Page 262 of 397 FirstFirst ... 162212252260261262263264272312362 ... LastLast
Results 2,611 to 2,620 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2611
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பூவா? தலையா?....

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    மன்னிக்க வேண்டும் திரு.சின்னக் கண்ணன் சார். இன்றுதான் நமது திரியை பார்த்தேன். வேலை அதிகம். அதனால், சில நாட்கள் பார்க்க முடியவில்லை. கிடைக்கும் நேரத்திலும் மக்கள் திலகம் திரிக்கு பங்களிக்க வேண்டியுள்ளது. ஆனால், நான்தான் இங்கே வரவில்லை போலிருக்கிறது என்று பார்த்தால், திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ரவி சார் யாரையுமே பார்க்க முடியவில்லையே. இன்றும் வேலை ஜாஸ்திதான் என்றாலும் நீங்கள் அழைத்துள்ளீர்கள். மறுக்க முடியுமா? மேலும், இன்னொரு கடமையும் உள்ளது. திரு.கல்நாயக் அய்யாவுக்கு (சார் போடவில்லை திருப்தியா?) கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே? அதனால் உடனடியாக களத்தில் குதித்து விட்டேன்.

    -----------------------

    டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆதரவோடும் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். மனிதர் என்ன நினைத்தாரோ? லோக் பால் மசோதாவை தாக்கல் செய்தால் எப்படியும் கட்சிகள் ஆதரவு கிடைக்காது. அதனால், பழியை எதிர்க்கட்சிகள் மீது போட்டு ராஜினாமா செய்தால் தியாகி பட்டத்தோடு அனுதாபமும் கிடைக்கும். மீண்டும் தேர்தல் நடந்தால் மெஜாரிட்டி பலத்தோடு ஜெயித்து விடலாம் என்று கணக்கிட்டாரோ என்னவோ? 49 நாட்களில் ராஜினாமா....

    மக்களிடம் அனுதாபத்துக்கு பதிலாக அவர் மீது ஏமாற்றமும் கோபமும் ஏற்பட, ராஜினாமா செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இப்போது பிப்ரவரி 7ம் தேதி டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்கும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கொடுங்கள் என்று கேட்கிறார். இன்று 7 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றுள்ளார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    நிலைமை ஏற்கனவே அவருக்கு சரியில்லாத நேரத்தில், கட்சியில் சேர்ந்து 15 நாள் கூட ஆகாத முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியை அதிரடியாக தனது முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா. கிரண் பேடிக்கு ஏற்கனவே நல்ல இமேஜ். திஹார் சிறையில் சீர்திருத்தங்கள் செய்தவர். நேர்மையான அதிகாரி. அன்னா ஹசாரே இயக்கத்தில் கெஜ்ரிவாலுடன் பணியாற்றியவர். இது பா.ஜ.வின் மோடி + அமித் ஷா கூட்டணியின் ராஜதந்திரமான மூவ் ஆக பார்க்கப்படுகிறது டெல்லி அரசியலில். ஆப் (aap)ப்புக்கு ஆப்பு.

    இதை எதிர்பாராத கெஜ்ரிவால், பொது விவாதத்துக்கு தயாரா? என்று கிரண் பேடியை சவாலுக்கு அழைக்கிறார். தயார் என்று பேடியும் பதில் முழக்கமிட, பந்து இப்போது கெஜ்ரிவால் பக்கம். இருவரும், பூவா தலையா? படத்தில் வரும் பூவா? தலையா? போட்டால் தெரியும், நீயா? நானா? பார்த்துவிடு..... என்று மல்லுக்கட்டி நிற்கின்றனர் டெல்லி தேர்தல் களத்தில்.

    எனக்கு பிடித்த அருமையான பாடல் சார் இது. மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்.& சீர்காழியின் ஜாலக் குரல்களில் உற்சாகம் வழிந்தோடும். நாகேஷூக்கு இணையாக ஜெய்யும் நன்றாக ஆடியிருப்பார். தனது ஏற்பாட்டில், பாதி பாட்டில் ஜெய்யை அடக்க வரும் முரட்டு வில்லனைப் பார்த்ததும் திருப்தியும் அவருக்கு பார்வையிலேயே உத்தரவிடும் வில்லி வரலட்சுமியின் நடிப்பு டாப்.

    பூவா தலையா? படம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல். திரு. பாலச்சந்தர் அவர்களோடு (இயக்கம் இவரே) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். திமுகவில் முக்கியஸ்தராக இருந்தவர். படத்தின் 100 வது நாள் விழா திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில். விழாவில் கவியரசர் கண்ணதாசனும் கலந்து கொண்டுள்ளார். அப்போது கவியரசர் , திரு.கருணாநிதிக்கு எதிர் முகாமில். இருந்தாலும் அரசியல் நாகரிகம் இருந்த காலங்கள் அது.

    அந்த காலகட்டத்தில் திரு.கருணாநிதிக்கு முன்னால் முடி இருக்கும். நடு வகிடு எடுத்திருப்பார். பின் தலையில் வட்டமாக லேசான வழுக்கை இருக்கும். விழாவில் கவியரசர் பேசும்போது, கருணாநிதியின் பின்னால் அவரது தலையைப் பார்த்தேன். வட்டமாக பூ போல இளவழுக்கை இருக்கிறது. இது பூவா? இல்லை தலையா? என்று வியந்தேன். பூவா, தலையா? பட விழாவுக்கு அவரை கூப்பிட்டது பொருத்தமே என்று பலத்த சிரிப்பொலிகளுக்கிடையே பேசினார்.

    திரு.கருணாநிதி அவர்களின் அரசியலை நான் ஏற்பவனல்ல. என்றாலும், அரசியல் தவிர்த்து நடுநிலையோடு பார்த்தால் பன்முக ஆற்றலும் கூர்த்த மதியும் நகைச்சுவை திறனும் கொண்டவர். கவியரசருக்கு திரு.கருணாநிதி அளித்த பதில்.........பூவாக இருந்தாலும் சரி, தலையாக இருந்தாலும் சரி, பறிக்காமல் இருந்தால் சரி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 20th January 2015 at 05:19 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2612
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    திரு. கலைவேந்தன் அய்யா (நீங்களா கேட்டு வாங்கிக் கொண்டது - இது சார்-க்கு பரவாயில்லை, இருந்தாலும் இதுவும் எனக்கு வேண்டாம் - நான் சிறியவன்), பூவா தலையா தலைப்பில் நீங்கள் எழுதிய புதுதில்லி அரசியல் நன்று.

    அந்த பூவா தலையா பாடல் இதோ:
    Last edited by kalnayak; 21st January 2015 at 03:01 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #2613
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகதேவன், எஸ்வி, ராகவேந்தர், கலைவேந்தன், கல் நாயக் - அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி

    கலைவேந்தன்- அரசியல்பூவா தலையா கட்டுரை நன்றுங்க்ணா.. தாங்க்ஸ்

    கல் நாயக் மறைந்திருந்து பார்க்கவில்லை.. முந்தா நாள் வேலை நேற்று வேறு ஊர் (சலாலா என்று ஒரு இடம் போய் நேற்று லேட் நைட் தான்வீடே வந்தேன்).. மிக்க நன்றி வந்தமைக்கு..இடுங்கள்.. நானும் வருகிறேன்..

  6. Thanks kalnayak thanked for this post
  7. #2614
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல்நாயக் நன்னாத் தான் கவிதை எழுதறேள்..எனக்கு ப் போட்டி என்றவுடன் கை கால் லாம் நடுங்குதுங்க்ணா..


    படபடத்துத் தந்தீரே கல்நாயக் பாட்டாய்
    தடதடக்கும் என்னுடைய தாள்..


  8. Thanks kalnayak thanked for this post
  9. #2615
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நீங்க வந்துட்டேளில்லையா? இனிமேல் எனக்கு கவிதை வராது.
    உங்க கவிதைக்கு முன்னாடி என்னோடது நிக்குமோ? - நிக்கவே நிக்காதுங்கறேன். இதுல என் கவிதைக்கு நீங்க நடுங்கறேளா? யாரும் நம்பமாட்டாள் போங்கோ!!!
    Last edited by kalnayak; 21st January 2015 at 03:59 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. Likes chinnakkannan liked this post
  11. #2616
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பூவா தலையா? பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு. சின்னக் கண்ணன் அவர்களுக்கும், பாராட்டு தெரிவித்ததுடன் பாடலை தரவேற்றிய திரு.கல்நாயக் அவர்களுக்கும் நன்றி. எனக்கும் அய்யா வேண்டாம். நாங்களும் யங்ஸ்டருங்கோ! (எத்தனை வருஷம் முன்னாலன்னு கேட்கப்படாது)

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Likes chinnakkannan, kalnayak liked this post
  13. #2617
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன்.. எனக்கும் சார் திருவெல்லாம் போட வேண்டாம்.. மறுபடி உடனே உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில்..ஒரு பாட்..இது கல் நாயக்கிற்கும் சேர்த்து.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்.. ஒரே பாட் வரில்ல ரெண்டு பேரு..(பாதி பாதி!)


  14. Likes kalnayak liked this post
  15. #2618
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மறுபடி உடனே உங்களைப் பார்த்த மகிழ்ச்சியில்..ஒரு பாட்..இது கல் நாயக்கிற்கும் சேர்த்து.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்.. ஒரே பாட் வரில்ல ரெண்டு பேரு..(பாதி பாதி!)
    ஆஹா. அருமை. எங்கிருந்தய்யா இப்பிடியெல்லாம் புடிக்கிரீங்க?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  16. Likes chinnakkannan liked this post
  17. #2619
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆஹா. அருமை. எங்கிருந்தய்யா இப்பிடியெல்லாம் புடிக்கிரீங்க?//
    ஹை..ஓட்டாதீங்க குரு நான் ஏதோ ஒண்ணும் எழுதாம இருக்கேனேனு மெய்யாலுமே வருத் வருத் வருத்தப் பட்டுக்கிட்டே இருக்கேன் தெரியுமா..

    ஆமா என்ன சொன்னேன்.. மெய்..மெய்னா உடம்பு, உண்மை..ஹை..இத வச்சே எழுதிப் பார்க்கலாமா
    .
    பொய்யுரைக்கும் பின்னாலே போகப் பழிவாங்கும்
    ஒய்யாரங் காலத்தில் ஓடிவிடும் – தொய்விலா
    எண்ணங்கள் பல்கொண்டு ஏதேதோ செய்கின்ற
    மென்மைப்பெண் மெய்யாகு மே

    அதுல பாருங்கோ இளம்பொண்ணு – அப்பப்ப பொய் சொல்லுவா..பின்னால் போனா முறைச்சு அண்ணன்மார்கிட்ட சொல்லி அடிவாஙக் வைப்பா ஒய்யாரமா இருப்பா காலத்தில் வயசாய்டும் அவளுக்கு.. அதுவும் அவளப்பத்தி நினைப்பு இருக்கே தோரணமா மனச அலங்கரிக்கும் அப்படி மென்மையான அந்த இளவஞ்சி இருக்காளே – உடம்பு மாதிரின்னா..(அவ உடம்பைச் சொல்லலை!)

    உடம்பு என்ன அவ்வப்போ பொய் சொல்லும், வயசானா தள்ளாமை வரும்.. ஒய்யாரமா ம்ஹூம் தள்ளாத வயது வந்துரும்.. ஆனா எவ்ளோவயசானா என்ன இந்த மனசுல ஓடற எண்ணங்க்ள் இருக்கே.. ஓ காட்.. அத மட்டும் தடுக்கவே முடியாதாங்காட்டியும்.. ஸோ இளவஞ்சி = மெய் (சரியா வந்திருக்கா..)

    சரி மெய்ன்னு என்னல்லாம் பாட்டிருக்கு சாமி..

    போவதும் வருவதும் பொய் பொய் பொய் இருக்கற நிமிஷமே மெய் மெய் மெய்னு லேட்டஸ்ட் வைரமுத்து பாட் தான் யாத்ல (ஹிந்தில்ல யாத் நா நெனப்பு) வருது..! ம்ம் கூகுளா வாப்பா வா

    பல்லேலக்கால மெய்மெய்மெய்னு மறுபடி வைரமுத்து சொல்றார். இந்தப் பக்கம் உயிரைத்தொடர்ந்து வரும் நீதானே மெய்யெழுத்து நான் போடும் கையெழுத்து அன்பேன்னு மானுட நிலா பாடற பாட் கேக்குது..விஷூவல்ல ஹீரோ பாக்க கஷ்டம்..

    மின்சாரப் பூவே பெண்பூவே மெய் தீண்ட வேண்டும்னு சூப்பர் ஸ்டார் மறுப்டியும் பாடறார்.

    //கங்கை ஆற்றில் நின்று கொண்டு
    நீரைத் தேடும் பெண்மான் இவள்
    பொய் போலவே வேஷம் மெய் போட்டது
    அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்// ஹைய்யா சுசீலாம்மா பாடற் ஆயிரம் நிலவே வா பாட்டு சிக்கிடுத்து..

    உன் விழியே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும்.. (விழியிலே மலர்ந்ததுல்ல வருதே)
    ஹையாங்க்க் நெறய மெய் இல்லை போல இருக்கே..சே.என்ன பொய்யான உலகம்ப்பா இது. சரி சரி.சுசீலாம்மா பாட்டு போட்றலாம்

    http://www.youtube.com/watch?feature...yt-cl=84359240

  18. Likes kalnayak liked this post
  19. #2620
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஓட்டலைங்ணா. மெய்யாலுமேதான் சொல்றேன். 'மெய்'யை வச்சுகினே எம்மாம் பாட்டு சுகுரா போட்டுகீறீங்ணா!!!

    உங்களை மாதிரி மத்த பெருந்தலைகள் எப்பங்க்ணா வருவாங்க? நாம ரெண்டு பேரும் மட்டுமே டீ ஆத்திக்கிட்டு இருக்கோம்!!!
    Last edited by kalnayak; 22nd January 2015 at 11:14 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  20. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •