-
"ம" -* வரிசை திரைப்படத்தில் நான்காவது மிகப்பெரிய வெற்றி காவியமாக மலைக்கள்ளன் உருவெடுத்தான். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன்*
4 காவியங்களில் முதன்முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் "ம" வரிசையில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படங்கள் ஆகும்.
தமிழகத்தில் மலைக்கள்ளன் திரைக்காவியம் முதல் வெளியீட்டில் 38 திரையரங்கில் 50 நாட்களை கடந்து மறு வெளியீட்டில் 27 திரையரங்கில் 50 நாட்களை கடந்தது.... இதில் 10 திரையரங்குகளில் 12 வாரங்களுக்கு மேல் ஒடி சாதனை படைத்தது.10 திரையரங்குகளுக்கு மேல் 10 வாரங்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டியது.*
தமிழகம் கர்நாடகா கேரளா சித்தூர் சேர்த்து மொத்தம் 75 திரையரங்குகளுக்கு மேல்**
50 நாளை முதன் முதலில் வெற்றி கொண்ட திரைக்காவியம்.... தமிழ் சினிமாவில் மலைக்கள்ளன் ஆகும்.
கோவை கர்னாடிக் 20 வாரங்கள் திருச்சி வெலிங்டன் 19 வாரங்கள் சேலம் ஓரியண்டல் 17 வாரங்கள் நெல்லை ரத்னா 105 நாட்கள் இலங்கை சென்ட்றல் 105 நாட்கள்.
மற்றும் ஈரோடு 92 நாட்கள் திண்டுக்கல் 96 நாட்கள் விருதுநகர் 91 நாட்கள் வேலூர் 84 நாட்கள் தஞ்சை 86 நாட்கள் குடந்தை 84 நாட்கள் புதுச்சேரி 85 நாட்கள் பெங்களூர் 12 வாரங்கள்.
இந்திய கலைத்துறையில் 1954 ம் ஆண்டின் சிறந்த. படமாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தென்னிந்திய காவியம் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் ஆகும்.
எந்த நடிகரும் தன் மொழியின் புகழை திரையில் பதித்த வரலாறு கிடையாது. ஆனால் மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படத்தில்....* டைட்டிலில் வரும் பாடலான "தமிழன் என்றொரு இனம் உண்டு" என்ற பாடல் தமிழுக்குப் பெருமை சேர்த்து தமிழ் இனத்தின் முதல் மகனாக தமிழ்த்தாயின் தலைமகனாக* மலைக்கள்ளன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பெயர் பெற்றார்.
எல்லாக் காலத்திலும் ஏற்றதொரு பாடலாக எங்கும் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் வெற்றிப் பாடலாக "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் சாகாவரம் பெற்ற பாடலாகும். அன்று முதல் இன்று வரை என்றுமே திகழும் ஒப்பற்ற பாடலாகும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் நடிகை பானுமதி* நாயகியாக நடித்த முதல் திரைப்படமாக மலைக்கள்ளன் திரைப்படம் வெளிவந்தது.
1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம் தென்னக மெங்கும் திரையிடப்பட்ட பொழுது மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைக்காவியம் அந்த நேரம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு நான்கு ஐந்து வாரங்கள் கடந்தது*..........
-
குறிப்பாக 1958 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் நாடோடி மன்னன் ஓடிய சமயத்தில் நூற்றுக்கண க்கான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது மிகப்பெரிய சாதனையாகும்.
மலைக்கள்ளன் திரைக்காவியம் சமீபத்தில் 2018 ல் மதுரை, கோவை ஈரோடு என பல ஊர்களில் திரையிடப்பட்டது.* மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 7 நாட்கள் ஓடி ஒரு லட்சத்திற்கும் மேல்* வசூலை வாரிக் கொடுத்தது.
1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே பொன் போன்ற சாதனைகளை எப்பொழுதும் பதித்துக்கொண்டு வரும் ஒரே காவியம்.... மக்கள் பேரரசின் மலைக்கள்ளன் மட்டுமே ஆகும்.
மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் திரைப்படம் கடந்த 66 ஆண்டு களுக்கு மேல் பல சாதனைகளை படைத்து வந்து உள்ளது.*
இது போன்ற ஒரு திரைப்படம் 1954 ஆம் ஆண்டுக்கு முன்* சாதனைகளை செய்ததில்லை. அது வரை எந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தும் சாதனைகள் தொடரும்..........
-
கலக்குது*எம்.ஜி.ஆர். வீடியோ*
-------------------------------------------------
திரை மலர் - வாட்ஸ் அப் செய்தி*
----------------------------------------------------
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை 25 பாகங்கள் கொண்ட வீடியோ* ஆவணமாக மாற்றி* , யூ ட்யூப்* உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்* ஜெ.எம்.பஷீர் என்பவர் .* இவர் எம்.ஜி.ஆரிடம் உடையலங்கார கலைஞராக பணியாற்றிய எம்.எம்.ஜமாலின் மகன் .
பஷீர் பகிர்ந்த தகவல்*
-------------------------------------
எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை .* ஆனால் அவரை பற்றி அப்பா நிறைய* சொல்வார் .* அதை கேட்டு கேட்டு, எம்.ஜி.ஆர்.ரசிகனாகவே வளர்ந்தேன் .* இதனால், எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை விரும்பும் வகையில் வீடியோ*ஆவணமாக மாற்ற ஆசை வந்தது .**
எம்.ஜி.ஆர். பற்றிய பல புத்தகங்களை படித்தேன் . மணவை* பொன் மாணிக்கம் எழுதிய எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். , புகழ் மன செம்மல் எம்.ஜி.ஆர். என்ற இரு புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்ய சம்பவங்கள் என்னை கவர்ந்தன .அவற்றைத் தொகுத்து 25 பாகங்கள் கொண்ட எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று*வீடியோ ஆவணத்தை 60 நாட்களில் தயாரித்தேன் .* மொத்தம்* 5 லட்சம் ருபாய் செலவு .
ஹிஸ்டரி ஆப்* லெஜெண்ட்* எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில்* இந்த வீடியோ ஆவணத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டேன் .* அமோக வரவேற்பு வந்திருக்கிறது .* பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது .எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்களும் , பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன .* இலங்கை, சிங்கப்பூர், மலேசியா , ஜப்பான் , துபாய், அமேரிக்கா என பல வெளிநாடுகளில் இருந்தும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்* எனக்கு போன் செய்து வாழ்த்துகிறார்கள் .கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மனசோர்வை நீக்கவும் , நம்பிக்கை உற்சாகத்தை பெறவும் எம்.ஜி.ஆர். ஆவண வீடியோக்கள்* உதவுவதாக கூறுகிறார்கள்.* இது எனக்கு மிகுந்த மன நிறைவையும் சந்தோஷத்தையும் தருகிறது .
-
எம்.ஜி.ஆர் மற்றும் மம்மூட்டியின் இந்த படம் சி.ஜி.டி.யுவின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை துவக்க எம்.ஜி.ஆரின் வருகையின் போது நான் எடுத்தது. (கொச்சின் துரைமுக தொழிலாளி யூனியன்). மட்டஞ்சேரியில் தொழிற்சங்கம் மிகவும் பிரபலமாக இருந்தது. மம்மூட்டியின் மாமனார் அந்த சுயாதீனமான தொழிற்சங்கத்தின் முக்கிய முன்னணி அதிகாரிகளில் ஒருவர்.
நான் எம்.ஜி.ஆரின் பெரிய ரசிகன். எம்.ஜி.ஆரை நான் சந்திப்பது இதுவே முதல் முறை. அவர் சென்னை (சென்னை) இலிருந்து கொச்சின் (பழைய விமான நிலையம்) வந்தார். பெரும்பாலான பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அவரது வருகையின் படங்களை எடுத்து மற்ற வேலைகளைச் செய்ய முன்வந்தனர். அந்த நேரத்தில் நான் ஒரு சுயாதீனமான புகைப்படக் கலைஞராக இருந்தேன், எம்.ஜி.ஆருடன் இருக்க இந்த வாய்ப்பைப் பெற்றேன், இந்த புராணக்கதையைப் பார்த்து அங்கே நின்றேன். அவர் வந்தவுடன், அமைப்பாளர்கள் அவரை வெலிங்டனில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். எம்.ஜி.ஆருடன் விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில், விமான நிலையத்திற்கு முன்னால் இருந்த தங்கள் குடியேற்றத்திற்கு முன்னால் கூடியிருந்த தமிழ் தொழிலாளர்களை பார்த்து அவர் கை அசைத்தார்.
சுற்றியுள்ள ஒரே நபர் நான், அவருடன் தமிழில் தொடர்பு கொள்ள முடியும், அது "எனக்கு தெரிந்த அளவுக்கு தான் தமிழ்". எனவே, அவர் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். எனக்கு என்ன புரிந்ததோ ...பதிலளித்தேன். அவர் ஒரு மென்மையான கவனமுள்ள மனிதர்… சில மணிநேர அறிமுகத்திற்குப் பிறகு, அவரின் வெள்ளை ஃபர் தொப்பியை மற்றும் அவரது கண்ணாடியையும் அகற்ற முடியுமா என்று நான் பணிவுடன் கேட்டேன்… அவரது சுருள் முடிகளையும் கண்களையும் பிடிக்க எனக்கு ஆர்வமாக இருந்தது… அவருடைய அரசியல் படங்கள் பெரும்பாலானவை இந்த சின்னமான சின்னங்கள். அவருள் இருக்கும் கலைஞரை புகைப்படம் எடுப்பதே எனது கனவு… அவர் சிரித்தார்… ஒரு சிறிய மௌனத்திற்கு பிறகு , “சென்னைக்கு வாருங்கள்” என்றார். நான் ஒருபோதும் சென்னைக்குச் செல்லவில்லை அவரை மீண்டும் பார்க்கவில்லை.
புகைபட கலைஞர் : அப்துல் காலம் ஆசாத்.........
-
புரட்சி நடிகரின் புரட்சித் தயாரிப்பான முதல் காவியம் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் நாடோடி மன்னன்* திரைப்படத்திற்குப் பின் எந்ததொரு திரைப்படமும் வெளிவந்து நாடோடி மன்னன் பெற்ற மகத்தான வெற்றியை . ஆறு ஆண்டுகள் (1958 - 1964) வரை எந்தப் படமும் தமிழ் திரைப்பட உலகில் வென்றது கிடையாது.*
அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு எங்க வீட்டுப் பிள்ளை வெளிவந்து தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய. வெற்றியை அரங்கேற்றியது.*
1956 ஆம் ஆண்டு மதுரை வீரன் திரைப்படம் 35 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சரித்திரம் படைத்தது. அதன் பின்பு 1958 ல் நாடோடி மன்னன் திரைக்காவியம் 13 திரையரங்குகளில் விழா கொண்டாடியது...
திருவண்ணாமலை நகரில் இரண்டாம் வெளியீடாக நாடோடி மன்னன் திரைக்காவியம் 113 நாட்கள் ஓடி 14 திரையரங்கில் நாடோடி மன்னன் சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல கரூர் நகரில் 99 நாட்களும், கடலூர் நகரில் 96 நாட்களும், சித்தூர் நகரில் 98 நாட்களும், தாம்பரம் எம். ஆர் .திரையரங்கில் 97 நாட்களும்,
குடந்தையில் 96 நாட்களும்.. நாடோடி மன்னன் 100 நாளை நூலிழையில் தவறவிட்ட திரைப்படமாகும்.*
நாடோடி மன்னன் காவியத்தை வென்றதாக.... வசூலை மிஞ்சியதாக எந்தத் திரைப் படத்திற்கும் ஆறு ஆண்டு காலம் வெற்றி வாய்ப்பில்லை ..**
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கால் முறிவு ஏற்பட்டு 9 மாத இடைவெளிக்கு பின்பு தாய் மகளுக்குக் கட்டிய திரைப்படம்*
31.12 .1959யில் வெளியீட்டார்கள்.
ஆனால் சில நடிகர்கள் தாங்கள் தான் தமிழ் திரைப்பட உலகில் தான் தான் பெரிய நடிகர் என்ற* ஆணவத்துடனும், அகம்பாவத் துடனும் உலா வந்தனர் .*
சில படங்களில் நடித்து**
பெருமை அடித்துக் கொண்டனர்.
அதன் பின்பு 1961 ஆம் ஆண்டு வெளியான திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே திரைப்படங்களில் புரட்சித் தலைவர் தனிப்பெரும் கதாநாயகனாக.... தனியாக நின்று மீண்டும் தன் இயற்கை பரிமாணத்துடன்..
[வெற்றிக்
கொடியை பறக்கவிட்டார்....
அகம்பாவத்தின் சின்னமாக போலி நடிப்பை....ஆங்கில நடிகரின் பாணியை வைத்து நடித்த நடிகரின் சாயம் வெளுத்தது...
மீண்டும் தமக்கு அடுத்தபடியான நடிக, நடிகையை தன் படங்களில் போடசொல்லி அதற்கேற்ப கதையை உருவாக்க சொன்னார்
அந்த 30 வயது பாலகன் நடிகர்.
தனியாக மக்கள் திலகத்தை வெல்ல அந்த 30 வயதுடைய பாலகன் நடிகனுக்கு தெம்பில்லை... தீராணியில்லை....
45 வயதான புரட்சித்தலைவரை கண்டு தொடை நடுங்கி கூனி குருகி நின்ற 30 வயது நடிகன்.
பல நடிக,நடிகையர் பட்டாளத்தை கொண்டு அவர்களின் நடிப்புடன் தன்* போலி நடிப்பையையும் சேர்த்து.... படத்தின் வெற்றியை தனக்கு சதகமாக்கி கொண்ட ஒரே இளைய பாலகன் நடிகர் ... மூர்த்தி ஒருவர் தான்....
திருடாதே, தாய்சொல்லைத் தட்டாதே சமூகப் படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்தார் மக்கள் திலகம்.*
பேண்ட், சர்ட் என வித விதமான அலங்காரம் தொப்பி
கண்ணாடி... கோட்... டி சர்ட் என பிரமிக்க வைக்கும் அளவுக்கு திரையில் தோன்றினார் மக்கள் திலகம்.*
பாலகன் நடிகர் வயதான தாத்தா வேடத்தில் நடிக்க தொடங்கினார்... கிழிந்த சட்டையும் தாடியுமாக*
60 வயது தாண்டிய கிழவனாக நடித்ததாவது சினிமாவில் நிற்க முடிவு செய்தார் அந்த பாலகன்....*.........
-
இந்த மூன்று திரைப்படங்களையும் வெல்ல.....* அன்று அது வரை அத்தனைப் படங்களிலும் நடித்த எந்த நடிகராலும் இத்திரைப்பட* வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை என்றால் ஒரு திரைக் காவியத்தின் வசூலை மிஞ்சி எழுச்சி பெற்று முதன்மை பெற்றால் தான் அந்த திரைப்படத்தின் சாதனை என்று சொல்லவேண்டும்.**
படத்தையும் கதாபாத்திரத்தையும் வைத்துக் கொண்டு ஓலமிட்டாள் அப்படம் வெற்றிக்கு அறிகுறி கிடையாது என்பது பொருளாகும்..
அன்றைய சினிமா உலகில் முன்னணி நடிகர்களையும் இரண்டாம் பட்ச கதாநாயகர்களை வைத்து தன்னுடைய படங்களை உயர்த்திக் காட்டிய சில நடிகர்களின் அகம்பாவம் சில படங்களில் அரங்கேறியது. கட்டபொம்மன், பாகப்பிரிவினை பாசமலர், நவராத்திரி, கை கொடுத்த தெய்வம், பச்சை விளக்கு, ஆலயமணி, பாவமன்னிப்பு போன்ற படங்களும் புராண படங்களில் பல நடிகர்களை ஒன்று கூட்டி வைத்து கதை அமைத்து திருவிளையாடல் சரஸ்வதி சபதம் கந்தன் கருணை
தில்லாணா.. போன்ற படங்களைக் கொடுத்தும் பின்னாளில் இப்படங்கள் திரையரங்குக்கு வராமல் ஓய்வு எடுத்த காலம் இன்று வரை தொடர்கதை தான்.*
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் அனைத்து ஏரியாக்களிலும் சாதனை படைக்கும் என்பது முக்கிய சரித்திரமாகும். மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் சாதனை என்று பீற்றிக் கொண்டு 90 சதவீத ஊர்களில் வசூலில் கோட்டை விட்டனர் .*
கிழட்டு பாலகனாக பல படங்களிலும்,.சாமியார் வேடத்திலும் வந்தும்
அதிக* வயதுடைய பெண்ணுக்கு இந்த பாலகன் நடிகர் அப்பாவாக. தாத்தாவாக நடித்தார்...
அதன் பின் திரையில் நிற்க எந்த கதாபாத்திரத்தை தன் வளமான வாழ்வுக்கு பணம் ஒன்றே போதும் என நடித்தார்....100 ரூபாய்க்கு நடித்தால் போதும்... கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொள் என்றால்...1000 ரூபாய்க்கு* கட்டி பிரண்டு நடித்து ...கண்ணீர் விட்டு அழுதபின் கொடுப்பதை கொடுங்கள் என வாங்கிய 30.வயது கீழபாலகன் நடிகர்.
நாடோடி மன்னன் பெற்ற வசூலை
1965 ஆம் ஆண்டு வெளியான*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
வெளியாகி வென்று புதிய வெற்றியை.. வசூலை படைத்தது.
16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தும்*
15 திரையரங்கில் முதல் வெளியீட்டில்.... 100 நாள் ஆகும். தர்மபுரி நகரில் இரண்டாம் வெளியீட்டில் 100 நாட்களும் கொண்டாடி..... மூன்றாவது அதிக ஊர்களில் 100.நாட்களை கடந்த திரைப்படமாக தமிழ் திரை உலகில் சாதனை படைத்தது.*
ஈரோடு நகரில் 100 நாட்கள்.... விளம்பரத்தில் சேர்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப கோணத்தில் 98 நாட்கள் ஒடியது.*
1965 ஆண்டு வரை மிகப்பெரிய வெற்றியை பெற்ற காவியங்கள் மூன்று மட்டுமே.*
மதுரை வீரன் .... 35 அரங்கு
நாடோடி மன்னன்... 14 அரங்கு*
எங்க விட்டுப்பிள்ளை ... 17 அரங்கு.
மக்கள் திலகத்தின திரைப்படங்களுக்கு அடிபணிந்து வசூல் இல்லாமல் எடுக்கப்பட்ட காலங்கள் பல....*
சினிமா உலகம் என்றாலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒருவர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரால் தான் பல ஆண்டுகள் நிலைத்து நின்றது. அதன் பின்பு பல திரைப்படங்கள்.... பல வெளியீடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் வாழ்வாதாரம் பெற்ற வந்துள்ளது. மற்ற நடிகர்களின் குப்பை படங்கள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்தது. இது தான் கடந்த கால வரலாறு....
முதல் வெளியீட்டிற்கு பின் மண்ணோடு மண்ணாக*
மக்கி போன படங்களை தூசி தட்டி அலங்காரம் செய்து... முகநூலில் பொய் என்னும் பதிவில்..
சாதனை என பிதற்றுகிறார்கள்* சிலர்.....
தொடரும்............
-
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்
அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்.........
-
கொரோனா சூழ்நிலை காரணமாக ஏப்ரல், மே மற்றும் ஜூலை மாதங்களில்
'இதயக்கனி' இதழைக் கொண்டுவர முடியவில்லை என்பதன் பாதிப்பை தினமும் வாசகர்களின் அழைப்பின் மூலம் உணர்கின்றேன்.
இன்று மாலை 'இதயக்கனி' கோவை முகவர் திரு சண்முகராஜா தொடர்பு கொண்டு பேசினார். "நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் கோவை காந்திபுரம்
மத்திய பேருந்து நிலைய பகுதி கடைகள் திறக்கப்பட்டன.
"நான் வழக்கம் போல புத்தக கடைகளுக்கு சென்றபோது,
இன்று மாலை அங்குள்ள கடையொன்றுக்கு தலையில் சுமையுடன் வந்த ஒரு பெண்மணி, 'இதயக்கனி' இதழ் அங்கிருப்பதறிந்து
ஆர்வத்துடன் வாங்கி அட்டை முகப்பிலிருக்கும் எம்.ஜி.ஆர். உருவத்தை வணங்கி முத்தமிட்டு,
"மூன்று மாதமாக இதயக்கனி புத்தகம் பார்க்க முடியாமல் தவித்துப் போனேன்.
என் தெய்வத்தை இன்று பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது"
என்றவர், இதற்கு முன் மாதம் தவறாமல் அந்த கடையில் தான் புத்தகம் வாங்கி செல்வாராம். அவரது ஆர்வத்தை கண்ட மகிழ்ச்சியில் பெயரைக் கேட்க மறந்து போனேன்" என்றார்.
20 ம் ஆண்டிலும் இப்படியொரு நிகழ்வு அதிசயம்தான்.
Ithayakkani S Vijayan...........
-
1972 - #அண்ணா_திராவிட_முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
1974 - #புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1977 - #புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
1980 - #தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
1981 - #மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982 - #மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
1984 - #அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
1987 - #இலங்கைத்_தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.
24•12•1987 -புரட்சித்தலைவர் தெய்வம் ஆனார்
புரட்சி தலைவர்,&
அம்மாவின் தொண்டன் .........
செஞ்சி #முனியப்பன்.........
-
இந்த புகைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன் நம் தளத்தில் பதிவு வர பல தலைவர் நெஞ்சங்கள் ஆளுக்கு ஒரு முறையில் பதில் சொல்ல.
ஐம்பெரும் திமுக தலைவர்கள் அப்போது இருந்த நேரம்..சென்னையில் அப்போது இப்போது மாநகராட்சி தேர்தல் என்று அப்போது கார்ப்பரேஷன் தேர்தல் என்பர் அதை..
அதில் திமுக வெற்றி.
தலைவர் வழக்கம் போல கடும் பிரச்சாரம்.
வெற்றி அடைந்த பின் நன்றி அறிவிப்பு கூட்டம்.... எல்லா தலைவர்களும் மேடையில் இருந்து ஒருவர் பின் ஒருவர் பேசி நன்றி சொல்ல.
அமரர் அண்ணா அவர்கள் பேச துவங்கி சற்று நேரத்தில் இந்த தங்க மோதிரத்தை இந்த தேர்தல் வெற்றிக்கு பாடு பட்ட அவருக்கு உங்கள் முன் அணிவிக்கிறேன் என்று சொல்லி அணிவிக்க...
அவர் பெயர் இங்கே சொன்னால் கூட பாவம்......அனைவருக்கும் அதிர்ச்சி நாம் எல்லோரும் வெற்றிக்கு பாடு பட அண்ணா அவர்கள் அவருக்கு மட்டும் தங்க மோதிரம் போடுவது சரியா என்று மேடையில் சலசலப்பு.
தீயசக்தி மகிழ்ச்சி அடைந்தது...மறுநாள் அனைவரும் அண்ணா அவர்களை சந்தித்து என்ன எப்படி என்று கேட்க.
அண்ணா அவர்கள் சிரித்து கொண்டே தேர்தல் நிதி என்று பணம் வசூல் பண்ணி அதில் மீதி இருந்த பணத்தில் அவரே கட்சி பணத்தில் ஒரு மோதிரம் வாங்கி கூட்டம் நடக்கும் காலை வீட்டுக்கு வந்து..
இன்று மாலை நான் மேடையில் ஒரே வேண்டுகோள் வைப்பேன் அதை நீங்கள் தட்டாமல் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ள.
நானும் இந்த மோதிர விஷயம் தெரியாமலே ஒப்புக்கொள்ள அப்புறம் தெரிந்தது அவரின் உண்மை முகம்.
அடுத்த கூட்டத்தில் நீங்க வேணா பத்து மோதிரங்கள் வாங்கி கொண்டு வாங்க உங்க பத்து விரல்களுக்கும் போட்டு விட நான் தயார் என்கிறார் அமரர் அண்ணா சிரித்து கொண்டே..
முகம் காட்டி வாக்குகள் சேகரித்து கொடுக்கும் என் தம்பி ராமச்சந்திரன் அவர்களிடம் இந்த சம்பவம் சொல்லி நானும் சிரிக்க அவரும் சிரிக்க அதுவே இந்த படம்...
அண்ணா அவர்களையே மேடையில் அடகு வைத்த அப்படி பட்ட ஒருவரை தலைவர் மட்டுமே அடக்கி ஒடுக்கியது காலத்தின் கட்டாயமே..
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்..
உங்களில் ஒருவன் நன்றி............