-
19th November 2016, 08:51 AM
#1
Senior Member
Veteran Hubber
Jugalbandi
From 4 Students
lajjaavathiye ennai asathura rathiye............
From the Malayalam original For the people(2004)
lajjaavathiye...............
From the Telugu remake, Yuvasena
Malleswarive...........
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th November 2016 08:51 AM
# ADS
Circuit advertisement
-
22nd November 2016, 10:34 PM
#2
Senior Member
Veteran Hubber
Balamuralikrishna passed away
May his soul rest in peace.
In his memory here is a song from Kavikkuyil(1977):
chinnakkaNNan azhaikkiraan........
Last edited by rajraj; 22nd November 2016 at 10:39 PM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
28th November 2016, 12:30 PM
#3
Junior Member
Newbie Hubber
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.
அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?
எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.
முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.
அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.
பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.
மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......
ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.
இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th November 2016, 12:31 PM
#4
Junior Member
Newbie Hubber
அக நானூறு என்பது தமிழில் அக நாநூற்றொன்று என்று மாறிய அதிசயம் இதே மாதம் 15 ,53 வருடங்கள் முன் (15.11.1963)நிகழ்ந்தேறியது.மகளிருக்கு காமத்தை வெளியிடும் சுதந்திரம்,உடன் போக்கு என்று இன்று பேசும் பெண் உரிமைகளை சங்க காலத்திலேயே வழங்கிய தமிழ் சமூகமாயிற்றே?
ஒரு பெண்ணே தன்னுடைய விழைவை நாணம் துறந்து வெளியிட்டு ,நாணத்தை அழைப்பின் தூண்டிலாய் மாற்றிய அதிசயம் கண்டோம்.
61 முதல் 65 வரை காதல் ரசாயனத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த ஜோடியின் புணர்ச்சி விழைவு உணர்ச்சி பண் என்றால் நாங்கள் மெய் மட்டுமா மறப்போம்?அப்போது தமிழின் செயற்கை பெருந்திணை காதல் பொய்களையும் சேர்த்தே மறந்து துறந்தோம்.
மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்க (???)விரும்பும் ஏந்திழையாளின் அழைக்கும் விழிகள் தூக்கத்தின் உண்மை அர்த்தத்தை கூறி விடாதா? மறுநாள் எழும் விருப்பம் காலையல்ல?சேவல் குரலுக்கு தடை பின் மறுநாளும் ,மருகி நாட்களாகி விடுமே?இன்பத்தின் கதையை முடிக்காமல்,சேர்ந்தவர் உயிரும் பிரியாமல் இருக்க நாயகி முதல் மாதிரியாக தருவது தன்னுடைய விரல்களை அவன் இதழுக்கு காணிக்கையாக.அவன் அதை மென்மையான முத்தத்தால் அங்கீகரித்தாலும் ,அவனுக்கு புரியாதா அசல்கள் ,முன் இந்த மாதிரி எம்மாத்திரம் என்று?
விழிகள் கலக்கும் போது ,காதலன் கண்கள் காதலை வெளியிட,காதலியோ பொய் நாணத்தால் அதை மேலே இழுக்கும் முயல்வை காட்டுவார்.சிறிதே விலகி ஓடும் காதலி ,அவனால் இழுபட்டு இணைவின் சுகத்தின் எதிர்பார்ப்பை காட்டும் அதிசயம் நாயகியின் பாவத்தால்,கண்களால்,உடல்மொழியால் நமக்கே விளக்கி விடுமே? இரண்டற ஓருயிராக கலக்க விரும்பும் நாயகனுக்கா விளங்காது? இந்த ஓட்டம் இன்ப ஓட்டம் ஆயிற்றே?காமம் என்ற புத்தகத்தின் பக்கங்களை விட முன்னுரை பக்கங்கள் அதிகம் வேண்டும் என காம சாத்திரங்கள் உரைக்கிறதே?
முன்னுரைத்து காதலால் காமம் தூண்டி உயிரை இணைத்து காண வேண்டிய உன்னத விளையாட்டாயிற்றே?
இரவே இரவே விடியாதே ,இன்பத்தின் கதையை முடிக்காதே,சேவல் குரலே கூவாதே ,சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே என்று நாயகி அபிநயத்தால் ஆணையிடும் அழகில் இரவும்,சேவலும் கேட்டு விட்டால் நம் கதி?ஆனால் அந்த அழகுக்கு இரண்டும் இசையும் வாய்ப்பு அதிகமே.
இரண்டு உள்ளங்களும் வதை படும் உருண்டு விளையாடும்,நாயகரும் ஓடியே தொடர்வார்?பின் பேரின்பம் என்பது சும்மாவா கிடைக்கும்? உன்மத்தமான துரத்தல் விளையாடல். (இன்பத்தை துறக்காமல் துய்த்து கொண்டேயிருக்க)
வாயின் சிவப்பு விழியிலே,மலர்கண் வெளுப்பு இதழிலே என்பதற்கு இந்த நாயகி வண்ணங்களின் துணையின்றியே விளக்கமளித்து ,உள்ளத்தில் வண்ணம் கூட்டும் அதிசயத்தை காட்சியாக பாருங்கள்.
கடைசி இதமான அணைப்பில் காதலும் காமமும் இணையும் பாலத்தை கடந்து செல்லும் அழகு.(erotic )
காலடி தடங்கள் மட்டுமா அடையாளம் அழிந்து கலக்கின்றன ?செம்புல பெயனீர் போல அன்புடை உடல்களும் தான் கடந்தனவே? கலந்தனவே???நினைப்பின் தடத்தை விட்டு செல்லும் நம் மனதில் , அகழியில் வீசிய கல் அலைவுகளை விட்டு செல்வது போல.இவ்வளவும் நடப்பது அன்னை இல்லத்திலேயே.
சில பாடல்கள் மட்டுமே காட்சியுடன் ஒன்றி ,திரை காதலர்கள் உண்மையில் வாழ்வில் இணைகிறார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தும். அந்த மாதிரி கே.வீ..எம்மின் இரவின் இன்பத்தை கூட்டும் இசையில், கண்ணதாசனின் காம மையில் தோய்த்த எழுத்தில்,சிவாஜியும்-தேவிகாவும் அரங்கேற்றும் கூடல் நாடகம், காட்சி வடிவில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th November 2016, 12:37 PM
#5
Junior Member
Newbie Hubber
A rare and unique Song by BalaMurali Krishna from SubhaDhinam. Probably first in Reeti Gowlai much ahead and better than chinna kannan. It is originally tuned by T.G.Lingappa but came in the name of K.V.Mahadevan ,MD for Subha Dhinam.
-
30th November 2016, 11:53 PM
#6
Senior Member
Devoted Hubber
கண்ணாம்பாள் ,எம் ஜீ ஆர்,பீ யூ சின்னப்பா
படம் தெரியவில்லை
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th December 2016, 04:42 PM
#7
Senior Member
Senior Hubber
முக நூலில் அன்று எழுதியது :
**
”ஏதோ எனக்குத் தெரிஞ்சதை வாசிச்சேன் பாஸ்கரன்..”
“ம்ம் அதையும் பார்த்தேன் நீ அந்த ராகத்துல ஆரம்பிச்சு நடுல இன்னொரு ராகத்தையும் கலந்தே”
“ஓ சரியாச் சொல்றேளே..உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமா..”
“ம்..கொடு”
“ஆஹா ரொம்ப நல்லா வாசிக்கறீஙக் பாஸ்கரன்..எப்ப கத்துக்கிட்டீஙக..”
“ஒரு வீணைக் கச்சேரிக்குப் போனேன். அங்கே வீணைச்சத்த்துக்கு மேல பஞ்ச் அடிக்கற சத்தம் தான் எனக்கு ஜாஸ்தியா வந்த்து..எழுந்திருச்சு கேட்டே விட்டேன்.. என்னய்யா வாசிக்கற நீன்னு..அதுக்கு வித்வான் ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரிக்கு வரக்கூடாது அப்படின்னார்.. ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரி மட்டும் பண்ணலாமான்னு கேட்டேன்..அதற்கு அந்த வித்வான் முதல்ல நீ வீணை கத்துண்டு வா.. அப்புறம் அதுக்கு பதில் சொல்றேன்னார்..
அதுக்காகவே தேடிப் பிடிச்சு கத்துண்டு கச்சேரி பண்ணேன்..அதுக்கு அந்த வித்வானும் வந்தார். பலபேர் முன்னிலைல என்கிட்ட நீ ஜெயிச்சுட்டேன்னார்..”
“வாவ் சூப்பர் பாஸ்கரன்”
“இல்லை இவளே..அவருக்கு முன்னால நான் தோத்துட்டேன்..அவருக்கு பலபேர் முன்னிலைல்ல தன்னோட தோல்வியை அக்செப்ட் பண்ணிக்கற தைரியம் இருந்த்து. அதுல இருந்து நான் வீணை வாசிக்கறதையே விட்டுட்டேன்..”
“இப்ப எதுக்காக வாசிச்சீங்க பாஸ்கரன் எனக்காகவா”
“இது நான் தோத்த இடம் இவளே.. நீ சுந்தரத்தைத் தான் காதலிக்கறேன்னு சொன்ன இடம்.. நான் சுந்தரத்துட்ட தோத்த இடம் அதான் வாசிச்சேன்..”
“பாஸ்கரன்..”
*
மேற்கண்ட உரையாடல் இடம்பெற்ற சீரியல் வந்தே மாதரம்.. பாரிஸ்டர் பாஸ்கரனாக சோ. தேவி ல்லிதா ஹீரோயின்..
எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் காட்சி அது. பாரிஸ்டர் பாஸ்கரனாக.. குடிகார அறிவு ஜீவியாக அற்புதமாக நடித்திருப்பார் சோ.
*
சின்னக்கண்ணனாகிய ஏகலைவனாகிய எனக்குத் தான் எத்தனை துரோணர்கள்.. அதில் நான் கண்டிராத ஆனால் அனுபவித்த எழுத்துக்கள், நடிப்பு, குணம் இவற்றிற்குச் சொந்தக்காரர் சோ.என் மானசீக குரு.எழுத்துக்களில் நகைச்சுவை கலந்து எழுதுவதாகட்டும், சீரியஸான வசனமாகட்டும் ( நான் சமாளிச்சுண்டுட்டேன் ஓய்- சாஸ்திரம் சொன்னதில்லை) அவருக்கிணை அவர் தான்.
வெவ்வேறு தலைவர்களைப் பற்றி எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் தனது ஆஃபீஸ் பற்றியும் அதைப்பற்றிய ஆட்கள் பற்றியும் எழுதியிருப்பார்.. ஹிலாரியஸ்.
வெகு சின்ன வயதில் மதுரை வீட்டிற்கு திலகர் திடலில் நிறைய பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் கூட நான் விரும்பிச் சென்ற ஓரிரண்டு கூட்டங்கள் சோவினுடையவை.. அந்த கணீர்க்குரல்.. நேரில் தொலைவில் பார்த்தாலும் நின்று ஒலிபெருக்கியில் ரசித்துக் கேட்ட்து இன்னும் நினைவில்.
வால்மீகி ராமாயணம் இவர் எழுதிய உரை முழுக்கப் படித்திருக்கிறேன்.என்ன அழகாக எழுதியிருந்தார்.. நடு நடுவில் கம்ப ராமாயணக் கம்பேரிசன்.. மகாபாரதம் பேசுகிறது என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
பத்து வருடங்களுக்கு முன்னால் என நினைக்கிறேன்..மனைவியின் ஒன்று விட்ட சகோதரியின் வீட்டிற்குச் சென்றால் இந்த்த் தெருவில் தான் இருக்கிறார் சோ என்றார். நன்றாகத் தெரியுமென்றும் சொன்னார்..பட் இண்ட்ரோ பண்ணுங்க எனக் கேட்காம ல் விட்டுவிட்டேன்.. கொஞ்சம் வெட்கம் தான்..ம்ம் ஐ மிஸ்ட் தட் சான்ஸ்.
இன்னும் இன்னும் நிறைய எழுதலாம் என் குரு நாதர்களில் ஒருவரான சோவைப் பற்றி பின் வருகிறேன்..
அவர் போய்விட்டாரா..யார் சொன்னது..என்னைப் போன்ற ஏகலைவன்களில் நெஞ்சினில் என்றென்றும் உயிர்த்திருப்பார்.
.
மேலே போய் எல்லாரையும் மகிழ்விப்பீர் குருவே..
-
10th December 2016, 11:07 AM
#8
Senior Member
Seasoned Hubber
"நீ வருவாய் என நான் இருந்தேன்..."
Jayachandran / Kalyani Menon / Kannadasan / M.S. Viswanathan / Rajalakshmi, Saritha, and Shankar
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th December 2016, 11:27 PM
#9
Senior Member
Veteran Hubber
Bharathiyar's birthday. Dec 11th
In his memory here is a song from VEdhaLa Ulagam
Theeraadha viLaiyaattu piLLai......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th December 2016, 06:02 AM
#10
Senior Member
Veteran Hubber
Feliz Navidad
Wishing you all a very merry Christmas !
Here is Jose Feliciano wishing you a very merry Christmas:
Feliz Navidad.......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks