Page 174 of 397 FirstFirst ... 74124164172173174175176184224274 ... LastLast
Results 1,731 to 1,740 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1731
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் 5

    பிறந்து வளர்ந்து படித்த இடம் மதுரை என ஓராயிரம்முறை கூறியிருப்பேன்.. எனில் அந்த மதுரையில் நானிருந்த வீட்டிற்கு அருகிலொரு செட்டியார் வீடு உண்டு..

    பொங்கல் நாளில் சந்தையிலிருந்து வந்து இறங்கிய கரும்புகள் எதிர் வேதபாட சாலைச் சுவற்றில் இன்னுமொரு சுவராக இருந்திருக்கும் அவையெல்லாம்பொங்கலன்றே விற்றுத் தீர்ந்துவிடும்.. அப்படி வருகிற இரண்டு மூன்று கட்டுக் கரும்புகள் எதிரில் என் வீட்டிற்கு அடுத்த செட்டியார்வீட்டில் செல்லும்..காரணம் என்னவெனில்..

    மறு நாள் மாட்டுப் பொங்கல்.. செட்டியாருக்கு எந்த ஊரில் எங்கு நிலம் இருந்தது எனத் தெரியாது.. ஆனால் ஒவ்வொரு வருடமும் மாட்டுப் பொங்கல் முடிந்த மாலை வேளையில் நான்கைந்து காளை மாடுகள் பளபளப்பாக ஏஷியன் பெய்ண்ட்ஸெல்லாம் இல்லாமல் வேறு ஏதோ சாதா பெய்ண்ட் அடித்தாலும் பளபளப்புடன்.. இருக்கும் பச்சை சிகப்புமஞ்சள் நீலக் கொம்புகளுடன் மூக்கணாங்கயிறு மூக்கை இழுத்துப் பிடித்திருக்க கொஞ்சம் வாயோரம் நீர் வழிய கண்ணோரம் அதன் தங்கைகளென சிறு துளி நீருடன் கால்களில் ஜலக் ஜல்க்கென சதங்கைகள் கட்டி, லைஃப்பாய் சோப்போ இன்ன பிற சோப்போ போட்டு ஜாம் ஜாம் என்று அன்று காலை ஆற்றங்கரையிலோ கிணற்றங்கரையிலோ தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதனால் பளபளப்பாக இருக்கும் மேனியுடன் வந்து நிற்கும்..

    செட்டியார், (அவர் காலம் முடிந்தபின்) அவர் பையன்கள் வெளியில் வந்துஅவர்களின் நிலத்தைக் குத்தகை விட்டிருப்பவரின் மாடுகளோ என்னவோ..அல்லது அவர்களின் கிராம வயற் மாடுகளோ என்னவோ தெரியாது.. மாடுகளை அழைத்து வந்திருப்பவருக்குப் பணம், மாடுகளுக்கு கரும்பு அல்லது கீரை பொங்கல் எனக் கொடுப்பார்.கள்..பார்க்க அழகாக இருக்கும் காட்சி அது..

    குடுகுடுப்பைக் காரர்கள் நார்மலாகத் தனியாகத் தான் வருவார்கள்..அதைப்பரம்பரையாக தொழிலாகச் செய்பவர்க்ளும் உண்டு..இப்போது இருக்கிறார்களா தெரியாது..இந்தப் பாடலில் கொழு க் மொழுக் கதானாயகன் அதே கொழுக்மொழுக் கதானாயகியிடம் சேதி சொல்லும் பாடல் இது..

    காடு மலை மேடுகண்ட மாட்டுப் பொண்ணே
    காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
    கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே

    பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
    பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே
    மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
    மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்

    ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
    ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

    எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
    ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
    தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
    தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

    ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
    எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
    அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
    நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?

    அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
    கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

    கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
    காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
    பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
    பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

    ***
    வீடியோ கிடைக்கலீங்க்ணா..

    *

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1732
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    தொழில் பாட்டுக்கள் * 6

    புராதனமான தொழில்கள் என்று பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது யெஸ்..அது தான்..

    எப்பொழுதும் எக்காலத்திலும் கொஞ்சம் இறக்கமாய் இரக்கமில்லாமல் கொஞ்சம் கள்ளச் சிரிப்பு சிரிக்க வைக்கும் தொழில்..உடல் வியாபாரம்..குறிப்பாகப் பெண்கள் தாம் இதைச் செய்பவர்கள்.. அக்காலத்தில் இறைவனுக்கே தன்னுடலை தன் கலையை அர்ப்பணித்த்த கணிகைகள் ஏராளம்..காலத்தின் கட்டாயத்தால் மாற்றப்பட்டவர்களும் ஏராளம். பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் தான்..

    மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்ற வரிகள் இவர்கள் வாழ்வைப் பொறுத்த வரை மிகச் சரியான ஒன்று.. வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும் இளமையில் மட்டுமே இவர்கள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் இன்பம், துன்பம், அனுபவம் + உயிர் வாழத் தேவையான பணம்.. கொஞ்சம் சரிந்தால் பிற்கால வாழ்க்கை துயரம் தான்.. ஆனால் என்ன வாழ்க்கை நதியில் இப்படி ஒவ்வொரு காலமும் சில ப் பல பெண்மலர்கள் சிக்குண்டு கருகி விடுவது விதியா அல்லது இயல்பான ஒன்றா ..பதிலே இல்லாத கேள்வி..

    இந்தப் பாடலில் ஒரு பெண்.. அவளே வியாபாரப்ப்ராடக்ட் என்ன சொல்கிறாள்..

    ம.தி, ஸ்ரீப்ரியா நவரத்னம்..படப் பாடல்..

    http://www.youtube.com/watch?feature...&v=xOFyYy4sdP0

    இன்னொரு சிச்சுவேஷன்.. ந.தி.. நவராத்திரியில் பயம் கொண்ட சீமான் பொருள் வாங்கச் செல்லும் இடம்..

    இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்..

    பாவமென்றால் ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா
    பயணம் போகும் திசையில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா

    http://www.youtube.com/watch?feature...&v=wGmxDapfl6M

  5. Likes kalnayak liked this post
  6. #1733
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் * 7

    ஒரு அழகிய பாடல் ஒன்று உண்டு..

    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
    வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்..

    வெகு அழகிய பாட்டு.. இதெலென்ன இருக்கிறது..மேலாடை.. இந்த மேலாடை பொறுத்தவரை ஆண்கள் கொஞ்சம் ரசனை குறைந்தவர்கள் தாம்.. என்ன் எப்பப்பார்த்தாலும் கொஞ்சம் ஒரே டைப் கோடுகோடு போட்ட சட்டை அலுவலென்றால் ப்ளெயன் .. அப்புறம் டார்க் லைட் காம்பினேஷனில் பாண்ட் இல்லை வெள்ளை வேட்டி.. இல்லை எனில் கொசகொச வென கட்டம்கட்டமாய்ப் போட்ட கைலி..ம்ம்

    ஆனால் பெண்கள்.. ம்ம் எவ்வளவு வெரைட்டி சுடிதார், டாப்ஸ், டிஷர்ட்..புடவை தாவணி..

    ஆனால் இந்தப் புடவை தாவணி இவற்றிற்கான அழகு வேறு எவற்றிலாவது இருக்கிறதா என்ன

    உடலிலே சுற்றினாலும் உள்ளத்தை ஈர்க்கும்
    புடவை அழகே தனி..

    சரி தானே..


    அய்யம்பேட்டையில் தங்கியிருந்த போது பார்த்திருக்கிறேன்..மோஸ்ட்லி செளராஷ்டிரப் பெண்கள் நூலை எடுத்து சாயத்தில் தோய்த்து பின் தெருவில் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமுமாக நூற்களைக் கட்டி க் காயவைத்து அவற்றைத் தரையில் வைத்து பொறுமையாய் இழையிழையாய்ப் பின்னி நெய்வதற்கான உழைப்பு இருக்கிறதே அப்பப்பா..

    அதன்பிறகு தான் ஸேல்ஸ்.. அவற்றை விற்பதையும் பார்த்திருக்கிறேன்.. கும்பகோணத்திலிருந்து சில ஷாப்கடை ஆட்கள்(அப்படித் தான் அங்கே சொல்வார்கள்) வந்து அடிமாட்டு விலைக்குக் கேட்க இவர்கள் இரண்டுமடங்காய்ச் சொல்லி பின் ஒன்றரை மடங்கிற்கு வேறுவழியில்லாமல் ஒத்துக் கொண்டு விற்பார்கள்..என்ன..வீட்டில் கஞ்சி காய்ச்ச வேண்டுமே..

    கொஞ்சம் கஷ்டமான வாழ்க்கை தான்.அது..

    இதோ இந்தப் பெண் விதவிதமாய் புடவை நெய்கிறாள் விதவிதமான வண்ணங்களில்.. பச்சை மஞ்சள் சிகப்பு என..

    பொற்காலம் படம்..பாடுபவர் மீனா..

    http://www.youtube.com/watch?feature...&v=4HBetlHssOY

    இன்னும் விட்டுப் போன தொழில்கள் நீங்கள் சொல்லத் தானே போகிறீர்கள்..

    பொறுமையாய்ப் படித்ததற்கு நன்றி.. வாசக தோஷ சந்தவ்யஹ..

    appuram varattaa
    Last edited by chinnakkannan; 28th November 2014 at 04:51 PM.

  7. Likes kalnayak liked this post
  8. #1734
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    டியர் சி கே

    கமல் ஹாசன் எழுதிய இந்த தொடர்கதை நினைவில் உண்டா ?
    பின்னாட்களில் ஆளவந்தான் திரை படத்திற்கு மூலம் இந்த கதை என்று குமுதம் விமர்சனத்தில் எழுதி இருந்தார்கள்
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #1735
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி.. தாயம் அட் நினைவில் இருக்கிறது படித்ததில்லை.. பிற்காலத்தில் அது தான் ஆளவந்தான் என மாற்றம் பெற்றது எனப் படித்த நினைவு உண்டு..ஆளவந்தான் முழுக்கப் பார்த்ததில்லை..பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..

  11. #1736
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னக் கண்ணன் சார்,

    தொழில் பாட்டுக்கள். அருமையப்பா அருமை! வித்தியாச போக்கு. பார்த்தீர்களா? 'மதுர கானம்' என்னென்ன தலைப்புகளில் எல்லாம் தொழில் போட்டி நடத்துகிறது ஸாரி 'தொழில் பாட்டுக்கள்' போன்ற தலைப்புகளில் எல்லாம்.

    அடித்தீரய்யா ஒரு பாட்டை. அமர்க்க்களமான பாட்டை.

    'உங்களில் ஒருவன் நான்' உமது கற்பனை சக்திக்கு நூற்றுக்கு நூறு மார்க்.

    கலர் புல் கொடுத்த கலர்ஃபுல் கிராமத்துக் கலா (ரசிகை).

    இரு திலகங்களும் நம் நெஞ்சில் விதைத்த விவசாயப் பாடல்கள்.

    சலவைத் தொழிலாளி நம்பிக்கை, தங்கள் தந்தை உயிர் போகும் நேரத்திலும் அதைக் காப்பாற்றிய விதம்.

    'ஆற்று வெள்ளம்' போல பாயும் கருத்துக்கள்.

    மேஸ்திரி கதை. கண்களால் சித்தாளை சிதைத்த காதல் கதை. முதலாளி தொழிலாளி உறவு முதல் இரவில் 'அன்பாலே தேடிய' கணவன் மனைவியாய் முடிந்த கவிதை.

    'கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம்
    காதலுக்கு மனப்பொருத்தம் அவசியம்'

    இந்த மேஸ்திரியின் (நடிகர் திலகம்) மேம்போக்கான ஆழ்பார்வை எவரும் கண்டறிய முடியாதபடி. ஆரியத்திலும் கண்...காரியத்திலும் கண்...காதலிலும் கண்.

    குடையைப் பிடித்து நடந்தபடியே குயிலைப் பிடிக்கும் அழகு

    சாரத்திலே ஓரத்திலே தங்கம் நடந்தால்(ள்) இங்கே இவரது ஹிருதயம் 'லப் டப்' எகிறுவதென்ன (தே... தே.. பார்த்து அட! பார்த்துங்குறேன்..விழுந்துடப் போற!)

    (கிருஷ்ணா!

    இப்பாடலில் 'மட்ட சுத்தம் பார்த்து வீடு கட்ட வேணும்' வரிகள் இரண்டாவது முறை வரும் போது குடத்தில் தண்ணீர் வாங்கும் நடிகையை நீங்கள் சொல்ல வேணும்.

    'மேஸ்திரி ஒடம்பெல்லாம் நடுங்குது பார் தங்கப் பாப்பா' வரிகள் முடியும் போது கருங்கல் உடைக்கும் அம்மணி யாரென்று அதையும் சொல்ல வேணும்.)

    இவ்வளவு அழகாக கட்டடம் கட்டுவதை கவிதையாய் படம் பிடிக்க முடியுமா?!
    கட்டட மேஸ்திரியாய் வேறு கலைஞன் இப்படி வாழத்தான் முடியுமா?!

    5,6,7 அப்புறம்.

    சி.க,

    ஒரேயடியாய் ஏன் இம்புட்டு? தினம் ஒன்னு ஒன்னாத் தந்தாக்கா சுவை பட ரசிக்கலாமே. அப்புறம் பேஜ் தேடணும்.

    அருமை. அருமை.
    Last edited by vasudevan31355; 28th November 2014 at 09:07 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai, kalnayak liked this post
  13. #1737
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி!

    விகடன் 'காற்றினிலே வரும் கீதம்' விமர்சனம் கதைக்கு ரொம்ப சப்போர்ட். மிக்க நன்றி! நான் என்ன மனதில் நினைத்தேனோ அது விமர்சனத்தில் இருக்கிறது. ஆனால் ராஜாவுக்கு மார்க் கம்மிதான். அதுவே இப்போதை இருந்தால் 75 கொடுத்திருப்பார்கள். நன்கு தெரிந்தால்தான் கொடுப்பார்கள்.

    கவிதா கண்மணி இந்த வயதிலும் அழகு குன்றாமல் இருப்பது ஆச்சர்யம். படம் வந்து 36 வருடங்கள். அப்போது ஒரு இருபது இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 56. நம்ப முடிய வில்லை.

    சி.க,

    எப்படி கணக்கு பண்ணேன் பார்த்தீயளா? கணக்கு வாத்தியார் தொழிலை நன்றாகக் கத்துக் கொடுத்தார்னு இப்பவாச்சும் நம்புதா சாமி?
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #1738
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    பாராட்டிற்கு நன்றி

    நாகேஷ் பற்றிய இந்து பதிவுக்கும் நன்றி.

    நாகேஷ் பற்றி நிறைய சொல்லலாம். நேரம்தான் உதைக்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #1739
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக் சார்,

    தங்கள் ஆதரவிற்கு, 'லைக்'குகளுக்கு மிக்க நன்றி! நல்ல நகைச்சுவை இழையோட தாங்கள் தரும் பதிவுகளுக்கு நாங்கள் அன்று முதலே ரசிகர்கள். தாங்கள் மதுர கானத்தில் நிறைய எழுத வேண்டும் என்பது என் ஆசை. நிறைவேற்ற வேண்டும். ப்ளீஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #1740
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,
    எனக்கு படிக்கத்தான் புடிக்கும். எழுதத் தெரியாது. நீங்க, ராகவேந்திரா, கிருஷ்ணா, சின்னகண்ணன், கோபால், ராஜேஷ் மற்றும் பங்கெடுக்கிற எல்லாமே பெரியவாள். நெறய எழுதறேள். நீங்க சார் போடறதாலே நான் பெரியவா ஆயிட முடியாது. (தயவு செய்து சார் போடாதீங்கோ!!!). உங்க எழுத்த படிக்கவே நேரம் சரியாப்போயிடறது. உங்களாண்ட நெறய கத்துண்டு காண்ட்ரிபூட் செய்ய பாக்கறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •