Page 118 of 397 FirstFirst ... 1868108116117118119120128168218 ... LastLast
Results 1,171 to 1,180 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1171
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னைப் புரட்டிப் போட்ட இசைக் குயிலின் பாடல்கள். 6

    என் நெஞ்சு உன்னை அகலாது
    அன்பை அசைக்க முடியாது

    'இந்தி டப்பிங் என்றால் என்ன? அப்படியே தமிழ்ப் பாடலாய் என்றைக்கும் ரசிக்கும்படி மாற்றித் தருவேன்' என்று 'அகலாது' என்ற வார்த்தையின் 'து' எழுத்து உச்சரிப்பை தூ என்று அதாவது அகலாதூ..... என்று இந்தி வெர்ஷனுக்கு ஏற்பப் பாடி தன் இளங்கிளிக் குரலால் ரசிக்க வைத்த சுசீலா அம்மாவின் விந்தை.

    'அன்பை' என்ற சொல்லைக் கூட

    'அன்' என்று உச்சரித்து பின் 'பை' என்று தனியாக உச்சரிக்கும் அழகு.

    விசித்திரமான குரல்வளத்தில் சித்திரக் குரலாளின் பாடல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1172
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்

    இளையராஜா சில பாடல்களை தேடி தேடி சுசீலா அம்மாவிடம் கொடுப்பார் .அதில் இதுவும் ஒன்று .
    அதே போல் தான் 'நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆட ' மற்றும் 'நிலவு நேரம் இரவு காயும் வானிலே ' விரசம் இல்லாத பாடல் - அன்னை ஒரு ஆலயம்

    Last edited by gkrishna; 13th November 2014 at 10:36 AM.
    gkrishna

  4. Likes kalnayak, Russellmai liked this post
  5. #1173
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசியின் சில அரிதான பாடல்கள் இதோ

    வாசு ஜி..கிருஷ்ணா ஜி கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

    வாசு ஜி, ஹிந்தி பாட்டு கேட்டீங்களா.. சங்கதிகளும் ஒவ்வொன்றும் வழுக்கி செல்லும் குரலில்..


    சென்று வா நிலா என்ற படத்தில் பூங்காற்றே என்ற பாடல் பாடகர் திலகத்துடன்

    http://www.4shared.com/mp3/6iBK2iwab...a_nila_TM.html

    ஓட்ட பானையில நண்ட வுட்டா .. அருமையான கிராமிய பாடல் முன் ஒரு காலத்தில் திரைப்படத்தில்

    http://www.4shared.com/mp3/SNkBb6etb..._vitta-PS.html

    131 நிமிடங்கள் திரையில் ஒலித்த கும்பகோணம் மாமா

    http://www.4shared.com/mp3/SG7Eq21wc...m_Mama-PS.html

    கண்ணதாசன் இறந்த போது எம்.எஸ்.வி இசையில் வாலி ஐயாவின் வரிகளில் கண்ணதாசன் புகழ் பாடும் பாடல்

    http://www.4shared.com/mp3/X9QfhIVub...te_to_kan.html

  6. Likes Russellmai liked this post
  7. #1174
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மேலும் இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் சுசீலா அம்மா பாடி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு மனதில் தோன்றிய இரண்டு பாடல்கள்

    1.அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
    2.அந்த புரத்தில் ஒரு மகாராஜன் - தீபம்
    Last edited by gkrishna; 13th November 2014 at 11:10 AM.
    gkrishna

  8. #1175
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    மேலும் இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் சுசீலா அம்மா பாடி இருந்தால் இன்னமும் நன்றாக இருந்து இருக்கும் என்று எனக்கு மனதில் தோன்றிய இரண்டு பாடல்கள்

    1.அந்தி மழை வரும் நேரம் - முந்தானை முடிச்சு
    2.அந்த புரத்தில் ஒரு மகாராஜன் - தீபம்
    தீபம் திரையில் சுசீலாம்மா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    இது மாதிரி பல பாடல்கள் உண்டு . அல்வா மாதிரி சுசீலாம்மாவிற்கு போயிருக்க வேண்டிய பல பாடல்கள் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலத்தின் கோலம்

  9. Likes gkrishna liked this post
  10. #1176
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks raajesh sir

    அபூர்வ பாடல்களாக சொல்லி வருகிறீர்கள்
    நிச்சயம் இரவு நேரம் தனியாக ஒதுக்கி கேட்க வேண்டிய பாடல்கள்

    சுசிலா அம்மாவின் உச்சரிப்பு பிசகாத பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..

    தேனாக இனிக்கும் ’ஆலய மணியின் ஓசையை'

    gkrishna

  11. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, kalnayak liked this post
  12. #1177
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    raajesh sir /vaasu sir

    வடலூர் திருஅருட்பா இசை விழா நிகழ்ச்சி ஒன்றில் சுசீலா அம்மா பாடிய வள்ளலார் அடிகளாரின் திரு அருட்பா பாடல் அடங்கிய காசெட் வெளியிடப்பட்டது நினைவிற்கு வருகிறது. மிக அருமையாக இருக்கும் . youtube இல் இருக்கிறதா என்று தெரியவில்லை
    gkrishna

  13. #1178
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சுசீலா அம்மாவின் எளிமையான பேச்சு ஒன்று தூத்துகுடி பாராட்டு விழா ஒன்றில்

    கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

    தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன். அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின.

    மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான்
    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #1179
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    தமிழ் ஹிந்து நாள் இதழ்

    இன்று வெளியிட்டு உள்ள சுசீலா அம்மா பிறந்த நாள் முன்னிட்டு



    தென்னிந்திய திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலாவின் பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய அரிய முத்துகள் பத்து...

     ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். தந்தை ஒரு வக்கீல். பள்ளியில் படிக்கும்போதே இசை யில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரா வின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ முடித்தார்.

     பதினைந்து வயதில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதன் முதலாக பின்னணி பாட வைத்தார். 1955ல் இவர் பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்.., உன்னைக் கண் தேடுதே பாடல்களால் பிரபலமடைந்தார்.

     பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி போன்ற பிரபலங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணி உலகில் இந்த இளம் பாடகியின் பயணம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. தனித்தன்மை வாய்ந்த தன் குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் பாடல்களை அளித்த இந்த இசையரசியின் ஆட்சி, அரை நூற்றாண்டுகள் தொடர்ந்தது.

     1955 முதல் 1985 வரை வெளிவந்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம். சவுந்திரராஜன், கன்னடத்தில் பி.பி. நிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. குறிப்பாக, டி.எம். சவுந்திரராஜனுடன் தமிழில் நூற்றுக்கணக்கான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.

     தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இருவரும் பிரிந்த பின் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தொடங்கி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என ஏராளமான இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

     5 முறை தேசிய விருதுகள், பத்ம பூஷன் விருது, 10க்கும் மேற்பட்ட மாநில விருதுகள், கலைமாமணி பட்டம், ஆந்திர மாநில அரசினர் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

     25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என பல மொழிப் படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

     இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கருடன் இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. 2005 வரை ஹிட் பாடல்களை அளித்து வந்தார். தற்போது பக்திப் பாடல்கள், மெல்லிசை பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

     பல்வேறு ஆடியோ நிறுவனங்களுக்காக 1000க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

     ஒவ்வொரு வருடமும் இவரது பிறந்த நாளான நவம்பர் 13 அன்று இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் வரும் வருவாயில், வறுமையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர பென்ஷன் தொகையை அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
    gkrishna

  16. Likes Russellmai, chinnakkannan liked this post
  17. #1180
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    மக்கள் திலகத்தின் ரிக்க்ஷகாரன் திரை படத்தில் 'பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன' - நடிகை மஞ்சுளாவின் நாட்டிய திறைமையும் அவருக்கு எளிதாக பொருந்தும் சுசீலா அம்மா அவர்களின் குரல் இனிமை யும்இணைந்து கட்டி போடும் பாடல்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •