Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 145

Thread: நெஞ்சம் மறப்பதில்லை

  1. #21
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    spring summer fall winter spring ----Korean -Kim Ki Duc

    நான் கொரியா சென்றிருந்த போது அங்கு என் வியாபார நண்பியுடன் (ஜேமி ஜுங் )சுற்றி கொண்டிருந்த போது ,நான் விரும்பும் சில கொரிய இயக்குனர்களை குறிப்பிட்டேன். உடனே அப்போது சியோல் நகரில் திரையிட பட்டிருந்த இந்த படத்துக்கு அழைத்து சென்றாள் . சூழ்நிலை மறந்து ,மெய் மறந்து ,ரசித்து ,ஒரு இரண்டு மூன்று நாட்கள் எதிலும் கவனம் செல்லவில்லை. பிறகு இந்த இயக்குனரின் அத்தனை படங்களையும் ஒரு சேர வாங்கி, குறிப்பாக இந்த படத்தை தனிமையில் ஆளரவமில்லா இருட்டறையில், பிற சத்தங்கள்,தொல்லைகளற்று வெள்ளி இரவுகளில் 10 மணி தொடங்கி ,என்னை மறப்பேன்.எனக்கு பிடித்த படங்களில் முதலிடம் பெறுவது இதுவே. இதை ரசிக்க மொழி,வயது,இனம் ,ரசனை எதுவுமே தடையாக முடியாது.

    பொதுவாக பொழுது போக்கு என்பதை பற்றி தவறான கருத்தாக்கங்கள் உருவாக்க பட்டு நம் கழுத்தை நெரிக்கின்றன.சில பாடல்கள், சண்டைகள்,சம்பந்தமில்லா நிகழ்வுகள்,மூளைக்கு தொல்லையில்லாமல் காணும் சலனங்கள் என்று . என்னை பொறுத்த வரை எந்த படம் ,கதாபாத்திரங்களுடன்,நிகழ்வுகளுடன் ,தோய வைத்து நம்மை கட்டி போட்டு பரவச படுத்துகிறதோ, அவைதான் பொழுது போக்கு. அவலமும் சுவையே,நகையும் சுவையே.வாழ்வின் சுவடுகளும் சுவையே.தூக்கம்தானே மிக சிறந்த பொழுது போக்கு?பின் வருவது தியானம்.

    இந்த படம் ஒரு தியானமே. எனக்கு மதங்களை பிடிக்காது. லாட்சு,புத்தம் இவை பிரியமானது. இந்த படம் கொரியா சார்ந்த புத்த மதத்தின் கூறுகளை பின்னணியாக கொண்டது. நான்கு பருவங்களில் (வெவ்வேறு கட்ட நிலைகளில் 20 வருடங்கள்) நான்கு வித மனித உணர்வுகளின் பிரதிபலிப்பை , புத்தத்தின் சாரத்துடன், குறியீட்டுடன் வெளியிடும் அற்புத உணர்வு நிலை படம்.

    புத்த துறவியிடம் ஒரு மாணவன் சேரும் மிதக்கும் தீவு போன்ற புத்த மடத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வை.தனிமையில் நிழலில்,நம் மன அழுக்குகளை, வக்கிரங்களை, ஆக்ரமிக்கும் ஆவேச உணர்வு நிலைகளை,குற்ற உணர்வுகளை,பாவ மூட்டைகளை,புனித வேள்விகளை சுமந்து திரிந்ததுண்டா? ஒரு வருடம் தனிமையில் ,ஆளரவமில்லா பூமியில் ,நம் உணர்வுகள் அலச பட்ட உணர்வு ,இரண்டரை மணிகளில்.

    இது ஒரு புதிய அனுபவம். இதை புத்தகங்கள் கூட தர இயலாது.அப்படியே உங்களை வசிய படுத்தி ,உங்கள் வெவ்வேறு வகை கால பருவங்களில், மனிதர் தவிர்த்த (அவர்கள் ,சூழ்நிலை காரணகர்த்தா ஆயினும்) உங்கள் உணர்வு நிலைகளை ,ஆடை அணிவிக்காமல் தரிசித்த உணர்வு. Trans என்ற பரவச நிலை. நூறு தியானங்களுக்கு சமமான உணர்வு.

    தயவு செய்து , உணவு கொறிக்காமல், தொலை அழைப்புகளுக்கு இணங்காமல்,இயற்கை உபாதைக்கு பதில் சொல்லாமல், அரை படுக்கை,இருள் அறையில் ,இந்த அனுபவம் பெறுங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #22
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    A Seperation -2011- Iran - Asghar Farhadi

    பல விருதுகளை வென்று குவித்த ஈரானிய படம்.கே.எஸ்.ஜி படங்களை பார்த்து ரசித்த ,தமிழ் உள்ளங்களுக்கு அன்னியமாக தெரியாத குடும்ப படம். இந்த கால மெகா சீரியல் போல குடும்ப சிதைவை(குற்றங்களையும்) உள்ளடக்காது ,குடும்ப பிரச்சினைகளை, நாடு,மத,தனி மனித பின்னணியில் அணுகிய படம். அற்புதமான திரை கதை,இயக்கம், நடிப்பு என்று நம்மை அசத்தி அசத்தி ,அந்நிய தன்மை தோன்றாமல் செய்து விடும். கட்டி போட்டு விடும். மொழிக்கு subtitle தேவை ஆனாலும் ,மிக குறைந்த வசனங்களே .நடேர் என்ற கணவன்,
    சிமின் என்னும் மனைவி,தோமே என்னும் பெண் குழந்தை,நடேர் தந்தை ,ரசியா என்னும் பனி பெண்,சாட்ஜா என்னும் அவள் கணவன் இவர்கள்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்.

    1)பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கண்ணுக்கு தெரியும் அளவு,தங்களை நம்பி வாழும் மற்ற உறவுகளின் முக்கிய துவம் தெரியாது போலும். இது மத,இன,மொழி,நாடு வேறுபாடு கடந்த இணைப்பு சங்கிலி போலும்.

    2)ஆண்களுக்கோ பல வித உறவின் முரண்களை அணைத்து நின்று , அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரம். ஆனாலும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போது ,சுயநலம் அற்ற போக்கில் ஆண்களே முதன்மை.

    3)எல்லா மதங்களும் தனி வாழ்விலும், சமூக பொது வாழ்விலும் இடையூறு செய்து மனிதம் குலைக்கும். ஒரு கால கிறிஸ்துவம் தேவாலயம் சார்ந்த சர்வாதிகாரம், ஹிந்து மதம் ப்ராமணம் அரசின் மீது செலுத்தி தன மக்களையே பிரித்த அநீதி,தற்காலங்களில் மட்டு பட்டாலும், இஸ்லாம் இன்னும் மனிதத்தை துறந்து மதமே என்று நாடுகளில் கோலோச்சும் வினோதம்.

    4)மத்திய வர்க்கமே,இன்னொரு தாழ்ந்த தன வர்க்கத்தின் பிரச்சினையில் கண் மூடி சுயநலம் காட்டும் சுயநல ஆதிக்க வக்கிரம்.

    5)வயதான மனிதர்கள் வாழ்வு ,மற்றவர்களின் வாழ்வை ஆக்கிரமித்து ,வாழ வேண்டிய வயதினரின் வாழ்வு குலைக்கும் ,நோக்கமில்லா துன்பங்கள்.

    6)பணத்தை விட ,மத நம்பிக்கை,மனசாட்சி மனிதர்களின் மீது செலுத்தும் ஆதிக்கம்.

    7)ஒரு பிரச்சினையின் பல கோணங்கள்.சிக்கல்கள். தெளிவான சுளுவான குழந்தைதன தீர்வு முறை.

    நாடென்ன,மதமென்ன,இனமென்ன,மொழியென்ன,மதமென்ன, சமூக கட்டமைப்பை தூக்கி பிடிக்கும் மத்திய தர வர்க்கம் , தன்னுடைய பிரச்சினையின் தீர்வுக்கு ,அனைத்து கோணத்தையும் சீர் தூக்கி பார்க்கும் தெளிவு.

    அவசியம் பார்த்தே ஆக வேண்டிய உன்னத படைப்பு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes RAGHAVENDRA liked this post
  6. #23
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Kill Bill (1 and 2)- Quentin Tarantino - 2003/2004.

    எனக்கு மிக பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர். இவருடைய pulp fiction என்ற படத்தை 1994 இல் இயக்குனர் பெயர் அறியாமலே பார்த்து ஈடுபாடு கொண்டு பலமுறை பார்த்துள்ளேன்.

    இவர் நமது சம வயதினர். நடிப்பு பள்ளியில் பயின்று ஒரு video archieve கடையில் வேலை பார்க்கும் போது testing பண்ணும் வேலையில் எதையும் முழுசாக பார்க்க முடியாமல் ,துண்டு துண்டாக பார்த்ததில் ,இவருடைய புது பாணி பட முயற்சியான non -linear முறை அவருக்கு சாத்திய பட்டது.

    இவருடைய சிறப்பு, பழைய இயக்குனர்கள், படங்கள் எல்லாவற்றையும் மரபு முறையில் தொடராமல், இணைப்பு மற்றும் புது வகை திரைக் கதையமைப்பால் சுவாரச்யமாக்கி புது மெருகுடன் தருவார். பழைய இசைகள், வெவ்வேறு பாணி இசைகள் என்று இவருடைய படங்களில்
    இசையமைப்பு எப்போதும் படத்தை கூடுதல் ரசனைக்குரியதாக்கும்.

    கில் பில் படத்தின் சிறப்புகள்.

    1)ஜப்பானிய ,சீனா போர் முறை , இத்தாலிய பயங்கர குரூரம்,western sphegatti என்று அழைக்க பட்ட (Sergio Leone )பாணிகளை இணைத்து தந்த சுவாரஸ்ய படம்.

    2)கதையின் துண்டு துண்டாக மரபற்ற இணைப்பு முறையுடன் , வன்முறையை அழகுணர்ச்சியுடன் தந்த Neo Noir வகையில் அமைந்த வித்தியாச பொழுது போக்கு படம்.(Stylised Revenge Flick )

    3)முதல் முறையாக பெண்களை பெருமளவு உலகளவில் ஈர்த்த வன்முறை படம்.அவர்களின் பழியுணர்ச்சி கலந்த வன்முறை வக்கிர உணர்வுக்கு ஒரு fantasy தீர்வாக அமைந்தது ஒரு காரணம்.

    4)உமா துருமன் என்ற நடிகை இந்த படத்தை தூக்கி நிறுத்தி ,பல விருதுகள் பெற்றார். அவர்தான் இந்த படத்தின் நாயக-நாயகி.அவரை சுற்றியே படம்.

    5)சண்டையில் ஜெயிப்பது தவிர மனிதம்,மென்மை உணர்வுகளுக்கு இடமேயில்லை ,எதிர்ப்பது புத்தனே ஆனாலும் எதிரியை முடிப்பதே குறிக்கோள் என்ற ஜப்பானிய சண்டை தத்துவத்தில் ஊறிய படம்.

    6)இயக்குனரின் சிறப்பு தனக்கு முன்னோடியாக அமைந்தவற்றை பல படங்களை ,இயக்குனர்களை குறிப்பிடுவார். இந்த விதத்தில் கமலுக்கு நேர் எதிர்.(ஏன் கமலின் ஹிந்தி ஆளவந்தான் கூட சண்டை காட்சிகள் Graphic பண்ண காரணம் என்று கமலுக்கே credit கொடுத்துள்ளார்)

    இதை பற்றி சொல்லுவதை விட இரண்டு பாகங்களையும் ஒரு சேர கண்டு மகிழவும்.

    எல்லா western ,cowboy ,அது எந்த நாட்டு,மொழி,இன படமாக இருந்தாலும், mafia கொலை கும்பல்,அது சார்ந்த பழிவாங்கல்,என்றே போகும்.
    நமது காலம் வெல்லும்,கங்கா உட்பட.(நான் கர்ணன் விசிறி)

    அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)

    இதன் பின்னணி bill (Snake Charmer )என்பவன் Deadly viper assassination squad(பாம்பு பெயர்கள் அங்கத்தினர்களுக்கு) என்ற அவனது gang இலிருந்து துரோகம் பண்ணி ஒதுங்கி விட்டதாக நினைக்கும் மணப்பெண் என்று அழைக்க படும் (2 ஆம் பாகத்தில் அவள் பெயர் Beatrix Kiddo என்பது தெரியவரும்.இவளுக்கு பாம்பு பெயர் Black Mamba ) அந்த பாத்திரத்தை ,அவள் மணநாளன்று ,தேவாலயத்தில் ,முழு மண விழா குழுவினரையும் குரூரமாக கொல்வதில் துவங்கும்.நான் உன் குழந்தையை சுமக்கிறேன் என்று பில்லிடம் மணப்பெண் சொல்லி விட்டு ,நினைவிழப்பாள் .


    4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.

    முதல் பலி Vernita Green (copper Head ). குடும்பம் குட்டியுடன் செட்டில் ஆன இவளை மகள் முன்னாள் கொல்ல வேண்டாம் என்று வெளியில் அழைப்பாள் .ஆனால் ரகசியமாக துப்பாக்கி எடுக்க முயல்பவளின் நெஞ்சில் கத்தி பாயும்.

    பிறகு O Ren Ishil(Cotton Mouth )என்ற அமெரிக்க .சீன -ஜப்பானிய பெண்.இவள் யகூசா என்ற ஜப்பானிய மாபியா புதிய தலைவி.(தன் பெற்றோர்களை கொன்ற பழைய தலைவனை,தன் தலைமையை கேள்வி கேட்கும் அல்லக்கையை கொன்று). அவளை டோக்யோ உணவு விடுதி ஒன்றில் கூட்டத்துடன் சந்தித்து (அதில் ஒருவராக நம் டரண்டினோ) அவளின் தலை மேற்பகுதியை இளநீர் போல சீவுவாள் .

    Hatori Hanzo என்பவனை சந்தித்து தனக்கு ஒரு விசேஷ வாள் செய்து தர சொல்லி வேண்டுவாள் மணப்பெண் .அவரோ ஒதுங்கியிருப்பவர்.தன்னுடைய பழைய மாணவன் Bill தான் குறி என்றதும் உடன் படுவார். விசேஷ வாள் தயார்.

    O Ren Ishil உதவியாள் Sophie என்பவளை சித்திரவதை செய்து Bill பற்றி செய்தியறிய மணப்பெண் முயல்வாள். sophie இடம், பெண் உயிரோடிருப்பது அவளுக்கு தெரியுமா என்று Bill கேட்பதில் முதல் பகுதி முடியும்.

    அடுத்து பில்லின் தம்பி Budd(Side Winder ) . பில்லினால் எச்சரிக்க படும் Budd ,தயாராக ஒரு துப்பாக்கி. தோட்டாவுக்கு பதில் மலை உப்பு. அதனால் வீழ்த்த படும் மன பெண் உயிரோடு புதைக்க படுகிறாள்.அந்த விசேஷ வாளை Elle Driver (California Mountain Snake )என்ற ஒற்றை கண் பெண்ணிடம் கொடுத்து விற்க சொல்வான் Budd .

    பில்லின் முயற்சியால் Pai Mei என்ற martial art விற்பன்னரிடம் சென்று கற்க முயல்வாள் மணப்பெண்.முதலில் அவளை எள்ளி நகையாடும் Pai Mei ,பிறகு அவளிடம் ஈர்க்க பட்டு, தன் விசேஷ வித்தையான Five Point Palm Exploding Heart Technique என்ற ஒன்றை கற்பிப்பார்.(ஐந்து முறை நடந்ததும் எதிரி மாண்டு வீழ்வான்).

    Pai Mei கற்பித்த கலையை கொண்டு சவ பெட்டியில் உயிரோடு புதைக்க படும் மணப்பெண் (Beatrix )மீண்டு வருவாள்.(கொஞ்சம் அம்புலி மாமா சாயல்)

    Elle(இவளும் Pai Mei சிஷ்யை.அவரால் ஒரு கண் இழந்து விஷம் வைப்பாள்) வாளில் mambasa விஷ பாம்பை வைத்து Budd ஐ கொன்று விட்டு வாளுடன் தப்ப முயல, Beatrix அவளுடன் சண்டையிட்டு அந்த இன்னொரு கண்ணையும் கொய்து விடுவாள்.(காட்ட படும்).விஷ பாம்புடன் கண்ணின்றி தனியாக அலறுவாள்.

    தன் 4 வயது பெண் BB பில்லுடன் மெக்ஸிகோ வில் இருப்பதை அறிந்து ,அங்கு செல்வாள். அப்போது பில் அம்பு மூலம் உண்மை அறியும் மருந்தை (Truth Serum )அவளுக்கு செலுத்தி ,அவள் கூட்டத்துக்கு துரோகம் செய்த பின்னணி அறிவான்.Lisa வை பழிவாங்க கூட்டத்தால் அனுப்ப படும் Beatrix ,தன்னை கொல்ல லிஸா வால் அனுப்ப படும் Karen உடன் உடன்படிக்கை செய்து கூட்டத்தை விட்டு வெளியேறி புது வாழ்வுக்கு முயன்றதன் காரணம் தான் கற்பம் என்பதை அறிந்து குழந்தையின் நல்வாழ்வை முன்னிட்டே என்ற உண்மையை சொல்கிறாள் Beatrix .

    இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.
    Last edited by Gopal.s; 22nd June 2015 at 08:58 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #24
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Memento - Christopher Nolan -2000.

    ஒரு கடினமான complex variable M .S c maths கணக்கு போட்டிருக்கிறீர்களா? Integration ,Differentiation பண்ணியதுண்டா? அதற்கு சற்றும் குறையாத புதிர் இந்த படம். சும்மா உட்கார்ந்து பார்த்து விட்டு கடக்க முடியாது.இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக நான் கருதும் புத்திசாலி படைப்பு. திரைக்கதை,எடிட்டிங் இரண்டிலும் வெளுத்து வாங்கிய Neo Noir வகை Psychological thriller .

    கதாநாயகன் Antero Grade Amnesia என்ற மறதி நோய். எதையுமே ரொம்ப நேரம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாமல் புகை படம் ,குறிப்புகள்,நிரந்தர விஷயங்களை பச்சை குத்தி கொண்டு.(ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதைத்தான் உருக்குலைத்து கஜினி பண்ணி கழுத்தறுத்தார்கள். சிரிப்பு காப்பாற்றியது தமிழை. மூல இயக்குனருக்கு insult இந்த copy ) கருப்பு-வெள்ளை முன்னோக்கி விரிய, வண்ணம் பின்னோக்கி செல்ல., சந்திக்கும் மைய புள்ளியை புரிந்து கொள்ளும் அறிவை பெற எனக்கே தலை சுற்றியது. என் பையனிடம் விளக்கம் கேட்டேன். (அவன் என்னை விட தேர்ந்த அற்புத சினிமா ரசிகன்) இதுவும் நேர்கோட்டில் பயணிக்காமல் வெட்டி வெட்டி பயணிக்கும் வகையே. ஒரு துண்டு துண்டு கிழித்து போட்ட காகிதத்தை ஒட்ட வைத்தது போல நினைவுகள்,மாயைகள்,துக்கம் நிறைந்த சுய -பிரமைகள் ,கொஞ்சமே கொஞ்சமாய் நடப்பு நிஜம் என்று புகை நடுவே பிம்பமாய் படம் விரியும். புரியும்-ஆனால் புரியாது. இதுதான் என கையில் பிடிக்க முடியாது.(நமக்கே குறிப்புகள் வேண்டும் தொடர)

    இந்த படத்திற்கு எனக்கு மூன்று முறை பிடித்தது புரிய. ஆனால் தொடர்ந்தால் கிடைப்பது ஒரு புதிரை விடுவித்து பரிசு வாங்கிய பரவசம்.

    இவரின் Prestige எனக்கு மிக மிக மிக மிக பிடித்த படம். இரு மந்திரவாதி நிபுணர்களின் போராட்டம் பற்றியது. Inception பற்றி குழந்தை கூட பேசும்.

    1970 இல் பிறந்து 1998 முதல் இயங்கி வரும் அதி புத்திசாலி இயக்குனர்(தம்பியும் சேர்த்தே) பிரிட்டன் -அமெரிக்க பின்னணி. சிறு வயது முதலே கனவு-நினைவு அனைத்தும் சினிமாதான் இவருக்கு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes RAGHAVENDRA liked this post
  9. #25
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Taxi Driver -1975-Martin Scorsese

    Neo noir படங்களின் மூலகர்த்தாக்களில் ஒருவர்.அது என்ன Neo Noir ?அடிக்கடி சொல்கிறாயே என்கிறீர்களா? இதற்கு அர்த்தம் Theme (கருபொருள் )Content (உட்பொருள்கள் ),Style (அமைப்பு),Form (வடிவம்),Visual Element (காட்சி படிமங்கள்) எல்லாவற்றிலும் வேறுபட்ட புதிய கருப்பு படங்கள் . பெரும்பாலும் Anti -Hero படத்தின் protagonist ஆக இருப்பார்.Camera Placement ,Light &Shadows ,Low Key Lighting ,Visual எல்லாமே மாறுபட்டிருக்கும்.இதில் காதாநாயகர்கள் மன அழுத்தம் கொண்டு விரக்தியான விளிம்பு நிலையில் ,அழிவில் நீதி காணுவார்கள்.

    எனக்கு பிடித்த மிசொகுசி,ரொசலினி,பெல்லினி,குப்ரிக்,அன்ட்ரே வாஜ்தா,ஆர்சென் வேல்ஸ்,பிரான்சிஸ்கோ ரோசி,ஹிட்ச்காக் போன்ற இயக்குனர்களால் உந்த பட்டவர் Martin Scorsese .இவரின் சமீப படங்கள் Gangs of Newyork ,Aviator ,Departed போன்ற படங்கள் எனக்கு பிடிக்குமென்றாலும்,taxi Driver தனி ரகம்.1975 இல் இதை பட விழாவில் பார்த்து விட்டு வந்த போது சக மாணவர்களின் பொறாமை தீயில் வெந்தேன். ஆனால் எனக்கு படம் பிடித்தது வேறு காரணங்கள்.(அந்த சமாசாரத்துக்கு மலையாள பிட் படம் போதுமே )

    வியட்நாம் போர் என்பது அமெரிக்க மனசாட்சியை குலுக்கி விட்டது. சம்பந்தமே இல்லாத, எதற்கு என்ற காரணம் புரியாமல் ,கட்டாயமாக ராணுவ சேவைக்கு பல இளைஞர்கள் பரிச்சயமில்லாத நாட்டுக்கு ,குரூரம் புரிய அனுப்ப பட்டு உடலும்,மனமும் சிதைந்து ,மன அழுத்தத்திற்கு ஆட்பட்டார்கள். இதன் கதாநாயகன் ,மன அழுத்தம் கொண்டு ,தூக்கம் வராமல் இரவில் டாக்ஸி ஓட்டி, போர்னோ படம் பார்த்து கொண்டு நோக்கமில்லாமல் வாழ்வை கழிப்பவன்.(பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் ஹிப்பி culture அல்லது criminal tendency பல பேரை அமெரிக்காவில் ஆட்கொண்டது). ஒரு பெண்ணை கவர முயன்று தோல்வி கண்டு, ஏதோ ஒரு விபசார பெண் விஷயத்தில் obsession கொண்டு, அவளை விடுவிக்கும் போக்கில் கடைசியில் மன அழுத்த வெடிப்பில் குற்றங்களை செய்து , ஒரு உண்மை நாயகனாக கூட்டத்தால் கொண்டாட படுகிறான்.

    அப்பப்பா ,முதல் காட்சியிலிருந்து படம் நம்மை கட்டி போடும். இந்த இயக்குனருக்கும் ,Robert Deniro வுக்கும் நம்ம பீம்சிங்-சிவாஜி அளவு chemistry . இந்த படத்தில் நண்டின் இயல்பில் நடிப்பார் . "He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side." நமது நடிகர்திலகமும் பல படங்களில் மிருகங்களின் இயல்பை தனது பாத்திரங்களில் கையாண்டு ,பாத்திரங்களை மெருகேற்றுவார். அத்தனை உலக நடிகர்களும் கையாண்ட இந்த உத்தியை ,நமது மேதை 50 களில் இருந்தே கையாண்டுள்ளார்.

    இந்த படம் , எப்படி ஒரு Neo Noir படம் எடுக்க பட வேண்டும் என்ற ஒரு பாடம். ரொம்ப உட்புக மனமில்லையென்றால் ஒரு crime thriller மாதிரியும் ரசித்து விட்டு கடக்கலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes RAGHAVENDRA liked this post
  11. #26
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Citizen Kane - Orson Welles -1941.

    சில படங்களை பற்றி யாரை கேட்டாலும் சிலாகித்தே பேசுவார்கள். (உருளை கிழங்கு போல யாராலும் வெறுக்க முடியாது)அப்படி எல்லோரும் கொண்டாடிய ஒரு படம். வந்த காலத்தை மீறி நின்ற படம். தமிழிலும் அப்படி அந்தநாள்,புதியபறவை,காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும், ஹிந்தியில் மொகலே ஆசம் ,பியாசா,guide ,அமர்ப்ரேம் படங்கள் இப்படி பட்டவை. நூற்றுக்கு நூறு பேரால் விரும்ப படுபவை. ஒரேயடியாக துர் நடவடிக்கைகளில் neo noir வன்முறைகளில் திளைத்து, வாசுவிடம் டாக்ஸி டிரைவர் கெட்ட பெயர் வாங்கி விட்டோமே என்று மென்மையான இந்த படத்தை எடுத்து ஆராய்ந்து நற்பெயருக்கு முயல்வேன். (பழையதையும் நினைவு படுத்த வேண்டாமா ? அடுத்த நான்கும் 40,50,60 களின் கொடிதான்.கருப்பு-வெளுப்பு பொற்காலமே )

    ஆர்சன் வெல்ஸ் ,தானே இயக்கி ,கேன் பாத்திரத்திலும் நடித்த இந்த படம் ,வந்த நாள் முதல் இன்று வரை சிறந்த உலக பத்துக்களில் ஒன்றாக கொண்டாட படுகிறது.இந்த படம் நமது சிறு வயதின் உன்னத ,மனதுக்கு நெகிழ்வான நினைவலைகளை அசை போட செய்யும் மென்மையுணர்வை கிளறி விடும். ஒரு மனிதனின் முன்னேறும் துடிப்பு, தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிகள், செய்யும் தவறுகள் இவற்றை மீறி சாதித்தும் ,வெறுமையுணர்வு மிஞ்சி ,குழந்தைமையின் நேர்மையான, அப்பாவி சந்தோஷ நினைவுகளில் திளைத்து உயிர் விடும் மனிதனின் கதை.

    ஆனால் ரோஷமான் படத்தின் கூறுகளாய் ,அவரை சுற்றி இருப்பவர் பார்வையில் கதை விரியும். இறுதி வரை மென்மை புதிர் விடுபடாது. இயக்குனரின் இறுதி காட்சி காணும் வரை.

    இந்த படம் அப்போதைய March of Time என்ற பிரபல பத்திரிகையின் Dynamic எடிட்டிங், investigative reporting ,மிக குத்தலான ,கொழுப்பான பத்திரிகை நடவடிக்கைகளின் அங்கத சாடலாக சொல்வாரும் உண்டு. (கதாநாயகன் பத்திரிகை அதிபரும் கூட) வில்லியம் ,ஹென்றி என்று அப்போதைய பத்திதிகை ஆட்களை சாடும் முயற்சி என்று அர்த்த படுத்துவோரும் உண்டு.

    பலவித யூகங்களுக்கு ஆட்படுத்தும் வித்தியாச, சுவாரஸ்ய, வினோத திரைக்கதையமைப்பு,நம்மை இப்போது பார்த்தாலும், இன்றைய தலைமுறை பார்த்தாலும் கட்டி போடும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes RAGHAVENDRA liked this post
  13. #27
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Bicycle Thieves -Vittorio De Sica - Italy -1948.

    நான் மட்டுமல்ல உலக பட இயக்குனர்கள் ஜப்பான் முதல் ஈரான் வரை ,சத்யஜித்ரே,பிமல்ராய்,முதல் பாலுமகேந்திரா வரை தெய்வமாய், நியோ ரியலிச படங்களின் தந்தையாய் தொழும் நபர் விட்டோரியோ டிசிகா . இவரின் நூறாவது பிறந்த நாளை கானடா நாட்டு montreal சூதாட்ட விடுதியில் ,நண்பர்களுடன் கொண்டாடினேன்.(7 ஜூலை 2001) இது முடிந்து ஊர் திரும்பியதும் (ஜகர்தா) இந்திய தூதர் தந்த விருந்தில் இருக்கும் போது ,நம் தெய்வம் நடிகர்திலகம் மறைந்த செய்தி வந்து என்னை மீளா துயரில் வீழ்த்தியது.

    neo Realism என்ற பாணியை துவங்கியவர் ரோசலினி என்ற இத்தாலிய இயக்குனரே (1945இல்).இதை தொடர்ந்தவர் நமது டிசிகா Sciuscia (1946),Bicycle Thief (1948) போன்ற படங்களில். 5 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர் குருவாக ஏற்றது ரோசலினி ,சார்லி சாப்ளின் ஆகியோரை. சிறு வயதில் வறுமையில் வாடியவர், பிறகு நாடகம்,படத்துறை என்று பெரிய அளவில் சாதித்தார்.சூதாட்டத்தில் நாட்டம் கொண்டு பெருமளவில் இழந்தவர்.(சூதாட்ட விடுதியில் நாங்கள் நூறாம் ஆண்டு கொண்டாடிய காரணம்).

    சக சூழலில், சக மனிதர்களின் பிரச்சினையை எடுத்து அதை கலை சார்ந்த அழகுணர்ச்சியுடன்,உண்மை தன்மை கெடாமல் கொடுப்பதே Neo Realism .தீர்வு கொடுப்பதை விட,தீர்வை நாடி நம்மை ஓட வைக்கும்.மனத்தை ஈரமாக்கி ,துயர் துடைக்க வழி இல்லையெனினும்,துயரில் பங்கு பெரும் மனிதம் வளர்க்கும். தொழில் முறை நடிகர்களை நாடாமல் அமெச்சூர் நடிகர்களை வைத்தே படம் எடுத்தார்.(தொழில் முறை நடிகர்கள் டப்பிங் கொடுத்ததாக நினைவு).

    உலகத்திலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படைப்பாக கருத படும் படைப்பு இது.பல உன்னத படங்கள் ஒரு புத்தகத்தை மையமாக கொண்டே இருக்கும். இதுவும் லுஜி பர்டோலோனி என்பவரின் நாவல் .சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை வெளிச்சமிட்டு புகழடைபவர் என்ற குற்ற சாட்டு எழுந்தது போல, இவர் இத்தாலியின் வறுமையை வெளிச்சமிட்டு உலக புகழ் சேர்ப்பதாக ,இத்தாலியில் குற்றசாட்டு எழுந்தது. அதையும் மீறி ,இவர் படைப்பும்,ஐவரும் காலத்தில் அழியா புகழ் அடைந்தனர்.

    அமெரிக்க Great Depression காலத்திலும், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலக போருக்கு பின்னரும் சொல்லொணா வறுமை,வேலையில்லா திண்டாட்டம், இளம் தலை முறையின் கொதிப்பு, அதிகரித்த குற்றங்கள் என்று எல்லா சவால்களையும் சந்தித்தன. இதை பற்றி அந்தோனியோ ,மனைவி மரியா, மகன் ப்ருனோ சுற்றி பின்ன பட்ட சுருக்க கதை ,உலகம் போற்றும் classic படமானது.

    வேலையில்லா அந்தோனியோ, போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவை ஒரு சைக்கிள். மனைவி,தனது உயர் ரக (கல்யாண சீதனம்) விரிப்புகளை அடகுக்கு கொடுத்து பணம் வாங்குகிறாள். முதல் நாளே சைக்கிள் திருடு போய் ,அதை மீட்க அவன் படும் பாடு, மகனும் சேர்ந்து அவனுடன் படும் துயர் கதை. இறுதியில் பாடு பட்டும் தன் உடமையை மீட்க முடியாத விரக்தியில்,இன்னொரு சைக்கிள் ஐ களவாட போய் பிடிபட்டு, இறுதியில் உடமையாளரால் மன்னிக்க பட்டு,மகனுடன் வருத்தம்,விரக்தி,மீளா வறுமை,செயலற்ற நிலையுடன் அவமானமும் சுமந்து செல்லும் துயரம்.

    இதன் பாதிப்பில் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி தந்த அற்புத படைப்பே பொல்லாதவன்.வருங்கால பொழுது போக்கு படங்களுக்கு புது பாதை போட்ட படைப்பு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  15. #28
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    La Strada -Federico Fellini - 1954.

    வாழ்க்கை என்பது நாம் காணும் நிகழ்ச்சிகளின் தொகுப்போ, நாம் படிக்கும் கேட்கும் விஷயங்கள் மட்டுமேயல்ல.ரியலிசம் மட்டும் உண்மையோ கலையோ ஆகாது.விஷயங்களை நம் மனம் வாங்கி கொள்ளும் முறை,அது சார்ந்து நம் மனம் நமக்கு காட்டும் முறைமை,உள்மன புயல்கள்,தேவையற்ற பயங்கள் ,வக்கிரங்கள், வன்மங்கள்,துயர் சிந்தனைகள்,நிழலான பகிர முடியாத எண்ணங்கள்,பிரத்யேக மன பிறழ்வுகள்,குற்ற உணர்வுகள்,சில நேரம் துன்பத்திலும் எள்ளும் வினோத குணம், வாழ்க்கையில் சேர்த்து கட்ட பட்டாலும் நேர்கோட்டில் வராத இரு பிரத்யேக குண விசேஷம் கொண்டவர்களின் சந்திக்காத மன உணர்வுகள்,அவர்கள் ஒருவர் வாழ்கையை மற்றவர் பாதிப்பதை உள்மன படிமங்களாக்குவது போன்ற ஆழமான விஷயங்களை ,மன விளையாட்டு பயிற்சியை,சத்தியமாக ரியலிச படங்களால் அணுகவே முடியாது.

    Fellini புரிந்து கொள்ள படுவதற்கே ,தேர்ந்த ஆய்வாளர்களின் துணையுடன், படிப்பறிவு (துறை சார்ந்த),மனோதத்துவ பின்னணி,அழகுணர்ச்சி ,பல உலக படங்கள் பார்த்த தேர்ச்சி,இவை இருந்தாலே சாத்தியம். அப்படி ஒரு பாணி. Fantasy எனப்படும் மன பிரமை,Baroque என்ற கலை போல மிகை தன்மையுடன் நகர்வு சார்ந்த ஒருங்கிணைக்க பட்ட கலையுணர்வு, பூமியின் தன்மையுடன் (Earthiness )இணைவு பெற்றால் மட்டுமே நிகழும் அற்புத தருணங்கள். சிறு சிறு விஷயங்களும் நேர்த்தியாக காட்ட படும்.இது ஒரு Hollywood படங்கள் போல பொதுமையுடன் ,நீர்க்க செய்த வியாபார கலையல்ல. ஒரு மனிதன் தன் மனத்தை, அதன் தருணங்களை,அதன் சலனங்களை நம் மனத்தோடு பகிர என்னும் பிரத்யேக கலை படங்கள்.உள்மன விவரிப்பு படிமங்கள்,மனோதத்துவம் சார்ந்த யதார்த்தம்,மன உணர்வுகளின் மேன்மை-மென்மை -வறுமை-துயரம்-கொடூரம்-குழப்பம் இவற்றை மனிதம் கெடாமல் நம்மோடு பகிரும் ஒரு நேர்மையான நேர்த்தியான கலை.

    இந்த படம் Zampano என்ற தெருவில் வித்தை காட்டி பிழைக்கும்(சங்கிலியால் கட்டி இழுக்கும் பல விளையாட்டு) ஒருவன் ,ரோஸா என்ற உதவி பெண் இறந்து விட்டதால், அவளுக்கு பதிலாக கேல்சொமினா என்ற அவளது தங்கையை 10,000 லிரா (இத்தாலிய காசுகள் சுமார் 600 ரூபாய் ) கொடுத்து வாங்கி உதவியாக வைத்து கொள்கிறான்.அவளிடம் மனித தன்மையற்ற குரூரம் காட்டி அனுதினமும் வதைக்கிறான்.அவன் ஒரு circus ஒன்றில் பணி புரிய நேரும் போது Matto என்ற கோமாளி கலைஞன் அவர்களை எதிர்கொள்கிறான். அவனுக்கு எதிலும் எப்போதும் விளையாட்டு மனநிலை இருந்தாலும் ,எந்த ஒன்றும்,எந்த ஒருவரும் ஒரு காரணத்தோடு படைக்க பட்டவர்களே என்ற மனிதம் நிறைந்த எண்ணங்கள் கொண்டவன். சம்பனோ வும் மட்டோ வும் ஆரம்பம் முதலே மோதல். ஒரு அசந்தர்ப்பமான தருணத்தில் மாட்டோ ,சாம்பநோவால் மடேர் மடேரென்று அடித்து கொல்ல பட்டு விடுகிறான்.(சாகும் போது மாட்டோ-என் வாட்ச் உடைந்து விட்டதே) .இந்த சம்பவத்துக்கு பிறகு மணந்து கொள்ள சொல்லும் கேள்சொமினா வை நிராகரித்து,நடை பிணமாக இருக்கும் அவளை விட்டு ஓடி விடுகிறான். அவள் நினைவுகளால் துரத்த பட்டு ,இறுதியில் கண்ணீர் வடிப்பதுடன் படம் முடிகிறது.

    fellini தன் Autobiography என்று இதனை வர்ணித்துள்ளார்.உள் மனத்துயர் ,ஒரு லேசு பாசான (diffused )குற்றவுணர்வு,நிழல் ஒன்று மேல்தொங்குவது போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டு ஒரு மன சித்திரமாக உருவானவள் கேள்சொமினா. Zampano ,சிறு வயதில் பார்த்த பன்றிகளுக்கு காயடித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு பெண் பித்தனின் உண்மை பாத்திரம்.இவை வைத்து உருவானது. Fellini படங்களிலேயே அவருக்கு அதிகம் சிரமம் தந்த படம்.(நேரம்,பொருள்,மன உளைச்சல்),Antony Quinn தான் Zampano .

    இவரின் பிற படங்கள் La Dolce Vita , 8 1/2, Amarcord .Nino Rota இந்த படத்திற்கு தந்த இசை கவனிக்க பட வேண்டியது. காட்சிகள் படமாக்கம் மிக ஆழ-அழுத்தம் கொண்டு பலமான காட்சி அதிர்வை தரும். ஒரு perfectionalist Fellini .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  17. #29
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Breathless -Jean Luc Godardt - French -1960.

    இவர் ஒரு விமரிசகர்,நடிகர்,சினிமாடோ கிராபர் ,திரைகதையாசிரியர்,எடிட்டர்,இயக்குனர் தயாரிப்பாளர்.(உங்களுக்கு ராஜேந்தர்,பாக்யராஜ் ஞாபகம் வந்தால் டெட்டால் விட்டு குளித்து விட்டு வாருங்கள்)

    கோடர்ட் ,தரமான படம் என்ற பழைய கோட்பாட்டை தகர்த்தவர். புதுமை விரும்பி.புது இயக்குனர்களால் சோதனை முயற்சி படங்கள் வர பிரயத்தனம் மேற்கொண்டவர்.இருத்தலியல் (existentialism )மார்க்ஸிஸம் இரண்டிலு ஈடுபாடு கொண்டவர். பிற்கால படங்களில் ஒரு மனிதம் கலந்த போராட்ட முரண்களை மார்க்ஸீய பின்னணியில் அணுகியவர். அரசியலை படங்களில் பேசியவர். அந்த கால நியூ வேவ் படங்களின் முன்னோடிகளான ட்ரூபோ ,ரெஸ்னாய் இவர்களுடன் இணைந்து பிரெஞ்சு படங்களை உலக அளவில் தர படுத்தியவர்.

    நாம் பார்த்த ,பார்த்த இருக்கிற உலக இயக்குனர்கள் scorsese ,Tarantino ,Soderberg ,betrolucci ,pasolini ,karvai போன்றவர்கள் இவரால் உந்த பட்டு உருவானவர்களே.

    இந்த படம் மைக்கேல் என்ற இளம் குற்றவாளி, கார்திருட்டில் ,ஒரு போலிசை சுட்டு விட்டு ,தப்பிக்கும் ஓட்டத்தில் பேட்ரீஷியா என்ற அமெரிக்க இளம் பெண்ணை (தெருவில் பேப்பர் விற்கும் ,journalism படிக்கும் மாணவி)கண்டு ,அவளால் அவளிருப்பிடத்தில் ஒளித்து வைக்க படுகிறான்.அவன் இத்தாலிக்கு தப்பி செல்ல பண முயற்சியில் இறங்கி, அந்த பெண்ணையும் வச படுத்துகிறான்.(seduction )அவனால் கர்ப்பமாகும் பெண்ணே ,அவனை காட்டியும் கொடுத்து அவன் சாவுக்கு காரணமாகிறாள். கடைசியில் சாகும் போது அவன் சொல்லும் வரிகள் படத்துக்கு முத்தாய்ப்பு.

    ஒரு சாதாரண கதையை எடுத்து,அதனை நோக்கமில்லாமல் செலுத்தி,பல வித digressions என்று சொல்ல படும் திருகு வேலைகள் செய்து, புனித நோக்கங்களின் பின்னாலுள்ள நேரத்தின் அர்த்தமின்மை என்பதை புதிய பாணியில்,அலட்டாமல்,சுவாரஸ்யமாக சொன்ன படம். காட்சிகளின் புதுமை,பலம், jump cut என்ற எடிட்டிங் பாணி (இதன் பிறகே பிரபலம் அடைந்தது. சிகப்பு ரோஜாக்கள் ஞாபகம் உள்ளதா).இந்த படத்தை உலக அளவில் பேச படும் படமாக்கியது.

    இயக்குனரின் பிற படங்கள் A Woman ,Contempt ,Week End போன்றவை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Likes RAGHAVENDRA liked this post
  19. #30
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Cries and Whispers - Ingmar Bergman - Sweden - 1972




    ஒரு சிறிய நாட்டில் வசித்து கொண்டு (ஸ்வீடன்)நம்மை விட மிக மிக குறைந்த ஆட்களே பேசும் மொழியில் ,குறைந்த முதலீட்டில்,hollwood ,U .S போல வியாபார நிர்பந்தங்களுக்கு பணியாமல் ,பிரத்யேக படங்களை,யாரோ நம் அந்தரங்கத்தில் ஊடுருவியதை போல பதட்டம் தரும்,சினிமா மட்டுமே கண்டுணரக்கூடிய வார்த்தைகளற்ற மௌன ரகசியத்தை படங்கள் மூலம் பேசியவர் பெர்க்மன். இன்றும் கூட யாராவது நல்ல படம் தந்தால் ,பெர்க்மன் feel வருகிறது (உ.ம் மெட்டி,தேவர் மகன்)என்று சொல்ல வைத்த இயக்குனர் உலக அளவில் பேர் பெற்ற பெர்க்மன்.




    நாம் சாவு,நோய் ,இதையெல்லாம் வெறுக்க கற்று, பிரிக்க முடியாத அவைகளுடன் ரகசிய சிநேகம் கொள்ள மறுக்கிறோம். பெர்க்மன் படங்கள் நம்பிக்கை,ஏமாற்றம்,சூன்யம்,மன பிறழ்வுகள்,நோய்,சாவு இவற்றை ஒரு அதீத மனித உணர்ச்சி குவியலுடன் ,ஒரு புதிர் தன்மையோடு ,அழகான கலையுணர்ச்சியோடு ,மனதுக்கு அருகில் சேர்த்தவை.




    இந்த படம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு தனி பங்களாவில் ,சாவுடன் போராடும் ஆக்னெஸ் என்ற சகோதரியை பார்க்க வரும் மரியா ,கரீன் என்ற உடன் பிறப்புக்கள்,அன்னா என்ற மத நம்பிக்கையில் ஊறிய பணிப்பெண் இவர்களை சுற்றி படரும்.அமானுஷ்ய உணர்வு தரும் படம். அவள் இறந்து விடுவாளோ என்ற பயம் ஒரு புறம்,இறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். நினைவுகள் பின்னோக்கி போகும் flashback . அவர்களின் சிறுவயது வாழ்க்கை,அது சார்ந்த நினைவலைகள்,எண்ண எழுச்சிகள்,, மரியாவின் டாக்டர் நண்பனுடனான காதல்,தோல்வியில் முடியும் திருமணம்,கரின் தன்னை தானே துன்புறுத்தி,தன பெண்ணுறுப்புக்களை சிதைத்து கொண்டு கணவனை விரட்டி விடும் மிரட்சியான காட்சிகள்,அக்னேஸ் தன்னுடைய அம்மாவின் மீது வைத்த அளவு கடந்த அன்பு என்று போகும்.இதில் தன குழந்தையை சிறு வயதில் இழந்த அன்னா மட்டுமே சற்று நிதானமாக பிரச்சினையை அணுகுவார்.இறந்து விடும் அக்னேஸ் திரும்பி வந்து அவர்களின் நேசத்தையும் ,கவனிப்பையும் யாசிப்பது என்று படம் முடியும்.



    பெண்களின் மனோதத்துவம் அற்புதமாக கையாள பட்டிருக்கும்.முழுக்கவும் சிவப்பு விரிப்புகள் ,வெண்ணிற பொருட்கள் என்று வண்ணங்களின் வினோதம் மனோதத்துவ பின்னணியுடன் இணையும். காமெரா மேன் Nykvist மாயாஜாலம் புரிவார்.(ஆஸ்தான கேமரா மேன் ). பெர்க்மென் தன்னுடைய நடிக நடிகைகளை எல்லா படத்திலுமே திரும்ப திரும்ப பயன்படுத்துவார்.(Ullman -நாயகியாய் சுமார் எட்டு படங்களில்).



    சினிமா,தொலைகாட்சி,நாடகம் என்று இயங்கிய பெர்க்மன் உணர்ச்சிகளின் குழந்தை. 4 மனைவி,4 துணைவி,கணக்கில்லா பிள்ளைகள் என்று. பின்னாட்களில் வரி ஏய்ப்புக்காக charge sheet பெற்று மன உளைச்சலில்,படங்களை துறந்து நரம்பு தளர்ச்சி நோய்க்கு ஆட்பட்டார்.(பின்னர் விடுவிக்க பட்டாலும்)



    மகேந்திரனுடன் இப்படத்தை குறிப்பிட்டே, மெட்டியுடன் ஒப்பிட்டேன். (அவருக்கு DVD கொடுத்தேன்).இதை பேட்டியிலும் குறிப்பிட்டார்.(நடிகராக போகிறார் போல?)



    இவரின் ரசிக்க பட வேண்டிய பிற படங்கள் Seventh Seal ,Wild Strawberries ,Persona .
    Last edited by Gopal.s; 24th June 2015 at 04:36 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  20. Likes RAGHAVENDRA liked this post
Page 3 of 15 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •