-
27th April 2015, 10:28 AM
#1
Junior Member
Seasoned Hubber
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!
ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…
படம்: மாடப்புறா
பாடல்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன்
courtesy- vallamai
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th April 2015 10:28 AM
# ADS
Circuit advertisement
-
27th April 2015, 01:46 PM
#2
Junior Member
Platinum Hubber
Dhina Ithazh 27/04/15
-
27th April 2015, 01:48 PM
#3
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th April 2015, 01:52 PM
#4
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 01:57 PM
#5
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 01:58 PM
#6
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 02:01 PM
#7
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 02:03 PM
#8
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 01:51 PM
#9
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 03:58 PM
#10
Junior Member
Seasoned Hubber
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்
1966-ல் தெருவில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிப்ரவரி மாதம், 11 வது வட்ட திமுக.உட்கிளையாக `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்திருந்தோம். ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது, லால் பகதூர் சாஸ்திரி இறந்ததால் அதைத் தள்ளி வைத்து பிப்ரவரியில் திறந்தோம்.திருச்சி, திமு க எம் எல் ஏ , எஸ் எஸ் .மணி திறந்து வைத்தார்.கலைஞரை அழைக்கும் கனவில் ஆரம்பித்து, காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், என்று விசாரித்து. எஸ்.எஸ்.மணியில் வந்து நின்றது. அவருக்கு போக்கு வரத்து செலவுக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் நான் தான் அனுப்பி வைத்தேன்.அதிலிருந்து மன்றத்தின் கடிதப் போக்கு வரத்துக்கு நானே பொறுப்பானேன்.எங்கள் வீட்டு முகவரியான `28.சுடலை மாடன் கோவில் தெரு’அதற்கான முகவரியாயிற்று.
தென் சென்னை எம் ஜி ஆர் ரசிகர் மன்ற செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம்,வடசென்னை, குமரப்ப முதலி தெரு,ஏழு கிணறு எம்ஜிஆர் ரசிகர் மன்றம், மதுரை புதுக்குயவர் பாளையம், சீத்தாரமன், சுந்தர ராஜன், வேலூர் ஆர். எஸ் மாறன்,பீப்பிள்ஸ் ஸ்டார் எம்ஜி ஆர் ஃபேன்ஸ் அசோஷியேஷன் தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,திருச்சி. தா வரதராஜன். (தினத்தந்தி, டெலி பிரிண்டர் ஆபரேட்டர், பறவை சாலை, திருச்சி.)இன்னும் சேலம் , கரூர், என்று எத்தனையோ மன்றங்கள்.தினமும் தபால் வரும் , வசூல் நோட்டீஸ் வரும். நானும் இங்கே அடிக்கிற நோட்டீஸ்களை அனுப்புவேன். இரண்டு வருடத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்து விட்டது. சிலர் அற்புதமான பேனா நண்பர்களாகி விட்டனர்.எல்லவற்றையும் ஒரு பெரிய கைப் பையில் எடுத்துக் கொண்டு சென்னைக்கு கணபதியண்ணனுடன் ரயிலேறினோம்.
Last edited by Varadakumar Sundaraman; 28th April 2015 at 08:21 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks