-
2nd June 2013, 06:31 PM
#1
Senior Member
Diamond Hubber
ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
முற்றிலும் உண்மை! நேரமின்மையைக் காரணம் காட்டி நேர்த்தியானவற்றை புறந்தள்ளிவிடுகிறது ஒரு கூட்டம். இதில் இளைஞர்களும் மாட்டிக் கொண்டு விழிப்பதுதான் பரிதாபம். ஒரு கோக், ஒரு பீசா, குர்குர்ரே சதம் தறிகெட்ட தமிழ்ப்படங்களின் அபத்தங்களை ஆர்ப்பரித்துப் பார்க்கும் அவலநிலை. ரசனையில் மேம்பட யாருக்கும் ஆசை இல்லை. அதெல்லாம் வேண்டாம் என்ற ஒரு குருட்டு நோக்கு. என்னதான் இருக்கிறது என்று ஆவல்பட்டான் என்றால் அதிசயங்களை அள்ளலாம். நாலு கார் துரத்தல்களும், அநியாய ஏய் சத்தங்களும், வெட்டி உயிர் போகும் தருவாயில் எழுந்து வந்து வெட்டுவதும் போதும் என்று முடங்கி விடுகிறான். நம் ஆளுக்கு மார்கெட்டிங் வேண்டாம். ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் இவரை ஆழ்ந்து கவனித்தானானால் மட்டும் போதும். மாற்றுக்குப் போகவே முடியாது.
என் நண்பனின் மகன் நல்ல ரசிகன். ஆனால் முன்னம் நான் தெரிவித்த பட்டியலில் இருந்தான். ஒருமுறை பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடும் போது கண்டிப்பாக முதல் மரியாதையை வீடியோவில் பார்த்தே ஆக வேண்டிய நிலை. வேண்டாவெறுப்பாக பார்க்க ஆரம்பித்தவன் சற்று நேரத்தில் முற்றிலும் ஒன்றிப் போனான்.
வீடு வந்து வாயார குறிப்பாக நடிகர் திலகத்தைப் புகழ்ந்து இருக்கிறான். இந்த மாதிரி வேறு என்னென்ன படங்கள் இருக்கின்றன என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். ஆக வெற்றி யாருக்கு?
கோபால் சொல்வது போல எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ரசனையில் மேம்பட்டவர்கள் உதவ முன் வரலாம். எப்பேர்ப்பட்டவரையும் எக்காலத்திற்கும் வசீகரிக்க நடிகர் திலகத்தால் முடியும். அதை நம்மைப் போன்றவர்கள்தான் அடுத்தவர்களுக்கு உணர வைக்க முடியும்.
அதற்கு இந்த கோபாலின் கட்டுரைத் தொடரை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
Last edited by vasudevan31355; 2nd June 2013 at 06:33 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd June 2013 06:31 PM
# ADS
Circuit advertisement
-
4th June 2013, 06:54 AM
#2
Senior Member
Seasoned Hubber
நண்பர்கள் வாசு, கண்பத் ஆகியோர் கோபாலின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான துணைப் பதிவுகளை அளித்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பொறுத்த வரையிலும் பல சவால்களை எதிர்கொண்டு தான் வளர்ந்து வெளியானது. கட்டபொம்மன் பாத்திரத்தை சிறுமைப் படுத்தி வேறு இரு வீரர்களை உயர்த்தி போட்டிக்கென்றே தயாரித்தது ஊரறிந்ததே. இது ஊரறிந்த ரகசியம். சிவகங்கை சீமை திரைப்படத்தைத் தான் சொல்கிறேன். இன்றும் கூட இவ்வாறு கூறுபவர்கள் உள்ளனர். நல்ல விளம்பரமும் அப்படத்திற்குக் கிடைத்தது. அதற்கேற்றார்போல் மெல்லிசை மன்னர்களின் இசையும் பேசப் பட்டது. எப்படியாவது கட்டபொம்மன் புகழையும் அதன் மூலம் நடிகர் திலகத்தின் புகழையும் பின்னுக்குத் தள்ளப் பார்த்தார்கள்.
இன்று கட்டபொம்மன் திரைப்படமே ஒரு வரலாறாகி விட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை ஒரு தியாகியின் வரலாறாக திகழ்வது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரையுலகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் ஒரு வரலாறாகி விட்டது.
உலக மகா கலைஞரான நடிகர் திலகம் இறுதி வரை எதிர்ப்பிலேயே வளர்ந்ததால் தான் இன்று அழியாப் புகழுடன் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th June 2013, 10:02 AM
#3
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)
அந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
-----To be continued .
Last edited by Gopal.s; 4th June 2013 at 11:01 AM.
-
5th June 2013, 09:55 AM
#4
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?
உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வரியிலிருந்தே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம். அதாவது 'அல்லவா'. இந்த வார்த்தையை கட்டபொம்மனில் அவர் விதவித பாவங்களுடன், மிகச் சரியான ஏற்ற இறக்கங்களுடன், அம்சமான அழுத்தம் திருத்தங்களுடன், இம்மிகூட பிசகாமல் நடிப்பைக் குரலுடன் கலக்க வைத்து கலக்குமிடம்.
தானாதிபதிப் பிள்ளை ஸ்ரீவைகுந்தத்தில் வெள்ளையர்களின் நெல் கிடங்கில் பொம்மனுக்குத் தெரியாமலேயே கொள்ளை அடித்துவிட்டு, காவலாளியையும் தன்னிச்சையாக கொலைசெய்துவிட, வெள்ளையனிடமிருந்து வந்த தூதுவன் பதிலுக்கு தானாதிபதிப் பிள்ளையின் உயிரைப் பணயமாக கேட்டு கலெக்டர் லூசிங்டன் அனுப்பிய ஓலையை கட்டபொம்மனிடம் நீட்ட, அதற்கு பிள்ளையை வரவழைத்து முதலில் பிள்ளைக்கு சாதகமாகப் பேசுவது போல பேசி, பின் பொங்கி வரும் கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி, பின் மந்திரியின் தவறை சுட்டி குத்திக் காட்டும் முறை அபாரமானது.
இந்தக் காட்சியில் நீங்கள் கூறிய வசன உச்சரிப்பு முறை மிகச் சரியாகப் பொருந்தும்.
அதாவது உடல் அசைவுகள், முக பாவங்களில் பின்னிப் பெடலேடுத்தாலும் இந்தக் காட்சியில் அந்த 'அல்லவா' உச்சரிப்பு அவற்றுடன் இணைந்து காட்சிக்கு ஒரு முழுமையை, அழுத்தத்தை, சிறப்பைக் கொடுத்து காட்சியை மேலும் மெருகுபடுத்துவதை நன்றாகவே நாம் உணரலாம். உணர்ச்சிகள் பொங்க, ஆத்திரம் கொப்பளிக்க, வார்த்தைகள் கனலைக் கக்க, கொள்ளைக்காரானைக் க(த)ண்டிக்கப் போய் தமது மந்திரியே கொலைகாரனாயும், கொள்ளைக்காரனாயும் பழி சுமந்து வந்து நிற்பதைத் தாங்க மாட்டாமல்,
"நீரே கொள்ளயடித்தீர் கொலை செய்தீர் அல்லவா!
இன்று எதிரி நம்மை ஏளனம் செய்யவும் வழி காட்டினீர் அல்லவா!
இத்தனைக்கும் உமக்குதவியது உமது மந்திரித்தனம்... பதவி என்ற மதுபோதை அல்லவா!"
என்று கர்ஜிக்கும் போது
வார்த்தை(யை)களை எந்த இடத்தில் எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பாவம் குன்றாமல் உச்சரிப்பது என்பதை குருவாய் வெளிப்படுத்தும் படிக்காத மாமேதையாய்த் திகழ்கிறார் நடிகர்களுக்கெல்லாம் திலகம்.
Last edited by vasudevan31355; 5th June 2013 at 12:46 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th June 2013, 10:57 AM
#5
Senior Member
Seasoned Hubber
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது?
உண்மை. இது தான் நிஜம். வெறும் வார்த்தையல்ல கோபாலின் கருத்துக்கள். உண்மையின் பிம்பம். அதற்குச் சான்று இதோ
இன்றைய கால கட்டத்தில், 2011ல் எல்.கே.ஜி. குழந்தை பள்ளி மாறுவேடப் போட்டியில் கட்டபொம்மன் வசனம் பேசுவதைக் கேளுங்கள். ஏற்ற இறக்கத்துடன் அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் தமிழைப் பேசும் போது, தமிழ்த் தாய் தன் தவப்புதல்வனை உச்சி முகந்து கொண்டாடி யிருப்பாள் அல்லவா. தன் தாய்த்தமிழை நடிகர் திலகம் வளர்த்த அளவிற்கு வேறு யாரை நினைத்துப் பார்க்க முடியும். லட்சோப லட்சங்களில் புத்தகங்கள் செய்ய முடியாத காரியத்தைத் தன் ஒரு படத்தில் தான் பேசிய வசனத்தின் மூலம் செய்து காட்டி இன்று தமிழை உச்சியில் கொண்டு போய் வைத்துள்ளவர் நடிகர் திலகம் தான் என்று கூறவும் வேண்டுமோ.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th June 2013, 03:07 PM
#6
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-36
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
---To be continued.
Last edited by Gopal.s; 5th June 2013 at 08:27 AM.
-
5th June 2013, 12:41 PM
#7
Senior Member
Diamond Hubber
முக்கியமானது
"என்ன ஆச்சரியக் குறி!"
ஆஸ்கருக்கு முழு தகுதி கொண்ட ஒரு வினாடி விந்தை
Last edited by vasudevan31355; 5th June 2013 at 01:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th June 2013, 11:31 AM
#8
Junior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
முக்கியமானது
"என்ன ஆச்சரியக் குறி!"
ஆஸ்கருக்கு முழு தகுதி கொண்ட ஒரு வினாடி விந்தை
ஆஹா!!!!
-
6th June 2013, 04:19 PM
#9
Junior Member
Devoted Hubber
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
அவ்வப்பொழுது தலைவரை விமரிசித்து சில அறிவு ஜீவிகள் நம் திரிக்கு வருவது நாம் அறிந்ததே!
இனி அவ்வாறு நிகழ்ந்தால் அவர்களை நம் கோபால் எழுதும் காவியமான உலக அதிசயங்கள் முழுவதும் படிக்க சொல்லி சிபாரிசு செய்யலாம்.அவர்கள் இசையவில்லை என்றால்,நண்பர் வாசுதேவன் அளித்துள்ள இந்த புகைப்படத்தை பார்க்க சொல்லி கேட்கலாம்..இதிலும் அவர்கள் தங்கள் மனம் மாறவில்லை என்றால்..
.....
to hell with them..just ignore them and continue with our work.
-
6th June 2013, 08:29 AM
#10
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-37
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
---To be Continued.
Last edited by Gopal.s; 6th June 2013 at 05:10 PM.
Bookmarks