Page 122 of 397 FirstFirst ... 2272112120121122123124132172222 ... LastLast
Results 1,211 to 1,220 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1211
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே..
    தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். இசையரசியின் பிறந்த நாளை நம் மய்யம் திரியில் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளீர்கள். ... ளோம்... ராஜேஷ் சார்... இசையரசியிடம் இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வாசு சார், கிருஷ்ணா சார், வாராது வந்த மாமணி போல் வந்த சாரதி சார், சூப்பர் சி.க. சார், கோபால் சார், எஸ்.எஸ்.எஸ். சார், எஸ்வீ சார் என ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
    இசையரசி இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கவேண்டும் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இறைவன் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1212
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    சுந்தரபாண்டியன் சார் வாணி ஜெயராம் ரசிகர் மட்டுமின்றி பழைய தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய மிகுந்த ஆழமான விஷயஞானம் உள்ளவர். அவர் மட்டுமின்றி நம் மருத்துவர் சாரும் இன்னும் அதிக பங்களிப்பினைத் தரக்கூடியவர். இந்தப் பதிவின் மூலம் நம்முடைய மருத்துவர் அய்யா அவர்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பை நல்கி அவர் இம்மய்யம் திரியில் இணைந்து பங்களிப்பினைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1213
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    மலர்கள் சூட்டி திலகம் தீட்டி... கர்ணன் திரைக்காவிய வளைகாப்பு பாடல்...

    இசைத்தட்டு வடிவம்

    படத்தில் இடம் பெறாத சங்கினால் பால் கொடுத்தால் வரிகளை பி.பி.எஸ். குரலில் கேளுங்கள்..


    http://www.mixcloud.com/mpselsan/%E0...E%A3%E0%AE%A9/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Likes Russellmai liked this post
  7. #1214
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி திரு ராகவேந்தர் சார்
    gkrishna

  8. #1215
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நண்பர் வாசு

    இளையராஜா இசை அமைத்த 'துணை இருப்பாள் மீனாக்ஷி ' திரைபடத்தை நினைவு கூர்ந்து அதன் இயக்கனுர் திரு வலம்புரி சோமநாதன் அவர்களை பற்றியும் சொல்லி இருந்தீர்கள். அவர்களை பற்றி சில தகவல்கள் படித்தேன். பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்




    "வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!

    தமிழ் சினிமாவில் முன்னணி கதை-வசன கர்த்தாக்களுள் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தவர் வலம்புரி சோமநாதன். நல்லறம் நோக்கி அகத்துறை வாழ்வியலை நகர்த்தும் குடும்பக் கதைகளுக்கான இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் 1928-ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் மரபிலக்கியங்களைப் பயின்றதுடன், ஆங்கில மொழியும் நன்கு அறிந்தார். அந்தக் காலத்தில் மன்னர் ஆட்சியின் கீழிருந்த புதுக்கோட்டையில் காகிதம் எளிதாகவும், மலிவாகவும் கிடைத்ததால், அவ்வூரில் தொடங்கப்பட்டப் பத்திரிகைகளில் ஒன்று "திருமகள்'. அப்பத்திரிகையில் முதன் முதலாக விளம்பரம் சேகரிக்கும் பணியில் கவிஞர் கண்ணதாசன் நியமனம் பெற்று, பிறகு ஆசிரியராக உயர்த்தப்பட்டபோது நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தவர் வலம்புரி சோமநாதன்.

    ஆசிரியரான கண்ணதாசனுக்குப் பத்திரிகையின் அத்தனைப் பக்கங்களுக்கும் செய்திகள் அளிக்க அவகாசம் இல்லை. எனவே, சோமநாதனையும் சில பக்கங்களை நிறைவு செய்யும்படி உற்சாகப்படுத்தினார். கருத்துச் சாரமிக்க சோமநாதனின் கதை, கட்டுரைகள் பத்திரிகைக்குப் பலம் சேர்க்க, கண்ணதாசன் மேலும் ஊக்கப்படுத்த, வலம்புரி சோமநாதன் எழுத்தாளராக அரும்பினார்.

    தமிழின் முக்கிய இலக்கியப் பத்திரிகையான "சக்தி' மாத இதழின் ஆசிரியரான வை.கோவிந்தன் தலைமையில் பணிபுரிந்த சோமநாதன், "எழுத்து முதிர்ச்சி' பெற்றார். சண்டமாருதம், முல்லை, பேசும் குரல், டாக்-எ-டோன் போன்ற மாத இதழ்களும் சோமநாதனுக்கு இடமளிக்க, அவரது படைப்பாற்றல் மீது மக்களின் கவனம் திரும்பியது. ஏவி.எம்.செட்டியார் தனது பட நிறுவனத்தில் கதை இலாகாவுக்கு அழைத்தார். ஏவி.எம்.மின் கதைக் குழுவில் முக்கியமானவர்களுள் ஒருவராகி, சோமநாதன் சினிமா உலகில் அறிமுகமானார்.

    இந்தி மேதை மோஹன்லாலிடம் சோமநாதன் ஒரு படத்தின் கதையையும் அதன் வசனத்தையும் நுட்பமான ஆங்கிலத்தில் சொல்ல, அதை இந்தியில் எழுதி மோஹன்லால் தயாரிப்பாளருக்கு அனுப்பிவைத்தார். அவர் தொலைபேசியில் மோஹன்லாலைப் பாராட்ட, அதற்கு, "நீங்கள் அனுப்பிய கதாசிரியர் சோமநாதன்தான் உங்கள் பாராட்டுக்குரியவர். நான் இந்தியில் மொழிபெயர்த்து அனுப்பினேன்; அவ்வளவுதான் என் பங்கு'' என்று கூற, தயாரிப்பாளர் வலம்புரியாரின் ஆற்றலில் பிரமிப்பு அடைந்தாராம்.

    ஏவி.எம்.மின் பழைய படமான "என் மனைவி' படத்தை சிங்களத்தில் மறு ஆக்கம் செய்ய ஒரு படக்குழு செட்டியாரை அணுகியபோது, "என்னிடம் இருக்கும் சோமநாதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படம் வெற்றியடைவது நிச்சயம்'' என்று கூறினாராம். எல்.வி.பிரசாத் தனது "மங்கையர் திலகம்' படத்துக்கு சோமநாதனையே எழுத வைத்தார். படம் மகத்தான வெற்றிபெற்றது.

    வலம்புரியாரின் வசனங்கள், வெகுஜன ரீதியாகப் படங்கள் வெற்றிபெற பெரிதும் துணைபுரிந்தன. பி.பானுமதியின் "மணமகள் தேவை' படத்துக்கு வசனத்தை சோமநாதன் எழுத, படம் நகைச்சுவை சித்திரமாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

    ஜனரஞ்சக ரசனையை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல புத்திப் பூர்வமான படங்களைப் படைக்க வேண்டும் என்று தீவிர ஆர்வம் சோமநாதனுக்கு ஏற்பட, பானுமதி தயாரிக்க சரத்சந்திரர் நாவலை மூலக் கதையாக வைத்து, "கானல் நீர்' படத்தை எழுதினார். படம் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தபோதிலும், படத்தைப் பார்த்த டி.கே.சண்முகம், எழுத்தாளர் அகிலன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் சோமநாதனுக்கு மனம் நெகிழ்ந்து பாராட்டுகளை வழங்கினார்கள்.

    சோமநாதன் சொந்தப் பட நிறுவனம் ஆரம்பித்து, "திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்கள். வெற்றிப் படத்துக்கான கதையை கட்டமைப்பதில் சோமநாதனுக்குச் சிறப்பான திறமை இருந்ததால், இந்தி நடிகர் திலீப்குமார் சோமநாதனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் நடிக்கும் படங்களின் கதைகளை சோமநாதனிடம் சொல்லி, ஆலோசனைகள் பெற்றபின்பே நடிக்கத் தொடங்குவாராம்.

    ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலை சோமநாதன் படமாகத் தயாரித்தார். அந்தப் படம் இந்தியன் பனோரமாவுக்கு அனுப்பப்பட்டு தமிழுக்கு மாநிலப் பரிசைப் பெற்றுத்தந்தது.

    கதை, வசனம் தவிர்த்து, இயக்கத்திலும் ஈடுபட்ட சோமநாதன், கண்ணதாசனின் "சிவப்புக்கல் மூக்குத்தி' மற்றும் "லலிதா', "துணையிருப்பாள் மீனாட்சி', ஆகிய படங்களையும் இயக்கினார். "துணைவி' படத்தின் வசனத்துக்காக அந்த ஆண்டின் சிறந்த வசன கர்த்தாவுக்கான விருதைப் பெற்றார். ஆஸ்கார் விருது பெற்ற "காந்தி', என்.எஃப்.டி.சி. தயாரித்து மம்முட்டி நடித்த "டாக்டர் அம்பேத்கர்' போன்ற படங்களின் தமிழாக்க வசனங்களை எழுதினார். 1984-இல் தமிழக அரசின் "கலைமாமணி' விருது பெற்றார்.

    தமிழ்ப் படங்களில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் குழுவில் அவர் பல ஆண்டுகள் இடம்பெற்றார். திரைப்படம் தொடர்பான சங்கங்களில் தலைவராகவும், நிர்வாகக்குழு அங்கத்தினராகவும் நேர்மையுடன் செயல்பட்டார். ரஷிய திரைப்பட விழாவுக்கு அந்த அரசு சோமநாதனை இருமுறை அழைத்து கெளரவப்படுத்தியது தமிழ்க் கலைஞனுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

    திரையுலகில், பல கதாசிரியர்கள் உருவாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த சோமநாதன், 2010-ஆம் ஆண்டு தன் 82-வது வயதில் காலமானார்.

    நன்றி - தமிழ்மணி
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #1216
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இசையரசியின் பிறந்த நாள் தெலுங்கு படவுலக பாடகர்கள் அனைவரும் வாழ்த்த ஒரு அழகான மாலையானது.
    நேற்று மாலை இசையரசியின் மருமகளும் பாடகியுமான சந்தியாவும் மற்ற பாடகர்களும் அழகான விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதோ

  11. Thanks kalnayak, gkrishna thanked for this post
    Likes gkrishna, Russellmai liked this post
  12. #1217
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    வாசு சார், ராகவேந்தர் சார், ராஜேஷ் ஜி க்ருஷ்ணா ஜி கல் நாயக் சார், கோபு சார் நன்றி.

    இந்த விழா எங்கு நடந்தது ராஜேஷ்..அங்கேயா...

    *

    இன்று என்னுடைய தினம் (ம்க்க்கும்!)

    வீட்டில் இருந்து வெளியில் செலநினைக்க
    கூட்டும் குரல்கொண்டே கூப்பிட்டு – பாட்டாய்
    இசைத்தே அடம்பிடிக்கும் எங்கும் வருமே
    தசையினில் ஆடிய தான்..

    *
    குழந்தைகள் பாட்டு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது

    http://www.youtube.com/watch?feature...&v=XyNOEzYgpUU

    கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
    வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

    *
    பின் அழகனில் பசங்களை வைத்து ஒரு பாடல்.. துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி.. மரகதமணி புலமைப் பித்தன்..



    *
    கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..

    இது எனக்காக..!

    http://www.youtube.com/watch?feature...&v=Nymih9WGhYY
    Last edited by chinnakkannan; 14th November 2014 at 11:18 AM.

  13. Likes kalnayak, Russellmai liked this post
  14. #1218
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சி.க
    ஹைதராபாத்தில் நடந்தது.

  15. Thanks chinnakkannan thanked for this post
  16. #1219
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    இன்று என்னுடைய தினம் (ம்க்க்கும்!)

    வீட்டில் இருந்து வெளியில் செலநினைக்க
    கூட்டும் குரல்கொண்டே கூப்பிட்டு பாட்டாய்
    இசைத்தே அடம்பிடிக்கும் எங்கும் வருமே
    தசையினில் ஆடிய தான்..

    *
    குழந்தைகள் பாட்டு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது
    நண்பர் சி கே

    இன்று உங்க தினம் என்பதை மறந்து விட்டேன். நினைவு 'படுத்தியது' க்கு நன்றி .


    gkrishna

  17. Thanks chinnakkannan, Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  18. #1220
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா

    வணக்கம். இன்று என்ன ஏப்ரல் 1 ஆ? சி.க அவர் தினம்னு போட்டிருக்காரே

    சி.க சார் சும்மா. வெள்ளாட்டுக்கு. சீண்டனும்னு தோணிச்சு.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •