-
16th April 2015, 04:51 PM
#1
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவரின் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் வரும் உரையாடல்.
அரசவையில் முடிசூட்டும் காட்சி முடிந்தபின், புரட்சி தலைவர் புதிய சட்டங்களின் படிக்க சொல்லுவார்.
படிக்கப்படும் சட்டங்களின் பட்டியல், பெரும்பாலும், எளிய மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
இதை கேட்டு விட்டு இடையில், (மறைந்த வில்லன்) பி.எஸ்.வீரப்பா அவர்கள்,
'அப்படியென்றால், நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள், அல்லவா?' என்பார்.
அதற்கு புரட்சி தலைவர்,
'தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள்
ஆனால் ஏழைகள் இருக்கமாட்டார்கள்'
என்று பதிலளிப்பார்.
இதிலிருந்து, மூன்று உண்மைகளை உலகிற்கு உணர்த்தி விட்டார்...
. ஒன்று, திரைப்படங்களில்
அவர் கூறிய வரிகள்,
வெறும் வசனங்கள் மட்டுமல்ல,
அவை எளிய மக்களின் நல்வாழ்வினை
வேண்டி, அவரது மனதின்
அடித்தளத்திலிருந்து
தோன்றிய உணர்ச்சிகள், என்பதை
. இரண்டாவதாக, திரைப்படங்களில்
தான் எதை கூறினாரோ
அதன்படியே தனது வாழ்க்கையில்
பின்பற்றி வாழ்ந்தும் காட்டினார், என்பதை
. மூன்றாவதாக, தான் ஒரு விஷயத்தை
செய்ய முடிந்தால், மற்றவர்களும்
அதை சாதிக்க இயலும் என்ற உண்மையை.
அதனால்தான், இன்றும் மக்கள் அவரை தொடர்ந்து வணங்குகின்றனர்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
-
16th April 2015 04:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks