-
17th April 2020, 07:58 AM
#3111
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
17th April 2020 07:58 AM
# ADS
Circuit advertisement
-
17th April 2020, 08:05 AM
#3112
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 11
M R. ராதா இரு வேடங்களில் நடித்த முதல் படம்
M R. ராதா மகன் M R. வாசு முதல் படம்
தேவர் பிலிம்ஸ் ஆர்ட்ஸ் முத்திரை பதித்த முதல் படம்
சின்னப்பர் தேவர் தம்பி M A மாரியப்பன் எடிட்டிங் செய்த முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட முதல் படம்
புரட்சிநடிகர் எம் ஜி ஆர் வேட்டைக்காரன் வேடத்தில் நடித்த முதல் படம்
இவையெல்லாம் தாயைக் காத்த தனயன் சாதனைகள் எண்ணிக்கை
படத்தில் சிறப்பான விஷயங்கள். ..
சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதும் சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள்
வாத்தியார் புலியுடன் மோதும் சண்டைக்காட்சி
M R ராதா டீக்கடை பெஞ்ச் அரசியல் தெறிக்கும் நகைச்சுவை காட்சிகள்
சூப்பர் ஹிட் மெகா ஹிட் பாடல் காட்சிகள் இதுதான் சிறந்த பாடல் என்று சொல்லமுடியாத அளவுக்குப் அனைத்து பாடல்களும் தேனமுது
தாய்சொல்லைத்தட்டாதே அசோகன் என்றால் தாயைக் காத்த தனயன் M R. ராதா
நடிப்பு கொடிக்கட்டி பறந்தது
தொடர்ந்து 21 வாரம் ஒடி மாபெரும் வெற்றி வாகை சூடியது அந்த ஆண்டு அதிக
வசூல் சாதனையை படைத்தது.
திருச்சி பேலஸ் தியேட்டரில் 146 நாட்கள் ஒடிக்கொண்டிருக்கும் போது குடும்பத்தலைவன் வந்ததால் இப்படம் எடுத்து விட்டனர்.
சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி மூன்று தியேட்டரிலும் 120 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது
வெற்றி. வெற்றி. ...வெற்றி என்று மூன்று முறை சொல்லுவதைப்போல் காட்சி எடுக்கப்பட்டது. மூன்று முறை எடுக்கப்பட்டது. .வாத்தியார் சின்னப்பர் தேவரிடம் கேட்டார் ஏன் ஒரு முறை எடுத்தால் போதாது
அதற்கு சின்னப்பர் தேவர் தந்த விளக்கம் ஆண்டவேன நான் உங்களை வைத்து மூன்றாவது வெற்றி பெறுகிறேன். அதாவது
தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் என்று மூன்று படங்களை குறிப்பிட்டார்.
குறைந்த செலவில் குறைந்த நாட்களில் எடுக்க ப்பட்டு அதிக வசூல் அதிக நாட்கள்
ஓடியது கண்டு கோலிவூட் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது
சின்னப்பர் தேவர் பெருமை மேலும் கொடிக்கட்டி பறந்தது. .
அடுத்தது குடும்பத்தலைவன் சாதனை தொடரும். ...தொடரும். ...தொடரும். .......... Thanks..........
-
17th April 2020, 08:07 AM
#3113
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 12
1 பேரறிஞர் அண்ணா 2 நாவலர் நெடுஞ்செழியன் 3 மு கருணாநிதி
4 V N ஜானகி 5 J , ஜெயலலிதா 6 O பன்னீர்செல்வம் 7 எடப்பாடி பழனி சாமி
தமிழகத்தில் ஏழு முதல்வர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர்
எம் ஜி ஆரை சேரும். .
1 சரோஜாதேவி 2 ஜெயலலிதா 3 லதா 4 மஞ்சுளா 5 ராஜ ஸ்ரீ 6 ரத்னா 7 லஷ்மி ஏழு பேரும் முன்னணி கதாநாயகியாக உயர்வுக்கு காரணம் புரட்சிநடிகர் எம் ஜி ஆர்
1 M R ராதா 2 , M N நம்பியார் 3 S, A அசோகன் 4, R. S , மனோகர், 5 P S வீரப்பா
6, T S, பாலையா , 7. O. A. K, தேவர் இந்த ஏழு பேரும் வில்லனாக பிரபலமானது
வாத்தியார் படத்தில்தான்
1, சரவணா பிலிம்ஸ் 2, A V, M , புரடக்ஷன் 3 ஜெயந்தி பிலிம்ஸ் 4 வீனஸ் பிக்சர்ஸ்
5, மேகலா பிக்சர்ஸ் 6. விஜயா வாகினி, 7, தேவர் பிலிம்ஸ்
இவர்கள் எல்லோரும் வாத்தியார் வைத்துதான் முதல் முதலாக கலர் படம் எடுத்து வெற்றி வாகை சூடினார்கள்
இப்படி எத்தனையோ மனிதர்கள் வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் மூல காரணமாகவும் முதல் காரணமாகவும் விளங்கியவர் நமது தெய்வம் பொன்மனச்செம்மல்.
ஒரு உதாரணத்துக்கு மட்டும் தான் மேலே உள்ளது குறிப்பிட்டேன் ஆனால் வாத்தியாரால் உதவி பெற்றவர்கள் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம் கணக்கில் அடங்காது எண்ணிக்கை இல்லாதது உண்டு.
அந்த வகையில் M R ராதா மகன் M R வாசு அறிமுகம் ஆனது எப்படி என்பதை முதலில் அறிவோம்.
ரத்தகண்ணீகர் படத்தில் மூலம்தான் M R. ராதா பிரபலம் ஆனார். அந்த படத்திலே தனது மகனை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருந்தது ஆனால் தனது படத்தில் அறிமுகமாகி உயர்த்த நிலை வருவதை விட வேறு ஒருவர் படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே M R. ராதாவின் ஆசை அதற்கான தருணம் காத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தாயைக் காத்த தனயன் படத்தில் இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது. அதிலே ஒரு வேடம் எனக்கும் மற்றொரு வேடத்தில் தனது மகனை நடிக்க வைக்க வாய்ப்பு அமைய சின்னப்பர் தேவரிடம் கேட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் குறுகிய காலத்தில் படம் எடுப்பதால் புது முகம் அறிமுகம் படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை இருந்தாலும் எம் ஜி ஆரிடம் ஒரு வார்த்தை கூறி விடுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.
வசனகர்த்தா ஆரூர்தாஸ் மூலம் எம்ஜிஆரிடம் இச்செய்தி எட்டியது.???
தொடரும். ...தொடரும். ...தொடரும். ......... Thanks...
-
17th April 2020, 08:08 AM
#3114
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M. A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 13
கவிஞர் வாலி 2 கவிஞர் முத்துலிங்கம் 3 கவிஞர் நா காமராசன் 4 புலவர் புலமைப்பித்தன் 5 கவிஞர் மருதகாசி 6 கவிஞர் பஞ்சு அருணாசலம் 7 கவிஞர் அவினாசிமணி இவர்கள் எல்லாம் புரட்சித்தலைவர் மூலம் அறிமுகமான ஜாம்பவான்கள்
1 K , பாலச்சந்தர், 2, K, மகேந்திரன் 3, பா நீலகண்டன் 4 A, ஜகன்நாதன் 5 R. M, வீரப்பன் 6 கிருஷ்ணன் பஞ்சு 7, ஜம்பு வாத்தியார் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்கள் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்
T, M, செளந்தரராஜன் , 2, S, P. பாலசுப்பிரமணியம் , 3. T. K, கலா, 4. K J. யேசுதாஸ்
5, L R. ஈஸ்வரி , 6, வாணி ஜெயராம் , 7. ஜிக்கி புரட்சித்தலைவர் படத்தில் பாடிய பிறகுதான் பிரபல பின்னணிப் பாடகர்கள் என்ற நிலை அடைந்தனர்
மேலே குறிப்பிட்ட அனைவரும் வாத்தியாரால் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்கள்
இப்படி எத்தனையோ துறையில் உள்ளவர்கள் புரட்சித்தலைவர் மூலம் புகழ் அடைந்தனர் வாழ்வு பெற்றனர், இது குறைவுதான் கணக்கில் அடங்காது எண்ணிக்கை எத்தனையோ பேர் உண்டு, அந்த வகையில் M. R. வாசும் புரட்சித்தலைவர் மூலம் தாயைக் காத்த தனயன் படத்தில் அறிமுகமானார். வசனகர்த்தா ஆரூர்தாஸ் வாத்தியாரிடம் M. R. ராதா அண்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்கப்பட்டது என்றும் அதில் ஒரு வேடம் தனது மகனுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார் உடனே வாத்தியார் கூறினார்
ராதா அண்ணன் இரட்டை வேடம் அவரே நடிக்கட்டும் அதுதான் அவர் நடிப்புக்கு முத்திரை பதிக்கும், தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் காமெடி நடிகர் இல்லை அது க்ரைம் த்ரில்லர் படம் என்பதால் எடுப்பட்டது. இது குடும்பம் படம் அதனால் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் முக்கியத்துவம் தரனும் அவர் மகனை நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்யுங்கள் என்றார்,
வாத்தியாரின் சமயோகிதனமான அறிவும் திறமையும் கண்டு படப்பிடிப்பில் இருந்த M. R. ராதா முதல் ஆரூர்தாஸ் சின்னப்பர் தேவர் வரை அசந்து போனார்கள்
இது தான் எம் ஜி ஆர் சினிமா அனுபவம் இந்த ஐடியா யார் கொடுப்பார்கள் என்று வியந்து பாராட்டினார்கள். .
அதே நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த M. R ராதா விடம் அவரது மகன் M R. வாசு தனது தந்தையிடம் கேட்ட கேள்வி .?? அப்பா என்னை ஏன் எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் நீங்கள் நினைத்தால் யாரிடம் கூறினாலும் என்னை நடிக்க அழைப்பார்கள் ஏன் உங்கள் படத்தில் கூட என்னை நடிக்க வைக்க முடியும் குறிபிட்டு எம் ஜி ஆர் படத்தில் நடிக்க வைக்க தருணம் காத்திருக்க காரணம் என்று கேட்டார். ?
அதற்கு M. R. ராதா கூறிய பதில். ...தொடரும். ...தொடரும். .தொடரும். ?...... Thanks.........
-
17th April 2020, 08:09 AM
#3115
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 14
போதனையில் புத்தனாக இருந்து போதித்தார்
அகிம்சையில் மகாத்மாவும் இருந்து கடைப்பிடித்தார்
கொள்கையில் அண்ணா வழியில் வாழ்ந்தார்
தமிழ் நேசிப்பதில் மகாகவி பாரதியார் வழியில் வாழ்ந்தவர் நமது தெய்வம் M G R
இப்படி எத்தனையோ தலைவர்கள் கலவையில் கலந்த கலவைதான் M G R
அதேப்போல் எத்தனையோ திறமைகளை கொண்டு தொழில் வித்தைகளையும் கற்ற சகலகலா வல்லவர் பொன்மனச்செம்மல் சினிமாவில் அவருக்கு தெரியாத கலைகள் எதுவும் இல்லை இது நன்கு அறிவார் M R ராதா அவர்கள் ஆனால் அதைப் ஒரு போதும் வெளிபடையாக யாரிடமும் கூறியது இல்லை ஏன் என்றால் அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை அமைந்தது இல்லை இன்று தனது மகன் கேட்கும் போது சொல்லவேண்டிய சூழ்நிலை உருவானது.
உன்னை எம் ஜி ஆர் படத்தில் அறிமுகம் செய்ய பல காரணங்கள் உண்டு அதில் சில முக்கியமான விஷயம் மட்டும் கூறுகிறேன் , ,
எம் ஜி ஆர் ஒர் அனுபவமிக்க நடிகர் அவருடன் நடித்தால் பதற்றம் பயம் இல்லாமல் மற்ற படங்களில் நடிக்க சுலபமாக இருக்கும். முதல் படத்திலேயே அவர் படத்தில் நடித்த பெருமை அடைவாய் மற்ற படங்கள் நடிக்க வாய்ப்பு சுலபமாக கிடைக்கும்
சம்பளம் அதிகமாக கிடைக்கும் அதனால் மற்ற படங்களிலும் இங்கு கிடைத்த சம்பளமே கிடைக்கும். . சினிமாவில் நடிக்கும் எவருக்கும் முதல் படம் வெற்றி படமாக அமைந்து விட்டால் அடுத்த படம் நடிக்கும் வாய்ப்பு தானாகவே அமைந்துவிடும். இததான் சினிமா பார்முலா ஆகும் ஆனால் எம்ஜிஆர் படத்தை பொருத்தவரைக்கும் அந்த பார்முலா கிடையாது. . வெற்றி என்பது அவரை வைத்துத்தான் உள்ளது . அவரை குறை கூறுபவர்கள் குற்றம் சாட்டியவர்கள் எதிரியாக நினைப்பவர்கள் கூட அவரை வைத்துத்தான் புகழ் அடைவது வருமானம் பார்ப்பார்கள் அவரால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அதிகம் உண்டு ஏன் நீயே மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு குறைவுதான் அதனால் தான் முதல் படம் எம் ஜி ஆர் படமாக இருக்கனும் என்பதால் காத்திருந்தேன் அதற்கான தருணம் இப்போமுது ஏற்பட்டுள்ளது என்றார்
இக்குறிப்பு M R வாசு அவர்கள் மகன் நடிகர் வாசுவிக்ரம் பொதிகை தொலைக்காட்சியில் தனது சினிமா அனுபவம் கூறும் போது தனது அறிமுகம் தனது தந்தை அறிமுகம் இப்படி கூறியுள்ளார் தினமலர் வாசகர் மலரில் இச்செய்தி வந்துள்ளது
அடுத்து குடும்பத்தலைவன் பற்றி தகவல் தொடரும் தொடரும் தொடரும். ............ Thanks
.........
-
17th April 2020, 08:11 AM
#3116
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 15
இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15-08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
கலையரசி. ..பல போட்டிகள்
தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
படகோட்டி. ...படகு போட்டி
காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
நம்நாடு. ..தேர்தல் போட்டி
பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
ரிக்ஷாக்காரன். ..ரிக்ஷா போட்டி
குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
நல்ல நேரம். ..யானை போட்டி. ...
பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
மீணவநன்பன். ...வாள் சண்டை போட்டி
மதுரையைமீட்டசுந்தரபாண்டியன். ..பாட்டு போட்டி
இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும்......... Thanks.........
-
17th April 2020, 08:12 AM
#3117
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 16
வாத்தியார் படத்தை பொருத்தவரைக்கும் தனது நடிப்பை விட படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுப்பார் அதற்கு காரணம்?
தன்னுடைய நடிப்பும் கதாபாத்திரமும் ரசிகர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள் கதாநாயகன் பொருத்தவரைக்கும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல படங்கள் உண்டு அதற்கான வாய்ப்பும் அமையும் ஆனால் மற்ற நடிகர்கள் அப்படியல்ல அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். கதாபாத்திரம் அமைந்திருக்க வேண்டும் அப்போது தான் படவாய்ப்புகள் கிடைக்கும் ரசிகர்களால் பேசப்படுவார்கள். இதை நன்கு உணர்ந்து அனுபவம் கண்டவர் நம்ம வாத்தியார் தனது ஆரம்ப காலம் சினிமா அனுபவத்தை நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார். அதனால்தான் அவர் நடித்த பல படங்களில் மற்ற நடிகர்களுக்கு கனமான கதாபாத்திரம் கொடுத்து அவர்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் அதற்கு உதாரணமாக பல படங்கள் உண்டு அதில் சில முக்கியமான படங்கள் மற்றும் கூறுகிறேன்
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்....மகாதேவி. .... P S வீரப்பா
படகோட்டி. ..எங்க வீட்டு பிள்ளை. ....M N நம்பியார்
தெய்வத்தாய்....குடியிந்தக்கோயில். ...பன்டரிபாய்
தாய்சொல்லைத்தட்டாதே. ..பணக்காரக்குடும்பம்....S A அசோகன்
அரசக்கட்டளை ஒளிவிளக்கு. ......R S மனோகர்
சந்திரோதயம். ...குமரிக்கோட்டம். ....ஜெயலலிதா
திருடாதே. ... அன்பே வா. ..சரோஜாதேவி
உரிமைக்குரல். ....லதா
தாயைக் காத்த தனயன். ..தாயின் மடியில். ....M R ராதா
நீதிக்குப்பின்பாசம் நம்நாடு. ....ரங்காராவ்
இப்படி பல படங்கள் நீண்டுக்கொண்டே போகும் மற்ற நடிகர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களால் பேச வைத்தார் ஒவ்வொரு பபடத்திலும் ஒவ்வொருக்கும் நடிக்கும் வாய்ப்பு அமைத்து கொடுத்தார் இது எந்த நடிகர்களிடம் காணத ஒரு அதிசயம் ஆகும்
நடிகர் அசோகன் பல படங்களில் பல நடிகர்களையும் நடிப்பில் முந்திக்கொண்டு வருவார் அதற்கு பல படங்கள் உதாரணமாக கூறலாம் அவை பின் வரும் தகவலில் பதிவு வரும் குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் நடிப்பில் போட்டி போடுவார் அடுத்த பதிவில் காண்போம்
தொடரும். ...தொடரும். ....தொடரும். ........ Thanks...
-
17th April 2020, 08:14 AM
#3118
Junior Member
Diamond Hubber
சாண்டோ M,M, A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 17
குடும்பத்தலைவன் படத்தில் வாத்தியாருடன் அசோகனுக்கு கடுமையான நடிப்பு போட்டி அமைந்திருக்கும் . . வாத்தியார் தனது இயற்கை நடிப்பிலும் யதார்த்தம் நடிப்பும் வெளிப்படுத்திருப்பார் அசோகன் சிறிது அதிகமான நடிப்பு திறமையை வெளிப்படுத்திருப்பார் தாய்சொல்லைத்தட்டாதே, பணக்காரக்குடும்பம், , சந்திரோதயம் தெய்வத்தாய் இவையெல்லாம் அசோகன் நடிப்புக்கு தீனி போட்டவை , , குடும்பத்தலைவன் தாய்க்கு தலைமகன், பெற்றாதால்தான் பிள்ளையா, கொடுத்துத்வைத்தவள் காவல்காரன் போன்ற படங்களில் வாத்தியாரின் நடிப்புக்கு அசோகனால் ஈடுக்கொடுக்க முடியவில்லை வாத்தியார் நடிப்பே அதிகமாக பேசப்பட்டது . சின்னப்பர் தேவரின் நான்காவது வெற்றி படமாக குடும்பத்தலைவன் அமைந்தது,
1956 தாய்க்கு பின் தாரம், . 1961 தாய்சொல்லைத்தட்டாதே. . 1962 தாயைக் காத்த தனயன் . குடும்பத்தலைவன் தொடர்ந்து 22. 2. 1963 தருமம் தலைக்காக்கும் மற்றொரு வெற்றி படமாக அமைந்தது. இனி இப்படத்தின் வரலாறு கவனிப்போம்.
தருமம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் இப்பாடல் படத்திற்காக எமுதிய பாடல் அல்ல, இப்பாடல் தகுதியுள்ள ஒருவருக்குத்தான் அமையனும்
என்பது கண்ணதாசனின் விருப்பம். . இப்பாடலை கேட்டு பல இயக்குநர்கள் படையெடுத்தனர் கண்ணதாசனின் வீட்டுக்கு இன்னும் குறிப்பாக சொல்லனும் என்றால் ஸ்ரீதர், . B R பந்தலு K S, கோபாலகிருஷ்ணன் பீம்சிங் திருலோகச்சந்தர்
போன்றோர் கண்ணதாசன் இவர்களுக்கு சொன்ன பதில் எம்ஜிஆர் வைத்து யார் படம் எடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இப்பாடல் என்றார் அவருக்கு மட்டுமே இப்பாடல் பொருந்தும் என்றே பதில் தந்தார். .
இச்செய்தி சின்னப்பர் தேவர் கேள்விப்பட்டார் உடனே கண்ணதாசன் வீட்டுக்கு சென்று அப்பாடலை கேட்டார். அதற்கு கண்ணதாசன் என்ன படம் என்ன கதை என்று கேட்டார். உடனே சின்னப்பர் தேவர் பாடல் வரிகள் சொல்லுங்கள் படத்தின் பெயர் கூறுகிறேன் என்றார். . பாடல்வரினை கண்ணதாசன் கூறியதும் அதுதான் படத்தின் பெயர் என்றார் சின்னப்பர் தேவர்
என்ன கதை என்ன படம் என்று எதுவும் சொல்லாமல் நான் கூறியதை வைத்து படத்தின் பெயர் கூறுகிறீர்கள் என்றார் அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார்
நான் ஆண்டவனை வைத்து படம் எடுக்கிறேன் அவருக்கு கதை முக்கியம் இல்ல
அவருக்கு பொருந்தர மாதிரி பாடல் அமைந்தால் கதை தானாக அமைந்திடும்
ஆண்டவன் ரசிகர்கள் பொருத்தவரைக்கும் சண்டைக்காட்சிகள் பாடல் காட்சிகள் அமைந்துவிட்டால் அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதால் நான் கதை முடிவு செய்யவில்லை என்றார். சின்னப்பர் தேவர் புரட்சித்தலைவர் மீது வைத்துள்ள அபார நம்பிக்கை கண்டு கண்ணதாசன் வியர்ந்து போனார் அன்று முதல் சின்னப்பர் தேவர் எப்போமுது வந்தாலும் அவர்க்கு ஏற்றபடி பாடல் எமுதிக்கொடுத்திடுவார் இன்னும் முடியலங்க
தொடரும். ...தொடரும். ....தொடரும். .......... Thanks...
-
17th April 2020, 08:17 AM
#3119
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 18
நின்றால் பொதுகூட்டம் ...
நடந்தால் ஊர்வலம் ...
பேசினால் மாநாடு... இந்த வரலாறு உருவானது வாத்தியார் மூலம் தான் ... அதேப்போல் அவரின் ஒவ்வொரு தகவலும் வரலாறாக உருவாக்கப்பட்டது ...
இன்று காணும் வரலாறு "தர்மம் தலைக்காக்கும்"
1962 ம் ஆண்டு தமிழக சட்டசபையில் பொதுத்தேர்தல் நடந்தது. .கவியரசு கண்ணதாசன் ஈ வி கே, சம்பத் இனைந்து தேசிய தமிழ் ஜனநாயக கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு தோற்றது. . இராமநாதபுரம் மாவட்டம் திருக்கோஷ்டியூர் (தற்போது திருப்பத்தூர் என்று மாற்றப்பட்டது ) என்ற தொகுதியில் கண்ணதாசன் போட்டியிட்டு தோற்றார் தனது தோல்வியினால் மனம் உடைந்த நிலையில் இருந்தார் இன்னும் சொல்லனும் என்றால் மக்கள் மீது கோபம் இருந்தது. அதே நேரத்தில் அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியுற்றார்.
இருவரும் தனது சொந்த ஊரிலே தோற்றனர். .....
பலே பாண்டியா படத்தின் பாடலுக்காக படத்தின் இயக்குனர் பி ஆர் பந்தலு கவியரசு கண்ணதாசன் தேடி வந்தார் மக்களிடம் தனது கோபத்தை எப்படி காட்டுவது என்று காத்திருந்த கண்ணதாசனுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது
தான் எமுதிய ஒரு பாடல் பி ஆர் பந்துலுவிடம் கொடுத்தார். அந்த பாடல் பலே பாண்டியா படத்தில் இணைக்கப்பட்டது
யாரைக் எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல என்ற பாடல்தான் அது
இந்த பாடலை நன்றாக கவனித்தால் தெரியும் தனது தோல்விக்கு காரணம் என்னவென்று குறிப்பிட்டுள்ளார்,
அதே நேரத்தில் அறிஞர் அண்ணா தோல்வி கண்டு அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார் அண்ணாவை விட வாத்தியார்தான் அதிக வேதனை அடைந்தார். .
அண்ணாவின் மனதுக்கு ஆறுதல் கூறுவது போல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கூறினார்
தருமம் தலைக்காக்கும் படத்தில் வரும் ஒரு பாடலில் இரண்டு வரிகள் இனைத்து அண்ணாவுக்கு ஆறுதல் கூறுவது போல் எமுதிக்கொடுத்தார்.அந்த பாடல்தான்
மூடு பனி குளிருடுத்து முல்லை மலர் தேனடுத்து என்ற பாடலில் வரும் ஒரு வரி தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு
காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பது இல்லை
என்ற வரி அண்ணாவை வாத்தியார் சமாதானம் கூறுவது போல் அமைந்திருக்கும்
தனக்காக தான் எம் ஜி ஆர் இந்த வரி இனைத்து உள்ளார் என்று அண்ணா தன்னுடன் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். .
1964 ம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணா வாத்தியார் பற்றி இப்படி கூறியுள்ளார்.
பணம் இருப்பவர்கள் எல்லாரும் தர்மம் செய்யலாம் அதன் பெயர் தர்மம் அல்ல
யாருக்கு தர்மம் செய்தால் அதன் பயன் அடைவார்கள் என்பதை அறிந்து தர்மம் செய்யவேண்டும் அதுதான் உண்மையான தர்மம் தலைக்காக்கும். அதை எம் ஜி ஆர் ஒருவர் தான் செய்துக்கொண்டிருக்கிறார் .அவர் செய்யும் தர்மம் அவரை என்றைக்கும் காப்பாற்றும். .
தர்மம் தலைக்காக்கும் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர்க்கு அந்த வார்த்தை பொருந்தவில்லை. .பாடல் எழுதியவர் கவியரசு கண்ணதாசனுக்கு பொருந்தவில்லை. .பாடல் பாடிய பின்னனி பாடகர் T M சௌந்தராஜன்க்கு மொருந்தவில்லை படத்தில் நடித்த கதாநாயகன் எம்ஜிஆர் ஒருவருக்குத்தான் அமைந்தது பொருந்தியது இது எல்லாருக்கும் அமையாது பொருந்தாது
அது உண்மையான தர்மம் அதனால்தான் அமைந்தது என்று புகழாரம் சூட்டினார்
தொடரும். ...தொடரும். ..தொடரும். ....... Thanks...
-
17th April 2020, 08:19 AM
#3120
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 19
தாய்க்கு பின் தாரம் தாய்சொல்லைத்தட்டாதே தாயைக் காத்த தனயன் திருடாதே நல்லவன் வாழ்வான் தர்மம் தலைக்காக்கும் நீதிக்குப்பின்பாசம்
பெற்றால் தான் பிள்ளையா நீதிக்கு தலை வணங்கு பல்லாண்டு வாழ்க
இன்று போல் என்றும் வாழ்க நல்லதை நாடு கேட்கும் படத்தின் பெயர் கூட பிறருக்கு புத்தி மதி கூறுவது போல் அமைந்திருக்கும் அதுதான் புரட்சித்தலைவரின் மிக பெரிய சமூக சிந்தனை ஆகும் அதன் படி வாழ்ந்து காட்டியவர் .. எல்லோரும் அனுபவத்தை கூறுவார்கள் அறிவுரை சொல்வார்கள்
ஆனால் அதன் படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் அதுதான் மற்றவர்களுக்கும் வாத்தியார்க்கு உள்ள வேற்றுமை ஆகும். .தர்மம் தலைக்காக்கும் என்று படத்தின் பெயர் வைத்தது பெரிய விஷயம் இல்லை. அது தான் வாத்தியார் புகழுக்கு இன்று வரை புகழ் சேர்த்துக்கொண்டிருக்கிறது.
படத்தில் ஏழு பாடல்கள் சூப்பர் ஹிட் நான்கு சண்டைக்காட்சிகள் மிரள வைக்கும்
திகில் சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய மான பாடல்கள் இரண்டு ஒன்று தர்மம் தலைக்காக்கும் மற்றொன்று
ஒருவன் மனது ஒன்பதடா என்ற பாடல் இப்பாடலில் வரும் கருத்துக்கள் இனி எத்தனை தலைமுறை வந்தாலும் அவர்களுக்கு பொருந்தும். .
தர்மம் தலைக்காக்கும் என்ற பாடல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது...
ஒருவன் மனது ஒன்பதடா பாடல் பணக்கார வர்க்கத்தையும் படித்தவர்கள் வறட்டு கர்வத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார். .அதனாலே பாடலில் வரும் கடைசி இரண்டு வரிகள் நீக்கப்பட்டு இருக்கும். ..அப்படி நீக்கப்பட்ட வரிகள் இதோ
பட்டம் பதவி பெற்றவர்கள் மட்டும் பண்புயோடையர் ஆவாரா
பள்ளி படிப்பு இல்லாத மனிதர்கள் பகுத்தறிவு யின்றி போவாரா
இப்பாடல் வீடியோ ஆடியோ எதிலே கேட்டாலும் இவ்வரிகள் நீக்கப்பட்டு இருக்கும்
பொதுவாக புரட்சித்தலைவர் பாடல் என்றாலே பாமரமக்களுக்கு சாதகமாகவும்
பணக்காரர்களுக்கு மாதகமாவே அமையும். அவருடைய ஒவ்வொரு பாடலின் கருத்துக்கள் கேட்டால் நான் சொல்வது உண்மையா இல்லையா என்பது புரியும்
இப்படி புரட்சித்தலைவர் படத்தின் பெயர் பாடல் கதை கதாபாத்திரம் அனைத்தும் புரட்சிகரமான கருத்துக்களை கூறி இருப்பதால் தான் அவருக்கு
புரட்சித்தலைவர் புரட்சிக் நடிகர் என்ற பொருத்தமாக அமைந்தது. .
இது நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லாத ஆச்சரியம் அதிசயம் ஆகும்
எமது அடுத்த பதிவில் சின்னப்பர் தேவர் அடுத்த வெற்றி படமான நீதிக்குப்பின்பாசம்படத்தின் சாதனை வரலாறு தொடரும்
தொடரும் தொடரும் தொடரும்.... Thanks...
Bookmarks