Page 44 of 397 FirstFirst ... 3442434445465494144 ... LastLast
Results 431 to 440 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #431
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மிட் நைட் மசாலா – 2

    எழுதியவர் சின்னக் கண்ணன்

    **

    சிந்த்தால் சோப் கொடுப்பா
    எனக் கேட்டு வாங்கி
    சுத்தமாவதற்காக
    மங்கை நடக்க
    பார்த்த அவனுக்கோ
    அவளது சுத்தத்தை எண்ணி
    அழுக்கானது மனசு..

    என்றெல்லாம் கவிதை எழுதிப் பார்த்தவன் தான் நமது ஹீரோ..ராமகிருஷ்ணன்..இளம் வயது கல்லூரி முடித்த பருவம்..கனவில் கன்னியர்கள் ஃபேஷன் பரேட் செய்தபடி வலம் வரும் காலம்..

    இருந்தாலும் இப்போது அவன் குருடன்..ஓ. நோ..அவனுக்குக் கண்ணெல்லாம் போகவில்லை..கண்ணிருந்தும் குருடன்..ஹை..அப்படிச் சில மனிதர்களும் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு வேதாந்தம் பேசத்தெரியாது..காரணம் இளமை.. குருடனாய் இருப்பதற்குக் காரணம் யார் எனக் கேட்டால் அவனது பற்கள் கரகர எனத் தன்னைத் தாமே நற நறக்கும்..

    காரணம் சம்பந்தம்..

    சம்பந்தம் யார்.. அவரது முகத்தோற்றம் பார்த்தீர்களானால் பட்டைக் கண்ணாடி..(கறுப்பு) அதற்குப் பின் ஒளி வீசும் கண்கள்.. ஐம்பதைக் கடந்த வயது… லிப்ஸ்டிக் போடாமலேயே வெற்றிலை மெல்வதால் சிகப்பேறிய உதடு..

    ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு உண்டு..ராஜேஷ் எல்லா மொழிப் பாடல், வாசு சார் எஸ்.வி.சார் பழைய ஆவணங்கள் சேகரிப்பு, சி.க ஜொள் இப்படி நிறைய..

    ஆனால் இந்த சம்பந்தம் இருக்கிறாரே அவருக்கு உயிர்மூச்சு உயிர் பேச்சு எல்லாம் பெட் தான் பந்தயம் தான்..

    சூழ்நிலையில் ராமக்ருஷ்ணனிடம் ச்வால் விடுகிறார் சம்பந்தம்.. நீ என்பொண்ண லவ் பண்ணிக் காமி.. ராம்கி.. பண்ணிட்டேன்னா.. (சம்பந்தத்தின் மனது=அதைவிட ஒனக்கு ஒரு பெரிய தண்டனை தரமுடியதுடா) சம்பந்தம் – என் பொண்ணையே கட்டி வைக்கிறேன்..

    சரி சொல்லி நண்பர்கள் உதவியுடன் ஏற்றது தான் இந்தக் குருடன் வேடம்.. சம்பந்தத்தின் பெண்.. ராதா என வைத்துக்கொள்ளலாம்.. ராம்கியைக் குருடன் என நம்புகிறாள்..தனது வீட்டிற்கும் அழைத்து வந்து வைத்துக் கொள்கிறாள்..

    ஒரு நாள் என்ன ஆகிறது..

    காலை வேளை..

    சூரியனின் சுடர்பட்ட ரோஜா என்ன செய்யும்..பனித்துளியால் முகமலம்பும்..

    அது போலக் கண்விழித்த ராதாவும் என்ன செய்கிறாள்..

    சமர்த்தாய் கிச்சன் போய் திக்க்க் டிகாக்ஷனில் காஃபி போட்டுக் குடித்து பின் உடல் ஃபங்க்ஷன் ஆக அமெரிக்காவில் ரெஸ்ட் ரூம் என வழங்கப் படும் நம்ம ஊர் பாத்ரூமிற்குச் செல்கிறாள்..பின் குளிக்..கிறாள்..

    இங்கே நம் பையனும் குடித்தது காஃபி.. அதுவும் பைங்கொடி ராதா போட்டுக் கொடுத்த தண்ணீர்கலக்காத பாலில் சொட் சொட் டென இறக்கிய டிகாக்ஷன் ( சிக்கரிகலக்காத நரசுஸ் காஃபி) போட்டுச் செய்த கள்ளிச் சொட்டுக் காஃபி..

    இருந்தாலும் அவனுக்குள் கலங்குகிறது..காஃபி செய்த வேலையில்லை..

    துளிதான் பெய்தாலும் தூங்காதே ரோஜா
    குளித்ததால் சாரலில் தான்..

    என்பது போலவும்..

    ஓடையிலே ஓர் தாமரைப்பூ நீராடையில் நீர் அதைப் பாத்தீஹளா என பாடகி தன் காதுக்கடியில் சொல்வதைப் போலவும்.,

    நினைத்ததால் மனதிற்குள் ஒரு மிக்க சந்தோஷம்.. கூட்டமாய் இருக்கும் பஸ்ஸில் உட்கார சீட் கிடைத்தாற்போல…

    அவனுக்குபிற்காலத்திரைப்பாடலாய்

    குளிக்குது ரோஜா நாத்து தண்ணிகொஞ்சம் ஊத்து ஊத்து வரும் என்றெல்லாம் தெரியாது..தெரிவது என்ன ஊகிக்கவே முடியாது..ஏனெனில் பயல் ஒருபிரமையில் சிக்கியிருந்தான்.. இருந்தாலும் சங்க காலப் புலவராய்ப் போங்கடித்த கவிஞர் சின்னக் கண்ணனார் அவனுக்கு நினைவுக்கு வந்தார்!

    கோமகள் அழகுடன் சென்றாள் சென்றாள்
    …கொண்டநல் லுடலினைக் காப்ப தற்காக
    சாமரம் வீசிய தென்றல் தவிர்த்தே
    …தக்கதாய் அறையினில் புகுந்தாள் மேலும்
    வாமனத் தோற்றமாய்க் குனிந்தே நீரை
    …வக்கணை யாகவே நிறைக்க பின்பு
    தாமரை அழகியல் கூட்டி அங்கே
    ..தட்டென நீரினில் குளிர்ந்ததே நன்றாய்..

    என்ன செய்வது எனத் தெரியவில்லை.. நேரில் போய் நங்கையைப் பார்க்கலாமா..ம்ஹூம் தப்பு..அவளுடைய தகப்பனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அப்படி..

    இருந்தாலும் சும்மா இருக்க முடியவில்லையே.. காற்றில் யார் கரும்புச் சாற்றுடன் தேன் கலந்து காதில் ஊற்றுவது..

    கொஞ்சம் உற்று கவனிக்கையில்… அவள் தான்..அந்த ரா ரா ராதா தான்.. மெல்லிய ல ல ல ஹம்மிங்க்..

    இங்கோ ராமகிருஷ்ணன் தன்னுடைய கூலிங்க்ளாஸிற்குள் துடிக்கும் கண்ணைக் கண்ட்ரோல் செய்கிறான்..மெல்லக் கண் மூட அவனுக்குள் ராதாவின் பிம்பம் எழுகிறது..உளத்திலிருந்து பாடல் எழுகிறது..குளிக்கிற அவளுடைய அங்கங்கள் அவன் கண்முன் தோன்றுவது போலப்ரமை..

    பாடுகிறான்..

    **
    இது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த பொய்க்கால் குதிரையின் கதைச் சுருக்கம்..பின்கதை வேறென்ன பந்தயத்தில்வென்று பாவையை மாலை சூடுகிறான் ஹீரோ..

    கலகலவென இருக்கும் என மிக எதிர்பார்த்துச் சென்ற படம்.மிக எதிர்பார்த்ததாலேயே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஏமாற்றத்தை த் தந்த படம்.. முதலில் பார்த்ததற்கப்புறம் இந்தப் படத்தைக் கண்டதில்லை

    கதா நாயகனாக ராமகிருஷ்ணன்(கன்னடம்) சம்பந்தமாய் வாலிப வாலி, ஹீரோயின் ராதாவாய் (பெயர் நினைவிலில்லை) விஜி..

    விஜி ஒரு சபிக்கப் பட்டதேவதை.. எவ்வளவு தான் அழகிருந்த போதிலும் அம்மணிக்கு பாவம் நடிப்பு மட்டும் கொஞ்சம் மெழுகுவர்த்தியில் காய்ச்சிய தோசைத்திருப்பியின் பின்புறக் காம்பினை வைத்துச் சுட்டாலும் ம்ஹூம் வரவே வராது.. பக்கத்தில் இடி விழுந்தாலும் இடி விழுந்துச்ச்சா என்பது போன்ற முகபாவம்.. ரியல் லைஃபுக்கு ஓ.கே..ரீல் லைஃபுக்கு க் கஷ்டம் தான்.. அதே போல் ரியல் லைஃபிலும் அடி வாங்கியிருக்க வேண்டாம்..பாவம் சின்ன வயதிலேயே சென்றுவிட்டார் மேலுலகம்

    படத்தில் ஹைலைட் வாலியின் முதல் படம், ராதாரவி, ரவீந்தர் நகைச்சுவையில் கலக்கிய படம்..அதுவும் ராதாரவி ரேடியோ மெகானிக்..அவரிடம் “ என்ன நாயரே.. என்ன கன்ஃப்யூஷன்”

    “ஒண்ணுமில்லை இந்த பார் இந்த ரேடியோவை ரிப்பேர்பண்ணினேனா கேட்டுப்பார்..” வைக்க “ ஹேய் த்ரீ நாட் டூ அந்த அக்யூஸ்ட செல்ல போடு” கொஞ்சம் திருப்ப “ விருது நகர் விருத்தாச்சலம் வழியாகச் செல்லும் மதுரை சென்னைபாண்டியன் எக்ஸ்பிரஸ்” ஓ.. இது என்ன ப்ராப்ளம்னே தெரியலை.. ரேடியோ ஸ்டேஷனுக்குப் பதிலா எல்லா ஸ்டேஷனும் எடுக்குது… எனச் சொல்ல தியேட்டரில் குபீர் சிரிப்பு வந்தது (மதுரை சிவம்)

    பாடல் எழுதியதுவாலி.. (பின்ன அவரில்லாமலா) பாடியவர் எஸ்பி.பி. இசை.எம்.எஸ்வி..

    ..
    பாடல் வரிகள்..

    எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
    எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

    மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
    அழகு எல்லாம் தெரிகிறது

    உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது
    கொஞ்சம் இறங்கி வந்தால் நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
    ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
    உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே

    அழகு எல்லாம் தெரிகிறது
    எனக்கு எல்லாம் தெரிகிறது

    நனைந்து நிற்கும் தாமரையே எங்கும் தண்ணீர் வழிகிறது
    பக்கம் நெருங்கி வந்தாய் ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

    நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ
    நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ
    திரண்டு நிற்கும் பால் நிலவே உன்னை வானம் அணைக்கிறது
    மண்ணில் தவழ்ந்து வந்தால் நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது

    பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே
    நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே

    அழகு எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
    மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
    அழகு எல்லாம் தெரிகிறது

    **



    பாடல் வீடியோ…

    ..

    *

    கன்னட ராமக்ருஷ்ணன் அதற்கப்புறம் மெளலியின் அந்தப்புரத்தில் நடித்ததாக நினைவு..
    *
    இது க்ருஷ்ணாஜிக்காக டெடிகேட் செய்யப்பட்ட பாடலாக்கும்..க்ருஷ்ணாஜி ஷூட் பி ஹேப்பி அண்ணாச்சி!

    *

    அடுத்த பாடல் கொடுக்கப் போவது நம் ராகவேந்தர் சாருக்காக..

    என்ன பாட்… க்ளூ.. .. Don’t worry my dear. I am here !

    ( நா போய்ட்டு நாளைக்கு வாரேன்!)

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #432
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இரவின் மடியில்



    தமிழில் புதியதாக ஒரு டிக்ஷனரி உருவாக்கி பாராட்டுவதற்கென்றே ஒரு லட்சம் வார்த்தைகளாவது போட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அதை வைத்து இசையரசியின் குரலை வர்ணிக்கலாம்.

    கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் பரவசம் ஏற்படுத்தும் உன்னதமான பாடல்....

    பால்குடம் படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் (வரிகள் வாலி?) காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...

    முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ...

    http://www.inbaminge.com/t/p/Paal%20Kudam/
    வரிகள் வாலியே தான்..

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    இசையரசி பாடியிருக்கும் விதம் ...

    எல்லாமே சூப்பர்

  5. #433
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Kapi for krishna

    Krishna: You wanted songs in Kapi. Here is one I like:

    enna dhavam seidhanai yasodhaa engum nirai para brahmam.........



    This is a composition by Papanasam Sivan rendered in Carnatic concerts these days.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, rajeshkrv liked this post
  7. #434
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    நான் ஆச்சர்யத்தைத்தான் எதிர்பார்த்திருந்தேனே தவிர,மந்திரத்தை அல்ல.இது ஒரு மாயமோ என்று கிள்ளிகொள்கிறேன்.

    மெல்லிசை மன்னரின் அற்புதங்களில் ஒன்று ஓடும் நதி. ரவி- சரோஜாதேவி இணையில் இந்த பாடலை ரவி திரியில் அலசியிருந்தாலும்,இவ்வளவு விஸ்தாரமாக எனது 3000 க்கு அன்பளிப்பா?

    என்னவோ போடா மாதவா.....
    Last edited by Gopal.s; 16th October 2014 at 07:29 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes rajeshkrv liked this post
  9. #435
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கோபால் ஜி, உங்கள் அன்பளிப்பில் ஆனந்த கூத்தாடுகிறீர் போல


    என் தமிழாசான் வாலி ஐயாவின் அற்புத வரிகளில், திரையிசைத்திலகத்தின் மெய் மறக்கும் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    பாலமுரளியும் சூலமங்கலம் ராஜலெக்*ஷ்மியும் இசைத்த கண்மலர் திரைப்பாடல்

    தேவார நடையில் அழகான பாடல் . கவியரசர் வாலி ஐயாவை பாராட்டிய பாடல் ..

    இந்த வரிகள் ஆஹா

    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    இவையாவையும் கொண்டான் உந்தன் மாலையும் கொண்டான்


    இதோ முழுப்பாடல்

    தோடுடைய செவி யன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
    காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
    ஏடுடைய மல ரான்முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
    பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
    உட்பொருள் நாடுவார்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
    உட்பொருள் நாடுவார்

    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
    உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
    எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
    பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
    இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
    ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
    உட்பொருள் நாடுவார்
    ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

    http://music.cooltoad.com/music/song.php?id=558460

  10. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  11. #436
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜேஷ்,



    இசையரசி, வாலி இரண்டிலும் ,நான் உங்கள் கட்சியே.



    நீங்களே குறிப்பிட்டது போல,கவியரசரை ,அசர வைத்த இரு வாலியின் முத்துக்கள். மாதவி பொன் மயிலாள், ஓதுவார் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks rajeshkrv thanked for this post
    Likes rajeshkrv liked this post
  13. #437
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    தேனிசை தென்றலின் முத்துக்கள் - 3

    மதுரை வானொலி இந்த பாடலை ஒலிபரப்பாத நாளில்லை. 90’களில் தேவா வளர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு படத்தின் எல்லா பாடல்களும் முனுமுனுக்கும் படி அமைந்தது இந்த படத்தில் எனலாம்

    1991’ல் வெளி வந்த வாசலில் ஒரு வெண்ணிலா.
    மலையாள/தமிழ் நடிகர் திரு வி.எம்.சி.ஹனீபா இயக்கிய இந்த படத்தில் நிழல்கள் ரவி, அமலா மற்றும் பேபி ஷாம்லி நடித்திருந்தனர்.

    தேவாவின் இசையில் ஷாம்லிக்கு ஜானகி பாடிய ராஜா மகள் இந்த சின்ன ராணி பாடல் மிகவும் பிரபலம்
    அதே போல் இருவருக்கும் ஜோடிப்பாடலாக மாலையிலே தெற்கு மூலையிலே பாடலும் இனிமை

    ஆனால் என் மனதை கவர்ந்தது (மதுரை என்ற காரணத்தினாலே என்னவோ ) திரு யேசுதாஸ் அவர்கள் ஹனீபாவிற்காக பாடும்
    என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான்

    வாலி ஐயாவின் வரிகளில் இந்த பாடல் நம்மை என்னவோ செய்யும்... இந்த பாடல் இன்றும் என் நினைவில் உள்ளதற்கு காரணம் மதுரை வானொலி நிலையம் ..

    என்னை போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்


    என் ஊரு மதுர பக்கம்
    என் பாட்டு மனசில் நிக்கும்
    நான் பாடும் நேரம் ராப்போது தான்
    நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
    ஆகாய நிலவும் தூங்கும்
    நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
    என்னோடு நூலும் இல்ல
    பின்னோடு வாலும் இல்ல
    என்னோடு நூலும் இல்ல
    பின்னோடு வாலும் இல்ல
    காத்தோடு போகும் காத்தாடி நான்

    என் ஊரு மதுர பக்கம்
    என் பாட்டு மனசில் நிக்கும்
    நான் பாடும் நேரம் ராப்போது தான்



    யாராரோ ஆசைப்பட்டா
    சேத்துவைக்கும் அன்னக்கிளியே
    உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்
    ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே
    அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்
    விதியோடு மோது அடி தங்கச்சி
    குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி
    பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்

    என் ஊரு மதுர பக்கம்
    என் பாட்டு மனசில் நிக்கும்
    நான் பாடும் நேரம் ராப்போது தான்



    எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே
    எண்ணம் போல வாய்க்காதம்மா
    வாய்க்காட்டி விட்டுத்தள்ளு
    ஏன் ஏங்கணும்
    வந்தாலே வரவில் வைப்போம்
    விட்டுப்போனா செலவில் வைப்போம்
    வேண்டாத பாரம் எல்லாம்
    ஏன் தாங்கணும்
    பூ பூத்ததெல்லாம் காயாகுதா
    காயானதெல்லாம் கனியாகுதா
    இதுக்காக வாடலாமா
    அதனால பாடுறேன்

    என் ஊரு மதுர பக்கம்
    என் பாட்டு மனசில் நிக்கும்
    நான் பாடும் நேரம் ராப்போது தான்
    நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
    ஆகாய நிலவும் தூங்கும்
    நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
    என்னோடு நூலும் இல்ல
    பின்னோடு வாலும் இல்ல
    என்னோடு நூலும் இல்ல
    பின்னோடு வாலும் இல்ல
    காத்தோடு போகும் காத்தாடி நான்

    என் ஊரு மதுர பக்கம்
    என் பாட்டு மனசில் நிக்கும்
    நான் பாடும் நேரம் ராப்போது தான்
    நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
    ஆகாய நிலவும் தூங்கும்
    நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்



    தொடரும்.

  14. #438
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபல பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு .

    மதுர பாஸ்கர் தாஸ் ------- காளிதாஸ் -1931

    பூமி பாலக தாஸ் - மேனகா - 1935

    நடராஜ ஆசாரி - மிஸ் கமலா - 1936

    ஏ . சுப்பையா - லீலாவதி சுலோச்சனா - 1936

    இரத்தின சபாபதி - பக்கா ரௌடி - 1937

    பாபநாசம் சிவன் - சிந்தாமணி - 1937

    மாரியப்ப சுவாமிகள் - 1939

    வேல்சாமி - பக்த கௌரி -1941

    உடுமலை நாராயண கவி - கண்ணகி - 1942

    கல்கி கிருஷ்ண மூர்த்தி - 1945

    சுந்தர வாத்தியார் - பிழைக்கும் வழி -1948

    ராஜகோபாலய்யர் - போஜன் -1949

    கம்ப தாசன் - 1949

    பட்டியல் தொடரும் .....

  15. Thanks vasudevan31355 thanked for this post
  16. #439
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபல பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு .


    கண்ணதாசன் - கன்னியின் காதலி - 1949

    மு .கருணாநிதி - மந்திரிகுமாரி - 1950

    மருதகாசி - மந்திரிகுமாரி - 1950

    சந்தானம் - மோகன சுந்தரம் - 1951

    காமாக்ஷி சுந்தரம் - ஓர் இரவு -1951

    டி .கே . சண்முகம் - ஓர் இரவு -1951

    சுந்தரம் - மனிதனும் மிருகமும் -1953

    ராஜப்பா - அன்பு -1953

    சிவம் - மதனமோகினி - 1953

    அய்யா முது - மலைக்கள்ளன் - 1954

  17. Thanks vasudevan31355 thanked for this post
  18. #440
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சுரபி - எதிர்பாராதது - 1954

    சுத்தானந்த பாரதியார் - பொன்வயல் -1954

    விந்தன் - கூண்டுக்கிளி - 1954

    சுப்பு ஆறுமுகம் - விடுதலை - 1954

    ராமையா தாஸ் - கதாநாயகி - 1955

    கா .மு ஷெரிப் - நான் பெற்ற செல்வம் - 1956

    பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் - பாசவலை -1956

  19. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •