Page 181 of 402 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1801
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1802
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1803
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

    தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

    அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

    சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
    "இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

    ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
    டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

    அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
    இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
    புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
    பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது .....!.......... Thanks...

  5. #1804
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இவர் கண்ட இயக்கம் வெற்றி பெற்றத்துக்கு கண்டும் காணாதது போல இருந்த அத்துணை எம்ஜியார் போலிகளுக்கும் நன்றி நன்றி...கேட்டா. அம்மா பிடிக்காது என்பார்...ஏதோ இவர்கள் ஆதி காலத்தில் கிணறு வெட்டியது போல் ரசீது எங்கே படம் எங்கே என்றால் இதோ இருக்கு எங்களிடம் எம்ஜியார் படம் என்பார். நான் பார்த்தால் பைத்தியக்காரன். உங்க பாட்டானுக்கும் வைத்தியம் பார்ப்பேன்

    எம்ஜியார் அவர்களை 1972 முதல் 1987 வரை உங்களுக்கு பிடித்து இருக்கும் அல்லவா எங்கே ஆதாரம் காட்டு.

    சரி அதை விடு எல்லோரும் அரசியல் சார்ந்து இருக்க முடியாது.. ஒரு இடத்தில் ஆவது அவர் நிழல் பட்ட அடையாளம் கூடவா இல்லை... அப்போ

    அதைத்தான் கேட்டு குமுறும் எம்ஜியார் பக்தர்கள்... வேண்டாம் விடு...இப்ப ஏன் அவர் கண்ட இயக்கத்தை விமர்சிக்கிறாய்...உங்களுக்கு அந்த உரிமை இருக்கா...

    எல்லாம் பிடித்தா நடந்து கொண்டு இருக்கு...அவருக்காக வண்டி ஓடிக்கொண்டு இருக்கு.. இன்னும் ஓடும்...ஏதோ சின்ன பிள்ளை தனமா இருக்கே...உங்கள் நிலை...

    ஆதரிக்கும் மனம் இல்லை.. எதிர்த்து நிற்க கூட்டம் கூட்ட நேரம் காலம் இருக்கு.

    நடக்கட்டும் பலிக்காது உங்கள் எண்ணம்.
    நன்றி

    வாழ்க எம்ஜியார் புகழ். திரையிலும்...அரசியல் துறையிலும்....நன்றி........... Thanks...

  6. #1805
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சன் டி.வி.யில் இன்றைய பட்டிமன்ற நிகழ்ச்சி , திரைப்படம் வெற்றி அடைவது பாடல்களினாலா* அல்லது கதையினாலா .----------------------------------------------------------------------------------------------------------------------------

    நிகழ்ச்சியில் கவிஞர் பா.விஜய்* பேசியதாவது :

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த பாடல்களை பல கவிஞர்கள் எழுதியுள்ளனர்.குறிப்பாக , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கருத்தாழமிக்க பாடல்களை எழுதி* தானும் புகழ் பெற்று, எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் புகழும், பெருமையும் சேர்த்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரான பின்பு அளித்த பேட்டியில் ( உண்மை சம்பவம் ) நான் அமரபோகும் முதல்வர் நாற்காலிக்கு நான்கு கால்கள் என்றால் நிச்சயமாக ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களையே சாரும் என நன்றி பாராட்டினார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் உதவின .



    நடுவரான திரு. சாலமன் பாப்பையா , பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்ததாகவும், தனக்கு மிகவும் பிடித்த பாடல் படகோட்டி படத்தின் , தரைமேல் பிறக்க வைத்தான் என்பதுதான் என்றும், எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை என்று குறிப்பிட்டார் .

  7. #1806
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks......

  8. #1807
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 27-10-1962 -27-10-2019 57 ஆண்டுகள் நிறைவடைந்து... 58 ம் வருடம் தொடக்கம்... கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "விக்கிரமாதித்தன்" காவியம் வெளியான திருநாள்... முதல் வெளியீடு... பின்பு மறு வெளியீடுகளிலும் பட்டையை கிளப்பிய வசூல் திலகம்...

  9. #1808
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1809
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1810
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •