Page 126 of 397 FirstFirst ... 2676116124125126127128136176226 ... LastLast
Results 1,251 to 1,260 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1251
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு

    எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை - ஒரே வியப்பாக இருக்கின்றது - இவள்ளவு அழகாக ஒரு திரியை ஆரம்பித்து அதற்க்கு "மயங்கவைக்கும் மதுர கானங்கள் " என்ற அருமையான தலைப்பையும் கொடுத்து , வெகு சிறந்த பதிவாளர்களையும் இந்த திரியின் அடிமைகளாக்கி , வெகு விரைவில் பாகம் மூன்றையும் கடக்க இருக்கும் நிலையில் நின்று , வெற்றி வாகை சூடி , இதற்கும் மேலாக நக்கீரர் வளர்த்த தமிழ் சங்கத்தை மறைய விடாமல், அதை நெய்வேலியில் மீண்டும் ஸ்தாபித்து சகோதர பாசத்துடன் , இந்த திரியில் ஒரு ஒற்றுமையை கடைப்பிடித்து யார் மனதையும் புண் பட வைக்காமல் திரியை எடுத்து செல்லும் அழகை ஒரு பார்வையாளராக மட்டுமே இது வரை ஆராதித்து வந்தேன்

    எனக்குள் ஒரு விதமான பயம் இருந்து வந்தது - இங்கு பதிவிடும் ஒவ்வருவரும் மிகுந்த திறமை சாலிகள் , சங்கீதத்திலும் , இசையிலும் கை தேர்ந்தவர்கள் - தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் - அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் இந்த திரிக்கு ஓடோடி வந்திருக்கும் அவர்களை என் பதிவுகள் மூலம் ஏமாற்றம் அடைய செய்வதா - அந்த சங்கீத அறிவிப்பு ஒன்றாக இருக்குமா ?? இந்த பயம் இருந்தும் கூடவே ஒரு சின்ன ஆசை - முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பததுதான் ----

    இந்த திரியின் விதி முறைகளை படிக்கவில்லை - இருப்பினும் ஒரு சின்ன வேண்டுகோள் - என் பதிவுகள் -தெளிந்த நீரோடையைபோல செல்லும் பதிவுகளை தடுப்பது போல இருந்தாலோ , போடும் பதிவுகளுக்கு முழுவதும் மாறுபட்டது போல இருந்தாலோ , repeat telecast ஆக இருந்தாலோ , பிழைகள் நிறைந்த அல்லது உண்மைக்கு மாறுபட்ட கருத்துக்களாக இருந்தாலோ , தயவு செய்து எனக்கு ஒரு PM அனுப்பவும் - கண்டிப்பாக திருத்தி கொள்கிறேன் . உங்களுக்கு என் நன்றியும் , வாழ்த்துக்களை யும் சொல்வதுடன் , இந்த திரியின் " founding fathers " அனைவருக்கும் என் அன்பான வந்தனங்கள் -- உங்கள் எல்லோருடனும் சேர்ந்து மதுர கானங்களை சுவைப்பதில் , எல்லை இல்லாத இன்பம் அடைகிறேன்

    அன்புடன் ரவி

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1252
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    We salute the Supreme Lord Ganesha of the curved trunk ( Vakratunda ), whose radiance is like a million suns, may He bless all our endeavours and remove obstacles from our path.

    வேதம் போற்றும் அந்த கணேசன் நடிப்பில் V.C கணேசனாக உருவெடுத்து நம்மை கட்டிபோட்டு முதல் மரியாதைக்கு என்றுமே உவந்தவராக இன்றும் விளங்கி கொண்டிருக்கும் அந்த நடிப்பு மேதையை வணங்கி விட்டு , என் இந்த முதல் பதிவை இங்கு உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

    விவசாயத்தையும் , உழவர்களின் பெருமைகளையும் இந்த பாடல் வருணித்த மாதிரி , தாக்கம் ஏற்படுத்தின மாதிரி இனி எந்த பாடலும் இருக்க முடியாது - பல கத்திகள் வந்தாலும் , அன்றே மிகவும் அழகாக விவசாயத்தின் பெருமையும் , உழவு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஆணித்தரமாக எடுத்து சொன்ன பாடல் - NT யின் நடிப்பில் பாடல் இன்றும் சிரஞ்சீவியாக நம் காதுகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது . நடிகர் திலகத்தின் படங்களில் சிறப்பு அவர் மட்டும் படம் முழுவதும் வராமல் எல்லா மற்ற நடிகர்களுக்கும் பாட்டுக்களையும் மற்றும் சிறந்த காட்சிகளையும் கொடுத்தவர்- இப்படி பட்ட தெய்வத்தன்மை , பெருந்தன்மை கொண்ட ஒரு மா மேதையின் ரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமை அடைகிறேன் -----

    தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது
    ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது
    போர் செய்யும் வீரன் ஏது ?

    Where ever there is a river, there is abundant water... Farmer's Chariot (plough) will keep plowing the field .. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together... ... In land there is gold, precious stones and diamonds(Crops)... There is eyes to see, there is hands to use and there is work to do...

    While Serving with your hands folded.. when your eyes and mind are spoilt... When you speak lies for survival and When you beg for food from others... Mother earth will be making fun of you.. Where is the king with the Chariot? Where is the Poet who's fame is spread across the countries ? Without a farmer and plough , there is no warrior at the battle ground.. There is no reason to fight with the other, there is no difference among US.... Lets all Feast together...


    In heart there is kindness, wetness and its Green all around.. There is strength to rule the world without any poverty and disease.. The denied richness is also within our reach, And that richness will be flowing like honey across Country...(wow, wow hearty admiration)

    ஆரோடும் மண்ணில் ------

    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

    மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
    கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
    நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
    பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
    சேராத செல்வம் இன்று சேராதோ?
    தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

    பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
    பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
    பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
    நாணம் என்ன சொல்லம்மா
    அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
    அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
    திருமண நாளம்மா

    போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

    கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
    பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
    தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
    தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
    ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
    போர் செய்யும் வீரன் ஏது?


    போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
    ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
    போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
    ஊரோடும் சேர்ந்துண்ணலாம்



  5. Thanks kalnayak, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  6. #1253
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழை மீனவர்களுக்காக வாலி எழுதிய பாடல்; இந்த பாடல் இன்று ஏமார்ந்து இருக்கும் அனைவருக்குமே நன்றாக பொருந்தும் - MSV யின் இசையில் உலகத்தில் உண்மை நிலைமையை இன்றும் அழகாக எடுத்து சொல்லும் பாடல் . வாலியின் வார்த்தைகளில் உள்ள அழகை அப்படியே MT படத்தில் கொடுத்திருப்பார் . இந்த பாடல் கேட்கும் பொழுதெல்லாம் I feel , a great wisdom is delivered


    மண் குடுசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
    மாலை நிலா ஏழை என்றால் . வெள்ளிச்சம் தர மறுத்திடுமா ?
    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

    படைத்தவன் மேல் பழியும் இல்லை
    பசித்தவன் மேல் பாவம் இல்லை - கிடைத்தவர்கள் பிரித்துகொண்டால் , உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
    பலர் வாட வாட , சிலர் வாழ வாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

    இல்லை என்போர் இருக்கையிலே , இருப்பவர்கள் இல்லை என்பார்
    மடி நிறைய பொருள் இருக்கும் - மனம் நிறைய இருள் இருக்கும் - எது வந்த போதும் , பொது வென்று வைத்து , வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்


  7. Thanks kalnayak, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, Russellmai, rajeshkrv liked this post
  8. #1254
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    MSV இசையில் அதிகமாக ரசித்த பாடல் - படம் கொடுக்காத வசூலை இந்த படத்தின் பாடல்கள் கொடுத்துவிட்டன - ஒரு காவியத்தை அந்த காலகட்டத்தில் ரசிக்க மறந்த படம் - இந்த வீடியோ வில் , பெண் பாடிய வரிகள் வராது - என் என்று தெரியவில்லை - பாலமுரளியும் , சுசீலா அம்மாவும் மீண்டும் நினைத்தாலும் இப்படி அழகாக பாட முடியாது - காதலின் மென்மையை இல்லக்கிய அழகுடன் , சிறிது கூட விரசம் இல்லாமல் இலை மறை காயாக எடுத்து சொன்ன பாடல் - இன்று வரும் பாடல்களில் இலை , மறை காயை தவிர எல்லாமும் இருக்கும் - வருத்த படவேண்டிய சூழ்நிலை !!

    தங்க ரதம் வந்தது

    தங்க ரதம் வந்தது வீதியிலே - ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே , மரகத தோரணம் அசைந்தாட , நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட ( தங்க ரதம் ----)

    பெண் : மரகத தோரணம் அசைந்தாட , நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட ( தங்க ரதம் ----)

    பெண் : செவ்வில நீரின் கண் திறந்து , செம்மாதுலையின் மணி வாய் பிளந்து , முலை விடும் தென்னல் கோலமிட்டு , மூவர் உள்ள வந்த காலங்கள் போலே ( தங்க ரதம் ----)

    ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே ---------

    ஆண் : மாங்கனி கன்னத்தில் தேனூர , சிறு மை விழி கிண்ணத்தில் மீனாட , தேன் தரும் வாழைகள் போராட , தேவியின் பொன் மேனி தள்ளாட - ஆட

    தங்க ரதம் வந்தது வீதியிலே ---------

  9. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak, Russellmai, vasudevan31355 liked this post
  10. #1255
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    படம் : பூவும் பொட்டும்

    பாடல் : நாதஸ்வர ஓசையிலே -----------

    இந்த பாடல் மிகவும் மனதை வருடிய பாடல் - அழகான நாதஸ்வர ஓசையின் பின்னணியில் , மேளத்தின் தாளத்துடன் , காதல் நயம் அரும்ப , தமிழின் இன்பத்தை சுவைக்க இந்த பாடலை எவ்வளவு தரம் வேண்டுமானாலும் கேட்கலாம் - சுவை சற்றும் மங்காது ...

    ஆண் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் , சேர்ந்து வரும் மேளத்திலே , தேவி நடமாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே )

    பெண் : கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் , மாலை கட்டும் பூங்கழுத்தில் தாலி கட்டும் வேலையிலும் - ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும் பொழுதும் , தேவன் வந்து பாடுகிறான் , தேவி நட மாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே )


    ஆண் : மை வடித்த கண்ணிரண்டும் , மண் பார்க்கும் பாவனையில் - கை பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர , மெய் சிலிர்த்து , முகம் சிவக்கும் மெல்லியிடையாள் கூந்தலிலே தேவி நடமாடுகிறாள் தேவன் வந்து பாடுகின்றான் (நாதஸ்வர ஓசையிலே -----------)

    பெண் : கற்ப்பில் ஒரு கண்ணகியாய் , காதலுக்கு ஜானகியாய்
    சிற்ப மகள் வாழ்கவென்று தேவன் வந்து பாடுகின்றான்

    ஆண் : பத்தினியை காவல் கொண்டு பார் புகழ வாழ்கவென்று , சத்தியத்தின் மேடையிலே தேவி நடமாடுகின்றாள் (நாதஸ்வர ஓசையிலே -----------)


  11. Likes kalnayak, Russellmai, vasudevan31355 liked this post
  12. #1256
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஹைய்யோ! ரவி சார். என்னாலேயே நம்ப முடியவில்லை. என்ன ஒரு ஆச்சரியம். இவ்வளவு நாட்கள் மையத்தில் காணப்படாத நீங்கள் இப்போது மதுர கானங்கள் திரிக்கு வருகை புரிந்துள்ளது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அழகான சின்ன சின்ன நெறிக் கதைகளோடும், நல்ல கருத்துக்களோடும், வளமான எழுத்துக்களோடும் எங்களை மகிழ்வித்த நீங்கள் இப்போது உங்கள் பாணியில் அருமையான பதிவோடு வந்திருப்பதை நினைக்கும் போது நிஜமாகவே சந்தோஷம் சார். என்னவோ லாட்டரியில் லட்ச ரூபாய் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி இப்போது எனக்கு. இங்கு தனிமனித உழைப்பு என்று எதுவுமே இல்லை.
    இங்கு பங்கு பெறும் அனைவரும் தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்து தங்கள் சொந்த உழைப்பால் ஒற்றுமையோடு இந்தத் திரியில் தங்களுக்கு தெரிந்தவற்றை சுவாரஸ்யமாகப் பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் நீங்களும் இங்கு சேர்ந்திருப்பது இன்னும் இந்தத் திரிக்கும், எங்களுக்கும் பெருமை. தங்களால் இந்தத் திரி மேலும் புதுப் பொலிவடையும் என்பதும் திண்ணம்.

    இந்தத் திரிக்கு உங்களை அனைவரது சார்பிலும் வருக வருக என்று மனதார வரவேற்கிறேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1257
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    நடிப்பு மேதையை வணங்கிவிட்டு தாங்கள் மதுர கானத்திற்கு அளித்துள்ள மகத்தான பாடல் யாவராலும் மறக்க முடியாத உழவன் பேர் சொல்லும் உன்னதப் பாடல்.

    தேர் கொண்ட மன்னன் ஏது , பேர் சொல்லும் புலவன் ஏது?
    ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?
    போர் செய்யும் வீரன் ஏது ?

    அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளலாம்

    நடிகர் திலகம் பாணியின்றி நடிக்கும் நடிகன் ஏது?

    பாடல் வரிகளோடு பாடலுக்கான 'சுருக்' விளக்கமும். தங்கள் நடிகர் திலக பக்தியும் அருமை.

    அதே போல மீனவரின் வாழ்க்கை சோகத்தை பேசி நம்மை கலங்கடிக்கும் எம்ஜிஆர் அவர்களின் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' படகோட்டி படப் பாடலுக்கும், எனக்கு மிக மிகப் பிடித்த 'நாதஸ்வர ஓசையிலே' பாடலுக்கும், அதைவிட அதிகம் பிடித்த 'தங்க ரதம் வந்தது' பாடலுக்கு நன்றியோ நன்றி.

    ம்...வந்தவுடன் சாட்சாத் ரவி ரவிதான் என்று ஆணித்தரமாக நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் இசைப் பயணத்தை.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #1258
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Ravi Sir,

    Your's avatar picture is excellent. Poraamayaak kooda irukku.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #1259
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எனக்கும் வேதனையாகத் தான் இருக்கிறது ராகவேந்தர் சார், வாசு சார் எப்பொழுது வேதனை ஏற்படுகிறதோ அந்தசமயத்தில் கேட்பதற்கென சில “எல்லாக்கால”ப் பாடல்கள் உண்டு..அதில் ஒன்று இது (கண்ணா உஷார் பார்ட்டி டா நீ.!)

    http://www.youtube.com/watch?feature...&v=H7xlhIaJFSQ

  16. #1260
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அஹோ வாரும் ஹைதராபாத் ரவி செளக்கியமா ஓய்.. எப்படிங்காணும் இருக்கீர்..

    வந்தவுடனே நாலு பாட்டா.. கலக்குறீர்.

    ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்.. நல்ல பாட்டுடன் ஆரம்பம்..

    //கூடவே ஒரு சின்ன ஆசை - முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பததுதான்// ஆஹா என்னா அடக்கம்

    இரண்டாவது பாட்டு ..செளந்தர்ய லஹரியிலிருந்து வாலி நிமிண்டியது..மீன்ஸ் எடுத்தாண்ட வரிகள்.. நினைவிருக்கும் என நினைக்கிறேன்.. அதுவும் ஜோர் பாட்டுதான்

    மூன்றாவது..பாடல் வெகு அழகான பாடல் வீணை இசை, குரல்,
    .அழகு வரிகள்..

    *

    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட

    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    தங்கரதம் வந்தது வீதியிலே


    செவ்விளநீரின் கண் திறந்து
    செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
    முளைவிடும் தண்டில் கோலமிட்டு
    மூவருலா வந்த காலங்கள் போலே

    தங்கரதம் வந்தது வீதியிலே


    மாங்கனிக் கன்னத்தில் தேனூற
    சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
    தேன் தரும் போதைகள் போராட
    தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

    தங்கரதம் வந்தது வீதியிலே

    *
    நான்காவது பாடலும் வெகு அழகு..விஷூவல் தான் கொஞ்சம் கஷ்டம்.. இட்லிக்குத் தொட்டுக்க ஆலுபாலக் போல் பாரதிக்கு ஏ.வி.எம் ராஜன்

    கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
    மாலை கட்டும் பூங்கழுத்தில்
    தாலிகட்டும் வேளையிலும்
    ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும் பொழுதும்
    தேவன் வந்து பாடுகிறான்

    கற்பில் ஒரு கண்ணகியாய்.
    காதலுக்கு ஜானகியாய்
    சிற்பமகள் வாழ்கவென்று
    தேவன் வந்து பாடுகிறான்..

    ம்ம் நல்ல பாடல். தாங்க்ஸ் ரவிஜி..ஏன் இன்னும் தம்மடிக்கறத விடலை?!

  17. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •