-
17th April 2015, 10:27 AM
#3341
Senior Member
Senior Hubber
உற்சாகப் பாடல்கள்ல அடுத்து என்னன்னா...
ம்ம் காதல் பண்றச்சே ரெண்டு பேருக்குமே ஒரு மாதிரி மயக்கம், ப்ரக்னெண்ட் ஆன ஆட்டோட கண்ணாட்டமா மூளை மந்த நிலைய அடஞ்சுடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் என ஆன்றோர்கள் சொல்வார்கள்
பாருங்க.. அந்தக் காதல்ங்கற பருவத்துல ஆணாகட்டும் பெண்ணாகட்டும் பேசற பேச்செல்லாம் இருக்கே
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை..
அப்படின்னு ஜூஜூபிக்குச் சொன்னா அந்தம்மாக்குக் கொஞ்சம் பெருமை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை..
அப்படிங்கறா ( தமிழுக்குச் சரி..வயசானா ரெண்டு பேரும் மாறி மாறி வள்ளுனுதான் விழுந்துக்குவாங்க இல்லியோ )
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு (தூங்க வேண்டாமோ)
அழகிய பாடல் விஜ்ஜூ மன்ச்சு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2015 10:27 AM
# ADS
Circuit advertisement
-
17th April 2015, 10:38 AM
#3342
Senior Member
Senior Hubber
ஹீம் .. இந்தக்காதலிருக்கே.. எப்பவும் ஆண்கள் பாடு கஷ்டம் தான்.. கொய்ங்க் கொய்ங்க்னு மயங்கிடுவாங்க..அப்புறம் அதப் பத்திப் பாடவும் செய்வாங்க..
ம்ம் டான்ஸ் மூவ்மெண்ட் செட் ஆகலைன்னா அந்தக்காலத்து குதிக்க வுட்டுருவாஙக் போல..
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்..( கவிஞர் டி.ராஜேந்தர்.. ஆனா ஹீரோயினைப் பார்க்காம எழுதியிருப்பாரோ...இப்பப்பார்த்தா என்னா ஆவும் )
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல்வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ
நளினி கங்கா.. உயிருள்ளவரை உஷ்ஷூ..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th April 2015, 10:54 AM
#3343
Senior Member
Senior Hubber
//ஹீம் .. இந்தக்காதலிருக்கே.. எப்பவும் ஆண்கள் பாடு கஷ்டம் தான்.. கொய்ங்க் கொய்ங்க்னு மயங்கிடுவாங்க..அப்புறம் அதப் பத்திப் பாடவும் செய்வாங்க..// ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன் யுவர் ஹானர்.. ஸாரி.. காதல் வந்தா பொண்ணுங்களுக்கும் கஷ்டம் தான்..அந்தக் காலத்துலன்னா பொன்மணி மெகலை பூமியில் வீழும்னு பாடுவாங்க..இந்த இருவது வருஷத்துக்கு முற்பட்ட காலத்துலயும் இளமனசுல குழப்பம் தான்..அதான் விசிலடிச்சுப்பாட வைக்குது..
இத்துடன் இன்றைய உற்சாகப் பாடல்கள் நிறைவுற்றது எனச் சொல்லிக்கொண்டு வடைபெறுவது (ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலீங்க்ணா அதான் டைப்போ ) விடை பெறுவது..
உங்கள் சி.க..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2015, 12:42 PM
#3344
Senior Member
Senior Hubber
சி.க.,
பறவைப் பாடல்கள், உற்சாகப் பாடல்கள்னு கலக்கறீங்க. நான் இப்போதைக்கு இவ்வளவுதான் பண்ண முடியும். தனித் தனியா பார்த்து கமன்ட் பண்ண முடியவில்லை. என்னுடைய நிலாத் தொடரை முடிந்தால் நீங்களே எழுதலாம். உடனடியா நான் வருவேன்னு தோணலை. மிஞ்சிப் போனால் தினமும் வந்து படிக்கதான் முடியும். பார்க்கிறேன், வீக்-எண்டு வந்து எதையாவது பண்ண முடியுமாவென்று.
Last edited by kalnayak; 17th April 2015 at 01:04 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th April 2015, 12:52 PM
#3345
Senior Member
Senior Hubber
கல் நாயக் ஜி..வாங்க ..வாங்க. நோப்ராப்ளம்.. கடமை ஃபர்ஸ்ட் காதல் நெக்ஸ்ட்னு சர்ரூவோட டயலாக் ( என்ன படம் ) மாதிரி கடமை ஃபர்ஸ்ட்.. எப்போ முடியுமோ வாங்க..
-
17th April 2015, 01:50 PM
#3346
Senior Member
Senior Hubber
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே
எல்லாரும் செளக்கியமா. ம்க்கும் இதுவரைக்கும் இருந்தோம் நு நீங்க நினைக்கறது புரியறது..
இன்னிக்குப் பேசற அல்லது பாடற மேட்டர் என்னனனாக்க (எத்தனைன !)
பொடி விஷயம் தான்.
பொடி என்பது அந்தக்கால லாஹிரி வஸ்து(அப்படின்னா) என்ன விதமான விஷயங்கள் அதில் இன்க்ளூடட்னு தெரியாது.. மதுரையில் நான் இருந்த தெருவின் முக்கில் ஒருகடை உண்டு..அதில் காய்ந்த வாழைப் பட்டைகள் சில கட்டுகள், சிலபல ஜாடிகள் வைத்து ஒரு கடை இருக்கும்..
கேட்டால் ஒரு வாழைப் பட்டையை எடுத்து காசிற்கேற்ப ஒன்றிரண்டு சிட்டிகை (அந்த ஸ்பூனும் ரொம்பக்குட்டியாய் அதே சமயத்தில் காம்பு நீளமாக இருக்கும்) போட்டு மடித்துக் கொடுப்பார்கள்.
என் தந்தைக்கும் அந்த வழக்கம் உண்டு.. அந்த வாழைப்பட்டைப் பேக்கிங்கை வெகு லாகவமாகத் திறந்து கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து சர்ரென்று மூக்கில் ஏற்றுவார்..பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருக்கும்..
மதுரை சித்திரைத் திருவிழாவில் டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடி என பெரிய பெரிய பேனர், அப்புறம் சென் ட் ரல் சினிமாவைத் தாண்டி மீனாட்சி கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு அட்டைச் சித்திரம்..ஒரு குண்டோதரன் டைப் படம் கண்கள் விழித்துத் தலையாட்டிய படி இருக்கும் என்.ஏ.எஸ் பொடியோ என நினைவு..
நிற்க. Gentlemen! நாம் பேசப் போவது அந்தப் பொடியில்லை.. பொடி விஷயம் என்பதற்குச் சின்ன விஷயம் என்றும் கொள்ளலாம்..
சின்ன விஷயம் என்றால் என்னைப் போன்ற இளந்தாரிகள்..சரி சரி.. பொதுவாய் இளவட்டப் பசங்கள் சில விஷயத்தைப் பார்த்தாலே உற்சாகம் கொள்வார்க்ள்..
ஒரு வயதான அம்மா – பையனைப் பெற்றவள் என்ன சொல்கிறாள்..
என்னபொடி போட்டாளோ எம்மவனத் தெரியலையே
..எப்பொழுதும் சுறுசுறுப்பாய் சுத்துகிற எளந்தாரி
கண்ணுபட்டுப் போனதுபோல் கருத்திழந்து நிக்குறதும்
…கனவுகண்ட கோழியெனக் கண்டபடி நடக்குறதும்
சொன்னசொல்லைக் கேட்டுப்புட்டு கடைகண்ணி போறவனும்
….சோம்பித்தான் நிக்குறதும் ஏங்கித்தான் தவிக்கறதும்
பெண்ணவளக் கண்டுப்பிட்டா பெத்தஎன்ன ஒதுக்கிவிட்டு
..பேதையாத்தான் இருக்கறத பெருமாளே என்னசொல்வேன்..
ஸோ இந்தம்மா பேசற பொடி சொக்குப் பொடி..ஆளை மயக்குற பொடி..
வட்ட விழிப்பார்வை வாகாக உள்ளத்தைக்
கட்டமிட்டுச் சுண்டுவதைக் காண் நு
யெஸ் .. ஆன்றோர் சொல்லியிருக்காங்க..
பாவையரோட கண், மூக்கு, வாய் மத்த பார்ட்ஸ்லாம் செய்யும் தான்.. அதையெல்லாம் விட ஆடைகளும் செய்யுமாக்கும்
சேலாடும் விழியாட செங்காந்தள் விரலாட
..செம்பவள உதட்டினிலே தித்திக்கும் தேனாட
கோலாட்டம் போட்டபடி குதித்திடுதே பின்னாலே
..கொள்ளைகொளும் கூந்தலுமே பலவிதமாய்த் தானாட
தாலாட்டும் தென்றலதைத் தக்கவைத்து நெற்றியிலே
…தகதிமிதா போட்டபடி சுருள்முடியும் தானாட
மேலாடை குறுஞ்சிரிப்புக் கொண்டபடி அங்குமிங்கும்
..மென்மையுடன் சிறிதாட மனமாடி விட்டதடி
(ஹப்பாடா..விஷயத்துக்கு வந்தாச்சு) என்ன இந்த மேலாடை இருக்கே.. ஆண்களுக்கெல்லம் அவ்வளவு சிறப்பில்லை.. பாவம் அந்தக்காலம்னா மன்னா போருக்குப் போய்ட்டு வரட்டுமான்னு சொல்ற தளபதியும் சரி மன்னரும் சரி சரிகைத்தகடி பளபளான்னு போட்டுக்கிட்டு வருவாங்க..அவ்வளவு சுகமில்லை..இந்தக்காலத்திலும் தான் அலுவல்னா பேண்ட் டிஷர்ட் டை சூட் மத்தபடி ஜீன்ஸ் டிஷர்ட் தான்.. இந்தப்
பெண்களுக்கு அந்தக்காலத்தில் புடவை இந்தக்காலத்தில் பாவாடை சட்டை தாவணி, சுரிதார் துப்பட்டா..அப்புறம் ஏகப்பட்ட வெரைட்டீஸ்..
நம்ம டை ஆடினா யாரும் பாக்க மாட்டாங்க..அதுவே அவ்விடத்துல..
ம்ம் இன்னிக்கு ப் பாக்கற பாட்டுல இந்த மேலாடையைப் பத்திக் கேள்விபதில் டைப்புல கவிஞர் சுரதா எழுதியிருக்காராக்கும்.. பட்ம் நாணல்..பாடியவர் பாடகர் திலகம் இசையரசி.. அப்புறம் ஆடியவர்கள் முத்துராமன் கே.ஆர்.விஜயா..
வெகு அழகிய பாடல்..எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்
*
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
https://www.youtube.com/watch?featur...&v=1lyf-YEM2_8
//முன்னால் எழுதியது. )
-
19th April 2015, 11:12 AM
#3347
Senior Member
Senior Hubber
அன்பின் கோபால்,
தங்களின் ஒன்று விட்ட சகோதரர், சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினரின் அகால இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th April 2015, 03:25 PM
#3348
Senior Member
Senior Hubber
Dear Gopal,
My heartfelt condolences to you and your family.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th April 2015, 08:46 PM
#3349
Senior Member
Senior Hubber
heartfelt condolences Gopal. May god give strength to cope up.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st April 2015, 11:17 PM
#3350
Senior Member
Senior Hubber
பருவமே……..பழைய பாடல் பாடு! (திடீர்த் தொடர்)
ஒன்று
**
நண்பர் குதிரைப் பாடல்களாய் அணிவகுத்து பக்கத்து வீட்டில் பரிமாற எனக்கென்னவோ பாலகுமாரன் இரும்பு குதிரைகளில் எழுதிய கவிதை தான் நினைவுக்கு வந்தது..
சவுக்கடி பட்ட இடத்தை
நீவிடத் தெரியா குதிரை
கண்மூடி வலியை வாங்கும்
இதுவுமோர் சுகம் தானென்று
கதறிட மறுக்கும் குதிரை
ஜடமென்று நினைக்க வேண்டா
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்..
என்னா சோகம்னு கேக்கறியளா..கொஞ்ச நாளாவே வேலைப்பளு..ரெண்டு நாளா ஒரே வேலை என்றெல்லாம் இல்லாதது போல் எக்கச்சக்கமாய் ஒன்று இரண்டு மூன்று என்று ஒளவை வரிசைப் படுத்திப்பாடியதுபோல் அல்லாமல் டபக் டபக்கென வர, அதை பட்பட்டெனக் க்ளியர் பண்ணிக்கொண்டே இருக்கும்போதும் என்னவோ மூட் அவுட்..சற்றே கொஞ்சம் எரிந்து விழுந்தவாறிருந்தேன் ( நிஜமாங்க)
ஈவ்னிங்க் காரில் வரும்போது கண்மூடி (ட்ரைவர் சீட்ல இல்லிங்க்ணா) யோசித்தால் எதனால் இப்படி என மனதிற்குள் சிந்திக்கையில் வயதாகிவிட்டதா என்ன.. முதுமைப்பருவம் வந்துவிட்டதா என்ன..
உருவங் குறுகி உளத்திலே கொந்தளிக்கும்
பருவமும் வந்ததா பார்..
அருவமென அங்குதான் ஆடியே வந்த
பருவமாம் முதுமையது பாய்ந்தே – புருவத்தை
நீட்டியே மற்றவரை நிந்தனை செய்துதான்
காட்டுதா தன்னுடைய கண்..
… என யோசனை ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒருபெண்மகள்குளிப்பது போலவும் பின்னணியாய்…இளைய பருவம் மனதில் வந்தால் மேவும் சொர்க்க சிந்தனை எனக் குரல் ஒலிப்பது போல் வர படக்கென க் கண் திறந்து விட்டேன்..
அட.. முதியபருவம்லாம் வர்றதுக்கு இன்னும் காலமிருக்கு கண்ணா என என்னை நானே மோட்டிவேட் செய்து கொண்டு இருக்கையில் பருவம் என்ற வார்த்தை எழுந்தது..
சமர்த்தாய் வீடு வந்து பருவம் எனத் தேடிப்பார்த்தால்::
ஆங்கில அகராதியில்
1 ஒரு வார்த்தை அல்லது ஒரு வார்த்தைக்கூட்டம் – ஒரு கட்டுமானத்தின் போது அல்லது பேச்சின்போது இருப்பதைப் பருவம் எனலாம்
2. நேரத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி
3,4 நிலவின் மாற்றங்கள்
5 ஒரு குட்டி ரிப்பன் அல்லது அதைப்போன்ற மெட்டீரியலில் கட்டப்பட்டு அல்லது மடிக்கப் பட்டு- ஒரு ஆபரணத்தைப் போல அலங்கரிப்பது (ப்ரூச் தான் தமிழில் பருவமோ)
6 ஒரு உயரமான இடம், ஒரு குன்றின் பகுதி அல்லது உயரம்
7 ஒரு சிச்சுவேஷன் அல்லது நிபந்தனை – ஒரு இலக்கை அடைய
8 மனித வாழ்க்கையின் பகுதிகள்..
(சரியாக மொழி பெயர்த்திருக்கிறேனா என சரிபார்க்க ஆங்கிலத்தில் உள்ளதை கடைசியில் தருகிறேன்)
மறுபடி வேறு ஒரு இடத்தில் டாமில் டு இங்க்லீஷ்..:
பருவம்பார்க்க - to consider or devise measures
பருவம்பிழைக்க - to fail as a season
n. பருவரு - to suffer
n. பருவரல் - being in pain
பருவல் - large or thick thing
(ஹாஆஆவ்.. யாருப்பா கொட்டாவி விடறது..)
சரி சரி ஒரு பருவப்பையனும் ஒரு பருவப் பெண்ணும் பாடற பாட்டை ப் போட்டுக்கிட்டு அடுத்த போஸ்ட்ல பருவத்தைப் பத்திப் பேசலாம் இன்னும்..
*
கண்ணருகே இமையிருந்தும் கனவு காண்பதேன்
உங்கள் கையருகே மங்கைவந்தும் கதைகள் சொல்வதேன்
இனி வழங்கும் இன்ப நினைவினிலே வாலிபத் திரு நாள்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்கையிலே வார்த்தை இழந்தேன்
சர்ரு எஸ்.எஸ்.ஆர் ப்ளஸ் இளமை..
*
சரி சரி அடுத்த பருவத்துக்குப் போகலாம்..போ’ஸ்ட்டைச் சொன்னேங்க்ணா…
*
1. any word or group of words considered as a member of a construction or utterance.
2. any specified division or portion of time
3. the phase of the moon at this time.
4. the phase of the moon at this time.
5. a piece of ribbon or similar material tied or folded upon itself and used or worn as an ornament.
6. a high place or part; a hill or elevation; height.
7. a situation or condition favorable for attainment of a goal .
8. a period of human life, measured by years from birth, usually marked by a certain stage or degree of mental or physical development and involving legal responsibility and capacity
வரட்டா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks