Page 111 of 401 FirstFirst ... 1161101109110111112113121161211 ... LastLast
Results 1,101 to 1,110 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1101
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

  2. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellbzy, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1102
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

  5. Likes Russellbzy liked this post
  6. #1103
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் மதுரை
    மீனாட்சியில்,
    நாளை முதல்
    மதுரை அண்ணாநகர் அம்பிகா ac தியேட்டரில்
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    எல்லோரும் கூடுவோம்
    Last edited by vcs2107; 29th August 2015 at 11:16 PM.

  7. Likes Russellbzy, Russellmai, Russellbpw liked this post
  8. #1104
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.

  9. Likes Russellbzy liked this post
  10. #1105
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-1

    ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
    சபை.

    பருத்த உடலும் தடிமனான
    கண்ணாடியுமாய் பார்வையாளர்
    வரிசையில் ஒரு பாகவதர்.

    பக்கத்தில் வந்தமரும்
    போலீஸ்காரருக்கு
    வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.

    குயில் கூவலாய் ஒரு பெண்
    பாட கச்சேரி துவங்குகிறது.

    அழகாய்ப் பயணப்படும் அந்தப்
    பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.

    அந்தப் பெண்
    திக்குகிறாள். திணறுகிறாள்.

    பாட்டறிந்த பாகவதர்
    மேடையேறுகிறார்.

    பாடுகிறார்.

    இனிக்கப் பாடுகிறார்.

    இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.

    அப்பப்பா...!

    அந்தப் பாடலென்ன?
    பாவனைகளென்ன?

    அசைவுகளென்ன?
    அபிநயங்களென்ன?

    அணிந்திருக்கும்
    மூக்குக்கண்ணாடிக்குள்
    அழகாய் மிளிரும்
    கண்களிலே,
    அனைத்தும் உணர்ந்ததன்
    விளக்கமென்ன..?

    பாடும் உதடுகள் மீதினிலே
    புன்னகை அமர்த்தும்
    பழக்கமென்ன?

    தன் திறம் காட்டுதல் மட்டும்
    இல்லாமல்,
    உடன் கலை செய்வோரையும்
    உயர்த்தும் தன்மை என்ன?

    ஓங்கி உயர்த்தி
    குரல் தருதல்,
    உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
    அசைவுறுதல்,
    தூய இசையோடு ஒன்றி விடல்,
    தொடையில் அழகாய்த்
    தாளமிடல்..
    அனைத்திலும் தெரியும்
    உண்மையென்ன..?

    பாடல் தொடர்கிறது.
    தொடர்ந்து நகர்கிறது.
    நகர்ந்து முடிகிற நேரத்...

    ..முதுகில் பிடுங்கிய
    மூட்டைப் பூச்சி
    நினைவூட்டியது..

    அமர்ந்திருப்பது
    திரையரங்கமென்றும், அந்தக்
    கச்சேரி 'குங்குமம்' படக்
    காட்சியென்றும்,

    அந்தப் பாகவதர் நம் நடிகர்
    திலகமென்றும்!


  11. Likes Russellbzy, Russellmai, KCSHEKAR liked this post
  12. #1106
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post
    பட்டிக்காடா பட்டணமா?

    அவன்
    வேட்டி கட்டிய சிங்கம்
    குணத்திலோ தங்கம்.

    பிறந்தது ஒரு சிற்றூரு
    சோழவந்தான் என்பதே அதன் பேரு
    அந்த மண்
    அவனுக்கு கண்.
    ஏரை மதிப்பவன்
    ஊரை காப்பவன்
    ஊருசனம்
    அவன் நடந்தால் நிற்கும்
    பேசினால் கை கட்டும்.
    மூக்கையாத் தேவன் அவன் பேரு
    அவன் சொல்லை மதிக்கும் ஊரு.

    தேவனுக்கு ஒரு மாமன் உண்டு
    மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு
    அவருக்கு ஓர் மகள் உண்டு.

    மாமன் மகள் மெத்தப்படித்தவள்
    மேலை நாகரீகத்தில் திளைத்தவள்
    ஆனால்
    தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள்.
    கல்பனா என்பது அவள் நாமம்
    அம்மாவே அவளுக்கு வேதம்.

    மகளின் மணம்
    மூக்கையாவே வேண்டும்
    இதுவே மாமனின் குணம்.

    முறைமாமன் தானிருக்க
    வேறொருவன் தாலியெடுக்க
    மாமன் மூலம்வருகிறது சேதி
    மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி
    முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி

    ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை
    எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை
    கேட்கிறான் நியாயம்
    செய்கின்றனர் வாதம்.
    இனியும் ஆகாது தாமதம்
    முடிவெடுக்கிறான் அக்கணம்.

    தூக்கி வருகிறான் முறைப்பெண்ணை மாட்டுவண்டியில்
    துரத்தி வருகின்றனர் எதிரிகள் பின்னால்
    மூக்கையாவின் வீரம்
    எதிரிகளுக்கு காரம்
    அவனது கோபம் மிகவும் காட்டம்
    ஆடி விடுகிறது எதிரிகள் கூட்டம்.

    கல்பனாவுடன் வந்து சேர்கிறான் கிராமத்துக்கு...

    சிந்தனை செய்கிறது அவள் மனம்
    புரிகிறது தேவனின் குணம்
    செய்து கொள்கிறாள் திருமணம்.

    அவர்களின் வாழ்க்கை
    ஆட்டமும் பாடமுமாய் சில காலம்
    பின் ஆரம்பிக்கிறது கலி காலம்.

    நகரங்களுக்கே ஆகாது சில மேல்தட்டு நாகரீகங்கள்
    கிராமங்கள் தாங்குமா?
    பிறந்த நாள் கொண்டாட கேட்கிறாள் சம்மதம்
    விருப்புடன் இசைகிறான் அக்கணம்.
    உற்சாக பானங்களுடன் ஆடல்,பாடல்கள்
    தோழன்.,தோழிகளோடு கல்பனாவின்
    கும்மாளங்கள்.
    திகைக்கிறது மூக்கையாவின் வீடு
    இதை ஏற்குமா அவன் கூடு.
    தேவன் வருகிறான்
    பார்த்ததும் கொதிக்கிறான்.
    பின் வெடிக்கிறான்.
    கல்பனாவை சாடுகிறான்
    சாட்டையை சுழற்றுகிறான்.
    மூக்கையாவின் சினம்
    அவள் மேனியில் ரணம்.

    தாய்வீடு ஓடுகிறாள்!
    தனக்கு நேர்ந்ததை
    தாயிடம் கூறுகிறாள்.
    நல்ல தாய் தவறை எதிர்ப்பாள்.
    நாகரீக தாய் அதை ஆமோதிப்பாள்.
    கல்பனாவின் தாய்
    நாகரீக தாய்.

    கடிதம் மூலமாக கேட்கப்படுகிறது பிரிவினை
    மூக்கையாவிற்கு ஏற்படுகிறது வேதனை
    அவன் மறத்தமிழன் மரபு
    மானமுள்ள பிரிவு
    முயற்சி செய்கிறான் சேர
    கல்பனாவிடம் செல்கிறான் பிரச்சினை தீர

    கீதா உபதேசம் அர்ச்சுனனுக்கு
    தாயின் உபதேசம் கல்பனாவுக்கு
    அந்த உபதேசம் தேசத்துக்கும் ஆனது
    இந்த உபதேசம் நாசத்துக்கு ஆவது
    மூக்கையாவோ போராடினான் இணை சேர
    அவள் தாயோ சதியாடினாள்
    இணையை பிரிக்க
    விதி யோசித்தது
    நீதி யாசித்தது
    சதி ஜெயித்தது.

    ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
    சோடை போன மனிதன் மரணம் அடைந்த மனிதன்.
    இதுவே தமிழ் கலாச்சார மாண்பு
    இதை ஏற்பதில்லை மேலை பண்பு

    ஊருக்கு திரும்பினான் வெறுங்கையோடு
    மானம்போனதாய் நினைத்தான் அந்த
    இரவோடு
    ஊர் பார்த்தது
    உள்ளுக்குள் சிரித்தது.

    "வெட்டிவிடு மனையாளை" பஞ்சாயத்தில்கேட்டான் ஒருவன்
    பெண்டாள வக்கில்லையோ என்றான் மூக்கையாத்தேவன்

    கேட்டான் அவன்

    "உமக்கு என்ன அருகதை"
    மானமே போனது தேவன் கதை

    மாமனுக்கு கொடுக்கிறான் பத்திரிக்கை
    அதிலே இருக்குது
    வேடிக்கை
    "மூக்கையாவுக்கு கல்யாணம்"

    இடையில்,
    கல்பனா ஆகிறாள் தாய்
    அது மூக்கையாவின் சேய்
    மாமியாருக்குஅது வேப்பங்காய்
    கல்பனா ஈன்றெடுக்கிறாள் மகவை
    மூக்கையா எடுத்து வருகிறான் தன் சிசுவை
    கன்று பிரிந்தது பசுவை

    உணராவிட்டாலும் கல்பனா தமிழச்சி
    உணர்த்தி விட்டது தாயின் சூழ்ச்சி
    பத்துமாத பந்தம்
    மறக்க முடியுமா ஒரு தாய்
    சுடுமே அது தீயாய்

    தாய் சேய் பிரிவு அது சொல்லொணாத் துயரம்
    எழுத்தில் வடிப்பது கடினம்
    உதிரம் கொதிக்கின்றது
    தாய்மையை உணர்கின்றது
    பாலூட்ட துடிக்கின்றது
    உண்மையை அறிகின்றது

    சேய் அதன் தகப்பனிடம்
    கல்பனா அறிகிறாள் சேதி
    புரிந்து கொண்டாள் மீதி
    விரைகிறாள்தாய்மையடைந்த ஜோதி


    சோழவந்தான் மூக்கையா வீடு
    --------------------------------------------------------

    அங்கே கல்யாண கொண்டாட்டம்
    அவளுக்கு இது திண்டாட்டம்

    பார்க்கிறாள் மூக்கையாச் சேர்வையை
    புரிகிறான் தாய்மையடைந்த பார்வையை
    பாலூட்டத் துடிக்குது அவள் நெஞ்சம்
    உரிமையை தடுக்கவில்லை தமிழ்ச் சிங்கம்

    கொடுக்கிறாள் சேய்க்குப் பாலை
    அடைகிறாள் நிம்மதியின் எல்லை

    புது மாப்பிள்ளையாய்
    முக்கையா

    பார்க்கிறாள் சேர்வையை
    வீசுகிறாள் பார்வையை
    கேட்கிறாள் தனக்கொரு தீர்வை

    மாறிவிட்டது அவள் மனம்
    தெளிந்துவிட்டது அவள் குணம்
    ஊரார் மெச்சுகின்றனர் மறுகணம்
    மூக்கையாவிற்கோ மகிழ்ச்சி இக்கணம்
    இதுவே தமிழ்மண்ணின் மணம்.

    கல்யாணம் ஒரு நாடகம்
    அவளுக்கு புகட்டுமே பாடம்
    அது
    மூக்கையா போட்ட வேடம்

    தாலிதான் மகத்துவம்
    தாய்மைக்கு அதுதான் சிறப்பிடம்
    இனிமேல் எல்லாமே புகுந்தஇடம்

    கல்பனாவுக்கு மகிழ்ச்சி
    எல்லோருக்கும் நெகிழ்ச்சி


    *************சு ப ம்*************************
    பட்டணங்களில்
    "சிவாஜி" ரசிகர்கள்
    அதிகம்.

    பட்டிக்காடுகளில்
    "ஜிவாஜி" ரசிகர்கள்
    அதிகம்.

    Sent from my GT-S6312 using Tapatalk

  13. Likes Russellbzy, Russellmai, KCSHEKAR liked this post
  14. #1107
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் சிவாஜிசெந்தில் சார் ,
    தங்களின் சிறப்பான பணி நிறைவுக்கு என் வாழ்த்துக்கள் ! உடம்பில் ஆரோக்கியமும் , மனதில் ஆர்வமும் இருக்கும் வரை நமக்கு பிடித்த துறையில்
    தொடர்ந்து பயணிக்கலாம்! தங்கள் பண்புக்கும், குணத்துக்கும் தாங்கள் மேலும் பல உன்னத நிலைகளை வாழ்க்கையில் நிச்சயம் அடைவீர்கள்!
    தங்களின் முக்கிய வேலைகளை முடித்து கொண்டு வெகு விரைவில் மீண்டும் நம் திரியில் பங்கெடுக்க விரும்புகிறேன் ! தங்கள் இடத்தை வேறு யாராலும்
    நிரப்ப முடியாது ! நீடூழி வாழ்க சிவாஜிசெந்தில் சார் !

  15. #1108
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    DEAR FRIENDS,

    All of you are already aware and has seen the Friday, Saturday & Sunday HOUSEFULL status at SATHYAM STUDIO 5 Matinee 3-45pm Show last Friday itself.

    TODAY, 30-08-2015, SUNDAY

    MATINEE SHOW 3-15pm

    &

    EVENING SHOW 6-45pm


    @ SAI SHANTHI ,

    NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN REGISTERED

    "HOUSEFULL" !!!

    NADIGAR THILAGAM ROCKS !!!!

    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 30th August 2015 at 06:04 PM.

  16. Thanks Russellbzy thanked for this post
    Likes joe liked this post
  17. #1109
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    ******************
    சிவாஜி பாட்டு-2
    ******************
    "ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
    சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
    வைக்கட்டுமா?" என்று
    கேட்டாள்..சரிவர சமைக்கத்
    தெரியாத மனைவி.

    கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
    ஏதாவது வை.சாப்பிட்டுப்
    பாத்து பேரு வச்சுக்கலாம்"
    என்று.

    *****
    சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
    விதமாய் அமைந்த அந்த
    நகைச்சுவைத் துணுக்கு,
    சிரிக்க வைத்தாலும், பசித்தும்
    நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
    *****
    பசி பொல்லாதது.

    மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.

    அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
    தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
    *****
    "பாபு" என்கிற திரைப்படம்.

    "வரதப்பா..வரதப்பா"என்று
    அதில் ஒரு பாடல்.

    உழைத்துப் பசித்தவர்களின்
    உணவு நேர சந்தோஷத்தை
    இந்தப் பாடல் போல் எந்தப்
    பாடலும் காட்டியதில்லை.

    கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
    *****
    பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.

    பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
    இரண்டே கண்களுக்குள்
    இன்னும் நூறு தலைமுறைகள்
    தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
    இருக்கிறது.

    பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
    மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
    கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.

    "சமையல் எல்லாம் கலக்குது.
    அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
    சோத்தைக் கண்டா பறக்குது."

    -மை ஊற்றினால் எழுதும்
    பேனாவினால், உண்மையை
    ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.

    'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
    வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
    "எத்தனை லட்சுமி பாருங்கடா"
    என்று நீளமாய்ப் பாடும் போது,
    பெண்கள் கூட்டமொன்று வந்து
    முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
    சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
    அழகுறத் தொடரும் அய்யா
    நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
    பாடலைப் பார்க்கலாம்..

    பத்தாயிரம் தடவை.
    ******

    புகைப்படத்திற்கு நன்றி...
    திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு.



    Sent from my GT-S6312 using Tapatalk

  18. Likes uvausan, Russellbzy liked this post
  19. #1110
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
    பழைய படங்களை சிறப்பாக டிஜிட்டல் செய்து நல்ல முறையில் விளம்பரம் செய்து வெளியிட அதிக பட்சம் சுமார் 20 முதல் 22 லட்சங்கள் வரை தான் செலவாகும் ! நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை! அந்த அளவு பணத்தை செலவு செய்ய முடியாதவர்கள் அந்த காரியத்தில் ஈடுபடுவதே தவறு!
    சொக்கலிங்கம் போன்றவர்கள் கையில் கட்டபொம்மன் சிக்கியிருந்தால் அதன் ரேஞ்சு எங்கோ சென்றிருக்கும்! நமக்கு கொடுப்பினை அவ்வளவு தான்!
    எல்லா பழைய படங்களும் கர்ணன் போல் அமைந்து விடாது என்பதும் உண்மையே! ஆனாலும் கட்டபொம்மனை கர்ணன் போன்று எந்த குறையுமின்றி
    வெளியிட்டிருந்தால் நிச்சயமாக நாம் சந்தோச படும்படியான பெரிய வெற்றியை பெற்றிருக்கும்! திருச்சி மதுரை கோவை சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நல்ல திரைஅரங்குகள் அமைய நம் ரசிகர்கள் பெரும் முயற்சி செய்து நல்லபடியாகவும் அமைந்தது! படத்தை வெளியிட்ட சாய்கணேஷ் films
    திரு முரளி சிவாஜி ரசிகரும் கூட! nsc area அவர் தான் ரிலீஸ் செய்தார் ! கடலூர் , பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் கூட படத்தை வெளியிட
    துப்பில்லை ! இப்படி பட்டவர்களிடம் மாட்டிகொண்டு ஆங்கிலேயர்களிடம் பட்ட கஷ்டங்களை விட அதிகமான சிரமங்களை கட்டபொம்மன் அனுபவித்தார்!
    ரசிகர்கள் எவ்வளவு தான் செய்ய முடியும் ? எது எப்படி இருந்தாலும் பாசமலர் தவிர மற்ற நம் படங்கள் லாபத்தை கொடுத்தன என்பது மறுக்க முடியாத
    உண்மை! பாசமலர் சென்னை கோவை தவிர மற்ற எல்லா நகரங்களிலும் மோசமான பழைய திரைஅரங்குகளில் தான் வெளியிடபட்டது! தோல்விக்கு
    அதுவும் முக்கியமான காரணம் ! சென்னையில் கட்டபொம்மனுக்கு நல்ல போஸ்டர்ஸ் விளம்பரம் செய்தால் இன்னும் நன்றாக போகும்! ஆனால் நடப்பது
    உங்களுக்கே தெரியும்! நாம் நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை!
    நன்றி !

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •