Page 307 of 402 FirstFirst ... 207257297305306307308309317357 ... LastLast
Results 3,061 to 3,070 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3061
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

    இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

    முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

    ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

    கொள்கைப் பாடல்
    இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

    அதனை இப்போது காண்போமா?

    “இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
    உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

    இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

    அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

    ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

    இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

    “புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
    பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
    பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
    இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
    உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

    அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

    பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

    இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

    நெஞ்சிருக்கும் வரைக்கும்!
    ‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

    பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

    “சித்திரத்தில் பெண்ணெழுதி
    சீர்படுத்தும் மாநிலமே!
    ஜீவனுள்ள பெண்ணினத்தை
    வாழவிட மாட்டாயோ?”

    பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

    இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

    “நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
    நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
    நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
    நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

    எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

    இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

    இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

    “கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
    குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

    - என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

    “வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

    என்றும்,

    “தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

    என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3062
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தப்*பாடல்*திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.


    தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப்*பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.


    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு


    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு


    ��திரைப்படம்: ஒளிவிளக்கு

    ��இயற்றியவர்: கவிஞர் வாலி

    ��இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ��பாடியவர்: பி. சுசீலா

    ஆண்டு: 1968


    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு

    தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    நம்பிக்கையின் ஒளிவிளக்கு


    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா!


    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன்


    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை

    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?


    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன்


    மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்

    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?

    உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்

    மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

    இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!

    இறைவா! இறைவா! இறைவா!✍����........ Thanks...

  4. #3063
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் முதல்வராக இருந்த. காலத்தில் தி.மு.க.என்ற கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும்.அவர் மீது தனிப்பட்ட மதிப்பு மரியாதை வைத்திருந்தனர் அதனால் எந்த ஒரு போராட்டம் மறியல் என்றாலும் புரட்சித்தலைவரிடம் அனுமதி கேட்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் எப்போதும் எதாவது ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பத்து பதினைந்து பேர் ஒன்று கூடி புரட்சித்தலைவரிடம் அனுமிதி கேட்க செல்வார்கள் அப்படி செல்பவர்கள் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடைய விருந்தோம்பல் உபசரிப்பு அன்புடன் கட்டி அனைத்து அவர்களை வரவேற்கும் பணிவு நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்பதற்கு முன்பு இவர் கேட்டு ஆச்சரியம் படசெய்துவிடுவார் அதனாலே அவர்கள் வந்த நோக்கம் மறந்து திரும்பிவிடுவார்கள் இப்படி ஒவ்வொரு முறையும் சென்று புரட்சித்தலைவரின் அன்பில் கட்டுப்பட்டு திரும்புவது வழக்கமாகியது ..இப்படியே சென்றால் நாம் போராட்டம் நடத்துவது எப்படி நம்ம எதிர்ப்பு எப்படி காட்டுவது என்பது புரியாமல் தவித்தனர்.பிறகு ஒரு முடிவு செய்தனர். பத்து பதினைந்து பேர் போனால்தான் எம். ஜி. ஆர் விருந்தோம்பல் உபசரித்து அனுப்பிகிறார் .அதே ஐநூறு ஆயிரம் பேர் ஒன்றாக சென்றால் அவரால் எப்படி அனைவருக்கும் உணவு கொடுக்க முடியும். அதனால் ஒரு முறை அப்படி செய்வோம் என்று முடிவு செய்து. புரட்சித்தலைவர்க்கு எந்த வித தகவலும் சொல்லாமல் தீடீரென்று ஒரு நாள் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஒன்று கூடி புரட்சித்தலைவரின் அலுவலகம் நோக்கி மிக பெரிய பிராண்டமான ஊர்வலமாக சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் எதோ கோரிக்கை வைக்கவேண்டும் என்று மிக பெரிய ஊர்வலம் உங்களைக் நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி புரட்சித்தலைவர்க்கு தெரிவிக்கப்படுகிறது. உடனே தனது உதவியாளர் அழைத்து வந்தவர்கள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டாம் அவர்களது கோரிக்கை எதுவாயினும் நிறைவேற்றுகிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன். அது வரை அருகில் உ ள்ள திருமணம் மண்டபத்தில் இருக்க சொல்லுங்க என்று தகவல் கூறி அனுப்பினார்.

    உதவியாளர் புரட்சித்தலைவர் சொன்ன தகவலை ஊர்வலம் வந்தவர்களிடம் கூறுகிறார். அவ்வளவு பேரும் அருகே உள்ள திருமணம் மண்டபம் சென்றனர்.
    அங்கே சென்றவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியானார்கள் காரணம். வந்துருந்த ஆயிரம் பேருக்கும் பிரமாண்டமான சமபந்தி அறுசுவை உணவு பரிமாறு பட்டு தயராக இருந்தது. அங்குள்ளவரிடம் கேட்டதற்கு தலைவர்தான் நீங்கள் வருவிர்கள் என்பதால் உணவு தயாராக இருக்க சொன்னார். என்றனர். ஆயிரம் பேரும் வயிறு நிறைவுடன் உணவு உண்டு சென்றனர். உண்ட உணவுக்கு நன்றி சொல்வதா .அல்லது போராட்டா கோரிக்கை வைப்பதா என்பது புரியாமல். தவித்தனர் .

    கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் இதைப்பற்றி புரட்சித்தலைவரிடம் கேட்டார். உங்களுக்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்பே தெரியுமா. இத்தனை பேருக்கு உணவு கொடுக்கப்பட்டது எப்படி சாத்தியம் ஆனது என்று கேட்டார். அதற்கு புரட்சித்தலைவர் கூறிய பதில்

    ஆயிரம் பேர் என்பது குறைவு அடுத்த முறை இருபாதாயிரம் பேரை அழைத்து வாருங்கள் அத்தனை பேருக்கும் உணவு தரகூடிய தகுதியை ஆண்டவன் உங்கள் மூலம் தருகிறார். உங்கள் கோரிக்கை போராட்டம் எல்லாம் என் கண்ணூக்கு தெரியல. வந்தவர்கள் எத்தனை பேர் பசியில் இருப்பார்கள் எந்த சூழ்நிலையில் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் .உங்கள் போராட்டம் கோரிக்கை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் வயிற்று போராட்டம் அந்த நேரத்தில் மட்டும்தான் நிறைவேற்ற முடியும்
    முதலில் வயிற்றுபசியை போக்குவோம் பிறகு மற்றதை பார்ப்போம் என்பதுதான் என் மனதில் தோன்றியது தவிர மற்றப்படி இனிமேல் தான் சிந்திக்கனும் என்றார்

    புரட்சித்தலைவர் பதிலை கேட்டதும். கல்யாணசுந்தரம் தன்னையறியாமல் புரட்சித்தலைவர் கைகளைப்பிடித்து கண்ணீர் மல்க முத்தமிட்டார்........ Thanks...

  5. #3064
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் ஏன் பிறந்தேன் படம் பார்க்காத கண்கள் இல்லை. இருந்தாலும் அதில் உள்ள சிறு கருத்துக்கள் மட்டும் கூறுகிறேன்.

    படத்தின் கதைப்படி நடிகை காஞ்சனா அயல்நாட்டில் இருந்து வருவார். கால்கள் ஊனமுற்றவராக இருப்பார். எத்தனையோ வகை வைத்தியம். ,மருத்துவர்கள் பார்த்தும். அவர் கால்கள் குணமாகாது. அப்படியிருக்கையில் புரட்சித்தலைவரைக் கண்டதும் அவருடன் பழகியதும் அவரது கால்கள் குணமாகும் என்ன காரணம். ? அதுதான் அங்கே கொடுக்கப்பட்ட கருத்தாகும், ,,,.....

    எப்படிப்பட்ட நோயாளியாக இருந்தாலும். எந்த வகை நோயாக இருந்தாலும்
    நோயாளியிடம் காட்டும் உண்மையான அன்பு. .பாசம் அவர்களுடன் பழகும் விதமும்தான் நோயை குணப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகதான் இக்காட்சி யாகும்.

    மருத்துவரிடம் சென்று குணமாகாத. நோய். எத்தனையோ கோயில்கள் சென்று குணமாத நோய் ஒருவருடைய அன்பு குணமாக்கும்

    மருந்தைவிட அதைக் கொடுக்கறவங்க மனசைப் பொருத்துதான் நோயாளிகளின் நோய் போக்குவதற்கு உதவும்.

    இதைத்தான் புரட்சித்தலைவர் நான் பாடும் பாடல் காட்சி மூலம் நமக்கு இக்கருத்தை கூறுகிறார். ....... Thanks........

  6. #3065
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் புரட்சித்தலைவரும் கலைவாணரும் போட்டிபாடல் அனைவரும் அறிந்ததே
    பாடலில் வரும் ஒரு வரி
    என் .எஸ் கே....கேட்கும் கேள்வி, .
    உலகத்திலேயே..பயங்கரமான ஆயுதம் எது?

    புரட்சித்தலைவர் பதில். .நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு

    இந்த பாடல் எழுதும் போது நாக்கு என்பதைப் மட்டுமே குறிப்பிட்டு எழுதினார்.

    பாடல்வரினை கவனித்த புரட்சித்தலைவர். நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் சரியாகத்தான் உள்ளது இருந்தாலும் ஒரு மனக்குறை

    பாடல் வரியில் நாக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள் நாக்கு நன்மை தீமை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு வார்த்தை வாழ்த்துக்கள் கூறுவது. வாயாலே. புகழ்வது. நல்ல வார்த்தைகள் உதிர்வது. நல்ல கல்வி கற்பது நல்ல பாடல்கள் பாடுவது வாக்கு தவறாமல் நடப்பது இப்படி எத்தனையோ நன்மை தரும் நல்ல செயல்கள் நாக்கு தான் பயன் படுத்தக்கிறோம் .நீங்கள் எழுதிய ஒரு வரியில் நாக்கினால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் மறக்க படுகிறது. மறைக்கப்படுகிறது. அதனால் நாக்கு என்ற வார்த்தையை மட்டும் மாற்றி வேறு வார்த்தைகளில் எழுதுங்கள் அப்படியில்லையென்றால் ஒருமைப் பன்மை வருகிறமாதிரி..குறிப்பிட்ட ஒரு இனம் குறிப்பிடப்படி எழுதுங்கள் என்றார்

    புரட்சித்தலைவர் கூறிய கருத்துக்களையும் சுட்டிக்காட்டியவிதமும் வியர்ந்து நெகிழ்ந்து போனார் பட்டுக்கோட்டையார். அதன் பிறகுதான்
    நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகளின் நாக்கு என்று மாற்றி எழுதி புரட்சித்தலைவரிடம் காண்பித்தார்.புரட்சித்தலைவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது பட்டுக்கோட்டையாரைக் வெகுவாக பாராட்டினார்....... Thanks...

  7. #3066
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...

    எம்.ஜி.ஆருக்கு வாரிசு இல்லை
    குடும்பம் இல்லை என்று கூறும் அறிவுஜீவிகளின் கவனத்திற்க்கு?

    அரசியலில் இருந்து தன் குடும்பங்களை தள்ளியே வைத்த எங்களின் புரட்சி தலைவரின் சரித்திரத்தில் மேலும் ஒரு வைரக்கல்...

    ஆம் அவர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும் அவர் இளம் வயதில் தவழ்ந்த
    கேரளாவில் உள்ள வடவனூர் வீட்டை
    அவருடைய தம்பியாக போற்றப்படும் வாழும் மனிதநேயம் உலக எம். ஜி. ஆர் பேரவை தலைவர் அண்ணன் திரு."சைதை துரைசாமி" அவர்களின் சீறிய நடவடிக்கையால் நினைவு இல்லமாக புதுப்பிக்கப்பட்டு நாளை 26.02.2019 அன்று திறக்கப்பட்டது...
    விழாவில் புரட்சி தலைவரின் அண்ணன் பெரியவர் சக்கரபாணி குடும்பத்தினருக்கும் புரட்சி தலைவரின் பக்தர்களால் மரியாதை செய்யப்படுகிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்...

    மறைந்து இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு மட்டுமல்ல தான் வாழ்ந்த வீட்டுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இன்றும் பெருமையை தேடிக்கொடுக்கும் எங்கள் புரட்சி தலைவர் மனிதக்கடவுள்தான் யாருக்கு கிடைக்கும் இந்த மகத்துவம்?..

    ஒன்றை மட்டும் உறுதியாகவும், தெளிவாகவும் கூறிக்கொள்கிறேன்..
    புரட்சி தலைவர்
    தம்பியாக போற்றப்படும் அண்ணன் "சைதையார்" உள்ளவரையிலும்...

    தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் வாழும் தமிழர்கள் இருக்கும் அத்தனை இடத்திலும் பிள்ளைகளாகவும்,பேரன்களாகவும் பக்தர்ளாக நாங்கள் உள்ளவரையிலும்,
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் பெற்று விளங்கும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்....

    எம்.ஜி.ஆர் பக்தன்
    A.A. பாலு... Thanks...

  8. #3067
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் யாரையும் சாப்பிட்டீர்களா சாப்பீடுர்களா என்று கேட்க மாட்டார் அதற்கு காரணம் 1957 ம் ஆண்டு காமராஜர் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீடு திரும்ப. இரவு 12 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது அவருடன் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெகுநேரம்ஆகிவிட்டதால் காமராஜர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எண்ணி காமராஜரிடம் அனுமதி கேட்டனர் அவரும் சம்மதம் கூறி தனது வீட்டீர்க்கு அழைத்து வந்தார் வீட்டீர்க்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.வந்தவர்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் காமராஜர் வீட்டு உணவு ருசி அறிய. சாப்பிடவில்லை என்றனர். உடனே தனது வீட்டு பணியாளர் அழைத்து அவர்களுக்கு உணவு பறிமாற சொன்னார் அவர்களுடன் காமராஜரும் அமர்ந்து உணவு உண்டார்..மறுநாள் அவர்கள் சென்ற பிறகுதான் காமராஜர்க்கு நினைவு வந்தது நேற்று நமக்கு உணவு அளித்த பணியாளர் உணவு உண்ணவில்லையே என எண்ணி வருந்தினார் தனது வரட்டு கௌரவத்தால் அவரை பட்னி போட்டமே இனி கௌரவத்துக்காகவும் தன்மானம்த்துக்காகவும் கடமைக்காகவும் சுயநலத்துக்காகவும் யாரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்க கூடாதுஎன்று முடிவு எடுத்தார் அன்றுமுதல் அதைகடைப்பிடித்தார் (காமராஜர் வீட்டீல் அவரும் பணியாளர் மட்டும் இருப்பதால் இரண்டு பேர்க்குதான் உணவு தாயரிக்கப்படும் என்பது குறிப்பிடக்தக்கது.)இதே பத்து ஆண்டுகள் கழித்து 1967 ம் ஆண்டு ஒருமுறை காமராஜரைக் காண புரட்சித்தலைவர் அவரது அலுவலகம் வந்தார்.அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் 100 க்கு மேற்ப்பட்டவர்கள் கூடிருந்தனர் சில கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்.ஜி ஆர் வருகிறார் என்பதை அறிந்ததும் காமராஜர் சென்று அவரை வரவேற்று சாப்பிட்டீர்களா என்ன சாப்பிடுர்கள் என்று கேட்டார் இதுவரை யாரையும் அப்படி கேட்காத காமராஜர் புரட்சித்தலவரை மட்டும் கேட்டதை எண்ணி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் இதை சற்று கவனித்த புரட்சித்தலைவர் அப்படி என்ன அவர் கேட்டார் நீங்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார் அதற்கு அவர் காமராஜர் பற்றியும் அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்தார் ..இதே சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜரிடம் கேட்டனர்.ஐயா நீங்கள் யாரையும் இப்படி கேட்டதில்லை ஆனால் எம் ஜி ஆரிடம் கேட்டதற்க்கு என்ன காரணம் ? அதற்கு காமராஜர் தந்த விளக்கம் பொதுவா எம் ஜி ஆர் யாரைப் பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது வழக்கம் கேட்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அலாதி பிரியம் கொண்டவர் இது எம் ஜி ஆரிடம் மட்டும் உள்ள. தனி கலை அதுமட்டும் அல்ல அவர் வீட்டில் உணவு உண்டவர்கள் லட்சம் பேர்களுக்கு மேல் இருப்பார்கள் அதையே தனது லட்சியமாக கொண்டு வாழ்பவர் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உணவு அளித்தால் ஊருக்கு உணவு அளித்தற்கு சமம் அது மட்டும் அல்ல நான்தான் அவரை சாப்பிட்டிர்களா என்று கேட்டேன் ஆனால் அவர் நமக்கு உணவு அளிப்பார் பாருங்கள் எம் ஜி ஆர்க்கு மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எதையும் யாரிடமும் தனககு என்று கேட்க மாட்டார் என்று காமராஜர் சொல்லிமுடிக்கும் முன் அங்கே நுற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு எம் ஜி ஆர் உணவு வரவைத்துருந்தார் பார்த்தீர்களா நான் அவர் ஒருவரை கேட்டேன் அதனால் நூற்றுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உணவு கிடைத்தது என்றார் காமராஜர் இதைக்கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் எம் ஜி ஆர் பற்றி காமராஜர் எந்தளவுக்கு சராசரியா எடை போட்டு வைத்துள்ளார் என்பதை எண்ணி மகிழ்ந்தனர்....... Thanks.........

  9. #3068
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை பற்றிய ஒரு தகவல் - 6

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசிடர் கார் ஈரோட்டில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் M G R 4777 என்பதாகும்.

    இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-

    1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் T M X 4777. என்ற கார் இருந்தது எனக்கு M G R என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக M.G. R என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.

    உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் M G R 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 2 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில் இருந்த 3 கார்களில் ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.

    இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
    கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்
    பகிர்வுக்கு நன்றி Nallasiva சகோதரரே..... Thanks...

  10. #3069
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #விளம்பரம்

    ஒரு சமயம் எங்கள் சந்திப்பின்போது ‘மக்களிடையே ஏற்கனவே செல்வாக்குடன் விளங்கும் நடிகர்களுக்கு விளம்பரம் தேவையா, அல்லது வளரத்துடிக்கும் திறமைசாலிகளுக்கு அதிக விளம்பரம் அவசியமா? என்ற கேள்வி எழுந்தது.

    “செல்வாக்குடன் விளங்கும் கலைஞர்களுக்குப் பதிலாக வளரும் நிலையிலுள்ளவர்களுக்கு போதிய விளம்பரம் தந்தால், அந்த விளம்பரம் அவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, அவர்கள் முன்னேற உதவுமல்லவா? என்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    “செல்வாக்குடன் விளங்கும் உங்களைப் போன்றவர்களைப்பற்றி செய்திகளும் படங்களும் வெளியிடும்போது மக்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். அதே சமயம் புதுமுகங்களைப் பற்றியும், வளரும் கலைஞர்களைப் பற்றியும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை. ‘பேசும் படம்’ அதைத்தான் செய்கிறது என்று சொன்னோம்.

    ’அப்படியானால் புதுமுகங்கள் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

    இந்தப் பதில் எங்களுக்கு மிக்க மன நிறைவு தந்ததுடன், அவர் மீதுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் கூட்டியது.

    சக கலைஞர்களுக்காக - அவர்கள் அறியாமலேயே - அவர்களது நலனுக்காக முன்னின்று வாதிடும் தன்னலமற்ற செயல்வீரராக அவரைக் கண்டோம். தன் வாழ்நாளின் கடைசிவரை அப்படித்தான் அவர் விளங்கினார்.

    #நன்றி: பொம்மை சாரதி...... Thanks...

  11. #3070
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம்.மக்கள்.மேல் வைத்திருந்த அன்புக்கு இந்நிகழ்ச்சி ஒர் சமர்ப்பணம் ஆகும்

    ஆண்டு அமைச்சர் பெயர் சரியாக. நினைவு இல்லை ஆனால் நடந்தது உண்மை ஆகும்

    நமது தெய்வம் பொன்மனச்செம்மல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து தாயகம் திரும்பிய நேரம் சென்னை விமான நிலையத்தில் மக்கள் திலகம் காணவும் வரவேற்கவும் மக்கள் தலைகள் அலைகக்கடலன. காட்சியளித்தன

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் வசனம் போல்
    மாண்டுபோன முருகன் மறுபிறவி எடுத்து வருவதுப்போல் நமது பொன்மனச்செம்மல் மறுபிறவி எடுத்து வந்ததை எண்ணி மக்களிடம்

    மகிழ்ச்சி சந்தோஷம் ஆரவாரம் கைத்தட்டல் விண்ணை பிளந்தது மழை வெயில் பொருட்படுத்தாமல் தூக்கம் உணவு இல்லாமல் எண்ணம் செயல் எல்லாமே தலைவரை காண்பதே குறிக்கோள் என்று 24 மணி நேரம் காத்திருந்தனர்

    பொன்மனம் கொண்ட. பொன்மனச்செம்மல் விமான நிலையம் வந்ததும்
    மக்கள் கூட்டத்தையும் மக்களின் அன்பையும் கண்டு தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார்

    இவர்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன் ஏன் என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் இனி என்ன செய்ய போகிறன் என எண்ணி மனம் உருகினார் மக்களிடம் கையசத்து அவர்கள் அன்பையும் வாழ்த்தும் பெற்றுக்கொண்டு தியாகராய நகரில் தனது அலுவலகம் வந்துக்கொண்டீருந்தார்
    விமான நிலையம் கிண்டி சைதாப்பேட்டை வழியாக வரும் எங்கும் புரட்சித்தலைவர் கட்வுட்டு வரவேற்பு அலங்காரம் என்று வரிசையாக மாம்பழம் அலுவலகம் வரை அலங்கரிக்கப்ப.டு இருந்தது காரில் வரும் வழிஙெங்கும் இதைக்கவனித்துக்கொண்டுவந்தார் அலுவலகம் வந்ததும் இந்த விளம்பரம் செய்த அமைச்சர் பெயரைக்கூறி தன்னை வந்து சந்திக்க. சொன்னார்

    அமைச்சர்க்கு குஷி தாங்கல புரட்சித்தலைவரே தன்னை அழைக்கிறார் என்றால்
    நமக்கு பாரட்டு விழா நடக்கும் என. மகிழ்ந்து தலைவரைக் கான சென்றார் மற்ற. அமைச்சர்களுக்கும் இவர் மீது சிறிது பொறாமை ஏற்ப்பட்டது

    தலைவர் அமைச்சர் வந்தும் சாப்பிட்டீர்களா என்று கேட்டு முதலில் போய் சாப்பிடுங்கள் பிறகு என்னை வந்து பாருங்கள் என்றார் சாப்பிட்டு வந்த. அமைச்சரிடம் கேட்ட. முதல் கேள்வி ..என்னை வரவேற்க. செய்த. செலவு மொத்தம் எவ்வளவு என்றார் அதற்கு பணம் ஏது யாரிடம் வசூல் செய்தாய் உன் வருமானம் எவ்வளவு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபம் கொண்டார்
    என்னை பார்ப்பதற்க்காக. வெயில் மழை என்று பாரமல் மக்கள் காத்திருக்கிறார்கள் என்மனம் குளிரவைப்பதற்க்காக அவர்கள் வயிறு எரியவைத்தாயே அந்த பணத்தில் ஒரு லெமன்சாதம் தயிர் சாதம் புளிச்சாதம் வாங்கிக்கொடுத்துருந்தால் அவர்கள் வயிறு நிறைந்திருக்கும் அல்லது ரஸ்னா மோர் குளிர்பானம் கொடுத்துருந்தால் அவர்கள் மனம் குளிர்ருந்துருக்கும் இதுதான் நீ எனக்கு செய்யும் தொண்டு நீ என்னிடம் நல்லபெயரை வாங்க. வேண்டும் என்பதற்க்காக. மக்களிடம் எனக்கு கெட்ட பெயர் உருவாக்க. பார்த்தாயே இனி நீ என் கட்சிக்கு தேவையில்லை ஆடம்பரம் செலவு செய்பவர்களை ஒரு நாளும் நான் நேசிப்பதில்லை என்று கூறி அமைச்சர் பதவி முதல் அடிப்படை உறுப்பினர் வரை கட்சியே விட்டு நீக்கினார்

    மக்களுக்கு பணி புரியாதவர்கள் மக்களை மதிக்காதவர்களையும் மக்கள் திலகம் ஒருநாளும் மதிக்கமாட்டார் விரும்ப மாட்டார்...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •