Page 52 of 401 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #511
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (56)



    படம்: கெட்டிக்காரன்.

    வெளிவந்த ஆண்டு: 1971

    நடிக, நடிகையர்: ஜெயசங்கர், லீலா,நாகேஷ், மேஜர்

    கதை, திரைக்கதை: சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்.

    வசனம்: மா.ரா

    பாடல்கள்: மருதகாசி, மாயவநாதன்

    தயாரிப்பு: தண்டாயுதபாணி பிலிம்ஸ்

    இசை: சங்கர் கணேஷ்

    காமெரா, இயக்கம்: எச்.எஸ்.வேணு




    'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் ஒரு அபூர்வமான பாடல். 'கெட்டிக்காரன்' படத்தில் ஒரு ஹோட்டலில் நாகேஷும், அறிமுக நடிகை லீலாவும் (பிற்காலத்தில் இவர் 'கெட்டிகாரன்' புகழ் லீலா என்றே அழைக்கப்பட்டார்) வழக்கம் போல எதிரிகளுக்கு டிமிக்கி கொடுத்து கதாநாயகனுக்கு ஆதரவாக உதவி செய்ய ஆடிப் பாடும் பாடல்.

    அப்போது இந்த 'கெட்டிக்காரன்' படம் பத்திரிக்கைகளால் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. படுமட்டமான படம் என்று விமர்சனங்கள் எழுந்தன. தேவர் இப்படியெல்லாம் படம் எடுப்பதா என்ற கேள்வி எழுந்தது.

    ஆபாசக் காட்சிகள் அதிகம் (அப்போதைக்கு)... லீலா மற்றும் நடித்த நடிகைகள் ரொம்ப தாராளம். காவல் அதிகாரி ஜெய் கொள்ளையர் கூட்டத்தில் புகுந்து கொள்ளைக்காரனாகவே அவர்களுடன் நடித்து பின் அந்தக் கூட்டத்தை வளைக்கும் அறுத பழசு கதைதான்.

    ஆனால் குப்பை மேட்டில் வைரம் ஒன்று ஜொலித்ததைப் போல இப்படத்தில் ஒரு பாடல் அமர்க்களமாக அமைந்துவிட்டது. அப்படி ஒன்றும் பிரமாதமான வரிகள் எல்லாம் இல்லை. ஆனால் சங்கர் கணேஷ் மிகக் குதூகலமாக இப்பாடலை உற்சாகத் துள்ளல் போட வைத்துவிட்டார்.

    சுசீலாவும், சௌந்தரராஜனும் செம ஜாலியாகப் பாடியிருப்பார்கள். ரொம்ப கேஷுவலான ஒரு பாடல். ஜனரஞ்சகம். பாடலின் நடுவே கொள்ளையர் நடத்தும் அயோக்கியத்தனங்கள், ஜெய் திரு திரு முழி, ஓட்டிப் பிறந்த சகோதர்கள் போல 4 கொள்ளயர்கள் சேர்ந்தே வருவது, அவர்களின் பின்னால் மறைந்து ஜெய் போலீசுக்கு டிமிக்கி தருவது என்று 'விறுவிறு'வுக்கு பஞ்சமில்லை.

    ஆனால் நாகேஷும் லீலாவும் தூள். கலக்கலான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ். லீலா புதுமுக கூச்சம் இல்லாமல் நாகேஷுடன் இணைந்து நன்றாகவே ஆடுவார். பாடகர் திலகம் அமர்க்களமாக வழக்கம் போல நாகேஷின் குரலில் பின்னுவார். லீலாவுக்கு சுசீலாவின் குரல் செமை பொருத்தம். லீலா பொம்மை போல இருப்பார். படத்தில் ரொம்ப தாராளம்.

    பாட்டின் ஆரம்ப இசையே நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடும். பாடல் முழுந்தும் உற்சாகம் கொப்பளிக்கும். ஹார்மோனியம் ,டிரம்பெட், ஷெனாய், கிளாரினெட் என்று அனைத்து இசை உபகரணங்களையும் சகட்டு மேனிக்கு பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பார்கள் இரட்டையர்கள்.




    இனி பாடலின் முழு வரிகள்.

    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை
    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

    பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
    பூ பட்டு பட்டு மணக்கும்
    செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

    கிட்டே கிட்டே வா வா
    ஜில்லென்று கிட்டே நீ வா
    நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்

    சிரிப்பூட்டும் ராஜா
    தேனூறும் இந்த ரோஜா
    கிடைக்காது நினைக்காதே ரொம்ப லேசா

    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

    சின்ன சின்ன பாப்பா
    சிங்கார கண்ணு பாப்பா
    சிலையே மலையே உன்மேல்
    ஆசை கொண்டால் தப்பா
    சின்ன சின்ன பாப்பா
    சிங்கார கண்ணு பாப்பா
    சிலையே மலையே உன்மேல்
    ஆசை கொண்டால் தப்பா

    தமிழ்நாட்டு பாப்பா
    தன்மானம் உள்ள பாப்பா
    தவறான ஆசைக்கு போடும் இது தாப்பா

    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை
    பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
    பூ பட்டு பட்டு மணக்கும்
    செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

    தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
    கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை


    Last edited by vasudevan31355; 19th August 2014 at 09:15 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #512
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி.. கெட்டிக்காரன் ரொம்ப விமரிசனத்துக்கு உள்ளான படம்தான்... இதில் டி.எம்.எஸ்., சுசீலாவின் இன்னொரு பாட்டு அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு புகழ் அடைந்தது. அஃப் கோர்ஸ் வரிகளும் கொஞ்சம் நல்லாவே இருக்கும்

    பார்த்தேன் பார்க்காத அழகே..
    கேட்டேன் கேட்காத இசையே

    http://www.inbaminge.com/t/k/Kettika...hagai.vid.html

  5. #513
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆமாம் மதுஜி! அந்தப் பாட்டும் கேட்க ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #514
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி, மது அண்ணா, ராகவ் ஜி காலை வணக்கங்கள்

    வாசு ஜி.. கெட்டிக்காரன் பாடல்கள் சூப்பார்.. மதுண்ணா பார்த்தேன் பார்க்காத அழகை எனக்கு பிடித்த பாடல்

    வாசு ஜி .. கன்னட கதம்பம்
    இதோ

    கூத்தடிக்கும் கும்பலை ஒரு கத்தலில் நிறுத்தி பின் கல்பனாவிற்காக இசையரசி இசைத்த கீதம்
    இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி... என நமது கலாச்சார பெருமையையும் அது சந்திக்கும் அழிவையும் பற்றிய பாடல்

    இதோ


  7. #515
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி! நல்லா சூடா 6 இட்லி, சூப்பர் மிளகாய்ப் பொடி நல்லெண்ணெயுடன் கலந்து. எப்படி இருக்கும்? இப்போதுதான் முடித்தேன்.
    கல்பனா பாட்டு கேட்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #516
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சூப்பர் இட்லி மிளகாய்பொடி .. இந்த காம்பினேஷனை மிஞ்ச எதுவும் இல்லை

  9. #517
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல்.. நலம் தானே

    நானோ உன் அடிமை நல்ல பாட்டு..அப்புறம் இ.ஸ்பெ பாட்டு வாசு ஜி கேள்விப்பட்டதில்லை..மதுண்ணா சொன்னபாட் கேட்டிருக்கிறேன் நன்றி..
    பொ.பூம்புனல் வெள்ளிக்கிழமை தான் கேட்க வேண்டும்.. நேற்றைய வீடியோக்களையும் பார்க்க வில்லை..(கண்னா வேலையைப் போஸ்ட் போன் பண்ணாதடா)

    அப்புறம் வாசு சார், வெறும் மிளகாய்ப் பொடி என்பது கோபம் கொண்ட கன்னியைப் போலவும், அதுவே எள்ளு மிளகாய்ப் பொடி என்றால் காதலுடன் கோபம் கொண்ட கன்னியைப் போல என என் தாத்தா கூறியிருக்கிறார் முருகன் இட்லிக் கடையில் பொடி எண்ணெய் என ரொம்ப நைஸாய் அரைக்கப் பட்ட மிளகாய்ப்பொடி எனச் சொல்லப்படும்பருப்புப் பொடியை வைப்பார்கள்.. ரத்னாகஃபே பொடி தோசை ஓகே..

    ம்ம் நேத்து ஜெயா டிவியில்

    சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனாக்கற்கண்டே என சாரங்கபாணியும் எம்.என்.ராஜமும் பாடுவதைப் பார்க்க நேர்ந்தது..சீனாக்கற்கண்டு..இந்த ஸ்கொயர் ஷேப்பில இருக்குமே அது தானே..

    ஏதோ இந்தப் பாட்டு மனசுல நேத்து இரவிலிருந்து ஓடிக்கிட்டிருக்கு..சிசி பூவே இல்லை இதுவேற..

    வாடையிலே வாழை இலை குனியும் -
    கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
    காதலிலே பெண்மை தலை குனியும் -
    இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

    நல்ல லைன்ஸ்..கண்ண தாசன்னு நினைச்சுப் பார்த்தா வாலியாம்..

    என்ன பாட்டா..உங்களுக்குத் தெரியாதா என்ன

    இன்னிக்கு அவ்வளவா வர முடியாது..இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வருகிறேன்

  10. #518
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் ஜி

    'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை'

    'பணத்தோட்டம்' படத்தில் சரோஜாதேவி பாடும் பாடல். 'இசை ராணி'யின் இன்பக் குரல். அப்படியே சொர்க்கத்தில் கொண்டு போய் நம்மைக் கிடத்தும் பாடல்.

    எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தில் வித்தியாசமான பாடல்.

    எம்.ஜி.ஆர் குழல் ஊதுவது போலவும், அபிநய சரஸ்வதி ஆண்டாளாகவும் இருப்பது போன்ற காட்சிகள். மிக அமைதியாகச் செல்லும் பாடல்.

    ஆனால் டியூன் கடினமானது. சுலபமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரணத்தில்

    'தினையும் பனையாய் வளர்ந்தே'

    அற்புதமாக அவர் குரலில் எங்கோ பயணிக்கும். பின்

    'இரு விழிகள் அரும்பவில்லை'

    என்று அமைதியாகும்.

    மாயாஜால வித்தைகள் புரியும் இந்தக் குரலில் மயங்காதாரும் உண்டோ! 'திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்' அற்புத சொர்க்கம். இரவில் கேட்டால் ஒரு நொடியில் தூக்கம் நிச்சயம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #519
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஏதோ இந்தப் பாட்டு மனசுல நேத்து இரவிலிருந்து ஓடிக்கிட்டிருக்கு..சிசி பூவே இல்லை இதுவேற..

    வாடையிலே வாழை இலை குனியும் -
    கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
    காதலிலே பெண்மை தலை குனியும் -
    இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

    நல்ல லைன்ஸ்..கண்ண தாசன்னு நினைச்சுப் பார்த்தா வாலியாம்..

    என்ன பாட்டா..உங்களுக்குத் தெரியாதா என்ன

  12. #520
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அச்சோ.. ம்ம் இதான் மதுண்ணா.. தாங்க்ஸ்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •