-
21st March 2016, 12:58 AM
#1
Junior Member
Senior Hubber
அரை டிராயர் பருவத்தில்,
எங்களூர் பங்குனித் தேரோட்டத்தில் நண்பர்களோடு
நான் தேரிழுத்ததை ஒப்பிடலாம்... இன்று, திரியின்
அடுத்த பாகம் துவக்குகிற
என் செயலை.
பிஞ்சுக் கரங்களால் சுமக்க
இயலாத மிகக் கனமான இரும்பாலான தேர் வட நீளத்தை பல நூறு பலம் மிகுந்த கரங்கள் வியர்வைப்
பிசுபிசுப்போடு பற்றியிருக்க,
கிடைத்த விரலளவு இடைவெளியில் கை பதித்து,
"வேல்..வேல்" என உற்சாகக்
கூவலோடு தேர் அசைந்தாடிக்
கிளம்பிய போது, நானிழுத்துத்
தேர் நகர்வதாய் அன்றைய
என் சந்தோஷம் காட்டிய
"சின்னப்பிள்ளைத்தனம்"
மீண்டும் இன்று திரியின்
பாகம் துவக்கத் திரும்பியிருக்கிறது.
பலம் பொருந்திய பலநூறு கைகள் உங்களுடையவை.
சற்றும் தளராத பேருழைப்பும்,
உழைப்பால் சிந்திய வியர்வைச்
சொட்டுகளும் உங்களுடையன.
ஊருலகமெல்லாம் உயரம்
பார்த்துக் கும்பிடும் கலைக்
கடவுளை உள்ளமர்த்திய
கம்பீரத் தேர், உங்கள் இழுப்பால்
நகர, நகர எழும் பரவசக் கோஷத்தோடு கலந்து விட்ட மெலிதான குரலும்,
அந்தக் கடவுளின் பக்தனென்று
அடையாளப்படுத்திக் கொள்ள
விரும்புகிற ஆர்வ மனமும்
மட்டுமே என்னுடையன.
வடமிழுக்க வாய்ப்பு தந்து,
வரவேற்பும் சொல்லி வாழ்த்திய
சக்தி மிகுந்த அந்த சாதனைக்
கரங்களுக்கு உரிய்வர்களே..
அய்யா திரு.முரளி ஸ்ரீநிவாஸ்,
அய்யா திரு.கோபால்,
அய்யா திரு.சிவாஜி செந்தில்,
அய்யா திரு.ராகவேந்திரா,
திரு.செந்தில்வேல்,
பெரியவர் அய்யா திரு.சுப்ரமணியம் ராமஜெயம்,
திரு.எஸ்.வாசுதேவன்,
திரு.எஸ்.எஸ்.எஸ்,
திரு.எஸ்.பி.சௌத்ரிராம்,
திரு.பரணி,
திரு.சிவா/கனடா,
.................,
.................,
..................,
..................,
இன்னும், இன்னும் பெரிதாய்
நீளும் பட்டியலிலிருக்கும்
திரியின் சான்றோர்களே...
நீங்களனைவரும் தந்த,
தரவிருக்கிற நிலைத்த
ஆதரவுக்கு நன்றி சொல்லி,
இந்தச் சிறுவன் கரங்கள்
கூப்புகிறேன்.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
21st March 2016 12:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks