-
6th February 2013, 04:50 PM
#1
Senior Member
Seasoned Hubber
தல புராணம்
இந்தக் கவிதையை இதற்கு முன்பே ஒருமுறை இங்கே இட்டிருக்கிறேன். எங்கே எனத் தெரியக் கிடைக்கவில்லை..எனவே...
தல புராணம்
=============
சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்
மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு
'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்
அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்
கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்
பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்
விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக
கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்
தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'
'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்
அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்
புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்
பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்
இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.
Last edited by geno; 6th February 2013 at 04:56 PM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
6th February 2013 04:50 PM
# ADS
Circuit advertisement
-
6th February 2013, 05:33 PM
#2
Moderator
Platinum Hubber
Nice one.
புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?
ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th February 2013, 12:06 AM
#3
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
P_R
Nice one.
புதுக்கவிதைக்கும் எனக்கும் சொல்ப தூரம். சிலபல single quoteடோட significance பிடிபடலை.
பழைய பதிவுகள்ல கவிதைகள் நிறைய உண்டோ?
ஆதிக்க கோஷம் - என்றும் பாடம்.
None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :
'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
வைரமுத்துவால் கவரப்பட்ட ஒரு தலைமுறையில் பிறந்த ஜந்துக்கள் - எப்படியாவது கவி எழுதுவது/முயற்சி செய்வது என்பது ஒரு கடமை மாதிரி முன்பு இருந்தது! சுஜாதா 1991-1994 இடைப்பட்ட காலத்தில் குமுதம் இதழ் ஆசிரியராக இருந்த போது புதிய விசைக் கவிதைகள் நிறைய அறிமுகம் செய்தார் (குமுதம் ஸ்பெஷல்-இல் நடுப்பக்க தாராள அழகிகளையும் அறிமுகம் செய்து மகிழ வைத்தார்!)....
.......அம்மாதிரி கவிதைகளில் - ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன் (ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......
இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை! பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
கவிதை எழுதுவது, படிப்பது எல்லாம்போய் - முன்னாடி படிச்சதை நினைப்பதே ஒரு சுகானுபவமாகி விட்டது; "மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
எப்போதாவது எனக்கு மீண்டும் கிடைக்கப் போகும் கவிதைகளை சேகரித்து வைத்திருக்கும் என் மொட்டை மாடிப் பரணுக்கு நன்றி..எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
Last edited by geno; 8th February 2013 at 12:09 AM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
8th February 2013, 09:25 AM
#4
Moderator
Platinum Hubber
Originally Posted by
geno
None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :
'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
அதுனால தான் கேட்டேன். சிலபல இடங்கள்ல ஐரனி தெரிஞ்சுது.
Originally Posted by
geno
பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் வரிசையா வரேன்.
Originally Posted by
geno
- ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன்
தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?
Originally Posted by
geno
(ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......
Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.
Originally Posted by
geno
இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை!
I think maiam guys would be pretty interested if you do manage to find them.
Originally Posted by
geno
"மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan
அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.
Originally Posted by
geno
பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
10th February 2013, 12:11 AM
#5
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
P_R
வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன்
வரிசையா வரேன்.
அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.
Originally Posted by
P_R
தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?
ஆமாம் - இரண்டும் ஒருவரே (பசுவைய்யா = சுந்தர ராமசாமி போல) அவர் நிசத்தில் பல புனை பெயர்களில் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் தருமு சிவராமு.. இரண்டு பெயர்களில் வெளிவந்த கவிதைகளையும் படித்த நினைவு..
உண்மையில் - திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு வெளியில் இயங்கிய படைப்புகளைப் படிக்க வேண்டும் என்கிற சுய விருப்பத்தின் பேரில் படித்தவை - பெரும்பாலானவை; அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.
"வர்ணம்" பற்றி பேசுவதைத் தவிர்த்து - அன்றந்த காலகட்டத்து சமூக நிகழ்வுகளின் மீதான ஆழப்பார்வையையும் தவிர்த்து - தத்துவ விசாரமும், தமிழ் அடையாள அரசியல் மறுப்பை/ கேலியை - உள்ளீடாகக் கொண்டே பெரும்பாலான "க.ந.சு" "சி.சு.செ" குழாம் கவிதைகள் - பரிமளித்துக் கொண்டிருந்தன என்அதே என் பார்வையாக இருந்தது; ஆனால் (திராவிட இயக்கம் தவிர்த்த/ வாணியம்பாடி குழு தவிர்த்த) வானம்பாடிக்குழு , மற்றும் சிசுசெ,கநசு குழுக்கள் - வேறு பல வீச்சுகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தன.
Originally Posted by
P_R
Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.
Any pagadi involved in it - for what i had uttered earlier?!
Originally Posted by
P_R
I think maiam guys would be pretty interested if you do manage to find them.
Will certainly do if i lay my hands on them again!
Originally Posted by
P_R
ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை :
http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan
அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு
- நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.
கண்டிப்பாக அங்கே வருகிறேன்; சோம்பேறித்தனமும், அதிகமாக எழுதுவதில் எனக்கே இருக்கும் சலிப்பும்(! ) - சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.
Originally Posted by
P_R
] Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!
கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
Last edited by geno; 10th February 2013 at 12:20 AM.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
10th February 2013, 10:57 AM
#6
Moderator
Platinum Hubber
Originally Posted by
geno
அதையெல்லாம் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கீங்களா?! எனக்கே மறந்து போச்சு.. அது ஒரு காலம்.
அதைப்படிச்சு சிரிக்கலை
Originally Posted by
geno
அப்போது கணையாழியை தீவிரமாக வாசிப்பேன் - சில படைப்புகளின் இயங்குதளம் புரியாமலே கூட.
ஆஹா ஊஹூ'ன்னு சொல்றாங்களே'ன்னு தேடிப் படிச்சேன். நிறைய atrociously bad கவிதைகள் heydeys of கணையாழிலையே இருக்கு. ஒருவேளை இயங்குதளம் புரியலையா'ன்னு தெரியலை.
Originally Posted by
geno
Any pagadi involved in it - for what i had uttered earlier?!
ஹாஹா..இல்லைங்க. உயர்படைப்பா ஒண்ணு தேடுறப்போ, மேட்டர் புக் கிடைச்ச 'தாழ்வு'க்கு சொன்னேன்
Originally Posted by
geno
சில நேரங்களில் படிப்பதில் இருக்கும் விருப்பம், எழுதுவதில், எதிர்வினையாற்றுவதில் இல்லை - அதற்கு ஒரு காரணமும் இல்லை - யாரையும் போர் அடிக்க விருப்பம் இல்லாததும் ஒரு காரணம்.
ஒரு பட்டப்பழைய திரியில இரா.முருகன் கவிதை பத்தி எழுதியிருந்தீங்க. அதுபோல எழுதினா படிக்க முயற்சி பண்றவங்களுக்கு அறிமுகமா இருக்கும். I don't think it will bore people. I know most of us landed here 'after' the heydeys of the Hub when literature was discussed extensively. And perhaps now there are other fora for it. But still I think that if discussions are sparked off, there may be participants who will surprise and for many it may be a new-opening/introduction.
கவிதைப் பக்கங்களில் நான் இப்படித்தான் பேசியிருக்கிறேன்! (இப்போ இந்தப் பக்கம் வருவதே இல்லை!) ...தவிர எழுதுவததை விட, அசை போடுவதிலும், அமைதியாயிருப்பதிலும் உள்ள 'லயம்' அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது![/QUOTE]
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th February 2013, 09:37 PM
#7
Senior Member
Diamond Hubber
ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??
-
8th February 2013, 12:32 AM
#8
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
SoftSword
ஆத்திக கோஷம் = ஆதிக்க கோஷம் ??
P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
(if i understood the context in which P_R makes it correctly)
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
8th February 2013, 09:34 AM
#9
Moderator
Platinum Hubber
Originally Posted by
geno
P_R means the Morbid mobocracy of the Vinayaga chathurthi celebrations on the Beach, to be the bugle of the Hegemonists rather than the soothing Flute of the Spiritualists
(if i understood the context in which P_R makes it correctly)
Haha not exactly.
I was making a comment on how your (and Periyar's) grouse against ஆத்திகம் is because of ஆதிக்க forces. 'இதை வைத்து பலன் அனுபவிப்பவன்..' is what motivates the famous three lines that preceed it. Which is why the 'purely logical philosophical' counterarguments - quoting long atheistic traditions (Nagarjunaலேர்ந்து பொதுவா ஆரம்பிப்பாங்க) misses the point.
அதச் சொன்னேன்.
மத்தபடி ஆத்திக-ஆதிக்க was just silly wordplay by me a la சமவெளி-சமதர்மம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th February 2013, 09:51 PM
#10
Senior Member
Diamond Hubber
"அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது. "
Nostalgia. I am missing that for many years. By the way, was this penned by Geno? Very good!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks