-
27th January 2016, 02:14 PM
#2
Junior Member
Devoted Hubber
இந்த பட்டன் விரலுக்கு பக்கத்திலே இருக்கிறதாலே, பின் விளைவை நினைக்காமல், கோபத்திலே கண்டபடி எழுதி, பட்டனை தட்டிவிட்டு , "ஐயோ கொட்டிப்போச்சே, அள்ள முடியாதே !" அப்படின்னு அல்லலுறும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் . அதிலே நானும் ஒருத்தன்.
அவசரப்பட்டு அமுக்கி விட்டு, தானும் வருந்தி, மற்றவரையும் வருத்தி, வம்பில் மாட்டிக் கொள்ளும் வல்லமை உள்ளவருக்கே இந்த கதை..
மகாத்மா காந்தி சொன்ன கருத்தை 'வாழ்க வளமுடன்' - வேதாத்திரி மகரிஷி தமிழில் சொன்னது
“எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
******
Last edited by Muralidharan S; 27th January 2016 at 02:31 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks