Page 34 of 397 FirstFirst ... 2432333435364484134 ... LastLast
Results 331 to 340 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #331
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    க்ருஷ்ணாஜி..கலைக்கோவில் தானே நாதஸ்வர ஓசையிலே பாட்டு வெகு அழகான ஒன்று..

    என் வாழ்வு உன்னோடு தான் ம்ம்ம் கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்..லலிதா கம்ல் சுமி என நினைவு..ஏற்கெனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்..தீபாவளிக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது..மக்கள்ஸ் தலை தீபாவளி அன்று ஏதாவது பார்த்த ப்டம் பற்றி எழுதலாமே..
    சி கே சார்

    நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் ' பாடலை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன் .அந்த பாடல் 'பூவும் பொட்டும்' ஏவிஎம் ராஜன் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் .


    தலை தீபாவளி 1989 மாப்பிள்ளை(நெல்லை பேரின்பவிலாஸ் அல்லது பூர்ணகலா இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் கொஞ்சம் குழப்பும்) ,வெற்றிவிழா(நெல்லை சென்ட்ரல்) இரண்டுக்கும் போய் டிக்கெட் கிடைக்கலை தலை .

    இறுதியில் புரட்சி தமிழன் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை (நெல்லை சிவசக்தி என்று நினைவு) செம கடி . ஆனால் சூப்பர் பாட்டு ஒன்னு நினைவில் உண்டு 'மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்' மொட்டை கலக்கி இருப்பார் . பாலா தானே பாடுவது.கோல்டன் ஹிப் 'ஷோ' கொஞ்சம் போனஸ்

    பிறகு அடுத்த நாள் இன்னொரு படம் 'திராவிடன்' (nellai sri rathna) அதுவும் சத்யராஜ் தான் .சுஜாதாவின் சுரேஷ் சினி ஆர்ட்ஸ் பாலாஜி படம்
    வ வ பி எவ்வளோவோ தேவலை

    படம் பார்த்துட்டு வீட்டம்மா
    'என்ன படம் இது' என்று கிள்ள

    'உயர்ந்த மனிதன்' (சௌகார் ,ஜி சகுந்தலா) வசனம் நினைவிற்கு வருகிறதா ? தலை

    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #332
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஸாரி..கலைக்கோவில் உள்ள பாட்டை தப்பாய்ச் சொல்லிவிட்டேன்.. நான் சொல்ல நினைத்த பாடல் தங்கரதம் வந்தது வீதியிலே. சாரி க்ருஷ்ணா ஜி ஸ்டெல்லா ராக்.. பால முரளி கிருஷ்ணா சுசீலாம்மா இனிமையாய் இருக்கும்

    நைஸ் க்ருஷ்ணா ஜி.. வாத்தியார் வீட்டுப் பிள்ளையா..(புதுப்பட ரிலீஸ் பார்ப்பதெல்லாம் எப்போதோ போய்விட்டதில்லை) நான் பார்த்ததில்லை..

    நான் தலை தீபாவளிக்கு துபாயில் இருந்தேன்..அன்ஃபார்ச்சுனேட்லி.. அக்டோபர் முதல் வாரம் என் மாமனார் இறந்து விட்டிருந்தார் எனில் தீபாவளி இல்லை..92 அதற்கடுத்த வருடம் எதுவும் படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..பட் ரோஜா தான் என் வீ.காவுடன் பார்த்த முதல் படம்..

  5. #333
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கு

    கார்த்திக் சார் என்று ஒரு பதிவர் நீங்க கூட கேள்வி பட்டு இருப்பீர்கள்.'உயர்ந்தவர்கள்' படத்தில் ஒரு செகண்ட் சீன்இல் காட்சி தந்ததாக எழுதினார் முதல் பாகத்தில்.

    அவரும் ரொம்ப உயர்ந்தவர் இசையை ரசிப்பதில்.
    வாசு சார் அவர்களின் நல்ல பெட்.உங்களை போல.
    அவருக்கு ரொம்ப பிடிச்ச படம் கலை கோயில்.பாடல்களை பற்றி ரசிச்சு ரசிச்சு எழுதுவார் .அதுவும் சந்திரகாந்தா பற்றி கேட்கவே வேண்டாம் . நீங்க அவர் எழுதி படிக்கணும் madem .மிக சிறந்த கலா ரசிகர் .

    நம்ம மதுர கானம் திரியின் 'நாயக்' அவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. என்ன இப்ப கொஞ்சம் மனதை 'கல்' ஆக்கி கொண்டு விட்டார்.இந்த பக்கம் வருகிறதே இல்லை
    Last edited by gkrishna; 14th October 2014 at 02:21 PM.
    gkrishna

  6. #334
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஸாரி..கலைக்கோவில் உள்ள பாட்டை தப்பாய்ச் சொல்லிவிட்டேன்.. நான் சொல்ல நினைத்த பாடல் தங்கரதம் வந்தது வீதியிலே. சாரி க்ருஷ்ணா ஜி ஸ்டெல்லா ராக்.. பால முரளி கிருஷ்ணா சுசீலாம்மா இனிமையாய் இருக்கும்

    நைஸ் க்ருஷ்ணா ஜி.. வாத்தியார் வீட்டுப் பிள்ளையா..(புதுப்பட ரிலீஸ் பார்ப்பதெல்லாம் எப்போதோ போய்விட்டதில்லை) நான் பார்த்ததில்லை..

    நான் தலை தீபாவளிக்கு துபாயில் இருந்தேன்..அன்ஃபார்ச்சுனேட்லி.. அக்டோபர் முதல் வாரம் என் மாமனார் இறந்து விட்டிருந்தார் எனில் தீபாவளி இல்லை..92 அதற்கடுத்த வருடம் எதுவும் படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..பட் ரோஜா தான் என் வீ.காவுடன் பார்த்த முதல் படம்..
    நானும் அப்படி தான் சி கே. திரை அரங்கு போய் நிறைய வருஷம் ஆகி விட்டது .வீட்டம்மா உடன் பார்த்த முதல் படம் மணமகளே வா .பிரபு ராதிகா ,பஞ்சு அருணாசலம் படம்
    1989 பெப்ரவரி
    இதை ஏற்கனவே சொல்லிட்டேனானு தெரியலை .
    gkrishna

  7. #335
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சொல்லவில்லை க்ருஷ்ணாஜி.. ஆனால் அந்தப் படம் - மணமகளே வாநினைவிலில்லை.. பாட்டு மட்டும் மறுபடிகேட்காமலேயே மனதில் பதிந்திருக்கிறது..அடிக்கடி பாட்டுக்குப் பாட்டில் விளையாடுவேன்..என்ன பாட்.. கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேக்குதில்ல என்னபொடி போட்டீஹளோ மாமா..


  8. Thanks Russellmai, gkrishna thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  9. #336
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் சி கே

    இந்த பாட்டு கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன் . நம்ம திரியில் பதிவிட்டோமா என்று நினைவில்லை .இரண்டு தினங்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு கலை வேந்தர் பதிவு இட்டு இருந்தார். ரொம்ப நல்ல பாட்டு . இன்று காலையில் கேட்டேன் .டி எம் எஸ் அவர்கள் பாடி உள்ளார் .

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் !

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தன்மானம் போய்விடும்
    சன்மானம் ஏது சொல்

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தன்மானம் போய்விடும்
    சன்மானம் ஏது சொல்
    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

    நண்பர் யுகேஷ் பாபு சார் பாடல் லிங்க் கொடுத்து இருந்தார் ராஜேஸ்வர் ராவ் இசை என்று நினைவு
    விக்ரமாதித்தன் 1962 திரை படத்தில் மக்கள் திலகமும் பத்மினியும்

    http://clip.dj/vikramathithan-mugath...p4-g7rKilcFE58
    gkrishna

  10. Likes vasudevan31355 liked this post
  11. #337
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சீனியர் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூரின் பிறந்தநாள் இன்று.

    Sir Roger George Moore, KBE (born 14 October 1927) is an English actor. He is perhaps best known for playing British secret agent James Bond in the official film series for seven films between 1973 and 1985. He appeared as Bond in more official Bond films than any other actor, and is the oldest actor to play Bond. Moore also portrayed Simon Templar in The Saint from 1962 to 1969. He is also a Goodwill Ambassador for the charity organisation UNICEF.

    1973-ல் வெளிவந்த லிவ் அண்ட் லெட் டை திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார்.

    இதுவரை வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மொத்தம் 22. அதில் 7 படங்களில் பாண்ட் வேடத்தில் நடித்தவர் ரோஜர் மூர். 12 வருடங்கள் அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.

    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #338
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    டியர் சி கே

    இந்த பாட்டு கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன் . நம்ம திரியில் பதிவிட்டோமா என்று நினைவில்லை .இரண்டு தினங்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு கலை வேந்தர் பதிவு இட்டு இருந்தார். ரொம்ப நல்ல பாட்டு . இன்று காலையில் கேட்டேன் .டி எம் எஸ் அவர்கள் பாடி உள்ளார் .

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் !

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தன்மானம் போய்விடும்
    சன்மானம் ஏது சொல்

    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
    தன்மானம் போய்விடும்
    சன்மானம் ஏது சொல்
    தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

    நண்பர் யுகேஷ் பாபு சார் பாடல் லிங்க் கொடுத்து இருந்தார் ராஜேஸ்வர் ராவ் இசை என்று நினைவு
    விக்ரமாதித்தன் 1962 திரை படத்தில் மக்கள் திலகமும் பத்மினியும்

    http://clip.dj/vikramathithan-mugath...p4-g7rKilcFE58
    அது முகத்தைப் பார்த்து முறைக்காதீங்க பாட்டு லிங்க் அல்லவோ

    இந்தாங்க தீர்மானம் இங்கே சரியா இருக்குது


  14. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  15. #339
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஊருக்குப் போய்விட்டு திரும்பிய இந்த இரண்டு நாட்களுக்குள் சிட்டிபாபுவின் வீணை முதல் சிக்காவின் வளையம் போட்ட வனிதை வரை பல பதிவுகள்.. மெல்ல படிக்கணும்.

    வாசு ஜி..
    சொன்னா நம்பவே மாட்டீங்க.. சனிக்கிழமைதான் "அழகு மயில் கோலமென" பாட்டை வெட்டி ஒட்டி ரெடி செஞ்சு வைத்தேன். அது யூடியூபில் இருக்கிறதா என்று செக் செய்து விட்டு போடலாம் என்று நினைத்திருந்தேன். இன்னைக்கு வந்து பார்த்தால்...? ஆஹா.. வாசு ஒரு ஹூட் ஹூட் என்ன ஒரு வேகம் !!

    எஸ்.பி.பி சுருளிக்குப் பாடிய பல பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனந்த பைரவியில் ராமா நாயுடு இசையில் ஜானகியுடன் இணைந்து சுருளிக்கேற்ற குரலில் அவர் பாடியிருப்பது நல்லாவே இருக்கும்.

    சில்லறகொட்டு செட்டம்மா என்ற தெலுங்குப் படத்தின் தமிழாக்கமான பெண்ணுக்கு யார் காவல் படத்தில் ஜெயசித்ராவுடன் சுருளி பங்கு பெறும் காட்சி..இந்தப் படத்தில் "உள்ளத்தில் இடம் கொடுத்த" என்ற சுசீலாவின் பாடல் காணொளியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். மாட்டிக்கிட்டதும் இங்கே போட்டுடுவோம்.


  16. Likes Russellmai, vasudevan31355 liked this post
  17. #340
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (93)



    இன்றைய ஸ்பெஷல் பாடலில் 'வரப்பிரசாத'மாய் அமைந்த காலத்தால் அழித்துவிட முடியாத காவிய கானம்.

    படம்: வரப்பிரசாதம்

    நடிகர்கள்: ரவிச்சந்திரன், விஜயகுமார், ஜெயசித்ரா

    வருடம்: 1976

    இசை: ஆர்.கோவர்த்தன்

    பாடல்: புலமைப்பித்தன்

    பாடியவர்கள்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்.

    இயக்கம்: கே.நாராயணன்




    இந்தப் பாடலைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய தேவையே இராது. அனைவர் நெஞ்சங்களின் அடித்தளத்தில் ஊடுருவிய பாடல்.

    பாடலின் அந்த இசைத் துவக்கம் எவரும் கற்பனை செய்ய முடியாதது. கிடாரின் பின்னல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. கோவர்த்தனுடன் இணைந்து இளையராஜா இனிக்க இனிக்க நமக்குக் கொடுத்த பாடல் இது. ஆரம்ப இசையிலேயே இன்பபுரிக்குச் செல்லலாம்.

    ஜேசுதாசும், வாணியும் இணைந்து தந்த காவியப் பாடல்களில் முதன்மையானது இந்தப் பாடல்தான்.

    புலமைப்பித்தனின் புருவம் உயர வைக்கும் ஆச்சரியமளிக்கும் வரிகள். எல்லாப் பாடல்களுக்கும் இது போன்ற காவிய வரிகள் அமையாது.

    அழகான வேட்டி கட்டிய ரவிச்சந்திரன், இணையாக ஜெயசித்ரா (இப்பாடலில் இவரும் அழகாகவே தெரிகிறார்)


    விஜயகுமாரை காதலிக்கும் ஜெயசித்ரா. இருவருக்கும் கோவிலில் திருமண ஏற்பாடு. ஆனால் விஜயகுமாரால் திருமணத்திற்கு வரமுடியாத சூழல். அப்போது ஜெயில் கைதியாக இருக்கும் ரவிச்சந்திரன் ஜெயில் இருந்து தப்பி ஓடி வந்து, போலீசிடமிருந்து தப்பிக்க 'டக்'கென்று ஜெயசித்ரா கழுத்தில் மணமகன் வேடம் பூண்டு யாரும் எதிர்பாரா வண்ணம் இருட்டில் தாலி கட்டி விடுவார். அதிர்ச்சியடையும் ஜெயசித்ரா பின் தமிழ் மரபுப்படி 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்று ரவிக்கு உண்மையான, அன்பான மனைவியாக வாழ்ந்து, ரவி விடுதலைக்கு முயற்சி செய்து வெற்றி பெறுவார் என்று லேசாக நினைவு. எப்போதோ பார்த்தது. கதை, காட்சிகள் லேசாக நெஞ்சில் இழையோடுகின்றன. தெரிந்தவர்கள் தவறிருந்தால் திருத்தித் தொடரலாம்.

    மிக அழகாகவும் படமாக்கப்பட்ட பாடல்.

    இனி பாடலின் வரிகள்

    கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
    காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
    கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
    காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
    விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
    விதி என்னும் காற்றில் பறி போவதல்ல

    கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
    உள்ளம் நெகிழ்ந்தான்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

    மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
    நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன்
    அன்பான தெய்வம் அழியாத செல்வம்
    பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்

    மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
    மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
    உள்ளம் நெகிழ்ந்தான்

    மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
    உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
    நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
    வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
    திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
    ஆனந்தப் பூஜை ஆரம்ப வேளை

    கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
    கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
    மெல்ல நடந்தாள்

    ஆஹாஹஹஹா.....ஆஹாஹஹஹா


    Last edited by vasudevan31355; 14th October 2014 at 04:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai, Russellcaj, gkrishna, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •