Page 283 of 397 FirstFirst ... 183233273281282283284285293333383 ... LastLast
Results 2,821 to 2,830 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2821
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப்பாடல் 4. "நிலாவே வா செல்லாதே வா."

    எங்கே ராஜா மட்டும் நிலவுக்கு பாட்டு போடாம விட்டுடுவாரா என்ன. வாலியை கூட்டிட்டு வந்து நிலாவே நிலாவே செல்லாதே செல்லாதே-ன்னு நாயகன் சொல்றமாதிரி பண்ணிட்டாருங்க. நடிகர் மோகன் கூட தன் மனைவி மீது உள்ள காதலினால் இப்பிடி பாடறாருங்க. பாடினது SPB ங்க. யாருங்க இந்த பாட்டையெல்லாம் மறக்க முடியும்க. கொஞ்சம் சோகம் தான். ஆனால் பல இடங்களில் சோகம்தான் சொகமானதுன்னு சொல்வாங்க இல்லையா. இதுவும் அந்த ரகம்தானுங்க.

    நிலாவே வா.. செல்லாதே வா..
    என்னாளும் உன் பொன்வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

    நிலாவே வா.. செல்லாதே வா..

    காவேரியா கானல் நீரா
    பெண்மை என்ன உண்மை?

    முள்வேலியா... முல்லைப்பூவா...
    சொல்லு... கொஞ்சம் நில்லு...

    அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை
    தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
    பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

    நிலாவே வா.. செல்லாதே வா..

    பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட சந்தம் பாட
    கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

    ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
    ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
    ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே

    நிலாவே வா.. செல்லாதே வா..

    என்னாளும் உன் பொன் வானம் நான்
    எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

    நிலாவே வா.. செல்லாதே வா..
    என்னாளும் உன் பொன் வானம் நான்

    இந்த பாட்டோட ராகம் மௌனராகம்-னு யாரும் மறந்து போய் சொல்லிட மாட்டாங்களே.

    Last edited by kalnayak; 11th February 2015 at 01:28 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2822
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப்பாடல் 5. "நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே."

    மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு. அதுக்கு மெல்லிசை மன்னர் என்னாமா இசையமைச்சிருக்காரு பாருங்க. கோழி கொக்கரிச்சு தவளை கொற-கொறன்னு கத்துறதுல இருந்து பாருங்களேன். சூப்பரா இருக்கும். பாடகர் திலகம்குரல் நடிகர் திலகத்துக்கு எப்பிடி பொருத்தமா இருக்குதுன்னு இதுலயும் பார்த்துக்கலாம். இதுல கவியரசர் நிலாவ சும்மா ஒரு தடவை சொல்லியிருக்காருங்க. முன்னே சொன்ன பாடல்கள் மாதிரி நெலாவே கேட்கறது, நெலாவே நீ சின்னவளா, பெரியவளா, இங்க வா, போகாதே, பெண்ணா மாறினியா இப்பிடியெல்லாம் கேட்கலைங்கோ. அதனால இது முழு நிலாப் பாடல் கெடயாது இல்லைங்களா. இருந்தாலும் நிலா-ல ஆரம்பிக்கிறதுனால இதுவும் நிலாப் பாடல்தாங்கோ.

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப் பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப் பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே

    நதியைப் பார்த்து நாணல் சொன்னது
    என்னைத் தொடாதே
    நாளைப் பார்த்து இரவு சொன்னது
    என்னைத் தொடாதே

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப் பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே

    புதியதல்லவே தீண்டாமையென்பது
    புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
    சொன்ன வார்த்தயும் இரவல்தானது
    திருநீலகண்டரின் மனைவி சொன்னது

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப் பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே

    தாளத்தை ராகம் தொடாத போதிலே
    கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
    தந்தை தன்னையே தாய் தொடவிடில்
    நானுமில்லையே நீயுமில்லையே
    நானுமில்லையே நீயுமில்லையே

    நிலவைப் பார்த்து வானம் சொன்னது
    என்னைத் தொடாதே
    நிழலைப் பார்த்து பூமி சொன்னது
    என்னைத் தொடாதே

    சரி. சரி. வள வளன்னு பேசவேணாம். பாட்டை போடு-ன்னு பலபேர் சொல்றது கேட்குதுங்க. நமக்குதான் சவாலே சமாளி-ன்னா ரொம்ப பிடிக்கும்-ங்களா. கொஞ்சம் உணர்ச்சி வயப்பட்டுட்டேன். பரவாயில்லை இந்தாங்க பாட்டு.

    Last edited by kalnayak; 11th February 2015 at 01:29 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. Likes chinnakkannan liked this post
  6. #2823
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"// அழகிய பாட்டு..எழுதினது யார் தெரியுமா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..

    //3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"

    இங்க நம்ம கவியரசர் // கவியரசர்னு நீங்க கண்ணதாசனைச் சொல்றீங்கன்னு நினைக்கேன்.. யூ ஆர் ராங்க் யுவர் ஆனர்.. பாடல் எழுதியவர் வாலி ஐயா.. (ராஜேஷ் வந்தா அடிப்பார்..)

    //நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.// அதாகப் பட்டது தலைவன் தலைவியை நினைந்து ஏக்கத்துடன் தண்ணீரைப்பார்க்கிறான் (இங்கே கடலோ பேங்க்காக் பேக் வாட்டர் என்று நினைக்கறேன்) அவள் முகம் அங்கே நிழலாடுகிறது.. கூடவே மெல்லிய காற்று நீரில் அடிக்க அவள் கூந்தல் கலைந்தாடுவது போல் பிரமை.. நிமிர்ந்தால் தலைவியே நேரில்..ஓஓடி வருகிறாள்..அவள் கூந்தலும்படபடக்கிறது..அலையலையா.ய் நீரலைகள் நீரில் தானே இருக்கும் இந்த என் கண்ணாட்டியின் கூந்தலில் இருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டுப் பாடுவதாக அமைந்திருக்கிறது எனலாம்..

    ஹூம்..இந்தப் பாட்டுல ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு..அதாவது புரிஞ்சுதா.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..
    Last edited by chinnakkannan; 10th February 2015 at 05:23 PM.

  7. Likes kalnayak liked this post
  8. #2824
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு.//ஓய்..இந்தக் கிட்டத் தட்டன்னு போட்டாச்சுன்னா ரெண்டும் ஒரேசூழல்னுஆகிடுமா என்ன.. மெள்.ராவில (மதுரை மினிப்ரியா மேட்னிஷோ) மோஹனன் கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணாக்கும் - இதுலயும் ந.தி கல்யாணம் கட்டிக்கிட்ட பொண் தான் ஜெ. பட்சூழல் என்ன ரேவதிக்கும் கட்டாயக் கல்யாணம் ஜெக்கும் கட்டாயக் கல்யாணம்..என்னது..சூழல் கரீட்டுங்கறமாதிரி ஆகிடுச்சே (கண்ணா என்னடா மதுரைக்குவந்த சோதனை) ஆனாக்க ரேவ்ஸ்க்கு ஏற்கெனவே காதல்ன் இருந்து பூட்டாச்சு..பட் அவனை மறக்க முடியலை..இங்க ஜெக்கு ந.தி கிட்ட ஜாதி பேதம்..அதாவது பணக்கார ஏழை பேதம்.. (அதான் மெய்ன் ரீஸனே.. )

    இந்தப் பாட்டை கோபால் வாசுதேவன் எல்லாம் அலசு அலசு என்று அலசியிருக்கிறார்கள்..இருப்பினும் என் பங்குக்கு..இதற்கடுத்த காட்சியில் நாயகிக்கு ஜூரம் வர தொடமுடியாமல் அடக்கிக் கொள்வாரே ந.தி.. வெகு அழகாக இருக்கும்..(பார்த்தது ரிலீஸின் போது ஸ்ரீதேவி மறுபடியும் ஒருமுறை அதே ஸ்ரீதேவியில் போட்டார்கள் என நினைக்கிறேன் சில வருடங்கள் கழித்து..(கரீட்டா) அப்போது கொஞ்சம் விவரம் புரிந்து பார்த்தேன்..

  9. Likes kalnayak liked this post
  10. #2825
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"// அழகிய பாட்டு..எழுதினது யார் தெரியுமா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
    .
    நன்றிங்கோ. நோட் பண்ணிக்கறேங்கோ!!!


    Quote Originally Posted by chinnakkannan View Post
    //3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"

    இங்க நம்ம கவியரசர் // கவியரசர்னு நீங்க கண்ணதாசனைச் சொல்றீங்கன்னு நினைக்கேன்.. யூ ஆர் ராங்க் யுவர் ஆனர்.. பாடல் எழுதியவர் வாலி ஐயா.. (ராஜேஷ் வந்தா அடிப்பார்..)

    //நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.// அதாகப் பட்டது தலைவன் தலைவியை நினைந்து ஏக்கத்துடன் தண்ணீரைப்பார்க்கிறான் (இங்கே கடலோ பேங்க்காக் பேக் வாட்டர் என்று நினைக்கறேன்) அவள் முகம் அங்கே நிழலாடுகிறது.. கூடவே மெல்லிய காற்று நீரில் அடிக்க அவள் கூந்தல் கலைந்தாடுவது போல் பிரமை.. நிமிர்ந்தால் தலைவியே நேரில்..ஓஓடி வருகிறாள்..அவள் கூந்தலும்படபடக்கிறது..அலையலையா.ய் நீரலைகள் நீரில் தானே இருக்கும் இந்த என் கண்ணாட்டியின் கூந்தலில் இருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டுப் பாடுவதாக அமைந்திருக்கிறது எனலாம்..

    ஹூம்..இந்தப் பாட்டுல ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு..அதாவது புரிஞ்சுதா.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..
    இல்லை நான் எங்கேயோ படிச்சேனே. வாலி எழுதின பாடல் கட் பண்ணிட்டாங்களாம். அப்ப வாலி சொன்னாராம் "என் பாட்டை தான் கட் பண்ண முடியும். படத்திலேர்ந்து என்னோட பேர கட் பண்ண முடியாது"-ன்னு. வாத்தியாரு கேட்டாராம்- "எப்பிடி?". வாலி சொன்னாராம் -"படத்தோட பேரு -உலகம் சுற்றும் 'வாலி'பன் தானே" அப்படின்னு. அப்ப படத்துல இருக்கற இந்த பாட்டை கவியரசர் தானே எழுதியிருக்கணும்?. உறுதியா சொல்லுங்களேன்.


    நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ - நன்னா சந்தேகம் தீர்த்தீங்க.

    மத்தபடி, இந்த பாட்டோட மத்த வரிகள்ல வேற சந்தேகம் எதுவும் இல்லை. அதுதான் தெளிவாக இருக்கிறதே!!!
    Last edited by kalnayak; 10th February 2015 at 06:04 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. #2826
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //மோகன் பாடின அதே சூழ்நிலைதாங்க கிட்டத்தட்ட நம்ம நடிகர்திலகத்துக்கு.//ஓய்..இந்தக் கிட்டத் தட்டன்னு போட்டாச்சுன்னா ரெண்டும் ஒரேசூழல்னுஆகிடுமா என்ன.. மெள்.ராவில (மதுரை மினிப்ரியா மேட்னிஷோ) மோஹனன் கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணாக்கும் - இதுலயும் ந.தி கல்யாணம் கட்டிக்கிட்ட பொண் தான் ஜெ. பட்சூழல் என்ன ரேவதிக்கும் கட்டாயக் கல்யாணம் ஜெக்கும் கட்டாயக் கல்யாணம்..என்னது..சூழல் கரீட்டுங்கறமாதிரி ஆகிடுச்சே (கண்ணா என்னடா மதுரைக்குவந்த சோதனை) ஆனாக்க ரேவ்ஸ்க்கு ஏற்கெனவே காதல்ன் இருந்து பூட்டாச்சு..பட் அவனை மறக்க முடியலை..இங்க ஜெக்கு ந.தி கிட்ட ஜாதி பேதம்..அதாவது பணக்கார ஏழை பேதம்.. (அதான் மெய்ன் ரீஸனே.. )

    இந்தப் பாட்டை கோபால் வாசுதேவன் எல்லாம் அலசு அலசு என்று அலசியிருக்கிறார்கள்..இருப்பினும் என் பங்குக்கு..இதற்கடுத்த காட்சியில் நாயகிக்கு ஜூரம் வர தொடமுடியாமல் அடக்கிக் கொள்வாரே ந.தி.. வெகு அழகாக இருக்கும்..(பார்த்தது ரிலீஸின் போது ஸ்ரீதேவி மறுபடியும் ஒருமுறை அதே ஸ்ரீதேவியில் போட்டார்கள் என நினைக்கிறேன் சில வருடங்கள் கழித்து..(கரீட்டா) அப்போது கொஞ்சம் விவரம் புரிந்து பார்த்தேன்..
    சி.க.,

    மனைவிமார்கள் இருவரும் தங்கள் கணவன்மார்களை கல்யாணத்துக்கு பின் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அடிப்படையில்தான் அப்படி எழுதினேன். காரணம் வித்தியாசமானதுதான். அதனால்தான் கிட்டத்தட்ட என்று குறிப்பிட்டேன். நூறு சதவீதம் பொருந்தியிருந்தால்தான் கிட்டத்தட்ட அதே காரணம் என்று சொல்ல முடியுமா?

    இப்பிடி நோண்டி நோண்டி துருவினா நான் எப்புடி முந்தின பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் லிங்க் கொடுக்கிறது. ஏதோ கொஞ்சம் குறையிருந்தா மதுரைக்காரவுக விட்டுக் கொடுத்திட மாட்டீங்களா. இன்னும் நக்கீரர் மாதிரியே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு காண்பீங்கன்னா சொல்லிப்பூடுங்க. நானும் அப்பிடியே மாத்திக்கறேன். ஏன்னா நான் பிறந்தது மதுரைக்கு பக்கத்து ஊர்ல (பழைய மதுரை மாவட்டம்).
    Last edited by kalnayak; 10th February 2015 at 06:25 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. #2827
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஏதோ கொஞ்சம் குறையிருந்தா மதுரைக்காரவுக விட்டுக் கொடுத்திட மாட்டீங்களா// குற்றம் எல்லாம் சொல்லவிலலை கல் நாயக்.. ஜஸ்ட் சொன்னேன் தமாஷாக அவ்வளவே.. நான் எழுத எழுத நீங்கள் சொன்னது சரி என்று எனக்கே புரிந்ததே..! நீங்க கண்டின்யூ பண்ணுங்க..

    அந்த நிலவு ஒரு பெண்ணாகி பாட்டு யார் எழுதினதுன்னு ராஜேஷும் கலைவேந்தரும் சொல்வார்கள்.. இந்த லஷ்மன் ச்ருதிலயும் வாலின்னு தான்போட்டிருக்கு..சின்னவயசுலயும் அதான் படித்த மாதிரி நினைவு..

    பழைய மதுரை மாவட்டம்னா எங்க எங்க.. நான் ஜாக்ரஃபில கொஞ்சம் வீக்ங்க்ணா.

  13. Likes kalnayak liked this post
  14. #2828
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பழைய மதுரை மாவட்டம்னா எங்க எங்க.. நான் ஜாக்ரஃபில கொஞ்சம் வீக்ங்க்ணா.
    இப்போதைக்கு திண்டுக்கல் மாவட்டம்ங்ணா.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  15. #2829
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ..குட்.. இன்னும் சில நிலாக்கள் எழுதுங்க..நான் வூட் போய் எழுதறேன்..

  16. #2830
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்த்துக்களுக்கு நன்றி, சின்னக்கண்ணன், கல்நாயக்.


    ரவி சார், நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி.



    கல்நாயக், நான் வரவே மாட்டேன்னு சொல்லலை. நேரம் கிடைக்கும்போது வரேன்னுதான் சொன்னேன்.

    அப்புறம்.... நிலவு ஒரு பெண்ணாகி வாலிதான்.

    நிலவு சம்பந்தமா அருணகிரி நாதர் படத்திலே 2 பாடல்கள்

    நிலவோ அவள் மலரோ..

    நிலவே நீ இன்ப சேதி சொல்லாயோ..

    அருமையான பாடல்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •