Page 339 of 397 FirstFirst ... 239289329337338339340341349389 ... LastLast
Results 3,381 to 3,390 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3381
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார்// தேவிகாவுக்கும் ஆடுகிறார்க்கும் நடுவில் நளினமாக - என்று போட்டுக் கொள்ளவும்

    //இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே// அதாவது என்னான்னாக்க ..

    ஹாய்

    ஹாய்..

    என்னடீ இப்படி இளைச்சுட்ட..

    பின்ன சும்மாவா.. ரெகுலர் ஜிம்.. அப்புறம் யோகா..ஒரு க்ரியா கூட பண்றேனாங்காட்டியும்.. நீ தான் ச்சும்மா ஓடு ஓடூன்னு ஓடிக்கிட்டிருக்க.. கொஞ்சம் சிக்னு இருக்க..டிஷர்ட் புச்சா..

    அது சரி.. நீ என்னை முதல்ல பார்த்தது எங்க..

    அதுவா..அந்த க்ரெளண்ட்ல ஏதோ ஓடிக்கிட்டே இருக்கறச்சே தடுக்கி விழுந்த..எக்ஸாக்ட் லொக்கேஷன்வேணும்னா வா கூட்டிப்போய்க் காட்டறேன்..

    ஆமா இவளே.. நீ தான் என்னமா பதறி வந்த..அந்தப் பதற்ற்த்துல சொக்கினவன் தான் நான்..

    இப்படித் தான் இரவும் நிலவும் கூடி வர்ற சமயத்தில இந்த ஸ்வீட் நத்திங்க்ஸ் சம்பாஷணைகள் பெருகுமாம்..கவிஞர் சொல்றார்..

    ஸேஃபா கல் நாயக் //தரவும் பெறவும் உதவட்டுமே// சொல்லிட்டுத் தாவிட்டார்.. அடுத்த லைன் யார் சொல்வா..//நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே//

    அஃதாவது:

    கொஞ்சம் கிட்ட வாப்பா

    என்னது ஐ 6ல என்ன காட்டப் போற..ஏய் இது ஓ.கே கண்மணி பாட்டுல்ல

    ஆமாம்.. போலாமா..இந்தப் பாட்டு பறக்கவா..ரொம்ப கிறங்கடிக்குது.. ஹேய் நீ கூட நித்தி மாதிரி பட்ட்ர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்ல பண்ன சிலையாட்டம் இருக்க..

    நெசம்மாவா

    ஆமா அந்த சிலைக்கெல்லாம் கன்னத்துல குழிவிழாது..கிட்ட வாயேன்

    ச்சீ போடா

    ஹேய் மொட்ட மாடி..வாட்டர் டாங்க்..யாரும் தான் இல்லையே வா..

    என்னவாம்..

    இல்லை..இந்தக் கன்னக்குழில்ல இருக்கற ஐஸ்க்ரீம் டேஸ்ட் பாக்கலாமா..

    போடா..

    போடான்னு சொல்றது புரிது..ம்ம்

    நீ ரொம்ப மோசம்டா..

    அப்படின்னு ஆரம்பிச்சு..த.சு. பெருகுமாம்.. காதலர்கள்ட்ட.. கவிஞர் அந்தக்காலத்திலேயே சொல்லிட்டார்..!

    இப்படி ஆரம்பிக்கற காதல் பேச்சுக்கள் எக்ஸ்ட்ரீமுக்கும் போக வாய்ப்பிருக்காம்... கடைசி ப் பாரா அப்படி ஆகிடுச்சாக்கும்..

    ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
    அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
    நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
    நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே


    பட் என்ன சொல்லுங்க ந.தி .. தேவிகா ஜோடிபார்க்கக் கொள்ளை அழகு..தாங்க்ஸ் கல் நாயக்...

  2. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3382
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    (இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)// ஆடிட்டர் இன் அமெரிக்கா..

  5. Likes kalnayak liked this post
  6. #3383
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
    விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

    கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
    கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

    பொன்னுடல் தன்னை என் கையில்
    ஏந்த என்னடி யோசிக்கிறாய்
    மொத்ததில் காதலின் எடை
    என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்
    நிலவை படைத்து முடித்த கையில்
    அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
    என்னை படைத்து முடித்த கையில்
    அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

    செண்பகப்பூவின் மடல்களை
    திறந்து தென்றல் தேடுவதென்ன
    தென்றல் செய்த வேலையை
    சொல்லி என்னை பார்ப்பதென்ன
    பார்வையின் ஜாடை புரியாமல்
    நீ பாட்டு பாடி ஆவதென்ன
    பல்லவி சரணம் முடிந்தவுடன்
    நாம் பங்குபெறும் காட்சியென்ன//


    வெகு அழகான பாடல் வைரமுத்து வ்ரி, எஸ்.பி.பி. பல்லவி, மனோ குரல்.. கேட்ட பட்டூவிற்கும் போட்ட கல்ஸிற்கும் ஒரு ஓ..

  7. Thanks kalnayak, uhesliotusus thanked for this post
    Likes rajeshkrv liked this post
  8. #3384
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    யாரும் கேட்காத பாடல்... அப்படின்னு போடத்தான் ஒரு ஆசை. யாரும் கேட்காத ஒரு பாடல் எப்படி போட முடியும்-ன்னு சி.க. தெளிவா கேட்பார். யாரும் விரும்பி கேட்காத பாடல்-ன்னு சொன்னால் என்னை தொலைச்சிடுவாங்க. எல்லாரும் விரும்பிக் கேட்கும் பாடல்-ன்னு சொல்லவும் முடியலை. ஆஹா. இப்படி சொல்லிடலாம் - "எல்லோரும் விரும்பிப் பார்த்து கேட்க வேண்டிய பாடல்". இதுலயும் குறை கண்டுபிடிச்சா இந்த கல்நாயக் என்னதான் செய்வாங்க? பாவம். சரி அந்த பாடல் என்னன்னு பார்த்திடலாமா. பாட்டை பார்த்திட்டு எல்லோர் கிட்ட இருந்தும் லைக்ஸ் அள்ளிடலாம்னு இருக்கேன். ஏமாத்திடாதீங்க மக்களே.

    நிலாப் பாடல் 70: "இரவும் நிலவும் வளரட்டுமே. நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே"
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------

    இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார், ... ஆனால் நடிகர் திலகம் நடக்கிறார் பாருங்கள். சிறிது நேரம் விட்டு மறுபடியும் நடை. இந்த நடையைப் பத்தி நான் என்ன சொல்றது. வேகமாய் நடக்கும் அந்த கம்பீர நடையை பற்றி விளக்கமாக நடிகர் திலகம் திரிக்கு போய் தேடிப் படியுங்கள். இந்த பாடல் ஹிந்துஸ்தானி ராகமான சாரங்க தரங்கிணி-யில் அமைந்தது என்று சொல்கிறார்கள். கோபால் போன்றவர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. இந்த கோயில் கொனாரக் சூரியனார் கோயில் என்கிறார்கள். இல்லை கர்நாடகத்தின் பேலூர் மற்றும் ஹளேபீடு என்றும் சொல்கிறார்கள். பார்த்தவர்கள் சொல்லட்டும். (கல்நாயக்கிற்கு ஒன்றும் தெரியாது என்று இப்போதாவது மற்றவர்களுக்கு தெரியட்டும். ஒன்னும் தெரியாமலேயே எம்புட்டு நாளா தெரிஞ்சமாதிரி நடிக்கிறது? உண்மைய சொன்னாலும் இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே!!!)

    பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள். பாடலைப் பாடியவர்கள் தமிழ்த் திரையுலகின் பெருமையான ஜோடிப் பாடகர்கள் டி.எம். சௌந்தர் ராஜன் மற்றும் இசையரசி பி. சுசீலா. பாடல் வரைந்தவர் கவியரசர் கண்ணதாசன். உருவாக்கியவர் B. R. பந்துலு.

    கவியரசர் சொல்வது - இரவும் நிலவும் வளர்ந்தால் நம் இனிமை நினைவுகள் தொடரும். அடுத்த வரிதான் அவரோட தனித்தன்மை. "தரவும் பெறவும் உதவட்டுமே." இப்படியேதான் பாட்டு முழுக்க என்ன என்னமோ சொல்றாருங்க. உங்களுக்கு நல்லாவே புரியும். வேற வித்தியாசமா உங்களுக்கு புரிந்தால் இங்க சொல்லுங்க. சரி பாட்டு வரிங்களை பார்த்திடலாமோ.

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே
    தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே

    மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
    மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
    இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
    இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே

    ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
    அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
    நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
    நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

    இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
    இரவும் நிலவும் வளரட்டுமே
    -----------------------------------------------------------------------------------------------------------

    சரி நடிகர் திலகத்தின் நடை அழகைப் பார்க்கலாமா இப்போது, அந்த அழகிய பாடலைக் கேட்டுக் கொண்டே.



    கர்ணன் என்பதற்காக நடிகர் திலகத்துடன் எல்லோருமே இனிமையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
    கல் நாயக் அருமை அருமை.. பாடலும் உங்கள் எழுத்தும்.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

  9. #3385
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    (இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)// ஆடிட்டர் இன் அமெரிக்கா..
    சி.க சொன்னா சரியில்லாமலா

  10. Likes kalnayak liked this post
  11. #3386
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நம்பினால் நம்புங்கள். இந்த அழகான பாடலுக்கு காரணம் மஞ்சள் மகிமை.// ஒரு இரவும் நிலவும் .. பாட்டும் குட்..வர்றேன்.வர்றேன்..

    //வினோதினியை கூட அழகாக காட்டினார்கள் இந்த படத்தில். சட்டையுடன் அலைய விட்டார் பாலுமகேந்திரா.. என்ன கொடுமை// ராஜேஷ் உங்களுக்கு வயசாய்டுச்சு மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பிடிக்கும் கேட்டிருக்கிறேன்.. மற்றபாட் கேக்கணும் நன்றிங்ணா
    வயசானாலும் ............................ நீங்களே fill in the blanks pannikkonga

  12. #3387
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கல் நாயக் நீங்கள் போடாத நிலாப்பாடல்கள் இதோ






  13. #3388
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like








  14. #3389
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Few more nila songs




  15. #3390
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    ராஜ்ராஜ்,

    ஓர் இரவு பாடல், ஹிந்தியின் சமாதி படப் பாடல் மற்றும் ஆங்கிலப் பாடல் ஜுகல்பந்தி நன்றாக இருக்கிறது. 1940-50 களிலேயே ஆங்கில பாடல்களை காபியடித்தார்கள் என்று சொல்ல முடியுமோ? அப்போது இப்போதைக்கு இருந்த வசதி கிடையாதே. இருந்தாலும் ஆங்கிலப் பாடலை கேட்டு அதை தழுவலாக மும்பையில் கொண்டு வந்து அங்கிருந்து தமிழுக்கு வர இது சாத்தியமாயிருக்கிறது. இது முடிய 6 வருடங்கள் ஆகியிருக்கிறது. இப்போதெல்லாம் அசலுக்கு முன் அதன் காபி நகல் வந்து விடும்.
    kalnayak: They did borrow tunes from Hollywood movies in the 50s. I will post another song later. Hollywood movie songs were available in 78 rpm records in the 50s. It was fashionable to sing Hollywood movie songs in my college days !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  16. Likes kalnayak, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •