-
6th September 2014, 04:10 PM
#13
Senior Member
Senior Hubber
**
ஏழாம் பாடல்..
**
“அப்புன்னா”
‘சென்னை பாஷைல்ல அடி..ஆங்கில்த்துல உயரம், தூக்கு, அப்புறம் உன்னோட ஃப்ரண்ட் பேரு அப்புச் செல்லப்பன், கமலோடபேரா ஒரு படத்துல வரும்..”
“உன்கிட்ட போய்க் கேட்டேன் பாரு..அப்புன்னா நீர்.. அப்புத் தலம் நு சொல்லப்பட்றது திருவானைக்காவல்ல உள்ள அகிலாண்டேஸ்வ்ரி கோவில்.
”அதோட வெப்புன்னும் வருதே..”
‘வெப்புன்னா ஜூரம்.. வெம்மையான ஜூரம்னு இங்க வரும்..வா..பாட்டுக்குள்ற போகலாம்..”
*
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
இளமையான, செம்பினை ஒத்த நகில்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகப் பெற்றவன். ரிஷபம் எனப்படும் எருதின் மேல் அவளையும் அமர்த்தி அமர்ந்தவன்.. அழகிய இளமை கொண்டு சிரிக்கும் பிறைச்சந்திரனையும், இளமையாய்த் துள்ளி ஓடும் கங்கை நதியையும் தனது திருமுடிமேல் அணிந்தவன்..அப்படிப் பட்ட பரமன் என் உளத்தினுள்ளே புகுந்துவிட்டான்..
அதனால் என்ன ஆயிற்று.. வெம்மை தரக்கூடிய சுரமும், குளிரினால் வரக்கூடிய சுரமும், வாத நோய்களும், பித்த நோய்களும் – நான் செய்த முன்வினையால் எனக்கு வருவதாகில் – அவை வந்து என்னை நலிய வைக்காது.. என்னையும், என்போன்ற சிவனடியவர்க்கும் அவை நல்லதையே செய்யும்..
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks