-
15th October 2014, 08:10 AM
#401
Senior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
ஆஹா! வாருங்கள் எங்கள் சிவா சார்! உங்களை இருகரம் கூப்பி இனிதே 'மதுர கான'த்திற்கு வரவேற்கிறேன். இலங்கை தந்த எங்கள் 'ஆவணச் செம்மலே'! 'உயர்ந்த மனிதன்' புகழ் ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்திருக்கும் எங்கள் உயர்ந்த, இனிய நண்பரே! வருக வருக!
தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு என் உளம் கனிந்த நன்றி!
நன்றி வாசு
-
15th October 2014 08:10 AM
# ADS
Circuit advertisement
-
15th October 2014, 08:12 AM
#402
Senior Member
Devoted Hubber
Originally Posted by
vasudevan31355
சிவா சார்,
நீங்கள் கேட்டு இல்லாமலா? இதோ நீங்கள் கேட்ட அந்த வித்தியாசமான அருமையான பாடல். அப்படியே ஈழத்தமிழ் பாடல் போல குதூகலிக்க வைக்கும். அதனால்தான் இதை விருப்பமாக தேர்ந்தெடுத்தீர்களோ?
மிக அரிய பாடலைக் கேட்டு தங்கள் வித்தியாசமான ரசனையை இங்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி! பலருக்கு இப்பாடல் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். (ஏற்கனவே ராஜேஷ் சார் பதிவிட்டு விட்டார். பரவாயில்லை)
'சந்தையிலே நான் கண்ட தளுக்கு
நல்ல தங்கச் சிலை போல இருக்கு
கண்ணாலே நான் போட்ட கணக்கு
அது பொன்னாக விளைந்தது எனக்கு'
]
நன்றி வாசு
சிறுவயதில் பார்த்த படம் தெய்வத்திருமகள்
அந்தப்பாடல் மனதில் பதிந்துவிட்டது
அப்பொழுது கேட்டதற்கு பின் அதிகம் கேட்கவில்லை
வானொலிகளிலும் அதிகமாக ஒலிபரப்பாகவில்லை
சில பாடல்களின் சிலசொற்கள் சிலவேளைகளில்
சிலரது காதுகளில் வேறு அர்த்தமாக விளங்கிக்கொள்கின்றது
அப்படி நான் இப்பாடலில் இன்றுவரை விளங்கிக்கொண்டது
தளுக்கு என்பதை சரக்கு என்று
-
15th October 2014, 08:24 AM
#403
Senior Member
Senior Hubber
Originally Posted by
sivaa
நன்றி ராஜேஷ்
நோ ஃப்ராப்ளம் சிவா ஜி.
உங்கள் வருகை இங்கே புது பொலிவை உண்டாக்கட்டும்.. இங்கும் நீங்கள் நிறைய பதிய வேண்டும்.
-
15th October 2014, 09:09 AM
#404
Junior Member
Platinum Hubber
அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் வேலை சுமைகளுக்கு இடையே மதுரமான
பாடலை வயது வித்தியசம் இல்லாமல் தங்களை மறந்து ஆடி பாடி மகிழும் காட்சி
.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th October 2014, 09:16 AM
#405
Senior Member
Senior Hubber
ஜெர்மன் பெண்மனி பேசும் அழகு தமிழ்
-
15th October 2014, 12:30 PM
#406
நண்பர் குருஜி ராகவேந்தர் அவர்களே
உங்கள் இன்றைய பொங்கும் பூம்புனல் 70 களின் இறுதியிலும் 80 களின் முதலிலும் வந்த நல்ல பல பாடலகளை நினைவு படுத்தி உள்ளது .
நன்றி
-
15th October 2014, 12:38 PM
#407
Originally Posted by
chinnakkannan
அவரவர்கள் ஆளுக்கொரு தலைப்பை ப் பிடித்து க் கொண்டார்கள்..பொங்கும் பூம்புனல், பகல்பாட்டு, மாலை மதுரம் இரவின் மடியில் என.. ஞான் எந்து செய்யும் விக் விக் வி.க்
எனில் வீட்டிற்கு வந்து ரூம் போட்டு யோசித்ததில் ஹையா சிக்கிக்கிடுச்சு
மிட் நைட் மசாலா..- 1
(இன்று போய் நாளை வாரேன்)
அருமை சி கே சார்
மிகவும் நெருங்கி விட்டீர்கள் - மனதளவில்
உங்கள் அடுத்த பாடலை அனுபவிக்க காத்து கொண்டு இருக்கிறேன்
-
15th October 2014, 12:41 PM
#408
ராஜ் ராஜ் சார்
சுப்ரமணிய பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே ' பாடலின் (காபியில் ஆரம்பித்து ராகமாலிகை ஆகா) ராக கட்டமைப்பை விளக்கியதற்கு நன்றி
இதே போல் நீங்கள் மேலும் பல காபி ராக அடிப்படையில் அமைந்த பாடல்கள் பற்றி விளக்கி கூற எதிபார்க்கிறேன் .நன்றி
-
15th October 2014, 01:12 PM
#409
கே.எஸ்.ஆர்.தாஸ்...! சாதனை கலைஞனை மறந்த சினிமா
1970 முதல் 1980 வரையிலான காலட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர். உலகில் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்கள் பத்துக்கும் குறைவானவர்கள்தான். நம் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த ராம நாராயணன், கே.பாலச்சந்தர், தெலுங்கில் தாசரி நாராயணராவ் இந்த பட்டியலுக்குள் வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கே.எஸ்.ஆர் தாஸ்.
99 படங்களை இயக்கியவர். 2012 ஜுன் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். சென்னை மகாலிங்கபுரத்தில் எளிமையாக தனது கடைசி காலத்தை கழித்த கே.எஸ்.ஆர் தாஸின் இறுதி சடங்குகளும் எளிமையாகவே நடந்தது. உறவினர்களைத் தவிர சினிமா உலகில் இருந்து ஒரு லைட்மேன்கூட கலந்து கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சாதனை கலைஞனுக்கு சினிமா தந்த மரியாதை இவ்வளவுதான்.
அதனால்தான் தினமலர் இணையதளம் தனது வாசகர்களுக்கு கே.எஸ்.ஆர்.தாஸ் பற்றிய நினைவுகளை தருகிறது.
1936ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் தாஸ். காந்தாராவுடன் பல ஆண்டுகாலம் பணியாற்றி சினிமா திறமையை வளர்த்துக் கொண்டார். புராண படங்களின் பக்கமே திரிந்து கொண்டிருந்த தெலுங்கு சினிமாவை கமர்ஷியலுக்குள் கொண்டு வந்தவர் தாஸ். 1966ம் ஆண்டு லொகுட்டு பெருமுள்ளுகேர்னுகா என்ற படத்தின் மூலம் தனது சினிமா கணக்கை துவக்கினர். 1969ம் ஆண்டு அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க இவர் இயக்கிய தக்கரி தொங்கா சக்கரி சுங்கா என்ற படம்தான் தாஸை திரும்பி பார்க்க வைத்தது. பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமான இது பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு கலெக்ஷனை அள்ளியது.
விருதுக்காக படம் எடுக்கிறேன். சமுதாயத்தை திருத்த போகிறேன். மெசேஜ் சொல்கிறேன் என்கிற வேலையெல்லாம் தாஸிடம் கிடையாது. பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை இரண்டறை மணிநேரம் மகிழ்ச்சியுறச் செய்து அனுப்ப வேண்டும், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இதை அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
1980களில் தமிழ் சினிமா காதலில் மூழ்கி கிடந்தபோது தெலுங்கிலிருந்து அதிரடி ஆக்ஷன் படங்களை அனுப்பியவர் தாஸ். இயக்கம் கே.எஸ்.ஆர் தாஸ் என்றாலே டப்பிங் பட உலகில் கண்ணை மூடிக் கொண்டு படத்தை வாங்குவார்கள். தமிழகத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் தாஸின் பெயர் தெரியும். தமிழில் ஜெய்சங்கர் நடித்த பல ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களுக்கும், கர்ணன் இயக்கிய கவ்பாய் பாணி படங்களுக்கும் வாத்தியார் இவர்தான். ரவுடி ராணி, ஜேம்ஸ் பாண்ட் 007, சி.ஜ.டி ராணி, கன்பைட்டர் ஜானி, பெண்ணின் சவால், பில்லா ரங்கா, இப்படித்தான் இருக்கும் தாஸின் படங்கள். 2000மாவது ஆண்டில் அவர் இயக்கிய நகுபம்மாதான் கடைசி படம். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படம் இயக்கிய தாஸ். தமிழில் படம் இயக்கவில்லை. ஆனால் ரஜினி நடிப்பில் இதாரு ஆசாத்தியாலு, ஆனந்தமுல்ல சவால் என்ற இரு தெலுங்கு படங்களை இயக்கினார். என்.டி.ராமராவ், சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன், மோகன்பாபு என எல்லா சூப்பர் ஸ்டார்களையும் இயக்கினார்.
99 படங்களை இயக்கிய தாஸ்க்கு 100 வது படத்தை இயக்கி சென்ஞ்சுரி அடிக்க வேண்டும் என்ற கனவு மட்டும் நிறைவேறாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சாதனையாளனின் மறைவு சாதாரண நிகழ்வாகவே கடந்து போய்விட்டது. இத்தனைக்கும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் முதல் உறுப்பினர் அவர். தாஸின் மரணத்தை மறந்தது இருக்கட்டும் அவரை நினைவூட்ட வேண்டிய கடமை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2014, 01:16 PM
#410
கே எஸ் ஆர் தாஸ் இயக்கிய முதல் தெலுகு கவ்பாய் படம் மோசகல்லகு மோசகடு .தமிழ் இல் மோசகாரனக்கு மோசக்காரன் என்று டப் செய்யப்பட்டது .இந்த பாடலை தமிழ் இல் சௌந்தர்ராஜன் பாடியிருப்பார் என்று நினைக்கிறன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks