-
10th February 2015, 12:04 AM
#2811
Senior Member
Senior Hubber
வாங்க ரவி. செளக்கியமா.. ரொம்ப நாளுக்கப்புறமுங்களைப் பார்ப்பதில் வெகு மகிழ்ச்சி.அபூர்வ புகைப்படத்துக்கு நன்றி. தகவல்களுக்கும்.. கெய்ரோ பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள் அது போல் வாரணாசியையும் தான்.. நன்றி..அகெய்ன் வரணும்.ஓகே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015 12:04 AM
# ADS
Circuit advertisement
-
10th February 2015, 07:29 AM
#2812
Senior Member
Senior Hubber
chandrabose magic..
beautiful song by Mano, Lalithasagari & T.L.thiyagarajan
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 11:28 AM
#2813
Senior Member
Senior Hubber
ராஜேஷ்,
"எதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..." பாடல் கேட்க மிக அருமை. முன்பு கேட்டிருக்கிறேன்.
சந்திரபோஸ் நல்ல இசையமைப்பாளர். ராஜாவின் சூறாவழியிலும் சில-பல காலம் நிமிர்ந்து நின்று பல படங்களுக்கு நன்றாக இசையமைத்திருக்கிறார்.
Last edited by kalnayak; 10th February 2015 at 11:40 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
10th February 2015, 11:39 AM
#2814
Senior Member
Senior Hubber
ரவி,
வாருங்கள், வாருங்கள். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். தொடர்ந்து வாருங்கள். மீண்டும் நீங்கள் இங்கே வராவிட்டால்தான் நாங்கள் தவறாக நினைப்போம்.
உங்களுடைய இரு அனுபவங்களும் நிச்சயம் உங்கள் நெஞ்சில் நிழலாடிக்கொண்டே இருக்கும். எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மீண்டும் மீண்டும் வருக.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
10th February 2015, 11:50 AM
#2815
Senior Member
Senior Hubber
சி.க.,
தொழில் பாட்டுகளில் சமையலா? அற்புதம். உங்கள் சுய அனுபவங்களை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் திருமண கூடங்களில் சமையல் தொழில் செய்வோரை, மற்றும் திருமண நிகழ்ச்சிகளை சொல்லி அது சம்பந்தமான ஒரு பாட்டை குறிப்பித்துவிட்டு அதை விட்டு சற்றே விலகிப்போன ஆனால் விழா சம்பந்தப்பட்ட பாட்டையும் போட்டது... எங்கிருந்துதான் பிடிக்கிறீங்களோ தெரியலையே. சரி சரி. நீங்க குறிப்பிட்ட பாட்டை நான் போட்டு ஒரு ஷொட்டு வாங்கிக்கறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
10th February 2015, 12:02 PM
#2816
Senior Member
Senior Hubber
கல் நாயக் நன்றி.. இங்கே எப்போதும் டேக் அண்ட் கிவ் பாலிஸி தான்.ஓ மாத்தி சொல்லிட்டேனா .இப்ப உங்க முறை.. நன்னாயிட்டு ஒண்ணு கொண்டு வாங்க..
-
10th February 2015, 02:09 PM
#2817
Senior Member
Senior Hubber
சி.க. வோய்,
நடைய மாத்துறதா சொல்லியிருந்தேங்காணும். யாரும் கேட்கலையோ. நான் ப்ரிபேர் பண்ணதும் தொலைஞ்சு போச்சி. நானும் விட்டுட்டேங்காணும். இப்பகேட்டேளா எழுதுங்காணும்னு. யோசிச்சேன். சரின்னு முடிவெடுத்தேங்காணும. எழுதிபுடறேன் இப்பவேங்காணும்.
தலைப்பு: நிலாப்  பாடல்கள்.
திரைப்படத்த்துக்கு பாட்டு எழுதுன அம்மாம்பேரும் எம்மா வார்த்தைங்களை உபயோகப் படுத்தியிருக்கா. சில பேர் வார்த்தைகளை மத்த யாருமே உபயோகப் படுத்தியிருக்க மாட்டா. நான் ஒரு பெரிய டிக்ஷனரி போடலாமுண்னே நெனைச்சேங்காணும்- என்னென்ன வார்த்தைங்கள பயன்படுத்தியிருக்கான்னு. அத அப்பப்ப சொல்றேன். இப்பஇந்த தலைப்புக்கு வருவோம். எனக்கு தெரிஞ்சு எல்லா கவிஞர்களும் பயன்படுத்தற அல்லது பாடாப்படுத்தற வார்த்தை இந்த நிலாதாங்க. இது இல்லைன்னா தமிழ்ல நெறய பாட்டுங்க இல்லைங்காணும். இத வெச்சு நான் இந்த மாசத்த ஓட்டிடறேன்காணும். எனக்குத் தெரிஞ்ச பாட்டெல்லாம் நான் எழுத பாக்குறேனுங்காணும்.
மொத நெலாப்பாட்டு கணேசரை வெச்சுதானுங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதானுங்கோ. இருந்தாலும் நல்லபடியா துவங்கணுமில்லையா? அதான்.
நிலாப்பாடல் 1. "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே".
நடிகர் திலகம் திரிக்குப் போனால் இந்த பாட்ட பலவிதங்களில் அலசி இருப்பாங்க. அவங்க முன்னாடி நானெல்லாம் சும்மா. இருந்தாலும்முயற்சிக்கிறேன். பாட்டை பாருங்களேன். இங்க வானத்தோடயும், மேகத்தோடயும் வெள்ளை நிலா விளயாடுதுங்கலாம். கண்ணோடும் கொஞ்சுதாமுங்க அந்த நெலாங்கற இசையமுது.
கணேசரும், பத்மினியும் ரொம்ப இளமையா அழகான காதல் ஜோடியா எவ்வளவு அற்புதமா கடற்கரையில துள்ளி குதிச்சு பாடறா பாருங்க. இத பாக்கறபோது நமக்கும் அந்த உற்சாகம் வந்துடறதுங்க. சிதம்பரம் ஜெயராமனும், இசையரசியும் என்னாமா கலக்கி இருக்காங்க பாருங்க. இசையமச்சது யாருன்னு சொல்லவா வேணும் - நம்ப மெல்லிசை மன்னர்களுங்க. பாட்டை எழுதுனது யாருன்னு பெரியவா யாராச்சும் சொல்லுங்கோ.
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....
(விண்ணோடும்)
அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
(விண்ணோடும்)
இப்பிடி ஒரு பாட்டை வச்சிருக்கற படத்தை 'புதையல்'-னு சொல்லாம, வேற எப்பிடி சொல்றதாம்?
Last edited by kalnayak; 11th February 2015 at 01:23 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 02:57 PM
#2818
Senior Member
Senior Hubber
கல் நாயக் வாங்காணும்..ச்சும்மா கூச்சப்படாம எழுதும் ஓய்.. ( அந்த ந. மா பாட்டு கேக்கவே பிடிக்காது..அதைப் பார்க்கவும் இல்லை..ச்சும்மா சொல்றேள்னு நினைச்சேங்காணும்..)
//தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
விளையாடி.. இசை பாடி..// பாடல் வரிகள் ஆத்ம நாதன் நு போட்டிருக்குங்க்ணா..அவரும் போன வருடம் தான் மறைந்தாராம்..பாசவலை நல்லவன் வாழ்வான் இன்னும் பல படங்களுக்கு எழுதியிருக்கிறாராம்.. விக்ரமாதித்தனில் வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு பாடலும் இவருடையது தான்..
இன்று போய் நாளை வாராய்
இன்று போய் நாளை வாராய்
என எனையொரு மனிதனும் புகலுவதோ
எண்டிசை வென்றேனே
எண்டிசை வென்றேனே
அன்று இன்னிசை பொழிந்துனை கண்டேனே
மண்மகள் முகங் கண்டேன்
மனம் கலங்கிடும் நிலையின்று
ஏன் கொடுத்தாய்….
டிகே பகவதி ராவணனாக மனமுருகிப் பாடிய இந்தப் பாடலும் இவருடையது தான்..
அழகிய நல்ல பாடல் தந்தமைக்கு நன்றிங்க்ணா.. அப்புறம் புதையல் வெகுகாலத்துக்கு முன் பார்த்தது.. மறுபடி பாக்கணும்..தூண்டி விட்டுட்டீங்க..கொறஞ்சபச்சம் ஒரு நூறு நிலாவாவது வரணுமாக்கும் ..எழுதுங்க நிலாப் பாட்ட..
வில்லாய் வளையாமல் வேக மழையென
நில்லாமல் பெய்யும் நிலா.. அப்படின்னு நாங்க சொல்லுவோமே..
Last edited by chinnakkannan; 10th February 2015 at 03:03 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 03:11 PM
#2819
Senior Member
Senior Hubber
அடுத்த பாட்டு இன்னொரு கணேஷரிடமிருந்து:
நிலாப்பாடல் 2. "என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"
நிலாவைப் பார்த்து இப்படி எக்கச்சக்கமான கேள்விகளை நாயகன் கேட்கும்படி பாடலாசிரியர் எழுதி இருக்கிறார். கற்பனை வளம் நன்றாகவே வெளிப்படுகிறது. ஆனால் எதை கெஞ்சாமல் காதலியிடம் கேட்காமல் பறிக்க சொல்கிறார் என்று தெரியவில்லை. காதல் பாட்டை எழுதச்சொன்னால் இப்பிடி பலர் நிலாவைத்தான் வம்பிழுத்திருக்கின்றனர்.
ஜெமினியும் எல்லா கேள்விகளையும் அழகாகவே கம்பீரமாய் கேட்டிருக்கிறார். இல்லை. இல்லை. பாடகர் திலகம் கேட்டிருக்கிறார்.
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா முத்தவளா
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
ennarumaik kaadhalikku veNNilaavE - nee
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE - nee
iLaiyavaLaa muththavaLaa
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
kaN vizhikkum thaarakaikaL veNNilaavE - unnaik
kaaval kaakkum thOzhiyarO veNNilaavE?
kaN vizhikkum thaarakaikaL veNNilaavE - unnaik
kaaval kaakkum thOzhiyarO veNNilaavE?
kannaththil kaayamenna veNNilaavE - un
kaadhalan thaan kiLLiyadhO veNNilaavE?
ennarumaik kaadhalikku veNNilaavE
kaLLamillaa en idhayam veNNilaavE - oru
kaLLiyitam irukkudhati veNNilaavE - andha
valli thanai neeyaRivaai veNNilaavE - adhai
vaangi vandhu thandhu vitu veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
kenjinaal thara maattaaL veNNilaavE
kenjinaal thara maattaaL veNNilaavE - nee
kEtkaamal paRiththu vitu veNNilaavE
anjitath thEvaiyillai veNNilaavE - idhu
avaL thandha paatamati veNNilaavE - idhu
avaL thandha paatamati veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE nee
iLaiyavaLaa muththavaLaa
iLaiyavaLaa muththavaLaa veNNilaavE
ennarumaik kaadhalikku veNNilaavE
இப்பிடி எக்கச்சக்கமான கேள்விகளை கேட்டால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான்.
Last edited by kalnayak; 11th February 2015 at 01:24 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 03:24 PM
#2820
Senior Member
Senior Hubber
அடுத்த பாட்டு வாத்தியாரிடமிருந்துங்க.
நிலாப்பாடல் 3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
இங்க நம்ம கவியரசர் நிலா வந்து பெண்ணா மாறி உலாவுற அழகுதான் தான் காதலியோன்னு நாயகன் கேட்குற மாதிரி எழுதியிருக்காருங்க. நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
இந்த வரிகளை உலகம் சுற்றும் வாலிபனில் தான் வாத்தியாரு கேட்கிறாருங்க. நிலா நிலானு மெட்டு போட்டு மெல்லிசை மன்னருக்கு போராடிக்கவே அடிக்காதோ. நமக்கு கேட்க அலுக்கவே இல்லைங்க.
Last edited by kalnayak; 11th February 2015 at 01:26 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks