-
26th October 2015, 09:16 PM
#1101
Senior Member
Senior Hubber
ராணி பாடல்கள் என யோசித்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத் தான் எனச் சொல்லவேண்டும்..
ஹப்புறம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்..
சீட்டுக்கட்டு ராஜா ஓ இதில் ராணியில்லியோ.. ராஜாராணி ஜாக்கி வாழ்வில் என்னபாக்கி
ராணி மகாராணி வேகவேகமாகவந்த நாக ரீக ராணி
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுமே நீ கண்ணே என் மனசை விட்டுச் செல்லாதே..
நான்மங்காத்தா ராணி போல வாரேன்
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
சரி லிஸ்ட் தொடரலாம்.. கே. ராணி பாட் கேட்டுக்கிட்டே..
நிலாவிலே ஒய்யாரம் உலாவுதே அனுராகம்..
பெற்ற தாய் படத்திலிருந்து எம். என் நம்பியார், பி.ஷாந்த்தா.. பாடியவர் கே.ராணி ஏ.எம்.ராஜா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015 09:16 PM
# ADS
Circuit advertisement
-
26th October 2015, 09:36 PM
#1102
Senior Member
Senior Hubber
ராணி கானலிஸ்ட் தொடர்கிறது..
மகராஜா மகராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டி ராணி
மகாராஜன் உலகை ஆளுவான் இந்த மகாராணி அவனை ஆளுவாள்
//நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க// அப்ப சோப் இல்லியா..சே அழுக்கே போகாது..
ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும்பொட்டும் அள்ளிக்கட்டி
**
கே.ராணி பற்றி வேம்பார்மணிவண்ணன் என்ன சொல்கிறார்..
///இன்னிசை ராணி" பாடகி - கே ராணி--
************************************************** *******
21-7-1951-ல் வெளிவந்த " மோகனசுந்தரம்" படத்தில் பி லீலாவுடன் இணைந்து "ஒயிலான மயிலாட்டம்" என்கிற பாடலை பாடி அறிமுகமானார் கே ராணி... ஆனால் அதே வருடம் (29-10-1951) சிங்காரி படத்தில் எஸ் வி வெங்கட்ராமன் இசையில் கே ஹெச் ரெட்டியுடன் இணைந்து அவர் பாடிய தஞ்சை ராமய்யா தாசின் " ஒரு ஜான் வயிறே இல்லாட்டா" பாடல் கே ராணிக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது ... அதே படத்தில் இன்னொரு பாடல் "கோணாத மரத்தினிலே" - பாடல் தஞ்சை ராமையாதாஸ் - இணைந்து பாடியவர் கே ஹெச் ரெட்டி ...
1952-ல் டி எம் எஸ் சுடன் அவர் இணைந்து பாடிய "கல்யாணி" படத்தில் இடம் பெற்ற " இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே" பாடல் தமிழ் திரை உலகின் சிறந்த பாடல்களில் ஒன்றாய் பதிவாகியது... "தர்மதேவதா" 1952-ல் ராமசந்திரனுடன் அவர் இணைந்து பாடிய " ஜோரான மின்னல் போலே" பாடலும் புகழ் பெற்றது...
தொடர்ந்து 1953-ல் சி ஆர் சுப்பாராமன் இசையில் வெளிவந்த "தேவதாஸ்" பாடல்கள் - "எல்லாம் மாயை தானா" , "உறவும் இல்லை பகையும் இல்லை" இரண்டும் தேவ கானமாய் ஒலித்தன.. இதே ஆண்டு "திரும்பிப்பார் படத்தில் ஏ எம் ராஜாவுடன் இணைந்து "கன்னியரின் வெள்ளை மனம் போல்"- "சண்டிராணி" படத்தில் தனியாக "வாராமலே வந்த நாளிதே" பாடல்களைப் பாடினார் ...
பி சுசீலா அறிமுகமாகிய "பெற்றதாய்" (1953) படத்தில் இரண்டு பாடல்கள் கே ராணிக்கு... "மாமயில் போல் ஆடி"( "நிலாவிலே ஒய்யாரம்" ... இரண்டுமே மெய்மறக்க செய்யும் பாடல்கள்...
சுசீலாவிற்கு இணையான இனிய குரல் கொண்ட ராணி அவர்களுக்கு பின்னாட்களில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை... இது தமிழ் திரை இசை உலகிற்கு ஒரு இழப்புதான்... பின்னாட்களில் ஒன்றிரண்டு பாடல்களையே அவர் பாடினார்... அதில் குறிப்பிடத்தகுந்தவை... அழகிய தாமரை கண்ணா( -(குழந்தைகள் கண்ட குடியரசு 1960) இன்பம் கொண்டாடும் மாலை -(இந்திரா என் செல்வம் 1962),
"இன்னிசை ராணி" பட்டம் கே ராணிக்கு "கர்மவீரர்" காமராஜர் அளித்தது... இதிலிருந்தே ராணி அவர்களின் குரல் இனிமையை நாம் உணரலாம்... //
**
ஸோ கே. ராணியைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டதால மகுடம்காத்த மஙகையில் டி.ஏ. மோத்தி,ஜிக்கி டூயட் பாக்கலாம் கேக்கலாம்
ஆஹா என்னைப் பார் மன்னா - அந்தக்காலத்திலேயே அழகா சுடிதார் அண்ட் பெண்டண்ட்.. வெரி நைஸ் இல்லியோ.. யாராக்கும் இருவரும்..(திட்டினாலும் விளக்கம் கிடைக்குமே)
இருந்தாலும்கே.ராணியின் ஒயிலான மயிலாட்டம் தான் முதல் பாடலாமே..
குமாரி கமலாவின் ஒயிலான மயிலாட்டம்..
Last edited by chinnakkannan; 26th October 2015 at 09:38 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 09:50 PM
#1103
Senior Member
Senior Hubber
துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம்
ஆனந்தமே!ஆனந்தமே!
ம்ம்ம்..
பாலசரஸ்வதி பாடல் லில்லி ராஜ சுலோச்சனா..ஸேட் டி.எஸ். பாலையா நடித்த படம் மர்ம வீரன்.. பாடல் எழுதியவர் தான் இனிய சர்ப்ரைஸ்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 10:03 PM
#1104
Junior Member
Diamond Hubber
ராணி பாடல்கள்...
ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டாள்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
எ.ரா.பொ.மே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th October 2015, 11:59 PM
#1105
Senior Member
Seasoned Hubber
ராணி மகா ராணி .... அவங்க பாட்டு மயம் போநீ...
என்று கூறாமல் கூறுகிறார்களோ நண்பர்கள்..
இதோ ஒரு ராணி இறுமாப்புடன் கூறுகிறார்...
இவர் ஆடாத ஆட்டமில்லையாம், பாக்காத உலகமில்லையாம்,,கேக்காத சேதியில்லையாம்...
சி.க. சார் இந்தப் பாட்டு உங்களுக்காக... பக்கெட்டாக தண்ணி இறைத்து துள்ளி விளையாடுங்கள்...
மெல்லிசை மன்னரின் தூள் துள்ளல் பாடல்...
ஆயிரம் ஜென்மங்கள் படத்திலிருந்து..
ஆஹா.. இந்தக் குரலுக்கு இந்த உலகமே ஆடுகிறதே,,, இந்தக் குரலுடன் இந்த உலகமே பாடுகிறதே...
இசையரசி இருக்க நமக்கென்ன மனக்கவலை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th October 2015, 01:28 AM
#1106
Senior Member
Veteran Hubber
Bhakthi - munnam avanudaiya - Parthiban Kanavu (1960)
For ChinnakkaNNan and other kumari kamala fans !
From Parthiban Kanavu(1960)
munnam avanudaiya naamam kEttaaL........
The singer is MLV. It is appar thevaram !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th October 2015, 07:21 AM
#1107
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 07:24 AM
#1108
Senior Member
Diamond Hubber
நீ ஒரு மகராணி
நான் ஒரு கலைஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 07:25 AM
#1109
Senior Member
Senior Hubber
ஹ்ம்ம்
சின்னாவிற்கு கலக்க கற்றுக்கொடுக்கனுமா என்ன
ராணி ராணின்னு ஒரே புலம்பல்
போதாதற்கு நீர் வேற எடுத்து கொடுக்கிறீர்.... என்ன நடக்க போகுதோ??
சரி சரி ராணி மகாராணி போட்டாயிற்றா...
மலை ராணி முந்தானை
ஒரு ராஜா ராணியிடம்
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகுமே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th October 2015, 07:31 AM
#1110
Senior Member
Diamond Hubber
ராஜா வாடா தங்கக் கட்டி
ராணி வாடி சிங்கக்குட்டி
பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி
பொங்கும் அழகு பவழப்பெட்டி
சின்னா!
அதியற்புதமான பாடல். ஜானகி அருமையாகப் பாடியிருப்பார். (அந்த சிரிப்புதான் கொஞ்சம் இடிக்கும். 'உம்மா'வும்) ஜென்டில் மேனும், சுமலதாவும் குழந்தைகளுடன். ஜெயச்சந்திரன் அசத்தல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks