Page 114 of 402 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீட்டு பழைய காவியங்களின் எண்ணிலடங்கா முறைகள் திரையீடு காண்பதில் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "ரிக்க்ஷாக்காரன்" நாளை 01-09-2019 முதல் மதுரை - ஜெயம் dts தினசரி 3 காட்சிகள் ... வெற்றி வலம் காண்கிறார்........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1132
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ����24.3.1973ல் கோவை-கர்னா டிக்கில் & நாஸில் ' ரிலிஸ்' ஆன இப்படம் பாரத விலாஸ் 56 நாட்கள் மட்டுமே ஓடியது. முன்பெல்லாம் படம் ஓடி எடுத்த பிறகு மீண்டும் 2, 3 மாதங்களுக்கு பிறகு சிட்டிக்கு வெளியே போடுவார்கள். அப்படி 'சிவசக்தி'ல் போட்டபோதுதான் அந்த படம் 100 நாளை சென்னை, மதுரை, திருச்சியில் மட்டுமே தொட்டுள்ளது. மேற்கண்ட , விளம்பரம் நிச்சயமாய் 100 கிடையாது. திருத்தி உள்ளது அப்பட்டமாக வே தெரிகிறது. கோவையில் ஓடிய naatkal56மட்டுமே!������............. Thanks mr. Kamala kannan, Covai...

  4. #1133
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம், விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச்சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, இடதுபுறமாக இருபது கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார்...அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம்...காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினார்... அந்த உதவியாளரும் அப்படியே செய்தார்...காரும் புறப்பட்டுவிட்டது...

    தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
    அதைக்கண்ட நம் வள்ளல் புன்வுறுமல் பூத்தார்...

    உதவியாளர், எம்ஜிஆரிடம், " ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள் ? என வியப்புடன் கேட்க ...

    அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. #அந்தப் #பாட்டியோட #தன்னம்பிக்கைக்கு, #தளராத #முயற்சிக்கு, இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கிற, அந்த #வயதான #தாயை #கௌரவிக்க ஆசைப்பட்டேன்" என்றார்...

    இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...

    இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, "யார் மூலம் பணம் வருகிறது? " என்பதை கண்டறிய எண்ணினார்...

    ஒருநாள்...இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி, பணத்தைப் போட யத்தனித்து, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்...

    அங்கே...எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
    " #என் #மவராசா ! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா ? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே ! #தினம் #ஆயிரம் #குடும்பங்களுக்கு #படியளக்கிற #மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட " என்றார்.

    அதற்கு எம்ஜிஆர், "#நான் #உங்களுக்கு #கொடுத்ததை, #உங்க #மகன் #கொடுத்ததா #நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் " என்று சொல்லி விடைபெற்றார்...

    தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு "முதியோர் பென்சன் திட்டத்தை" அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்

    அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...

    இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் பொன்மனச்செம்மல்!............. Thanks..........

  5. #1134
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ����✌����மொரிஷியஸ் தீவில் அரசு சார்பில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மக்கள் தலைவர் ஒருவருக்கு சிலை திறக்கப்பட உள்ளது. இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பேறு. ������.......... Thanks..........

  6. #1135
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணர் N. S. K. அவர்களின் நினைவு நாள் நேற்று என்று, இன்றுதான் படிக்க நேரிட்டது. கலைவாணர் போன்ற வள்ளல் பெருமான்களை தினமும் நினைத்து, வணங்கி அஞ்சலி செலுத்தலாம். தமிழ்த்திரை உலகி ல் மனிதாபிமானத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள் பெருமதிப்பிற்குரிய கலைவாணர் அவர்களும், இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களும்தான். இவர்கள் இருவரையும் தமிழ்த்திரை உலகத்தை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் என்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும். யார் மறந்தாலும்,
    நம் புரட்சித்தலைவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஐயா கலைவாணர் அவர்களை நாம் மறக்காமல் என்றும் மனதில் வைத்து வணங்கி வழிபடுவோம்.
    பாஸ்கரன்,
    கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........ Thanks...

  7. #1136
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மலேசியா நாட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாடும் ரத்த உறவுகள் மட்டுமின்றி மற்ற நல் உறவுகள் அனைவருக்கும் இன்றைய "மலேசியா மண்ணின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "��
    வாழ்த்துக்களுடன்....
    அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (பெங்களூர்)
    பொறுப்பாளர்கள்... எம்ஜிஆரின் காலடி நிழல்
    கானா க. பழனி
    எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா
    மு. தமிழ்நேசன்
    சம்பங்கி GSR
    க. ராஜசேகர்
    பிரகாஷ் @ முருகன்
    ந. பாஸ்கரன்
    சார்லஸ் மூர்த்தி......... Thanks...

  8. #1137
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.

    ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட

    'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..

    நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..

    உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.

    அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
    M.G.இராமச்சந்திரனைப்
    போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.

    உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..

    “எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."

    -என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...

    இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..

    “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”

    உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
    S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..

    “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.

    சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR

    இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்

    “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.

    “கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.

    திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

    MGR வாதம் செய்யவில்லை ;
    வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
    “நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”

    SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
    “சரி. நீங்க சாப்பிடுங்க.”

    இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
    அதன் பின் நடந்ததை
    நாடே அறியும்.

    “யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.

    ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.

    சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”


    *இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*........ Thanks...

  9. #1138
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

    "பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

    எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    "குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.

    கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.

    1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

    படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.

    `கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

    இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

    "படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.

    பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.

    எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.

    அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.

    சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.

    "இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.

    என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

    தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்
    நன்றி
    சென்றாஸ்.......... Thanks...

  10. #1139
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நன்றி - குங்குமம் வார இதழ்

  11. #1140
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    திருச்சி கெயிட்டி திரையரங்கம்

    மக்கள் திலகத்தின் பக்தர்கள்

    ராமன் தேடிய சீதை திரைக்காவியத்தை காண வந்தபோது

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •