Page 251 of 333 FirstFirst ... 151201241249250251252253261301 ... LastLast
Results 2,501 to 2,510 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - yezhumalai irukka

    From thirumalai dheivam (1973)

    yezhumalai irukka enakkenna manak kavalai.........




    I still remember a concert by K.B.SundarambaL I attended in 1954 in Mayavaram (Mayiladuthurai). It lasted nearly six hours. Compare that to two hour cncerts these days !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி... ஒரு கௌபாய் டிரஸ், தொப்பி வாங்கிக்கிட்டு குதிரை சவாரியும் கத்துகிட்டால்... கர்ணன் இயக்கிய பட ஹீரோவைப் போல் டகடக் டகடக்னு கிராண்ட் கான்யானை வலம் வரலாம்.... ( ராட்சசி குரலில் பாடிக்கிட்டு ஆட யாரும் வரமாட்டாங்க ... ஆமாம் சொல்லிட்டேன் )

  5. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  6. #3
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    மதுரை, தஞ்சை ஊர் பாடல்கள் ஓய்ந்தன.

    இப்போது கொஞ்சம் வேறு எடுக்கலாம்.

    தமிழ்ப் படங்களில் நாயகனோ, நாயகியோ மனவளர்ச்சி குன்றி குழந்தைகள் போல குறும்புகளும், குழப்பங்களும் செய்ய அவர்களுக்கு ஆதரவாக, அன்பாக இன்னொரு கதாபாத்திரம் இருக்குமல்லவா? அந்த கதாபாத்திரம் இந்த வாலிபக் குழந்தைகள் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவர்கள் மேல் அன்பைப் பொழியும். பாசத்தைப் பிழியும். அப்படிப்பட்ட சில பாடல்களை பார்த்தால் என்ன என்று தோன்றியது.

    முதலில் 'கை கொடுத்த தெய்வம்'.

    குழந்தை போல மனவளர்ச்சி குன்றிய, கள்ளம் கபடம் அறியாத, 'வெடுக் துடுக்' நாயகி சாவித்திரி மேல் ஊர் களங்கப்பழி சுமத்த, அந்தக் குழந்தையைப் பற்றி எல்லாம் அறிந்த 'நடிகர் திலகம்' மனம் ஒடிந்து, அதே சமயம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக குரல் தருவதைப் பாருங்கள்.

    'களங்கம் சொல்பவர்க்கு உள்ளமில்லையோ!
    ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம்
    ஆனாலும் பொய்யென்று நான் சொல்லுவேன்'

    என்று கோபம் தலை உச்சிக்கேற, ஊரார் அவளை 'புரிந்து கொள்ளவில்லையே' என்ற ஆதங்கத்தில் கடிந்து கொள்வதைப் பாருங்கள். வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து, உள்மனதில் ஊராரின் பொய்யுரைகளை நினைத்து நெஞ்சடைத்து, ஆத்திரம் பொங்க, சாவித்திரி குழந்தைக்காக 'பாவிகளா! அப்படியெல்லாம் அந்தப் பெண் மீது அபாண்டப் பழி சுமத்தாதீங்கய்யா... உருப்படவே மாட்டீங்க' என்று உயர்த்திய வேட்டியை கால்களுக்கு மத்தியில் சைட் போஸில் லாவகமாக செருகி, ஆட்காட்டி விரலை உயர்த்தி, அதிலேயே கடுங்கோபத்தைக் காட்டி, அதற்கு மேல் விழி பெருக்கி, கண்களின் உருட்டல்களிலேயே அவள் புனிதமானவள் என்று ஊரார்க்கும், நமக்கும் உணர்த்தி, அந்த வெகுளிப் பெண்ணுக்காக உருகுவதை கண் இமைக்காமல் பாருங்கள்.



    அடுத்து

    'கண்ணன் என்ன சொன்னான்? சிறு பிள்ளையே! கண்ணீர் வர காரணம் ஏன் கொடி முல்லையே?' என்று ஜெயதேவி அழும் 'குமாரி' ஸ்ரீதேவி குழந்தையை மடியில் கிடத்தி, 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்று ஆறுதல் கானம் இசைப்பதை பாருங்கள். பாடலின் பல்லவி வரிகளின் டியூன் இன்னும் என்னை ஆச்சர்யப்படுத்தும். அப்படியே சாதரணமாக ஆரம்பித்து அப்படியே எங்கெங்கோ அந்த பாடலின் டியூன் போகும் போது 'ராஜா'வுக்கு ஓடிச் சென்று ரோஜாச் செண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றும். அப்படியே அதிலிருந்து சில ரோஜாக்களை எடுத்து இசையரசிக்கும் கொடுத்து விடலாம். அற்புதம்.



    அதே 'ச்சுப்பிரமணி' ஸ்ரீதேவிக் குழந்தையை மடியில் கிடத்தி 'மூன்றாம் பிறை' நாயகன் உதடு வெதும்பி 'கண்ணே! கலைமானே!' என்று கண்கள் கலங்க பாடி, தன்னுடைய குருவுக்கு சிஷ்யனாக நடிப்பில் பரிமளிப்பதையும் காணுங்கள்.



    காதலியின் எதிர்பாரா தீ மரணத்தில் அதிர்ச்சிப் பைத்தியமாகி விட்ட இந்த வெகுளியை குணப்படுத்த 'எங்கிருந்தோ வந்த' 'கலைச்செல்வி' அறையிலேயே அடைபட்டுக் கிடக்கும் அந்த அழகு வாலிபனை இயற்கை எழில் சூழும் இடங்களுக்கு இட்டுச் சென்று அவனை குதூகலிக்க வைப்பதைக் காணுங்கள். (பின்னால் சின்னத்தம்பி 'அரண்மனை அன்னக்கிளி'யை எழில் பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று 'போவோமா ஊர்கோலம்' பாடினார்) அவனுக்குப் பக்கத் துணையாய் இருப்பதையும் கவனியுங்கள். இருவரின் 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதம்'தானே!



    'உள்ளத்தில் குழந்தையடி' என்று இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் பாசம் கா(கொ)ட்டும் அண்ணனும் அண்ணியும்.

    'கண்ணுக்கு நீ ஒரு கன்னிப் பொண்ணு...என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு... உண்ணடியோ சோறு உண்ணடியோ...ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ?' என்று தேங்காயும், அண்ணியும் (யார் ஸ்ரீவித்யாதானே?) அன்பொழுக பாடுவதைக் கேளுங்கள். பாடல் வரிகள் அற்புதம். சீர்காழி, வாணி ஜெயராம் காம்பினேஷன் அரிதான தூள். 'இயக்குனர் திலகம்' படம் என்று நினைவு.



    இது கொஞ்சம் வேறு. மனவளர்ச்சி குன்றிய இவன் உருவத்திலே மனிதன் என்றாலும் இவனுக்கு பின்னணியில் ஒலிக்கும் ஜேசுதாஸின் குரலே துணை. சிரிப்பைத்தவிர வேறேதும் அறியா அன்பன். ஆனால் ஒரே முறை அழுதான். 'யாருக்காக அழுதான்'? விம்ம வைக்கும் வித்தியாச நாகேஷ். ஜெயகாந்தன் பட்டறையின் வைரம். மனம் முழுக்க பாரம்.



    இனி நண்பர்கள் வேறு குழந்தைகளைத் தேடித் தரலாம்.
    Last edited by vasudevan31355; 27th April 2016 at 10:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai, madhu liked this post
  8. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் வாசு.. கலக்கல் தான் போங்க உங்க குழந்தை உள்ளம்.. ஹப்புறம் கேட்டுச் சொல்றேன். ஸிமிலர்லி ஐ டிண்ட் ஹியர் த எஸ்பிபி சாங்க் ஆல்ஸோ.. கேட் சொல்றேன்..ம்ம்

    குழந்தை உள்ளம் மனமுதிர்ச்சி அடையாத நபர் என்றெல்லாம் பார்த்தால் இன்னொரு கமல் நினைவுக்கு வருவாரே..

    துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..சிப்பிக் முத்

  9. #5
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
    நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா


  10. Likes Russellmai liked this post
  11. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes chinnakkannan, Russellmai liked this post
  13. #7
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    'குமரி வடிவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
    தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ'

    மார்கண்டேயன் மடியில் மலங்க மலங்க கண்களை உருட்டி விழித்து, குழந்தையாய் சிவாவின் கட்டைவிரலை பிடித்து கடித்து சரிதா செய்த நடிப்பு அக்னி சாகசம்.

    சிவா கொடுத்து வைத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் எல்லாப் படங்களிலும் பெண்களிடம் மாட்டித் திண்டாடுவார். அதுவும் ரெண்டு ரெண்டு.

    Last edited by vasudevan31355; 28th April 2016 at 09:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #8
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    'கேனையிலும் கேனையின்னு கேலியும் செஞ்சாங்க' என்று இந்த அப்பாவி மூர்த்தி (இந்த ஒரு படத்தோட ஆள் காலின்னு நினைக்கிறேன்) ஊரார் கேலியை உதறித் தள்ளி தேவயானியை சந்தோஷப்படுத்துகிறார் ராஜா குரலில்

    'உன் பக்கத்துல ஒரு பூவ வச்சா அந்த பூவும் மயங்கிப் போகும்'

    தேவயானிக்கு பிரில் வைத்த ஜாக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? நிறையப் படங்களில் இப்படி வருவார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai liked this post
  17. #9
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    'பெண்ணின் பெருமை'யை நிலை நாட்ட நடிகையர் திலகம் தோற்றத்தில் வாலிபனாயும், குணத்தில் குழந்தையாகவும் இருக்கும் அரைக்கிறுக்கு கணவன் ஜெமினியை மணந்து, அவன் குணம் தெரிந்து, வெளியே சொல்ல முடியாமல் மனம் புழுங்கி தனக்குத்தானே முதலிரவில் பாடும் பாடல். நடிகையர் திலகம் அந்தப் பட்டத்திற்கு பெருமை சேர்ப்பதை கண் கூடாக இப்பாடலில் காணலாம். முகம் சோக ஜாலங்கள் நிகழ்த்துகிறது. ஜெமினியின் அப்பாவி நடிப்பும் ஜோர்.

    'மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ' அருமையோ அருமை.

    'இதய வானில் ஒளியை வீசும் இன்ப நிலாவே'

    Last edited by vasudevan31355; 28th April 2016 at 09:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai liked this post
  19. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'உள்ளத்தில் குழந்தைகளடி'

    குணாவைப் பற்றி முழுதும் தெரிந்த புரிந்த வரல்ஷ்மியின் ஆறுதல். 'குணா'வைப் பற்றிதான் நம் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அதிக விளக்கம் தேவையில்லை.

    உன்னை நானறிவேன்
    என்னையன்றி யாரறிவார்
    கண்ணில் நீர் வழிந்தால்
    என்னையன்றி யார் துடைப்பார்?



    இதே பாடல் ரேகாவிற்கும் உண்டு.

    Last edited by vasudevan31355; 28th April 2016 at 09:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  20. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •