Page 282 of 402 FirstFirst ... 182232272280281282283284292332382 ... LastLast
Results 2,811 to 2,820 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2811
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தெரியாதது #கடலளவு

    சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.

    "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...

    பின்னர்,

    அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.

    அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,

    #அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...

    வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

    படித்ததைப் பகிர்கிறேன்...

    வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2812
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.

    மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

    பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
    பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
    இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
    தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
    குடியுரிமை: இந்தியா

    திரையுலக வாழ்க்கை

    எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.

    விருதுகள் மற்றும் அங்கீகாரம்

    1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
    ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
    சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
    தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
    தனிப்பட்ட வாழ்க்கை

    எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.

    இறப்பு

    எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.

    காலவரிசை

    1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.

    1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
    1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
    1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
    1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
    1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
    1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
    1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
    1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
    1969 : திமுக பொருளாளராக மாறினார்.
    1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
    1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
    1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
    1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
    1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
    1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.......... Thanks.........

  4. #2813
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks......

  5. #2814
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் வெள்ளிமலர்*-20/3/20
    -------------------------------------------------------
    old is gold*- ம. சே. மயில், சாத்தான்குளம்*
    எம்.ஜி.ஆர். பாட்டுன்னா*சும்மாவா*
    --------------------------------------------------------
    அடிமைப்பெண் படத்திற்காக ஒரு* சிச்சுவேஷனுக்கு ஏகப்பட்ட பாடலாசிரியர்கள் எழுதியும் , எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை .* அவர் நிராகரித்தது மொத்தம் 43 பாடல்கள் .* அதன் பிறகே, ஆலங்குடி சோமு எழுதிய பாடலை ஒப்புக் கொண்டார் .அந்த பாடல்தான் "தாயில்லாமல் நானில்லை "* இதே ஆலங்குடி சோமு " எங்க வீட்டு பிள்ளை " படத்திற்கு , கண்களும் காவடி சிந்தாகட்டும் பாடலை வெறும் ஏழே நிமிடங்களில் எழுதி சரித்திர சாதனை படைத்தார் .* "நேற்று இன்று நாளை " படத்தில் இடம் பெற்ற "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று " பாடலுக்காக மொத்தம் 103 மெட்டுகள் போடப்பட்டதாம்*

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #2815
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தண்டோரா* வாய்ஸ் வார இதழ் - 03/03/2020
    ------------------------------------------------------------------------
    தண்டோரா பதில்கள் :
    ----------------------------------
    நான்கு படங்கள் ஓடிவிட்டால் தங்களையும் எம்.ஜி.ஆர். என நினைத்து* அரசியல்* கனவு காண* ஆரம்பித்து விடுகிறார்களே நடிகர்கள் ?

    வரலாறு தெரியாதவர்கள் அவர்கள் ..பேரறிஞர் அண்ணாவே, தம்பி , நீ நிதி அளிக்க* வேண்டாம் .* உன் முகத்தைக் காட்டு, மக்கள் வாக்குகளை கொட்டுவார்கள் என்று கூறியது வரலாறு .* அதன் பிறகு கருணாநிதி முதல்வராக தேர்வு ஆனதற்கு எம்.ஜி..ஆர் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் .**அதாவது கிங் ஆவதற்கு முன்பே கிங் மேக்கராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.*
    இன்னொரு விஷயம் .* அவரது படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல .*மற்ற பொதுமக்களும் எம்.ஜி.ஆர். மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் .* அதாவது திரையை மீறிய மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது .**
    இதையெல்லாம் உணராமல் , பகல் கனவு காண்கிறார்கள்* இந்த இலவு காத்த கிளிகள் .*

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #2816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    14/03/20-* *சன்லைப்* -காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*

    14/03/20 - முரசு* - இரவு* 7 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*


    17/03/20* *- முரசு* *இரவு 7 மணி* - நல்ல நேரம்*

    18/03/20* - சன்லைப் - காலை 11 மணி - திருடாதே*

    19/03/20* - முரசு* -இரவு 7 மணி* - ஆனந்த ஜோதி*

    21/03/20* - சன்லைப் - காலை 11 மணி - தாழம்பூ*

  10. Likes orodizli liked this post
  11. #2817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
    1. அண்ணா நீ என் தெய்வ*ம்
    2. ந*ல்லதை நாடு கேட்கும்
    3. நானும் ஒரு தொழிலாளி
    4. மக்கள் என் ப*க்க*ம்
    5. தியாக*த்தின் வெற்றி
    6. இதுதான் ப*தில்
    7. ச*மூக*மே நான் உனக்கே
    சொந்த*ம்
    8. உன்னை விடமாட்டேன்
    9. இமய*த்தின் உச்சியிலே
    10. கேப்ட*ன் ராஜா
    11. உங்க*ளுக்காக நான்
    12. அண்ணா பிற*ந்த நாடு
    13. ஊரே என் உற*வு
    14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
    15. எல்லைக்காவ*லன்
    16. மீண்டும் வ*ருவேன்.
    17. புர*ட்சிப்பித்த*ன்
    இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.

    இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
    இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.

    புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!, சகாப்தம் படைத்தவரும் ஆவார்......... Thanks.........

  12. #2818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M G R
    வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
    ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
    வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

    எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

    வாழ்க எம்ஜிஆர்புகழ்............ Thanks.........

  13. #2819
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் - எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்*
    ----------------------------------------------------------------------------------------------------------

    வின்*டி.வி.யில் நேற்று (21/03/20) பிற்பகல் 3.30 மணிக்கு*"பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் " என்கிற*நிகழ்ச்சியில், உலகத்திலேயே, திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு*தேவையான சமூக*சீர்திருத்த*கருத்துக்கள், சிந்தனை தரக்கூடிய கருத்தான*வசனங்கள், முற்போக்கான இலக்கிய, இலக்கண*நயம் கலந்த*பாடல்கள்*தந்தவர்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே. அதனால்தான் எல்லோருக்கும் அவர் வாத்தியார் .* விவசாயி, தொழிலாளி, படகோட்டி,மீனவ*நண்பன், காவல்காரன், வேட்டைக்காரன், ரிக்ஷாக்காரன் , என்று பாமர*மக்களுக்கும், ஏழை எளியோர்*துயர் துடைக்கும்*வகையிலான பாத்திரங்களை ஏற்று திரைவானில்*ஜொலித்தவர் .* இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் , இவர் போல யார் என்று ஊர் சொல்ல*வேண்டும் என்பது*போல அன்றும், இன்றும், என்றும் அவரது*பாடல்கள்*காலத்தால் அழியாதவை .வாழ்ந்தவர்கள் கோடி*, மறைந்தவர்கள் கோடி.* ஆனால் இடையிலே*திரைதுறையில் , நடிப்புலகில் ஆதிக்கம் செலுத்தியவர் ஒரு சிலரே.* அந்த ஒரு சிலரில் மன்னாதி*மன்னன், ராஜ*ராஜன், ஆயிரத்தில் ஒருவனாக*மக்களின்*இதய*சிம்மாசனங்களில் வீற்றிருந்ததோடு, பத்தாண்டுகள்*கோட்டை கொத்தளத்தில் பொற்கால*ஆட்சி புரிந்து சாதனை, சரித்திரம், சகாப்தம்*படைத்த*எட்டாவது வள்ளல், ஏழை பங்காளன்*எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது*.* கவிஞர்கள் எல்லா*நடிகர்களுக்கும்தான் பாடல்கள்*எழுதினார்கள் புகழ் பெற்றார்கள் . ஆனால் அந்த கவிஞர்கள் எழுதும்*பாடல்களையே திருத்தி*எளிதில் மக்களை*சென்றடையும் வகையில்*எம்.ஜி.ஆர். எனும் வாத்தியார்*செயல்பட்டார். அத்துடன் தான் ஆட்சி பீடத்தில்*அமர்ந்ததும்*, அந்த பாடல்களுக்கு தகுந்தாற்ப்போல்* பல்வேறு நல திட்டங்களை*மக்கள் பாராட்டும்*வகையில்*செயல்படுத்தினார் . *அதனால்தான் அவரது*பாடல்கள்*சாகாவரம்*பெற்று திகழ்கின்றன .தேர்தல் காலங்களில் பல கட்சியினருக்கும் பொருத்தமாக*அமைவதால்* அவர்கள் அதை பயன்படுத்தி கொள்கிறார்கள்.* அத்தகைய*பாடல்களில் நேரம் காலம் கருதி*சிலவற்றை மட்டுமே*நேயர்களுக்கு ஒளிபரப்புகிறேன் .
    1.* ஓடி*ஓடி*உழைக்கணும்* -நல்ல நேரம்*

    2.காடு வேளைஞ்சென்ன* மச்சான் - நாடோடி மன்னன்*

    3.உன்னை அறிந்தால்* நீ - வேட்டைக்காரன்*

    4. நான் ஏன் பிறந்தேன்* -நான் ஏன் பிறந்தேன்*

    5.தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*

    6.தூங்காதே*தம்பி தூங்காதே*- நாடோடி மன்னன்*

    7. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*

    8.சின்னப்பயலே , சின்னப்பயலே - அரசிளங்குமரி*

    9.புத்தன்*இயேசு காந்தி*பிறந்தது*-சந்திரோதயம்*

    10,எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் -மலைக்கள்ளன்*

    11.திருடாதே*பாப்பா திருடாதே*- திருடாதே*

    12.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*


    13.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*

    14..நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு*பிள்ளை*


    15..அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி*மன்னன்*

    16.இறுதியாக வாசலிலே*இரட்டை இலை* கோலம்*இடுங்கள்*என்கிற*பாடல்*தேர்தல் காலத்தில், அனைவரும் வானொலி, தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கும்போது ,எம்.ஜி.ஆர். தனது முறை வரும்போது*கட்சியின்*சின்னத்தை*பிரபல படுத்தும்*நோக்கில்*இந்த பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்று*கூறி முடித்தார்*.அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .
    Last edited by puratchi nadigar mgr; 22nd March 2020 at 09:33 PM.

  14. #2820
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •