படிக்கும் போது புல்லரிக்குது https://www.facebook.com/notes/10150321884983462/ நடிகர் திலகம் 1 அக்டோபர் 2011 இல் 04:00 PM மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (அவருடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து) தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
Last edited by KCSHEKAR; 25th July 2014 at 11:15 AM.
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
Dear KCS Sir
You are 100% Correct. Also 90% of BRAHMIN COMMUNITY PEOPLE are deep FAN OF OUR GREAT NADIGAR THILAGAM since he is the only actor acted as POWERFUL PERSONS BELONG TO BRAHMIN COMMUNITY and also he told about positive characterestics of brahmin community in his films
திரியின் அனைத்து நண்பர்களும்,முரளியும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.மனசாட்சியை மறைக்காமல் கூறுங்கள். திரி இப்போது நன்றாக இருக்கிறதா.படிக்க சுவாரஸ்யமா இருக்கிறதா.கோபால் போன்றவர்களின் முன் கோபத்தாலும்,மூர்க்கமான வார்த்தைத் தாக்குதல்களாலும் முக்கியமாக ஒரு சிலரின் அறுவைப் பதிவுகளாலும் திரி அதன் பொலிவை இழந்ததா இல்லையா.உறுப்பினர்களின் வருகையை இழந்ததா இல்லையா உற்சாகத்தை இழந்ததா இல்லையா.பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததா இல்லையா. திரியைப் பார்க்க ஆர்வம் குறைந்து போனதா இல்லையா.இருக்கின்ற ரெண்டு பதிவாளர்களையும் விட்டு விட்டால் சுத்தமாக அதோ கதி என்று முரளி சார் நீங்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறீர்களா இல்லையா
நடிகர் திலகத்தின் மீது உள்ள அன்பால் உண்மை கூறுங்கள்.
திரி அருமையாகப் போகிறது என்றால் அனைத்து உறுப்பினர்களும் முன்னை மாதிரி ஏன் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவில்லை.இந்தக் கேள்விகள் எல்லாம் நியாயமா இல்லை அநியாயமா என்று
திரியின் உறுப்பினர்களே கூறுங்கள்.இதை திரியின் உறுப்பினன் என்ற முறையில் நான் கேட்கக் கூடாதா. இதில் தவறு இருக்கிறது நீ சொல்வது சரியல்ல என்றால் நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு நடையைக் கட்டுகிறேன்.முக்கியமாக ஒன்று.எம்ஜியார் திரிக்கு பதில் கொடுப்பது முக்கியமா நமது நடிகர் திலகத்தின் படங்களை அவர் பெருமைகளை அவர் திறமைகளை கலந்து கட்டிப் பேசி நாம் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைப்பது முக்கியமா.திரியில் பங்கேற்ப்பதும் பதிவிடுவதும் தனி மனித உரிமை என்று கூறுகிறீர்கள். அதே போல் திரியில் நடக்கும் அறுவைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவது எங்களுடைய உரிமை. உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் ஒரு மண்ணாங்கட்டி விஷயமும் இல்லாமல் திரியை நடத்தினால் பொதுத் திரியான இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டு பூப்பறித்துக் கொண்டு இருப்போம் என்று நினைத்தீர்களா. திரி தொடங்கிய ஜோ சாரைக் கேளுங்கள். அருமையான பங்களிப்புகளை நல்கிய அவர் இந்தக் கண்றாவிக் கூத்தையெல்லாம் பார்த்து ஒதுங்கி விட்டார். எப்பேர்பட்ட ஜாம்பவான்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த திரி இது. இதை அறுவைப் பதிவுகள் மூலம் நாசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.முன்னர் போட்டபதிவுகளையே திரும்பத் திரும்ப எடுத்துப் போடுகிறீர்கள். சொந்தமாக ஒரு பதிவைக் கூடக் காணோம்.போட்ட போட்டோக்களையே போட்டுக் கொண்டு போட்ட பதிவுகளையே திரும்பத் திரும்பப் போட்டு அறுத்து தள்ளுகிறீர்கள்.இது என்ன யூ ட்யூபா இல்லை சிவாஜி திரியா வெறும் வீடியோவா போட்டு தள்ளுகிறார் ஒருவர். இதற்கு சிவாஜி திரி எதற்கு.ரவிகிரன் அண்ணன் பாவம்.என்னை தம்பி என்று கூப்பீட்டவர் அதனால் அவர் எனக்கு அண்ணன்.எல்லா சுமையும் அவர் மேல்.இவர் என்ன செய்கிறார் என்று இவருக்கே தெரியவில்லை.பம்மளார் பதிவுகளை திரும்ப திரும்ப கார்பன் காப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறார்.கேட்டால் அட்ரெஸ் கேட்கிறார். போன் நெம்பர்கள் கேட்கிறார்.ஒரு இன்ட்ரஸ்ட்டும் இல்லை.கோபாலோ புரியாமல் ஏதோ ஒரு கவிதை எழுதி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார். எல்லாம் தெரிந்த முரளி சூழ்நிலைக் கைதியாக மௌனம் காக்கிறார்.
ராகவேந்திரன்,ஆனந்த், பாலா, சதீஷ், குமரேசன் பிரபு, ராதா கிருஷ்ணன், அப்கலபி, சந்திரசேகரன்,சாரதா, ஆதிராம், கல்நாயக்,கார்த்திக்,வனஜா, தனுஷ், ராகவன், சுப்பிரமணியம் ராமஜெயம் இன்னும் விடுபட்ட பலரும் ஏன் முற்றிலுமாக அல்லது அடிக்கடி திரிக்கு வருவதில்லை.திரியில் இருப்பவர்களின் போக்கு பிடிக்காமலா அல்லது உங்கள் வேலைப் பளுவாலா
நண்பர்களே இந்தக் கேள்விக்காவது வந்து பதில் சொல்லி விட்டு உண்மை உணர்த்தி விட்டுப் போங்கள்.இந்தப் பதிவு நீங்கள் படிப்பதற்குள் எடுத்தாலும் எடுக்கப்பட்டு விடலாம். ஆனால் உண்மை என்றுமே நிலைக்கும். யாரும் அதை மறைத்து விட முடியாது. தீர்ப்பு உங்கள் கையில்.முரளி சார் கையில்.உண்மை கசப்பாக இருக்கும். என் மேல் கோபம் கூட வரும்.ஆனால் நான் எழுதியிருப்பது உண்மையா இல்லையா என்று அவரவர் மனசாட்சிக்கே தெரியும். காத்திருக்கிறேன்.
முரளி அவர்களே!
எனக்கு வார்னிங் தருகிறீர்கள். சரி!. பலரை பலவிதமாய் கேவலமாய் தகாத வார்த்தைகளால் திட்டிய கோபாலுக்கு ஏன் எந்தவித வார்னிங்கும் நீங்கள் தரவில்லை.அசிங்க அசிங்கமாய் எல்லோரையும் திட்டிய கோபாலை கொஞ்சுகிறீர்கள். திரியின் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால் எனக்கு வார்னிங் கொடுக்கிறீர்கள்.நான் என்ன தப்பாகக் கேட்டேன். மனதில் கைவைத்து சொல்லுங்கள். திரி நாசமாகப் போகிறதே என்று கவலைப்பட்டால் அது தப்பா? எனக்குத் தெரியும் இந்தப் பதிவை நீங்கள் எடுத்து விடுவீர்கள் என்று. கவலை இல்லை. இதிலும் ஒரு வரிகூட நான் தப்பாக எழுதவில்லை.நீங்கள் சிவாஜியை நேசிப்பது உண்மையாக இருந்தால் இப்பதிவில் தவறு இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
I am a Brahmin and start my age known about cinema I liked only NT's films. In fact when I was doing my SSLC public examinations, at that time Thanga Churangam flim was about to release. I went to see the movie on the first day it-self even though the next day morning I have to face my Maths exam. I know , like me many of my Brahmin friends are still Sivaji fan and interested to see all movies of him. I have a collection of more than 125 Sivaji films CD and DVds which I used to see on almost every day.
If anyone says that Brahmins are against Nadigar Thilagam he was wrong.
அருமையான கேள்வி.இப்படி கேள்வி கேட்காததனால்தான் இந்தத் திரி இப்படி படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. இந்தமாதிரி தேவையில்லாத பதிவுகள் படிப்பவர்களை காயப்படுத்தும் என்று யாரும் இங்கே நினைப்பதில்லை.எல்லோரும் படித்த அறிவாளிகள்.பிராமணன் சிவாஜியைத் தூக்கி வைத்து கொண்டாடினான்.
உங்கள் துணிச்சலுக்கு நன்றி.
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 12:36 AM.
Bookmarks