-
18th March 2018, 09:28 AM
#2021
Senior Member
Devoted Hubber
Re release in1991
courtesy divya films chokkalingam f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th March 2018 09:28 AM
# ADS
Circuit advertisement
-
18th March 2018, 09:32 AM
#2022
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th March 2018, 10:46 PM
#2023
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th March 2018, 08:34 PM
#2024
Senior Member
Devoted Hubber
இந்தியாவின் சிறந்த நடிகனாக நடிகர் திலகத்தை தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்தால் அவர் இந்தியாவிற்கு மட்டுமே சிறந்த நடிகராகி விடுவார் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? உலக நடிகனாகிய நடிகர்திலகத்தை இந்திய நாட்டின் விருதை கொடுத்து சிறுமை படுத்த வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இவர் உலக நடிகன் , இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமில்லை என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? சரித்திர நாயர்களுக்கு பட்டம் ஏனோ என்று நினைத்தார்களோ என்னமோ? இந்திய நாடு கடந்து, ஆசிய, ஆப்பிரி...க்காவினர் இவரை சிறந்த நடிகர் என்று ஏற்றுக்கொண்ட இந்த நடிகனுக்கு இந்திய சிறப்பு ஏன் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த மாபெரும் நடிகனுக்கு கொடுக்கும் பரிசு இந்திய அரசிடம் இல்லையே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இவர் நடிகனல்ல இவன் ஒரு பிறவி நடிகன். இவனுக்கு ஒரு நடிகனுக்கான பரிசை கொடுப்பது தகுமோ என்று இந்தியே அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த நடிகனுக்கு நிகரான சிறந்த பரிசாக, பிரான்ஸ் அரசாங்கம் செவிலியர் பட்டம் கொடுத்து சிறப்பிக்கட்டுமே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த மாபெரும் நடிகனை இந்திய அரசாங்கம் சிறப்பிப்பதை விட அந்நிய நாட்டினர் சிறப்பிக்கட்டுமே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? திரையில் நடிகர்கள் நடிக்கின்றார்கள், இவரோ திரையில் அந்த வேடமாகவே வாழ்கின்றார் . இவரை சிறப்பிக்க நம்மால் முடியாது என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? ஆம். அதுதான் உண்மை. ஒரு நாட்டின் சிறப்பிற்கு மட்டும் உரியவனல்ல இவன். இவன் உலக நடிகர்களின் பிரம்மன் , நடிகர்களின் திலம், ஒரு சரித்திரம். நடிகர்திலகத்தை சிறப்பிக்க அவனை படைத்தவன், அவன் ஒருவனால் மட்டுமே முடியும். வாழ்க இவன் புகழ். பாடுவோம் நடிகர் திலகத்தின் நாமம் .
courtesy selvarai fernandez f. book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th March 2018, 10:35 PM
#2025
Senior Member
Devoted Hubber
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நேற்று முன் தினம் எம்.ஜி.ஆர் கட்சியின்.,
எம்.ஜி.ஆர் ஆட்சியின்
அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களுக்கு ...
பேட்டி கொடுத்தார்.
எப்போதும் கொடுப்பது தானே இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதை என்னால் யூகம் செய்ய முடிகிறது.
ஆம், தினகரன் பற்றிய ஒரு கேள்விக்கு,
அமைச்சர் ஜெயக்குமார் நமது நடிகர்திலகத்தின் படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் ஓகோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் என்ற பாடலை பாதி பாடிவிட்டார்.
இதில் சிரிப்பு என்னவென்றால்
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று நம் தலைவர் யாருக்காக பாடினாரோ,
அவர் கட்சியை சார்ந்த அமைச்சரே அந்தப் பாடலை பாடியது தான்.
எப்படியாயினும்
எந்தக் காலத்திலும்
எவர் நினைத்தாலும்
வஞ்சமறியா வல்லவன் நடிகர்திலகத்தின்
புகழை மறைக்க முடியாது....
courtesy sunder rajan f.book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th March 2018, 07:49 AM
#2026
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st March 2018, 06:36 AM
#2027
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st March 2018, 06:43 PM
#2028
Senior Member
Devoted Hubber
கே சங்கர் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் ஆறு மனமே ஆறு என்ற பாடலை அறுபடை வீடுகளில் படமாக்க திட்டமிட்டபோது ஒரு பாட்டுக்கு இத்தனை லோகேசனா என்ற சிவாஜி எப்ப இந்த பாட்டை படமாக்கி முடிக்கபோறே என்று கேட்டபோது ,சங்கர் இந்த பாட்டு உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அதனால் சிரமம் பார்க்கவேண்டாம் என்று சொன்னாராம் .இது அந்த ஆண்டவன் கட்டளை என்று சொன்னவுடன் சிவாஜி சித்தம் முருகா சித்தம் என்று சொல்லிவிட்டு அந்த பாட்டுக்கு நல்லதொரு ஒத்துழைப்பை கொடுத்தாராம் .அந்த பாட்டு சிவாஜி ரசிகர்களை மட்டும் இன்றி எம்ஜி ஆறியும் கவர்ந்த பாடலாக இருந்தது என்றும்அந்த பாட்டு தெய்வாம்சம் நிறைந்த பாட்டு சிவாஜியின் நடிப்பு எம்ஜி ஆருக்கு கோபம் வரும் போது இந்த பாடலை மனதில்நினைத்துகொள்வாராம் என்று சங்கர் ஒரு பே ட்டியில் கூறியுள்ளாராம்
courtesy vijaya nadigarthilagam fans f. book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st March 2018, 06:50 PM
#2029
Senior Member
Devoted Hubber
1979ம் ஆண்டு ஜனவரியில் 200வது படம் திரிசூலம் திரைக்கு வந்தது .27
ஆண்டுகளில் 200 திரைப்படம் .சராசரியாக கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 திரைப்படம் .சிவாஜி எவ்வளவு கடுமையாக பணியாற்றினார் என்பதற்கு சான்றுதான் அந்த எண்ணிக்கை ஒரு படத்திற்கு 25 நாட்கள் எடுத்துகொண்டால்கூட 12 திரைப்படத்திற்கு 300 நாட்கள் படபிடிப்பு தலத்தில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறார் .உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாக செயல் பட்டதால்தான் இந்த சாதனையை எல்லாம் அனாயசமாக செய்ய முடிந்திருக்கிறது .இந்த படபிடிப்புகளுக்கு இ...டையே குறைந்தது ஆயிரம் முறை யாவது நாடங்களில் நடிக்க மேடை ஏறியிருப்பார் .மூன்று வேடங்களில் நடித்த இந்த படத்தில் சிவாஜியும் கே ஆர் விஜயாவும் போனில் பாடும் காட்சியை பார்த்தவர்கள் கண் கலங்காதவர்கள் எண்ணிக்கை யை விரல் விட்டு எண்ணி விடலாம் .தமிழ் படங்களில் மிகவும் அதிகமான வசூலை பெற்று சாதனை புரிந்த படமாக திரிசூலம் அமைந்தது .அதுவரை வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் தாண்டி ஓடி சாதனை புரிந்து .அப்போது எம் ஜி ஆர் முதல்வர் ஆனதால் எந்த தயக்கமும் இல்லாமல் திரிசூலம் சாதனையை ஒப்புக்கொண்டார் .சிவாஜியை நடிப்பை பாராட்டிய எம் ஜி ஆர் திரிசூலம் படத்தின் மூலம் கிடைத்த கேளிக்கை வரி சத்துணவு திட்டத்திற்கு உதவியது என்று கூறி நன்றியும் கூறினார் .சாந்தி தியேட்டரில் 399 காட்சிகள் அரங்கு நிறைத்த காட்சிகளாக ஓடி 175 நாட்கள் ஓடியது .சாதனைக்கு சொந்தக்காரர் நடிகர்த்திலகம்தான் பெருமைபடுவோம்
courtesy net
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st March 2018, 06:56 PM
#2030
Senior Member
Devoted Hubber
பராசக்தி - சிவாஜி ஜாலம்
சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
-RV
courtesy aarumugam-f.book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks