*
ஒன்பதாம் பாடல்.
*

ஒரு நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்..

”கண்டிப்ப்பா சினிமாப் பாட்டு தேவையாடா உனக்கு..”

“கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணத் தானே மனசாட்சி.. நல்லா இருக்கும்ல சிச்சுவேஷன்..அதுவும் அந்த ஹீரோயின் அந்தப் படத்துல நடிச்சிருந்தப்ப ஷீ வாஸ் இன் த ஃபேமிலி வேன்னு கேள்விப் பட்டிருக்கேன்..

“ரொம்ப முக்கியம்..சரி..சொல்லு”

நாடுதற்கு அன்னையவள் அழகுமுகம் நோக்கியே
..நல்லநல்ல சைகைசெய்து பார்த்திருந்த காலம்போய்
ஆடலுடன் பாடலுடன் பள்ளிசென்று பாடங்கள்
..அழகுறவே கற்பதற்கு மாணவனாய் இருந்ததும்
மாடத்திலே நின்றிருக்கும் மங்கையரின் விழிமலர்
…மனதினுள்ளே ஊடத்தான் மாற்றங்கண்ட காலம்போய்
வேடமிட்டு வேடமிட்டு வாழ்க்கைநதி சென்றிட
…விந்தைமனம் நொந்தபடி ஈசனையே நாடுதே..

“அது சரி.. இது எல்லாரும் வாழ்கிற வாழ்க்கை தானே..இதுல எதுக்கு நோகணும்..வா..இந்தப் பாட்டுல எனன் சொல்றார்னு பார்க்கலாம்

*
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

பரமசிவன்.. எனையாளுகின்ற ஈசன்.. எப்படிப் பட்டவன்.. பலப்பல வேஷங்கள் அணிந்து பல்வேறு தோற்றங்களில் அடியாருக்கு அருள்புரிபவன்.. அவன் தனது ரிஷப வாகனத்தில் த்னது உடலின் பாதியான உமையன்னையையும் இருத்தி தலைமுடியில் நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் அணிந்த்படி என் உளத்தினில் புகுந்து விட்டான்..

அஹோ பாரும்… அதனால் என்ன ஆயிற்று தெரியுமா.. அழகிய சிவந்த தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரம்மன், திருமால்,வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலத்தில் முடிவைக் கொடுக்கின்ற காலனும் அதைப் போன்ற பலவும் நல்லவையே செய்யும்..அதுவும் பரமனின் அடியவருக்கு மிக நல்லதைச் செய்யும்..

*