-
24th October 2015, 09:20 AM
#1011
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 27: காதலர்களின் இசைவழித் துணை!
சிறிய படங்கள், பெரிய படங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்கள், புதுமுகங்கள் நடித்தவை என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், தான் இசையமைத்த எல்லா படங்களுக்கும் அற்புதமான பாடல்களை வாரி வழங்கியவர் இளையராஜா. அவரே தயாரித்த படத்தில் பாடல்களின் இனிமைக்குக் கேட்கவும் வேண்டுமா? ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இன்னிசை.
பிற்காலத்தில் பார்த்திபனின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் மூலம் அறியப்பட்ட அஸ்வினியும் புதுமுக நடிகரும் நடித்த இந்தப் படத்துக்குக் கதை வசனம் வைரமுத்து. இயக்கம் கோகுல கிருஷ்ணன். பல காரணங்களால் தோல்வியடைந்த இப்படம், இன்றும் அதன் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகிறது.
எண்பதுகளில் இளம் பிராயத்தைக் கடந்து வந்தவர்களை, உருவமற்ற ஆன்மா போல் பற்றிக்கொண்டுவிட்ட பாடல் ‘ஒரு கிளி உருகுது’. எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா இணைந்து பாடிய இப்பாடல், நாயகன் மற்றும் நாயகியின் இளம் பிராயத்தைக் காட்டும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல். கள்ளமற்ற பிஞ்சு உள்ளங்களுக்கு இடையே துளிர்க்கும் அன்பின் பாடல். அடர்ந்த மரங்களின் இடைவெளி வழியே பரவும் தென்றலின் குளுமையுடன் ஒலிக்கும் புல்லாங்குழலுடன் பாடல் தொடங்கும்.
கிளிகளையும் மைனாவையும் பற்றிப் பாடும் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது குயில்தான். குறிப்பாக முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழலும், அதைப் பிரதியெடுக்கும் குரலில் ஜானகியும், ஷைலஜாவும் பாடும் ‘குக்கூ… குகுகூ’ எனும் ஹம்மிங்கும் ஏதோ ஒரு நதிக்கரையின் மரக்கிளைகளில் அமர்ந்து பாடும் குயிலைக் காட்சிப்படுத்தும். இரண்டாவது நிரவல் இசையில் அன்பின் நெகிழ்வை உணர்த்தும் சாரங்கி இசையை வழியவிட்டிருப்பார் இளையராஜா.
பிள்ளைப் பிராயத்துப் பாடல் என்பதால், ஜானகி, ஷைலஜாவின் குரல்களிலும் குழந்தமையின் குதூகலம் தொனிக்கும். இப்பாடலின் இன்னொரு வடிவத்தை எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘தளிருக்கும் மலருக்கும் காதல்… தனிமையில் சிறு சிறு ஊடல்’ எனும் வரிகளில் எஸ்.பி.பி.யின் குரலில் தொனிக்கும் பாந்தம் ஆத்மார்த்தமானது.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘ஓ வெண்ணிலாவே… வா ஓடி வா’ பாடலை எஸ்.பி.பி. - ஜானகி ஜோடி பாடியிருக்கும். காதலுக்கு ஏற்படும் தடையால் மனமுடைந்து நிற்கும் நாயகனையும் நாயகியையும் ஆற்றுப்படுத்தும் கனவுப் பாடல் இது. டூயட் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் இனம்புரியாத வலியை உணர முடியும். இந்தப் பாடலையும் தொடங்கி வைப்பவர் ஷைலஜாதான். ‘ஆனந்த கும்மியடி… வானமெல்லாம் கேட்கட்டும்’ எனும் தொகையறாவுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டமான தாளமும், நெகிழ்வூட்டும் ஷெனாயும் சேர்ந்து ஒலிக்கும்.
தற்காலிகச் சந்தோஷ மனநிலையில் திளைக்கும் காதலர்களின் உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஷெனாய், கிட்டார் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, ரணங்களை வருடும் மயிலிறகின் மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். வருத்தமான மனநிலையில் இப்பாடலைக் கேட்கும்போது இந்த ஒற்றைக் கணத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை. இரண்டாவது சரணத்தில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை அற்றுவிட்டதுபோன்ற அழுகைக் குரலில் ‘இனிமேல் பிறவி வாராது’ என்று பாடுவார் ஜானகி.
அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘காதல் மாலை சூடும் வேளை… அழுகை ஏனோ, கூடாது’ என்று எஸ்.பி.பி. பாடுவார். காதலனின் ஆறுதல் வார்த்தைக்காக அழுகையை அடக்கிக்கொண்டாலும், ஆற்றாமையில் தவிக்கும் மனதின் தேம்பும் குரலில், ‘நிலவே நீயும் தூங்காதே…’ என்பார் ஜானகி. எழுதப்பட்ட பாடல் வரிகளை இசையுடன் பாடுவது மட்டும் பாடகர்களின் பணியல்ல; கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் கலை அது என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்திருப்பார் ஜானகி. இசை ரசிகர்களால் அவர் ஆராதிக்கப்படுவதன் முக்கியக் காரணம் ஆத்மார்த்தமான பாடும் முறைதான்.
குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட உலகில் பயணம் செய்யும் உணர்வைத் தரும் பாடல் இது. ‘பாடல் நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்’ எனும் வரிகளில் வைரமுத்துவின் குறும்பு மின்னும்.
ஜானகி, எஸ்பிபி பாடும் ‘ஊமை நெஞ்சின் ஓசைகள்’ பாடல் காதலின் பிரிவு தரும் வேதனையைப் பதிவுசெய்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் நிரவல் இசையில் நெகிழ்ந்துருகும் சாரங்கி கண்களை நனைத்துவிடும். எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் ‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில் உண்டு. அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th October 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
-
24th October 2015, 09:23 AM
#1012
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: பூக்கள் தடுமாறுகின்றன
ஒன்றுபோலவே தோன்றினாலும் கற்பனையும் வர்ணனையும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. மலராகவும் நிலவாகவும் பெண்களை உருவகப்படுத்திப் பாடுவது கற்பனை. அந்த மலரும் நிலவும் உன்னை விட மேலானது அல்ல. அதை விட நீ அழகானவள். சிறந்தவள் என்று பாடுவது வர்ணனை. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சூழலில் தன் காதலியை வர்ணிக்கும் இந்தி, தமிழ்ப் பார்வைகளைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம். பூல் பனே அங்காரே (பூ ஒன்று புயலானது)
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி. பாடியவர்: முகேஷ்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி.
பாடல்:
சாந்த் ஆஹே பரேங்கே
பூல் தாம்லேங்கே
ஹுஸ்னிக்கி பாத் சலேதோ
சப் ஆப் கி நாம் லேங்கே
பொருள்:
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர்
கண்ணே உன் முக அழகு
காலையில் தோன்றும் கதிரொளி
எங்கு நீ இல்லையோ அங்கெல்லாம்
தங்குவது காரிருள் மட்டுமே
எப்படி பிறகு நீ இல்லாத பிரிவு
உன் நினைவைப் பற்றிக் களங்கம் கூறும்
அரும்பை விட மென்மையான் கண்கள்
விரும்புகின்ற கற்கண்டு போல பேச்சு
கங்கை நதி தீரம் உன் கன்னங்கள்
மங்கையின் கூந்தல் சொர்க்கத்தின் பாதை
தேவதைகள் உன் பொருட்டுத் தம் தலையில்
பாவத்தின் பழியைப் பரிசாய் ஏற்கும்
இனிய தென்றலும் வீசாமல் இராது
இடிக்கும் மேகமும் பேசாமல் இராது
நேர்த்தியான உன் உள்ளம் கண்டு
சாத்தியமாக்குவான் இறைவன் அப்போழ்தில்
பாறைகள் அதனால் மென் நரம்புகள் ஆகும்
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர் .
இதே அளவு மென்மையான ஏக்கத்தைத் தமிழுக்கே உரிய நடையில் வெளிப்படுத்துகிறது தமிழ்ப் பாடல். இந்திப் பாடல் காதலியின் அழகைக் கண்டு பிரமித்துப்போன பாவனையில் அமைந்திருக்க, தமிழ்ப் பாடலோ காதலியின் அழகைக் கண்டு உற்சாகத்தில் துள்ளுகிறது. இரண்டு பாடல்களுமே இயற்கையின் அழகைவிடவும் தன் காதலியின் அழகை மேலாகச் சொல்கின்றன. “உன் அழகைப் பார்த்து நிலவு பெருமூச்சு விடுகிறது, பூக்கள் தடுமாறுகின்றன” என்று ஒரு காதலன் சொல்ல, “உன்னுடைய குளிர்ச்சி நிலவுக்கு இல்லை, நீ சிந்தும் ஒளியை அந்த மலர் சிந்தவில்லை” என்று இன்னொரு காதலன் உருகுகிறான்.
படம்: தெய்வத் தாய். இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
பாடல்: வாலி. பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நான் இல்லை
நானில்லாமல் அவள் இல்லை.....
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சைச் சேர்த்தாள்
தீயோடு பஞ்சைச் சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போல் அவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னைச் சேர்த்தாள்
தன்னோடு என்னைச் சேர்த்தாள் ....
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
24th October 2015, 09:29 AM
#1013
Senior Member
Senior Hubber
Raghav ji saronna enakku pidikkumnu directaaa sollalame
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 10:19 AM
#1014
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th October 2015, 10:32 AM
#1015
Senior Member
Senior Hubber
indran chandran songs vaali .. nooru nooru & kadhal ragamum
-
24th October 2015, 10:54 AM
#1016
Senior Member
Senior Hubber
தை பிறந்தால் வழி பிறக்கும் தெலுங்கு வடிவம்
மாதவபெத்தி சத்யம் மற்றும் இசையரசி
-
24th October 2015, 10:54 AM
#1017
Senior Member
Senior Hubber
ஆகாயம் கொண்டாடும் .. யேசுதாஸ் இசையரசி குரல்களில் நல்ல பாடல்
இசை இளையகங்கை (இளையராஜா அல்ல)
-
24th October 2015, 10:57 AM
#1018
Senior Member
Senior Hubber
//cika tanku tanku .. ippadi oru varnanai enakka enakke enakka// You deserve more than this rajesh.
//சின்னா!
இது யாராக்கும்?//
//வாசு சார்
சின்னாவின் தலையை ரங்கராட்டினம் போல சுற்ற வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே..//
வாசு, ராகவேந்தர்..
கன்ன மிளைத்திருக்க கண்களிலோ மின்னலென
வண்ணப் படமிலையே வாகாக – எண்ணத்தில்
மிஞ்சி மலர்ந்தென்றும் மேனி சிலிர்க்கவைக்கும்
மஞ்சுளா என்றவொரு மான்…
ஹி ஹி..அப்படின்னு வாசு சொல்வார்.. ஆன்ஸர் கரீட்டா..
செந்தில்வேல் … நூறு நூறு முத்தம் கொடுத்தாயே ஹொய்யன்ன ஹொய்யன்னா (ஒய்னு கேக்காம ஹொய்னு கன்னடால்ல கேக்கறாங்களோ) பாட்டுக்கு நன்றி.. ஹச்சோ.. கமலோட இளமைக்குறும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்..கொய்ங்க் கொய்ங்க்னு மேலேற்றப்பார்க்க விஜயசாந்தி அம்மணி நாசூக்காய் விலக்குவது…ம்ம்..அப்புறம் அந்த ஜெயலலிதா என்று இன்னொரு அம்மணி உண்டு படத்துல இல்லியோ..
நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்கு வாட்ச்சு.. இந்த வரி வராம.. நூர்ஜஹான்னு ஒரு பாட்டுல வரி வருமேன்னு மனசுக்குள்ள குடைந்து கொண்டிருந்தேன்..சமர்த்தாய் அதைச் சொல்லிவிட்டீர்கள் செந்தில்வேல் தாங்க்ஸ்..
//சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே// ராகவேந்தர் சார்..யெஸ் கேட்டிருக்கோம்..பட் யூ டோண்ட் பிலிவ் இட்.. இதே பாட்டை ராஜேஷீக்கு த் தரலாம்னு சில நாள் முன்பு எடுத்துப் பார்த்தேன்..பட் கொஞ்சம் சர்ரூக்கு இளமை கம்மியா எனக்குப்பட்டதால விட்டுப்புட்டேன்.. நீங்க கொடுத்துட்டீங்க.. (ராஜேஷ் ஹாப்பி அண்ணாச்சி!)
வாசுவிற்காக..
போட்டாச் பாட் ஒண்ணு..
பார்த்தாலும் பார்த்தேன் நான் உம்மைப்போலப் பார்க்கலை
அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் இன்னும் சாப்பிடலை.. என்ன பண்ணலாம்..கமல் வழியை ஃபாலோ பண்ணலாம்..
பசி எடுக்கற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்.. பட்டாம் பூச்சி..கமல் ஜெய்சித்ரா..எஸ்பிபி வர்றச்சே நீங்க பட்டாம்பூச்சி படத்தப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதுங்க..இப்ப நான் தர்றேன் உங்களுக்கு பரிசாக..வாசு..
வரிகள் புலமைப் பித்தனாம்..இது ரொம்ப நாள் முன்னாலேயே கேட்டு பாடல் வரிகளை க் கேட்டு டைப்பண்ணி வச்சுருந்தேன் (புலமைப் பித்தன் இல்லாமலும் இருக்கலாம்..(இப்போதே சேஃபா சொல்லி வச்சுக்கறது நல்லது)
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேக்கனும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
இள ராஜாத்தி புது ரோஜாப்பூ இதைத் தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
கன்னப்பழம் இது தின்னத்தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும் ரகசியம் காட்டித்தரலாமோ
கண்டவர் கண்படும் முன்னாலே என் கைப்பட ஆறிடும் தன்னாலே
காலநேரம் பார்க்காம மேளச்சத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் பெண்னானது
நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் உந்தன் முன்பே கொஞ்சம் போராடவா
இன்றொரு பாதி நாளை பாதி
பாதியில் நில்லாது வாலிப வேகம்
ஹோப் யூ ஆல் வில் லைக் த ஸாங்..
பின்ன வாரேன்
**
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
24th October 2015, 10:58 AM
#1019
Senior Member
Senior Hubber
வாசு எல்லார்க்கும் சேர்த்து அலசி ஹோம் வொர்க் செய்யறச்சே சைலண்ட்டா கமல் விஜ்சாந்த் பாட் போட்டுட்டேளே.. படிச்சுட்டு வாரேன்..
-
24th October 2015, 10:59 AM
#1020
Senior Member
Senior Hubber
சில படங்கள் பெரிய இயக்குனரே இருந்தாலும் மொக்கையாக அமைந்து விடும்
அப்படி ஸ்ரீதரே இயக்கிய தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை ஆனால் பாடல்கள் அருமையோ அருமை
அப்படி மதுரை வானொலி அடிக்கடி ஒலிபரப்பியே எனக்கு பிடிக்கவைத்த பாடல்
மன்னவனே மன்னவனே
பாலு ஜானகி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks