Page 311 of 402 FirstFirst ... 211261301309310311312313321361 ... LastLast
Results 3,101 to 3,110 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3101
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம்....பாகம் ..1

    1961. ம் ஆண்டு வெளி வந்த தாய் சொல்லைத்தட்டாதே மாபெரும் வசூல் சாதனை புரிந்த சூப்பர் ஹிட் மெகா ஹிட் படம் என்பது யாவரும் அறிந்தது, .இப்படம் சாண்டோ M..M .சின்னப்ப தேவர்க்கு மறு வாழ்வு தந்த படம் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் பிரச்சினைகள் கடன்ங்கள் எல்லாம் தீர்த்து வைத்த ஒர் அற்புதமான திரைக்காவியம் சின்னப்பாதேவர் புரட்சித்தலைவரை ஆண்டவன் என்று அழைத்தது இப்படத்திற்கு பிறகுதான். எனக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் எம்.ஜி. ஆர். என்று பல தடவை சின்னப்பர் தேவர் கூறியுள்ளார்.அதற்கு காரணம் இத்திரைப்படம்தான் .இப்படம் உருவான வரலாறும் அதன் பின்னனியும் தான் இங்கே நான் கூற விரும்பிகிறேன் ..

    சாதாரண.ஒர் காட்சியில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த சாண்டோ M.M. சின்னப்பர் தேவர். அகில இந்தியாவே திரும்பி பார்க்க வைத்த மிக பெரிய தாயாரிப்பாளராக ஆக்கிய பெருமை நமது புரட்சித்தலைவரையே சேரும்...

    1956. ம். ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை ஏற்படுத்தி சின்னப்பதேவரின் அந்தஸ்து உயர்த்திய திரைப்படம்தான் தாய்க்கு பின் தாரம்.
    புரட்சித்தலைவர் ஒப்பந்தம் மீறி படத்தின் தெலுங்கு உரிமையே விற்றது..A.சென்டர் B. சென்டர் என்று ஏரியா பகுதிகளை கேட்காமல் மறு வெளியீடு செய்தது..இப்படி ஒரு சில விஷயங்கள் புரட்சித்தலைவரைக் கேட்காமல் சாண்டோ சின்னப்பர்தேவர் செய்த சில தவறுகளால். இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.

    அதன் பின் சாண்டோ சின்னப்பர்தேவர் கொங்கு நாட்டு தங்கம் பாண்டிய நாட்டு சிங்கம் யானை பாகன் வாழவைத்த தெய்வம் நீலமலைத்திருடன் என்று பல படங்கள் எடுத்தார் ..தாய்க்கு பின் தாரம் படத்திற்கு பின் சுமார் 10. 15. படங்கள் எடுத்துருப்பார். அந்தந்த கதாநாயகர்களுக்குத்தான் வாழ்வு தந்தது தவிர
    சாண்டோ சின்னப்பர்தேவர் பொருத்தவரைக்கும் படும் நஷ்டம் கடனாளி ஆனார் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இழந்தார்...அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் மூழ்கி போனார்..அப்போது அவர் மனைவி கூறினார்..நீங்கள் அண்ணணை போய் பாருங்கள் கண்டிப்பா நமக்கு வழி பிறக்கும்..என்றார் ...

    தொடரும் ... தொடரும் ......தொடரும் .......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3102
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M .M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 2. தொடர் ஆரம்பம்

    அலிபாபாவும் 40 திருடர்களும்.படத்தில் M.G.சக்ரபாணி மனைவி சந்தியா கூறுவார் அலிபாபா மனதை உங்களை விட நான் நன்கு அறிவேன். என்பது போல் சின்னப்பா தேவரின் மனைவி மாரி முத்தம்மாள் கூறினார்.அன்ணனைப் பற்றியும் அவர் குணத்தையும் உங்களைவிட நான் நன்கு அறிவேன். போய் பார்த்து விட்டு வாருங்கள் வழி பிறக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். குசேலன் கண்ணபிரானை காண சென்றதுப் போல் சின்னப்பதேவர்.நமது தெய்வத்தை காண சென்றார். நாடோடி மன்னன் படத்தின் அடுத்த காட்சிக்காக ஆலோசனையில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார் தனது குழுவினர்வுடன் நமது தெய்வம்.

