசியலில் ஜகஜாலக்கில்லாடி ஆச்சே.. 6 தடவை முதல்வராக வேற இருந்து இருக்காரு.. அவர் போட்டோ காண்பித்து இவர் என் அப்பா நான் அவர் பிள்ளை , என் அப்பா கருணாநிதி, வல்லவரு, நல்லவரு.. அவரை மாதிரியே நானும் ஆட்சி செய்வேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ன்னு கேட்க வேண்டியதுதானே..
அதை விட்டு விட்டு.. இன்னொரு கட்சியோட நிறுவனர்.. அதுமட்டுமல்லாம திமுக அழிக்கவும், ஒழிக்கவுமே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர்.. அவர் போட்டோ காண்பித்து கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம.. எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது.. தலைவரே உங்களாலே ன்னு நான் கேட்கலே உங்க ஊபிஸ் கேட்பாங்க... Albert Paul
-
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்கள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்
இவற்றில் மூன்று இடங்களில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை அவர் ஏற்க மறுத்து விட்டார் சில காரணங்களால்
நம் இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை யும் ஏற்க மறுத்து விட்டார் ஏன் என்றால் அதில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
எனது தாய் மொழியான தமிழ் மொழியின் எழுதினால் மட்டுமே அந்த விருதை நான் பெற்றுக் கொள்வேன் என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டார்
நம் தாய் மொழியான தமிழ் மொழியின் மீது நம் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றுதலும் வைத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்
பட்டம் கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் பலரும் இருகும் நிலையில்
தனக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை தனது கொள்கையின் காரணமாக ஏற்க மறுத்து மறுத்துள்ளார் நம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
வள்ளல் பெருமான் புரட்சித் தலைவா வணங்குகிறேன் இறைவா ... Sudalai Mani
-
இரங்கல் செய்தி*
-----------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* மெய் காப்பாளரும் , தனி உதவியாளரும்*ஆகிய திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று பிற்பகல்*3 .15 மணியளவில்* காலமானார் என்கிற*செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய* எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.* நல்லாசியும் அவருக்கு*துணை புரியட்டும் .*மறைந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின்*குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை*சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களை யும்*தெரிவித்து*கொள்கிறோம் .
-
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
மறு வெளியீடு தொடர்ச்சி.........
_________
29/1/21 முதல் புளியங்குடி கண்ணாவில் எங்க வீட்டு பிள்ளை- தினசரி 4 காட்சிகள்
31/1/21 முதல் தூத்துக்குடி சத்யா வில்
பல்லாண்டு வாழ்க
தினசரி 3 காட்சிகள்
30/1/21 முதல் பழனி
சந்தான கிருஷ்ணா வில் அடிமைப்பெண்
தினசரி 4 காட்சிகள்
: தகவல் உதவி திரு. வி.ராஜா,நெல்லை.
செவ்வாய் முதல் (2/2/21) திருச்சி முருகன் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி.