-
10th November 2016, 06:36 PM
#2491
Junior Member
Senior Hubber
( 6 )
ஒரு நாளிலே இருபத்து நான்கு மணி நேரமும் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத
"ஒரு நாளிலே" பாடல்.
காட்சி வடிவமாய் முதல் தடவை பார்த்த பிறகு, ஒலி வடிவமாய் எப்போது கேட்டாலும் அய்யன் திருமுக பாவனைகளை நினைவுக்குக் கொண்டு வரும் பாடல்...
"ஒரு நாளிலே.."
இதயத்திற்குப் பிரியமான இனிமை.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016 06:36 PM
# ADS
Circuit advertisement
-
10th November 2016, 06:38 PM
#2492
Junior Member
Senior Hubber
( 7 )
"பட்டத்து ராணி" பாட்டு வந்து நம்மை பரவசப்படுத்துவதற்கு முன்பே, அந்த பாடலை
மேடையேற்றத் திட்டமிடும் அந்த ஒத்திகைக் காட்சி நம்மை பரவசப்படுத்தி விடும்.
அய்யாவின் அந்த திட்டமிடும் பாவனை, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்துச் சொல்வதற்கு அவர் எடுத்துக் கொள்கிற கால அவகாசம்.. அத்தனையும் அவ்வளவு துல்லியம்.
இந்தக் காட்சியில், தேவைதான் என்றாலும் நாகேஷின் சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.. அவரையே எல்லாரும் கவனிக்க வைக்கிற மாதிரி.
அதையெல்லாம் மீறி தன்னையே கவனிக்க வைத்திருப்பார்... தலைவர்.
இந்த ஒத்திகைக் காட்சி எனக்கு மிகப் பிடிக்கும்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:41 PM
#2493
Junior Member
Senior Hubber
( 8 )
மிகப் புகழ் பெற்ற "பட்டத்து ராணி" பாடலுக்காக எல்லோரும் விழி விரித்துக் காத்திருக்க...
பாடலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பே அய்யா நம்மை அசத்தி விடுவார்.
அரபு நாட்டு உடை அணிந்து, அற்புத இசை பின்னொலிக்க, குதிரையாட்டம் நடந்து வந்து,
இரண்டாய் மடிந்து, வயிறு வரைக்கும் தலை கவிழ்ந்து அய்யன் செலுத்தும் வணக்கத்திற்கு ஆயுசுக்கும் அடிமையன்றோ.. நாமெல்லாம் ?
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:42 PM
#2494
Junior Member
Senior Hubber
( 9 )
உடல் நலம் குன்றிய தாயைக் காண வரும் புரட்சிக்கார மகனைக் கைது செய்யும் கடமை
இருப்பினும், பாசத்தால் கைது செய்ய மறுக்கிறார்.. தந்தை.
தன்னை தந்தை கைது செய்யாவிடில் அவருக்கு
கெட்ட பெயர் ஏற்படும் எனும் புரிதலில் ஒரு தைரியப் புன்னகையோடு தானே கையில் விலங்கு எடுத்து நடந்து வரும் காட்சி எனக்குப்
பிடிக்கும்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:45 PM
#2495
Junior Member
Senior Hubber
(10 )
என்னவோ இப்போதெல்லாம் தமிழ்ப் படங்களில்
எலும்பு தெரியும் கதாநாயகர்கள் சதை மலைகள்
போல இருக்கும் வில்லன்களை தலைக்கு மேலே
தூக்கிச் சுழற்றி எறியும் நகைச்சுவைக் காட்சிகளே
சண்டைக் காட்சிகளாயிருக்கின்றன.
இதிலும் உண்டு ஒரு சண்டைக் காட்சி.
கை விலங்கோடு, பின்னே வரும் காவலர்களை
ஓரப்பார்வை பார்த்தபடி நடப்பவர், சிறைக்குள் தள்ளப்பட்ட வேகத்தில் ஓடிப் போய் சுவற்றில் உதைத்து எழும்பி, திரும்பித் தாக்கும் சாதுர்யத்தை இந்தத் தலைமுறை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:46 PM
#2496
Junior Member
Senior Hubber
( 11 )
ரயிலைத் தகர்க்க தான் போட்ட திட்டத்தையே தகர்க்க உதவியாயிருந்த காதலியிடம் சொல்வார்
... "என் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்..இது
நான் அடைந்த அவமானத்தின் கண்ணீர்".
இதைச் சொல்லும் போது, சிவந்து, நீர் ததும்பி நிற்கும் கண்களில் அய்யன் அவமானத்தைக்
காட்டுவாரே... அது எனக்குப் பிடிக்கும்.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:50 PM
#2497
Junior Member
Senior Hubber
( 12 )
"சிவந்த மண்"- இறுதிக் காட்சி
உச்சகட்ட சண்டைக் காட்சி.
வெகு நேரச் சண்டை ஒரு முடிவுக்கு வந்து விட...
கத்தியால் குத்தப்பட்டவனின் முகபாவத்தை
நடிகர் திலகம் காட்டுவார். பதறிப் போவோம்.
அவர்தான் குத்தியிருக்கிறார்.. குத்தப்படவில்லை
என்பதறிந்து நாம் அடைகிற சந்தோஷம் உன்னதமானது.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 06:51 PM
#2498
Junior Member
Senior Hubber
சாதாரணமாய் கோயிலுக்குப் போகும் போது
கிடைக்காத மன நிறைவும், சந்தோஷமும் பிறந்த நாளன்று கோயிலுக்குப் போகும் போது கிடைக்கும்.
"சிவந்த மண்" தினமான நேற்று "சிவந்த மண்"
பார்க்கையில் அவைகள் எனக்குக் கிடைத்தன.
முன்கூட்டியே நினைவூட்டல் தந்து நேற்றைய என்
மன நிறைவுக்கு வழிவகுத்த ராகவேந்திரா சாருக்கு இதய நன்றி.
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th November 2016, 07:03 PM
#2499
Senior Member
Seasoned Hubber
ஆதவன் ரவி,
தங்களுடைய பங்களிப்பையும் தமிழ் மொழி ஆளுமையினையும் கவிதைப் புலமையினையும் பாராட்ட, வார்த்தை தெரியாமல் விழிக்கின்றேன்.
உளமார்ந்த பாராட்டுக்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th November 2016, 07:07 PM
#2500
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks