Page 215 of 337 FirstFirst ... 115165205213214215216217225265315 ... LastLast
Results 2,141 to 2,150 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2141
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா..விக்கல் பி.பானுமதியா..எனக்குத் தெரியாதே..தாங்க்ஸ்

    வாஸ்ஸூ.. நீராடும் கண்கள் இங்கே இந்தப் பாட் படத்துல கட்டா..எனக்கென்னமோ ரேடியோல மட்டும் கிட்டத் தட்ட போன ஜன்மத்தில கேட்ட மாரி ஃபீலிங்க்.. சீரியஸா.. ஆனா கேட்டிருக்கேன்.. பார்த்ததில்லை என நினைக்கிறேன்... ரீமிக்ஸா இருந்தாலும் எடுத்துச் சொல்லி போட்டட்தற்கு ஒரு ஓ..

    கொஞ்சூண்டு வாட்டர்லயும் குளிக்கலாம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது..அதுக்கு இன்னொரு ஓ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2142
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பெட்ரோ மாக்ஸ் லைட்ட்டே தான் வேணும் என விடாப்பிடியாக அபூர்வ பாடல்களை தேர்வு செய்து இடும் ராகவேந்தர் வாஸ்ஸு மது ராகதேவனுக்காக இன்று மதுண்ணா புண்ணியத்தில் நான் கேட்ட ஒரு சுவையான டூயட் பாடலின் இனிமைத்தன்மையை உங்கள் காதுகளின் ப்ளஸ் கண்களின் முன்னும் சமர்ப்பிக்க்ன்றேன் (ஹப்பா எவ்ளோ நீளமான வாக்கியம் )


  4. Likes Russellmai liked this post
  5. #2143
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பி.சுசீலாம்மாவ க் கொண்டாடறச்சே இந்தப் பாட்டுப் போடலைன்னா தெய்வ குத்தமாகிடும்..அதுக்காகச் சும்மா போடமுடியுமா..

    முன்னால எழுதின ரைட் அப் போட்டு அப்புறம் பாட்..ஓகேயா (வேற வழியில்லைங்கறீங்களா )

    *


    சிரிப்பு பாதி அழுகை பாதி
    அத்தியாயம் எட்டின் இறுதி….
    *
    அழுகை எனப்படுவது ஏதென்றால் நெஞ்சம்
    பழுதான போதில் வரும்
    *
    நெஞ்சம் எப்போது பழுது வரும்… துன்பத்தில்.. மீளாத் துயரில்…அப்போது என்னாகும்..கண்ணில் ஒரு காலத்தில் வைகையில் வந்த வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வரும்…
    *
    ஆனால் அப்படி வெள்ளமாகப் பெருக்காமல் ஆச்சர்யத்தில், அன்பை உணர்ந்த தவிப்பில் வரும் கண்ணீர் எப்படி இருக்கும்..
    *
    மெல்லச் சிரிப்பு வரும் – பின்னே
    மேவி விழிகளினிடை
    துள்ளித் துளிர்த்திடுமே ஒரு
    சின்னத் துளியாக
    *
    அப்படி ஒரு துளி சொட்டுகண்ணீர் விடும் ந.தியின் இந்தக் காட்சி எனக்கு வெகுவாகப் பிடிக்கும்..படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னினாலும் ந.தி பாதிச் சந்திர வேஷம் ஏற்றிருப்பார்..(கண்டுபிடிச்சுட்டீங்களா)
    சிரிப்பு பாதி அழுகை பாதி 9
    மிகப் பெரிய இடைவேளைக்கப்புறம் தொடர்கிறது..!
    *
    ந.தியின் மிகப் பிடித்த பாடலொன்றில் இருக்கும் வரி..
    *
    கண்களின் தண்டனை காட்சிவழி
    காட்சியின் தண்டனை காதல் வழி
    காதலின் தண்டனை கடவுள் வழி
    கடவுளைத் தண்டிக்க என்ன வழி எனக் கேட்டிருப்பார் கண்ணதாசனின் பாடல் வாயிலாக.. ஸோ இன்பம் தருவதும் காதல்..துன்பம் தருவதும் காதல் (எவ்ளோ பெரிய கண்டுபிடிப்புடா – மன்ச்சு ஷ்ஷ்)
    *
    உலகத்தில் இதைப்பற்றி பேசாதவர்கள் வெகு சொற்பமே
    *
    மின்னலது ஊடுருவி மென்நெஞ்சில் பாய்ந்ததுபோல்
    கன்னமிடும் காதலும் காண்..
    *
    யெஸ்.. காதல்..விதைவிட்டுச் சாகுபடி செய்யவேண்டிய அவசியமே இல்லை.. படக்கென ஒரு பார்வை, ஒரு குறுஞ்சிரிப்பு, ஒரு உரையாடல், ஒரு – வாகான நுதலில் சுருண்டு பெருமையுடன் புன்சிரிக்கும் சிறு சுருள் முடி அதன் கீழ் குறுகுறு கண்கள் எனப் பார்க்கையில், ஒரு துளி கண்ணீர், ஒரு ஒயில் நடை, ஒரு வீரச் செயல் ஆணிற்கு, ஒரு கவிதை.. இன்னும்..என்னவிதத்தில் வரும் என்றும் சொல்ல முடியாது..
    *
    ந.தியின் இந்தப் படத்தில் அவர் முகம்மதிய இளைஞர்..சூழலால்.. மென்மை மனம்..அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நெஞ்சம்..
    *
    அவர் சைக்கிளின் மீதும் மனதின் மீதும் மோதும் ஹீரோயின் ஒரு கிறிஸ்தவப் பெண்.. அந்த இளைஞரின் அமைதிப் பார்வை, அலட்டலில்லாத போக்கு, நாகரீகமான பேச்சு, மற்றவருக்கு உதவும் தன்மை என எல்லாவித நல்ல குணங்களும் பிடித்துப் போய்விட..மே ஐ கமின் என்று கேட்டுக் கொள்ளாமலேயே அவளுக்கு அந்த இளைஞன் மேல் காதல் வந்து விடுகிறது..
    *
    அந்த இளைஞன் யெஸ் ரஹீம் தான்..அவருக்கும் காதல் வந்துவிடுகிறது.
    *
    மனதிலோ..
    இரவேறுது நிலவேறுது இளமையினி விழித்தே
    புறந்தள்ளிடும் சலனந்தனை பொறுக்காமலே அவளை
    அறந்தானென அழகாய்ப்பல விதமாய்ச்சொலி அணைத்தே
    கரம்பிடித்திடும் உணர்வைவெகு கனிவாய்த்தொடுத் திடுமே
    என்றெல்லாம் எண்ணம் பலவாறாய்த் தோன்றினாலும்..முடியவில்லையே..
    *
    காரணம்..ஜாதி.. நான் முஸ்லிம்..அவள் கிருஸ்தவப் பெண்.. சமூகம் ஏற்குமா..தவிக்கிறார் ரஹீன்..
    *
    அவளும் அவரை நாடி வருகிறாள்..வெகு அழகாய் வெகு இயல்பாய்ப் வெகு இனிமையாய்ப் பாடலும் வருகிறது
    *
    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது..
    பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது..
    *
    காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே
    கண்கள் பேசும் பாஷையிலே பேதமில்லையே
    *
    கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
    பாதிக் கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
    வட்ட நிலா வான்வெளியில் காவியம் பாடும்
    கொண்ட பள்ளியறை ப் பெண்மனதில் போர்க்களமாகும்
    *
    அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..
    *
    ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்..
    *
    கண்ணோரம் ஈரமின்று காயலாச்சே
    ..கன்னியவள் எண்ணமதும் தெரிய லாச்சே
    வண்ணமகள் சொல்லிவிட்டாள் நெஞ்சத் தீயை
    ..வாய்த்திடுமா அவள்கரத்தைப் பற்றும் நேரம்
    பெண்ணவளே சொன்னபின்னும் தவிக்கின் றேனே
    ..பேதமையா பின்விளைவா என்றே உள்ளம்
    எண்ணியெண்ணிப் புலம்புவதை எங்கே சொல்ல
    ..ஏந்திழைக்கு எப்படித்தான் சொல்வேன் மெல்ல
    *
    ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
    ..*
    காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
    *
    ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..



  6. Thanks adiram, vasudevan31355, Russellmai thanked for this post
    Likes adiram, vasudevan31355, Russellmai liked this post
  7. #2144
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    கொஞ்சூண்டு வாட்டர்லயும் குளிக்கலாம்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுது..அதுக்கு இன்னொரு ஓ
    ம்ஹூம்...வாய்ப்பே இல்லை... திருந்த.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes chinnakkannan liked this post
  9. #2145
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  10. Thanks vasudevan31355, Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2146
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  12. Thanks vasudevan31355, Russellmai thanked for this post
    Likes adiram, chinnakkannan, Russellmai liked this post
  13. #2147
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, adiram, chinnakkannan liked this post
  15. #2148
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    சுட்டெரிக்கும் வெயிலில் கோடை மழையாக வந்து குளிர்வித்து எங்களை மகிழ்விக்கும் நெய்வேலி வாசு சார் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

    வேலைப்பளுவில் இருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். வரும்போதே அபூர்வப்பாடலான அதே சமயம் நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட "மயக்கத்தை தந்த, தந்துகொண்டிருக்கின்ற, இனிமேலும் தரப்போகிற" பாடலோடு வந்து அசத்தி விட்டீர்கள். நன்றி.

    ஒரு அசைன்மெண்ட் கொடுக்கலாமா?. "மயக்கத்தை தந்த" பாடலைப்போலவே முக்தாவின் இன்னொரு படமான தேன்மழையில் இடம்பெற்ற கானக்குயில் சுசீலாம்மாவின் அபூர்வமான, அதே சமயம் அழகான பாடலான "நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல, நானும் வருவேன் மீதியைச் சொல்ல" என்ற பாடலை தங்கள் கைவண்ணத்தில் கண்டு பரவசமடைய விரும்புகிறோம்.

    தங்கள் வசதியைப்பொருத்து செய்யுங்கள். அவசரமில்லை.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #2149
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    // அவள் பாடுவதற்கு ம்ம் என்று ஆமோதிக்கிறார் ரஹீம்..பாடல் இறுதியில் இருவருக்குமே இது கையறு நிலை…சமூகம்..என்றெல்லாம் தோன்றிவிட..

    ரஹீமின் விரித்த கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்குகிறது அந்தத் தாமரை.. ரஹீமின் ஆழ்ந்த கண்களுக்குள் ஒரு வித வெறுமை படர்ந்து உணர்வுகளின் கொந்தளிப்பால் ஒரு துளி கண்ணோரம் வந்து பொங்கி..அவள் தலையில் விழுகிறது..வாவ்

    ம்ம் ரஹீமின் உள்ளத்தில் புயல் அடிக்கிறது..
    ..*
    காட்சியில் யாரென்று தெரிந்திருக்குமே.. ந.தி, தேவிகா தான்.. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத சீரிய காதலுக்கான காட்சி என்பேன்.. படம் பாவ மன்னிப்பு..
    *
    ம்ம் ஒரு துளிக் கண்ணீர் சொல்லிவிடும் பல பக்கங்களால் சொல்ல இயலாததை..
    //

    சின்னக்கண்ணன் சார்,

    அற்புதமான ஒரு கட்டத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். என்ன ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். இந்தப்பாடல் துவங்கும்போதெல்லாம் நான் தீர்க்கமாக ரசித்தாலும், ஆவலோடு காத்திருப்பது இந்த இறுதிக் கட்டத்துக்குத்தான் குறைந்த வேகத்தில் பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் பாட, மத எல்லைகளைக் கடக்கமுடியாமல் இரு உள்ளங்களின் கொந்தளிப்பில் நம்மையெல்லாம் அழ வைத்து விடுவார்கள்.

    ஆனால் முரசு சேனலின் இப்பாடலை ஒளிபரப்பும்போது, 'தூக்கம் வராது தூக்கம் வராது தூக்கம் வராது' என்ற வரிகளோடு கட் பண்ணிவிடுவார்கள். ரசனைகெட்ட ஜென்மங்கள். பாடலின் ஜீவனே இந்த இறுதிக் கட்டம்தானே. அந்த சேனலின் பாடல் தொகுப்பாளர் ஒவ்வொரு முறையும் என் சாபத்துக்கு ஆளாகிறார்.

  18. Thanks chinnakkannan thanked for this post
  19. #2150
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மது அண்ணாவிற்கு பாட்டு கொடுத்து நாளாச்சு....டெலிபோன் பண்ணியும் நாளாச்சு.... சரி! டெலிபோன் பெருமையை பேபி இந்திரா சௌகாருக்கு விளக்க கிடச்சுது அபூர்வ பாட்டு 'ஸ்கூல் மாஸ்டர்' பேராசிரியர் மூலமாக.
    வாசு ஜி... ஹி ஹி.. பேராசிரியருக்கு இந்தப் பாடலுக்கான விண்ணப்பம் இட்டதே நாந்தானுங்க...

  20. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •