Page 322 of 397 FirstFirst ... 222272312320321322323324332372 ... LastLast
Results 3,211 to 3,220 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3211
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொம்ப நாளைக்கு முன்னால் பார்த்த படம் இது கல் நாயக்.. அவ்வளவாய் நினைவிலில்லை.. கமல் சுமித்ரா,ஃப்டாபட் ஸ்ரீப்ரியா நன்றாகவே நடித்திருப்பார்கள்.. விஜயகுமார் - ஸோ ஸோ.

    கமல் தொடவரும்போதெல்லாம் சுருங்கி பாட்டீ ஈ என்று கத்தி ஒளிவது, பின் புரிந்து கொண்டு கமலினிடம் சேர்வது என சுமி ராஜ்யம் தான்.. சுமித்ராவின் அம்மா அப்பாவாக வரும் சுகுமாரி மேஜர் சுந்தர்ராஜன் - ஆதர்ச தம்பதிகளாக நடித்திருப்பார்கள்..கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து சுமிக்கு சொல்லிக்கொடுக்கப் பார்க்கும் மனோரமாவும் ஓ.கே. பாட்டி எஸ்.என்.லட்சுமி என நினைவு..

    ஃபடாபட் கணவரிடம்(விஜயகுமார்) கண்கலங்கப் பொருமுவது நன்றாக இருக்கும்.

    யூ ட்யூபில் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்..
    Last edited by chinnakkannan; 30th March 2015 at 05:05 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3212
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ரொம்ப நாளைக்கு முன்னால் பார்த்த படம் இது கல் நாயக்.. அவ்வளவாய் நினைவிலில்லை.. கமல் சுமித்ரா,ஃப்டாபட் ஸ்ரீப்ரியா நன்றாகவே நடித்திருப்பார்கள்.. விஜயகுமார் - ஸோ ஸோ.

    கமல் தொடவரும்போதெல்லாம் சுருங்கி பாட்டீ ஈ என்று கத்தி ஒளிவது, பின் புரிந்து கொண்டு கமலினிடம் சேர்வது என சுமி ராஜ்யம் தான்.. சுமித்ராவின் அம்மா அப்பாவாக வரும் சுகுமாரி மேஜர் சுந்தர்ராஜன் - ஆதர்ச தம்பதிகளாக நடித்திருப்பார்கள்..கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து சுமிக்கு சொல்லிக்கொடுக்கப் பார்க்கும் மனோரமாவும் ஓ.கே. பாட்டி எஸ்.என்.லட்சுமி என நினைவு..

    ஃபடாபட் கணவரிடம்(விஜயகுமார்) கண்கலங்கப் பொருமுவது நன்றாக இருக்கும்.

    யூ ட்யூபில் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்..
    ஆம் வித்தியாசமான படம். சுமி நன்றாக செய்திருப்பார்.

  5. #3213
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    There are certain Films while in Script stage,got published in popular magazines. One is Vikram by sujatha(kumudam), Metti by Mahendran(Savi).

    Other Novels that comes to my mind.

    Sasanam by Mahendran by Thamarai Senthur Pandi Story.

    Solla marantha kathai by Thangar Bachan based on thalaikeezh vigithangal by Nanjil Nadan.

    Magizhchi by Gowthaman based on Thalaimuraigal by Neela.Padmanaban.

    Onbathu roopai nottu by Thangar Bachan based on his own story.

    Some movies have seen the light of the Day. Udal Porul Anandhi By "Javert" seetharaman to be made with Nadigarthilagam and Ushanandhini by Ramkumar Films.

    Yarukkaaga Azhuthan to be originally made with Sivaji by beemsingh.

    Padagu Veedu by Ra.Ki.rangarajan was planned with Sivaji in lead but it was dropped due to its resemblance to Andavan Kattalai.

    Even Vasantha Maligai is based on Kowsalya Devi Telugu Story. DevDas is based on Bengali Story. Bala's Paradesi based on George Novel. Sivaji's Babu based on Malayalam Novel.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes chinnakkannan, kalnayak liked this post
  7. #3214
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    There are certain Films while in Script stage,got published in popular magazines. One is Vikram by sujatha(kumudam), Metti by Mahendran(Savi).

    Other Novels that comes to my mind.

    Sasanam by Mahendran by Thamarai Senthur Pandi Story.

    Solla marantha kathai by Thangar Bachan based on thalaikeezh vigithangal by Nanjil Nadan.

    Magizhchi by Gowthaman based on Thalaimuraigal by Neela.Padmanaban.

    Onbathu roopai nottu by Thangar Bachan based on his own story.

    Some movies have not seen the light of the Day. Udal Porul Anandhi By "Javert" seetharaman to be made with Nadigarthilagam and Ushanandhini by Ramkumar Films,Jeeva Boomi by Shandilyan was halfway thru with Sivaji-sarojadevi pair.Pandiyan Parisu by Barathi Dhasan was planned to be produced by him with Sivaji in lead.

    Yarukkaaga Azhuthan to be originally made with Sivaji by beemsingh.

    Padagu Veedu by Ra.Ki.rangarajan was planned with Sivaji in lead but it was dropped due to its resemblance to Andavan Kattalai.

    Other Language Stories found their way in our Movies.Even Vasantha Maligai is based on Kowsalya Devi Telugu Story. DevDas is based on Bengali Story. Bala's Paradesi based on George Novel. Sivaji's Babu based on Malayalam Novel.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3215
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சந்திரன் பாடல் 54: "சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா"
    ------------------------------------------------------------------------------------------

    A.R.ரஹ்மான் இசையில் நாகார்ஜுனும், பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் ஆட வைரமுத்து எழுதிய பாடல். இதுவும் காதல் பாடல்தான். காலத்திற்கு ஏற்றது போல பாடலை எழுதியிருக்கிறார். சொல்வார்கள் ஆம்ஸ்ட்ராங் பெயரை பாடலில் கொண்டுவர சிரமம் எடுத்துக் கொண்டார்களாம். ஆனால் அமெரிக்காவிலேயே சந்திரனை மனிதன் தொட்டான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். இன்னும் அதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவும் அங்கு சென்றதாக சொல்பவர்களும் தாங்கள் சந்திரனுக்கு போகவில்லை என்று சொல்லும் வரை, போனார்கள் என்று பெரும்பாலானவர்களும், போகவேயில்லை என்று மற்றவர்களும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த விவாதத்தை கவிஞர் கண்டு கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அதனால்தான் சத்தியமாய் சந்திரனை தொடுவது நான்தானே என நாயகனை சொல்ல வைக்கிறார். மற்றபடி கவிஞர், காதலனை காதலி எப்படி தாங்குகிறாள் என்று கேள்வி கேட்டு, காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை என்று அங்கேயே பதிலும் தருகிறார். என்னமோ போங்க. எப்படியோ நமக்கு ஒரு இனிமையான பிரபலமான சந்திரன் பாடல் கிடைத்தது.

    சரி பாடல் வரிகளை பார்ப்போமா:
    --------------------------------------------------
    சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
    சத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
    கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..
    (சந்திரனை..)

    பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
    பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
    பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
    தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
    தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
    தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
    புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
    கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
    (சந்திரனை..)

    தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே
    என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
    மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
    காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
    சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
    முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
    (சந்திரனை..)

    காணொளி:



    ரட்சகர்களுக்கு சந்திரனை தொடுவது ஒரு பெரிய விஷயம்இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சந்திரனை தொடுவது...
    Last edited by kalnayak; 31st March 2015 at 10:36 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. Likes chinnakkannan liked this post
  10. #3216
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்.. கல்நாயக் ராஜேஷ் கோபால்

    என் நினைவுக்கு வருபவை.. லைக் விக்ரம்..

    மெளன கீதங்கள் - குமுதம்..கடைசி அத்தியாயம் வெள்ளித் திரையில் காண்க எனப் போட்டிருப்பார்கள்..வெள்ளித்திரையில் கிளைமாக்ஸ் ஏமாற்றமே..

    கல்யாண கனவுகளோ என்னமோ - ராஜசேகர்.. ஒரே நாளில் ஆரம்பித்து முடியும் கதை என குமுதத்தில் வந்தது..சுஹாசினி.. என நினைவு..ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடிய நினைவு..(குமுதத்தில் போட்டி வைத்திருந்தார்கள்..எத்தனை சீத்தா போட்டி..!)

    விக்ரம்.. எழுத்தில் வந்த போது வெகு சுவாரஸ்யம்.. நடனாவோ நர்த்தனாவோ மதுரை தியேட்டர்.. ஃபர்ஸ்ட் அரை மணி ஆர் முக்கால் மணியில் இண்ட்டர்வெல் போனதே தெரியவில்லை..இண்டர்வெல்லுக்கு அப்புறம் சலாமியாவில் ஸோ ஸோ தான்..அது கூட கதை எழுதியவண்ண்ம்..சுகிர்த ராஜாவிற்கு ஒரு பாட்டுக் கொடுத்திருப்பார்கள்..அது படத்தில் கொடுத்திருக்கலாம்.. நாலே நாலு கம்ப்யூட்டர் காண்பிக்கையில் கொஞ்சம் சிரிப்பு வந்தது நிஜம்..டிம்ப்பிள் கபாடியா ஆஸம்.

    உடல் பொருள் ஆனந்தி சீரியலாய் வந்தது என நினைக்கிறேன்..சினிமா நியூஸ் எனக்குப் புதிது....

    சாண்டில்யனின் ஜீவ பூமி எனக்கு ரொம்பப் பிடிக்கும்..அது சிவாஜி சர்ரூவைத்து எடுப்பதாக இருந்து நின்றது எனக் கேள்விப்பட்ட போது கொஞ்சம் வருத்தமே..(ரதன் சந்தாவத் சலூம்ப்ரா.. ரொம்பப் பொருத்தமாய் இருந்திருக்கும் ந.திக்கு)

    பின்ன வாரேன்..

  11. Likes kalnayak liked this post
  12. #3217
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    மண் வாசனை கதை கூட வெளியீட்டிற்கு முன்பு ஒரு திரைப் புத்தகத்தில் வந்து படித்திருக்கேன். ஏன் திரைப்படம் வந்த பின்பு 'பேசும் படம்' புத்தகத்தில் அதன் உரையாடலை கூட போடுவார்களே!!!

    மற்றபடி எனக்கும் நினைவில் இருக்கிறது - விக்ரம், மற்றும் மௌன கீதங்கள் திரைக்கதைகள் வெளியீட்டிற்கு முன்பு குமுதத்தில் வந்ததும் (நானும் படித்திருக்கிறேன்.) சி.க. சொன்னது போல் மௌன கீதங்கள் கிளைமாக்ஸ் திரையில் சற்று ஏமாற்றமே!!!
    Last edited by kalnayak; 31st March 2015 at 11:19 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  13. Likes chinnakkannan liked this post
  14. #3218
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில் மலர்ந்த நாவல்கள் - 5

    தன்மை ஒருமையில் நாவல்கள் எழுதுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.. ’நான்’ என்று ஆரம்பிக்கும் போது..வேறு எந்தக் காட்சியையோ திடீரென வேறிடத்தில் இருக்கும் சம்பவங்களையோ கொண்டு வருவது கஷ்டம்..ஏனெனில் எல்லாவிடங்களிலும் கதை சொல்லியான ’நான்’ இருந்து அவளோ அவனோ - அவரவர் பார்வையில் சொல்ல வேண்டி வரும்..(குழப்பறேனா என்ன)

    ஆனால் எழுத்தாளர் சுஜாதா ”காயத்ரி” என்ற இந்த நாவலில் தானே ஒரு கதாபாத்திரமாகி அவரே சொல்வது போல் எழுதியிருந்தார்..நாவல் - காயத்ரி.. ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் நோட்டுப்புத்தகம்..அதில் ஒரு பெண் எழுதியிருக்கும் விஷயம் - அதை வைத்து அவரே தனது நண்பர்கள் கணேஷ் வசந்திடம் சொல்லி - அவர்கள் கண்டுபிடித்து அந்தப் பெண்ணைக் கண்டு பிடிப்பது என முழுக்க முழுக்க வெகு சுவாரஸ்யமாக
    எழுதியிருப்பார்..அதுவும் காயத்ரியை அந்தப் பணக்கார வீட்டில் எதற்காக உபயோகப் ப்டுத்துகிறார்கள் என்ற சஸ்பென்ஸை உடைக்கும் விதம் திக்..திக்..(தினமணி கதிரில் தொடராக வந்தது..ஆனால் நான் முழுப் புத்தகமாகப் படித்து வெகு காலத்திற்கு ப் பின் வேலையில் எல்லாம் சேர்ந்த பிறகு பார்த்த படம்)

    திரையில் ஏறக்குறைய முழுமையாக எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..ஆனால் எழுத்தாளருக்குக் கிடைக்கும் நோட்டுப் புத்தகம் என ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..அப்படியில்லாமல் நேரடியாக காயத்ரியாக ஸ்ரீதேவியைக்காட்டி ரஜினிகாந்த் கல்யாணம் செய்து கொள்வது, ரஜினியின் அக்காவாக ராஜ சுலோசனா,எதையுமே கேட்காமல் கொடுக்கும் காயத்ரியின் குடும்பம், பின் ரஜினியின் வீட்டிற்கு ஸ்ரீதேவி குடிபோவது அங்கு நிகழும் சம்பவங்கள் என த்ரில் கெடாமலேயே சொல்லப் பட்டிருக்கும்..கதையில் வந்த மாந்தருக்கு (?!) ப் பொருத்தமான நடிக நடிகையர் தேர்வு அப்பாவி காயத்ரி - முழியும் முழியுமாய் இளமை துள்ளும் ஸ்ரீதேவி,அவளது கணவன் பிஸினஸ் மேனாக ரஜினிகாந்த் அக்காவாக ராஜ சுலோசனா, அய்யராக அசோகன், அம்மணியாக ஒரு நடிகை (யார் என நினைவில்லை) கணேஷாக ஜெய்ஷங்கர் வசந்தாக வெ.ஆ மூர்த்தி எல்லாருமே பாத்திரத்திற்கு பச்சக் கென பொருந்தியிருப்பார்கள்.. (இதில் அந்த நோட் புக் ஜெய்ஷங்கரிடமேயே அகப்படும் என நினைக்கிறேன்)
    ..

    என்ன தமிழ்ப் பாரம்பர்யத்திற்கேற்ப திரையில் கொண்டு வரவேண்டும் என நினைத்ததாலோ என்னவோ தன்னை வைத்து தப்பான படமெடுக்கும் கணவனைப் பற்றி அறியாமலேயே கற்பைக் காப்பாற்றுவதற்காக காயத்ரியான ஸ்ரீதேவி கண்ணாடிச் சில்லால் குத்திக் கொண்டு இறந்து போவதாக முடித்திருப்பார்கள் என நினைவு..(கதையில் ஜாலியாக முடித்திருப்பார்கள்.. காயத்ரி “கணேஷ் அண்ணா வசந்தண்ணா உங்கள் இருவருக்குமே தாங்க்ஸ்.. “அண்ணாவெல்லாம் வேண்டாம் காயத்ரி” என்றான் கணேஷ்.. “ஏன்னாகக் நாங்க அந்தப் படத்தைப் பார்த்துவிட்டோம்” என்றான் வசந்த் - என்பது போல் முடித்திருப்பார்) இரண்டு பாடல்கள் அல்லது மூன்றா.. காலைப்பனியில் ஆடும் மலர்கள், வாழ்வே மாயமா வெறுங்கனவா கடும்புயலா, இது நிழலா நிஜமா.. அதுவும் இந்த வாழ்வே மாயமா..அடிவயிற்றிலிருந்து ஆரம்பிப்பது போல்க்றிச்சென ஆரம்பிக்கும் பாடல்..பிடிக்கும்..
    வரிகளும் பிடிக்கும்..பாட்டுக்குப் போலாமா..

    Last edited by chinnakkannan; 31st March 2015 at 04:04 PM.

  15. #3219
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பஞ்சு அருணாச்சலத்திடம் கதையை கொடுத்து படமாக்கிய பின் சுஜாதா comment .



    என் கதை அப்படியே பத்திரமாத்தான் இருக்கு.திருப்பி கொடுத்து விடுங்களேன்.



    படுபாவி பஞ்சு மூன்று கதைகளை குற்றுயிரும் கொலையுயிருமாக சிதைத்தார். (அருவருப்பான தோற்றமுள்ள தஸ்கா புஸ்கா ஒருவன் கணேஷ் ஆக)



    ச்சே அனிதா இளம் மனைவி,காயத்ரி, ப்ரியா என மூன்றும் அருவருப்பான படங்களாய் வெறுப்பூட்டின.
    Last edited by Gopal.s; 31st March 2015 at 05:10 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. #3220
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Happy Birthday Chikka சிக்கா.......உங்களை மாதிரி கவிதை எல்லாம் எழுத வராதுங்கோ..

    மஸ்கட்டின் தங்க பிஸ்கட்டே..
    இஸ்பேட்டு ராசாவே..
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ஹிஹி.. அம்புட்டுதாங்க..


  17. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, raagadevan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •