-
19th February 2013, 03:17 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்
ஒரு முழுமையான கலைஞனாக உருவெடுத்து இன்றைக்கு ஒப்பில்லா மாணிக்கமாக உச்சாணிக் கொம்பில் நடிகர் திலகம் இருக்கிறார் என்றால் அதற்கு அந்த நாடகப் பயிற்சி தான் காரணம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சதாரம் தெருக்கூத்து. 50களில் கிராமங்களில் நடைபெறக் கூடிய திருவிழாக்களில் தவறாமல் இடம் பெறும் தெருக்கூத்துகளில் சதாரம் தெருக்கூத்து, கீசக வதம், நந்தனார் கதை, கம்பளத்தான் தெருக்கூத்து இப்படி பல வரலாற்று, புராண, சமூக சரித்திர பாத்திரங்களை அடிப்படையாக வைத்து நடைபெறக் கூடியவை ஏராளம். சில தெருக்கூத்துக்களை நடிகர் திலகமும் தானே மேடைகளில் நடித்துள்ளார். அவற்றில் சில, அவருடைய படங்களிலும் இடம் பெற்றுள்ளன. அப்படி ஒன்றினை சித்தரித்தது தான் கள்வனின் காதலி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த தெருக்கூத்து.
மிக மிக அபூர்வமான, அதிக ரசிகர்கள் அறிந்திராத இக்காட்சியை இணையத்தில் தரவேற்றியதன் மூலம் நடிகர் திலகத்தின் தலையாய ரசிகர்களில் ஒருவனாக தங்களை நிலை நிறுத்தியுள்ளீர்கள்.
தங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th February 2013 03:17 PM
# ADS
Circuit advertisement
Bookmarks