    சின்னப்பதேவர் தன்னை கான வந்திருக்கிற செய்தி அறிந்ததும் ஒடி சென்று வாங்க முதலாளி எப்படி இருக்கிறீங்கள் என்று சின்னப்பதேவரை கட்டி அனைத்து அன்பு மழை பொழிந்தார் நமது தெய்வம். எதோ எதோ நினைத்துக்கொண்டு வந்த சின்னப்பதேவர்க்கு எம் ஜி. ஆரின் அன்பும் வரவேற்பும் கண்டு மெய்சிலித்துபோனார்.தான் வந்த நோக்கம் பிரச்சனை சொல்வதற்கு முன்பே புரட்சித்தலைவர் முந்திக்கொண்டு கூறினார். நான் உங்களுக்கு என்ன செய்யனும்.
    அதைமட்டும் கூறுங்கள் வேறு எதையும் கூற வேண்டாம். என்று கூறி வாங்க சாப்பிட்ட பிறகு பேசலாம் அழைத்து சென்று விருந்தோம்பல் உபசரிப்பு செய்து சின்னப்பதேவர் மனம் குளிற வைத்தார
    மீண்டும் நீங்கள் எனக்காக ஒரு படம் நடித்துக்கொடுக்க. வேண்டும். அப்பபடம் மூலம் நான் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து பழைய நிலைக்கு வந்துடுவேன்
    என்றார் சின்னப்பர்தேவர்..அதற்கு புரட்சித்தலைவர் தந்த பதில்....

    இப்போது நான் நாடோடி மன்னன் என்ற படம் எனது சொந்த தயாரிப்பில் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.இது எனது லட்சிய படம் பலர் சாவலுக்கு பதிலாக இப்படம் எடுக்கிறேன்.இப்படம் வெற்றியடைந்தால் எனது முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான் ஒரு வேளை தோல்வியுற்றா மீண்டும் சினிமாவில் நடிப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளோன் அதனால் வேறு வழியில் உங்களுக்கு
    உதவி செய்கிறேன். என்றார்.
    சின்னப்பதேவர் கூறினார் என் அப்பன் முருகன் அருளால் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவிர்கள் எனக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுப்பீர்கள் இது உறுதி
    என வாழ்த்துக்கூறி புறப்பட்டார் சின்னப்பர்தேவர்..

    மருதமலை முருகன் ஆலயம் சென்று நாடோடி மன்னன் படம் வெற்றியடைய வேண்டும்..எம்.ஜி. ஆர் கால்ஷீட் எனக்கு கிடைக்க வேண்டும். அவர் வெற்றியடைந்தால் நான் வெற்றி பெற்றதுப்போல் என முருகனிடம் வேண்டி
    பூஜை செய்தார்.சாண்டோ.M.M.A. சின்னப்பர் தேவர்....

    தொடரும் .....தொடரும் .....தொடரும் ......... Thanks...

  4. #3103
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M.M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 3.

    நாடோடி மன்னன் உருவாக பல காரணங்கள் உண்டு.அதற்கான முதல் காரணம். சிலவற்றை அறிவோம்.

    சொந்த படம் எடுத்தது. ...குண்டூ மணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.)( துப்பாக்கி சூடு நடந்தது) வெளிநாடு சென்று படபிடிப்பு நடத்தியது) அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்தது) ( அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது) இவையெல்லாம் புரட்சித்தலைவர் வாழ்வில் நடக்கனும் என்பதற்க்காக நடக்க வில்லை ..நடக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் நடந்தது.இதற்கான விளக்கம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் புரட்சித்தலைவர் எழுதியுள்ளார். அதன் தெளிவுரை இத்தொடர் முடிந்ததும் நானே எமுதிகிறேன். அந்த வகையில் நாடோடி மன்னன் படமும் சந்தர்ப்பம் சூழ்நிலையில் உருவானது அதற்க்கான காரணம்.

    குலேபகாவலி! ! அலிபாபாவும் 40 திருடர்களும்!! சக்கரவர்த்தி திருமகள் மலைக்கள்ளன் பதுமைப்பித்தன் மதுரை வீரன் போன்ற படங்களில் நடிக்கும் போது வாத்தியார் மீது தவறனா பழிகள் சுமத்தப்பட்டது.என்ன வென்றால் காட்சிகள் இப்படி அமைய வேண்டும் பாடல்கள் இப்படித்தான் எழுத வேண்டும் சண்டைக்காட்சியில் இவர்கள் தான் நடிக்க வேண்டும் என்று தலையீடுவது. ஒளிப்பதிவு எடிட்ங் ஒலிபரப்பு இப்படி எல்லா விஷத்திலும் எம் ஜி.ஆர் ஆலோசனை தலையீடுகிறார்.இவர் சொந்த படம் எடுத்தால் தெரியும். இவர் தயாரிப்பாளராக இருந்தால் இப்படி செய்வாரா.?? என பலர் பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க வாத்தியார் தந்த பதில். நீங்கள் என்ன படம் எடுக்கிறீங்க நான் படம் எடுத்தால் இதை விட பிரண்டாமா எடுத்துக்காட்டுகிறேன் என சவாலாக எடுத்ததுதான் நாடோடி மன்னன். அது மட்டும் அல்ல

    திரையுலகில் நாடோடி மன்னன் படத்துக்கு முன் எந்த நடிகரும் சொந்த படம் எடுத்து வெற்றி அடைந்ததில்லை..அதற்கும் முற்று புள்ளி வைக்கனும்.
    அதே நேரத்தில் தனது முமு திறமையும் வெளிக்காட்ட முடியல என்கிற ஏக்கம் வாத்தியாரிடம் இருந்தது ..அதற்கான நேரம் காத்திருந்து எடுக்கப்பட்ட படமே நாடோடி மன்னன்.

    அதற்க்காக வாத்தியார் பட்ட கஷ்டங்கள் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்சம் அல்ல இப்படி அரசியல்.? சினிமா.? வாழ்க்கை .இவை மூன்றும் இழக்க நேர்ந்தது..எத்தனையோ சிக்கல்கள் தாண்டி படம் எடுக்கப்பட்டது..வெளியிடுவதற்க்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
    (நாடோடி மன்னன் வரலாறு கூற ஒரு யுகம் வேண்டும்) அதே தேதியில் சிவாஜி நடித்த காத்தவராயன் படம் தேதி அறிவிக்கப்பட்டது.

    தொடரும் .....தொடரும் ....தொடரும் .......... Thanks...

  5. #3104
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M. M. A.சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் .பாகம். 4 .

    15. 8. 1958. வெளியீடு என்று தேதி அறிவிக்கப்பட்டது. நாடோடி மன்னன் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர். அதே நேரத்தில் காத்தவராயன் படமும் அதே தேதி அறிவிக்கப்பட்டது.அப்படத்தின் இயக்குனர்
    T. R. ராமண்னா கதாநாயகி T. R. ராஜகுமாரி கதாநாயகன் சிவாஜி மூவரும் புரட்சித்தலைவர் காண வந்தனர் ..அண்ணே உங்கள் படம் வெளியீடும் அதே நாளில் எங்க படம் வருகிறது.எங்களுக்காக ஒரு வாரம் தள்ளி வெளியீடுங்கள்.
    .எங்கள் படம் வாங்கும் வினியோஸ்தர்கள் உங்கள் படத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.இரண்டும் ஒரே நேரத்தில் வந்தால் எங்கள் படம் வாங்கும் .வினியோஸ்தர்கள் லாபம் குறைவாகத்தான் இருக்கும்.என எண்ணி பின் வாங்குகின்றர்.அதனால் எங்கள் படம் முதலில் வந்தால். வாங்கிய வினியோஸ்தர்கள்.லாபம் அடைவார்கள்.அதை வைத்து நாங்களும் படத்தை விற்று விடுவோம் என்றார் சிவாஜி.T. R. ராமண்னா T.R. ராஜகுமாரியும் தங்களுக்கு உள்ள இக்கட்டானச் சூழல் சொல்லினர் ..வாத்தியார் மனம்தான் பொன்மனம் அல்லவா..
    தன்னால் எந்த தயாரிப்பாளரும்.நடிகரும் ஏன் எந்த மனிதரும் நஷ்டம் அடைய விட மாட்டார். அதனால் ஒப்புதல் கொடுத்தார்.

    15. 8. 1958. அன்றுமுதல் முன்பதிவு செய்யப்படும் என்ற புதிய அறிவிப்பை முதல் முதலாக கொண்டு வந்தார்..22. 8. 1958 அன்று படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். காத்தவராயன் ஒருவாரத்துக்கு முன்பே வெளியிடப்பட்டது..படம்
    படுத்தோல்வி யானது.வினியோஸ்தர்கள் லாபம் அடையவில்லையென்றாலும்.பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தார்கள் ( காத்தவராயன் படத்தில் முதலில் வாத்தியார்தான் நடிக்கவேண்டிருந்தது.தனது கொள்கைக்கு எதிரான மாயாஜாலம் காட்சி இருந்ததால் நடிக்க மறுத்தார்))
    22. 8. 1958. அன்று நாடோடி மன்னன் வெளிவந்து மக்கள் எதிர்பார்ப்பு ஆவல் விட மிகப்பெரிய வெற்றி மகுடம் சூடியது.

    படத்தின் ரிசல்ட் அறிய புரட்சித்தலைவர். R.M .வீரப்பன் கலை இயக்குனர் அங்கமுத்து ஒளிப்பதிவாளர் G.K.ராமு. எடிட்டர் R.பாலசுப்ரமணியம். மற்றும் தனது உதவியாளர் அழைத்து. படம் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை அறிந்து வாருங்கள் என அனுப்பி வைத்தார்.
    இராமயணத்தில் ராமருக்கு தூதூவராக சென்ற அனுமன் போல். இந்த ராமச்சந்திரனுக்கு தூதூவராக சென்றார்கள்.நால்வரும் ..நால்வரும்.ஒவ்வொரு திசையாக சென்று படத்தின் ரிசல்ட் தெரிந்துக்கொண்டு வந்து சொன்ன பதில்...
    அண்ணே படம் பார்த்து விட்டு யாரும் வீட்டுக்கு செல்லவில்லை. மீண்டும் அடுத்த. காட்சிக்கு நிற்கிறார்கள் என்றதும்.புன்னகை வேந்தன் முகம் புன்னகைத்தது..

    தொடரும் ...தொடரும் ....தொடரும் ......... Thanks...

  6. #3105
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M.M.A.சின்னப்ப தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 5

    நாடோடி மன்னன் பல சாதனைகள் படைத்த சரித்திரம் படம்.எல்லோரும் வரலாற்றைத்தான் படமாக்குவார்கள். ஒரு படத்தை வரலாறாக மாற்றிய பெருமை வாத்தியாரால் மட்டுமே முடிந்தது.எல்லோரும் நடந்ததை.? நடக்கபோவதை.?மட்டுமே திரையில் காட்டுவார்கள்.....நடத்திக்காட்டுவேன்.நடத்துவே ன் நடப்பேன்.என்று திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் அதை நிருப்பித்தவர்.புரட்சித்தலைவர் ஒருவரே என்பதற்கு நாடோடி மன்னன் ஒர் உதாரணம் ஆகும்..

    ஆனந்தவிகடன் மற்றும் பல பத்திரிகைக்கள் இப்படி விமர்சனம் எமுதினார்கள்.
    படத்தை வாங்கிய வினியோஸ்தர்கள் ஒன்றுக்கு பத்து மடங்கு லாபம் பார்த்தனர்..
    ஆனால் படம் எடுத்த எம் ஜி. ஆர் க்கு நஷ்டம் ..மக்கள் எதிர்பார்த்தை விட அதிகமா
    நிறைவேற்றுப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்து திருப்தி அடையற படமல்ல குறைந்தது பத்து முறை பார்த்தால்தான்.மனம் ஆறுதல் அடைகிறது.தமிழ் திரையுலகத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. இப்படி எல்லா பத்திரிகையும் புரட்சித்தலைவர் புகழுக்கு மகுடம் சூட்டீனர்.படத்தின் வசூலை பற்றி குறிபிடும் போது. படம் வாங்கியவர்கள் படம் பார்த்தவர்கள். ஒரு பைசா முதலீடு போட்டு.1.50.ரூபாய் லாபம் பார்த்தனர்.இந்த காலத்துக்கு ஏற்ற படி சொல்லனும் என்றால்.
    100. ரூபாய் முதலீடு போட்டு 10'000. ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.இப்படி பல
    சாதனை வசூல். பத்திரிகை பாராட்டு பிரமாண்டம் மக்கள் வரவேற்பு எல்லாவற்றிலும்.நாடோடி மன்னன் மகுடம் சூட்டப்பட்டார்.1958.1959.இரண்டு ஆண்டுகளும் நாடோடி மன்னன் வசூல் பற்றியே பேச்சு.
    ஆலிவுட் பாலிவுட் கோலிவுட் அகிலம் முமுவதும்.நாடோடி மன்னன் பேச்சுத்தான்.

    1959 ம்ஆண்டு வாத்தியார் வாழ்வில் முதல் கண்டம் ஏற்பட்டது.குண்டுமணி தூக்கி கால் முறிவு ஏற்பட்டது.நாடோடி மன்னன் வெற்றியின் கண் திருஷ்டி என்றும் கூறலாம்.( .(அதனால் வாத்தியார்க்கு வந்த சோதனைப்பற்றி வேறு தொடரில் எழுதிகிறேன்).) 1960. ம் ஆண்டு விடுப்பட்ட படங்கள் பாக்தாத் திருடன் அரசிளங்குமரி மன்னாதிமன்னன் திருடாதே ராஜா தேசிங்கு. சபாஷ் மாப்பிள்ளை நல்லவன் வாழ்வான்.போன்ற படங்களில் நடித்து முடித்தார்..

    1961. ம் ஆண்டு சாண்டோ சின்னப்பர்தேவர்க்கு கொடுத்த வாக்குபடி தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் நடிக்க தொடங்கினார் நமது தெய்வம் .....

    தொடரும் ..........தொடரும் ......தொடரும் ......(மேற்கண்ட பதிவில் நாடோடிமன்னன் படத்தோடு வந்தது சாரங்கதாரா அல்லவா?! என பதிவாளரிடம் விளக்கம் அளிக்க கேட்டுளோம்)... Thanks...

  7. #3106
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M.M.A.சின்னப்பர் தேவர்வாழ்வில் நமது தெய்வம் பாகம் .6

    முதன் முதலாக வாத்தியார் C.I.D. காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம்.
    ஒரே மாதத்தில் முமு படபிடிப்பும் நடத்தி முடிக்கப் பட்ட முதல் திரைப்படம் ..
    நடிகர் அசோகனுக்கும்.! நடிகவேள் M.R. ராதாவுக்கும். நடிப்பில் பெரும் போட்டி
    வைத்து ரசிகர்களிடமே கேட்கப்பட்டு முடிவில் பல. பேர் அசோகன் என்றே
    தேர்ந்தெடுத்தனர்..மணப்பந்தல் படத்துக்குப் பின் தாய்சொல்லைத்தட்டாதே அசோகன். என்றே அழைத்தனர்.அந்தளவுக்கு அசோகன் நடிப்பு பேசப்பட்டது..

    போயும்.போயும்.மனிதனுக்கு என்ற.பாடலில்.வாத்தியார் போட்ட. மேக்காப் மிகவும்
    பிரபலமானது.ஆரம்பத்தில். படப்பிடிப்பில். உள்ளவர்களால்.கூட.கண்டுப்பிடிக்க
    முடியவில்லை.அந்தளவுக்கு வாத்தியார் மாறுவேடம் பிரமாதமாக அனைவோரையும் கவர்ந்தது..அசோகனுக்கும்.வாத்தியார்க்கும் நடக்கும்..சண்டைக்காட்சி.அனைவரையும்.பிரமிக்க வைத்தது. படம். பார்த்து விட்டு
    வரும் மக்கள் படத்தில் வரும் பாடல்களை பாடிக்கொண்டே வெளிவந்தனர்.
    அந்தளவுக்கு. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
    படத்தின் வசூல் சொல்ல வேண்டும் என்றால். தாய்க்குப்பின்தாரம்.படம்.அந்த..
    காலத்தில்.45.ஆயிரம் ரூபாயில் எடுக்கப்பட்டு.ஐந்து மடங்கு அதிகமாக வசூல் ஆனது..தாய் சொல்லைத்தட்டாதே 75 ஆயிரம் ரூபாயில்.எடுக்கப்பட்டு..பத்து. மடங்கு வசூல் அதிகமானது. அந்த ஆண்டு அதிக வசூல் சாதனைப் படைத்தது..

    சின்னப்பதேவர் பட்ட கடன் பிரச்சினை யாவும்.ஓரே.படத்தில் தீர்ந்தது.படத்தில் நடிப்பதற்கு முன் வாத்தியார் சின்னப்பதேவரிடம்.சம்பளம் பேசவும் இல்லை.
    வாங்கவும் இல்லை.படம் வசூல் வந்த பிறகு சம்பளம் கொடுங்கள் என்றார். அதேப்போல் விஜாயா வாகினி ஸ்டியோவில்.படப்பிடிப்பு நடத்துவதற்கான. வாடகையும் தர வில்லை. படம் வெற்றிப்பெற்ற பிறகு வாடகை தாருங்கள்.என்றார்
    நாகிரெட்டி ..ஆனால் படம் இவ்வளவு பெரிய வெற்றி வசூல் சாதனை புரியும் என்று
    சின்னப்பதேவர் எதிர்பார்க்க வில்லை. தாய்சொல்லைத்தட்டாதே படத்திற்க்கான
    சம்பளம் அடுத்தப்படம்.தாயைக்காத்த தனயன் படத்திற்க்கான சம்பளமும்.சேர்த்து
    கொடுத்தார்.வாத்தியாரிடம்.....அதேப்போல் இரண்டு படத்திற்க்கான ஸ்டியோ வாடகையம் சேர்த்து நாகிரெட்டியிடம் கொடுத்தார்..
    வசனகர்த்தர்.ஆருர்தாஸ். வாத்தியார்க்கு முதன் முதலாக வசனம் எழுதியப்படம்.

    சாதனைகள். தொடரும் ..........தொடரும் ............தொடரும் ............. Thanks...

  8. #3107
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M.M.A. சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம். பாகம். 7

    வெற்றி .வெற்றி .வெற்றி. என்று வாத்தியார் கூறுவதுப்போல்தான்.முதல் காட்சி.
    முதல் ஷாட். எடுக்கப்ட்டது..தாய்சொல்லைத்தட்டாதே.படத்தில் தொடங்கிய இந்த வெற்றி என்ற வசனம் சின்னப்பர் தேவர் எடுத்த அனைத்து படங்களிலும்.இடம
    பெற்றது..போட்டோ படம் எடுத்து அதை கழவி உடனே பிரிட்டு போடுவதுப்போல் காட்சி காண்பித்து தொழில் முன்னேற்றத்துக்கு.முன்னோடியாக விளங்கியது இப்படம்தான்..

    1961.ஆண்டு வந்த பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்று இருந்தாலும். வசூலில் அனைத்து படங்கனையும் முந்தி NO....1 .வசூல் சாதனை புரிந்தது.தாய்சொல்லைத்தட்டாதே..? இப்படத்திற்கு பிறகு வந்த அனைத்து படங்களில் வாத்தியார் புகழுக்கு புகழ் சேரும்.படி எதாவது ஒரு பாடல் அமைத்திருப்பார்.சின்னப்பர் தேவர்....
    படப்பிடிப்பு முமுவதும்..முடிந்து விட்டது.நடிகை சரோஜாதேவி வேறு படத்தில் நடிப்பதற்க்காக பம்பாய் செல்வதற்க்காக புறப்பட்டு.சென்றார்.கண்ணதாசன் எமுதிய ஒரு அற்புதமான பாடல் பதிவில் விடுப்பட்டு போயிருந்தது.அது வாத்தியார் பார்வைக்கு பட உடனே அதை பாடல் காட்சியாக எடுக்க சொன்னார்.
    சரோஜாதேவி சென்று விட்டார் இனி எப்படி எடுப்பது என்றார் சின்னப்பர்தேவர்.?
    உடனே வாத்தியார் அவர் எப்போது சென்றார்.எத்தனை மணிக்கு பயணம் என்றெல்லாம் எல்லாம் விபரம் கேட்டார். முமுவிபரம்.அறிந்த பிறகு கூறினார்.
    இந்நேரம் விமான நிலையம்தான் சென்றிருப்பார்கள்,நான் அழைத்தேன் என்று அழைத்து வாருங்கள் இப்பாடல் காட்சி எடுத்த பிறகு நானே வழி அனுப்பி வைக்கிறேன்.என்றார். வாத்தியார் கூறியதையே.சரோஜாதேவிடம் கூறி அழைத்தார்.விமானம் ஏறும் தருனத்தில் வேறு யார் கூப்பிட்டு இருந்தாலும் சரோஜாதேவி வந்திருக்க மாட்டார்.எம்.ஜி.ஆர்.என்ற ஒரு சொல்லுக்கு மதிப்பிட்டு. உடனே புறப்பட்டு வந்து படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.
    நான்கு மணி நேரத்தில் எடுக்கபட்டு பாட்டு சூப்பர் ஹிட் .படமும் சூப்பர் ஹிட்.

    அந்த பாடல் தான். பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாடா. என்ற பாடல் ....
    இப்படம் வெற்றி சாண்டோ சின்னப்பர்தேவர்.மனைவி மாரி முத்தம்மாள் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.தனக்கு ஒரு ஆசை இருப்பதாக கூறினார்.?அது என்ன ஆசை..??

    தொடரும் ...........தொடரும் ......தொடரும் .......... Thanks...

  9. #3108
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M.M.A.சின்னப்பர்தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம். 8

    நான் எப்ப எப்படி எங்கே வருவேன் என்று யாருக்கும்.தெரியாது. வரவேண்டிய இடத்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு வந்துடுவேன்...என்று தாய்சொல்லைத்தட்டாதே படத்தில் வாத்தியார் கூறும் வசனம் ஆகும்..படத்தில் வாத்தியார் C.I.D. என்பதால் அந்த காட்சிக்கு அமைந்தது.போல் இருக்கும் ...((.இதே வசனத்தை முத்து படத்தில் ரஜினி பேசி தன்னை தானே பெருமைப்படுத்திக்கொள்வார்.)) .படத்தில் ஆருர்தாஸ் வசனம் பிளஸ் பாயின்ட்டா அமைந்தது.காட்சிக்கு காட்சி கருத்து ஆழமிக்க வசனம் அமைந்திருக்கும்.இப்படி ஆருர்தாஸ்? அசோகன்.? M.R.ராதா. சின்னப்பர்தேவர். சரோஜாதேவி.? அனைவருக்கும் ஒரு வெற்றி மகுடம் சூட்டியது.தாய்சொல்லைத்தட்டாதே.......

    சின்னப்பர்தேவர் மனைவி மாரிமுத்தம்மாள்.வாத்தியார் போட்டோ பூஜை அறையில் வைத்து தெய்மாக வணங்கினார்.தனது கணவரிடம்.நமக்கு இரண்டு கடவுள் ஒன்று முருகன் மற்றொருவர் அன்ணன் எம். ஜி. ஆர். இந்த இரண்டு பேரும் இனைத்தப்படி ஒரு பாடல் எழுதி தர சொல்லுங்கள் கண்ணதாசனிடம்.என்று தனது விருப்பத்தையும் ஆசையும் கூறினார்.
    சின்னப்பர்தேவரும் தனது மனைவியின் விருப்பத்தை கண்ணதாசனிடம் கூறி ஒரு பாடல் எமுதி தருமாறு கேட்டார். கண்ணதாசனும்.அதற்கெற்றப்படி ஒரு பாடல் எமுதி கொடுத்தார்.அந்த பாடல்தான் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற

    அன்றொரு நாள் அவனுடைய பெயரைக் கேட்டேன்
    அடுத்த நாள் அவன் இருக்கும் ஊரைக் கேட்டேன்
    இன்று வரை அவன் முகத்தை நானும் காணேன் ...அவன்
    என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்.
    இந்தப்பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் முருகரை நினைத்து பாடுகிறாரா அல்லது புரட்சித்தலைவர் நினைத்து பாடப்பட்டதா.என்று கண்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..இதற்கு முன்னாலே இந்த பாடல் கேட்டீருந்தாலும் இப்போது மீண்டும் அப்பாடல் கேட்டுப்பாருங்கள் புரியும் ..சாண்டோ சின்னப்பர் தேவர் வீட்டு பூஜை அறையில் எப்போதும் இப்பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ...
    வாத்தியார் சின்னப்பர் தேவர் வீட்டுக்கு வருவதும்.? வாத்தியார் வீட்டுக்கு சின்னப்பர் தேவர் வருவதும் நாளடைவில் இருந்தாலும். அவரவர் பூஜை அறைக்கு இருவரும் வந்ததில்லை.
    ஒரு நாள் சின்னப்பர் தேவர் வீட்டு நிகழ்ச்சிக்கு வாத்தியார் பூஜை அறைக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
    தொடரும் ....தொடரும் ......தொடரும் ........ Thanks...

  10. #3109
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 9

    பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராய கல்லூரியில் எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து சொற்பொழிவு உரையாற்றினார்.
    இந்திய ஜனாதிபதி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் எம்ஜிஆர் மன்றம் திறந்து வைத்து பெருமை சேர்த்தவர்
    இந்து முஸ்லீம் கிருஸ்துவ அனைத்து மதத்தினரும் எம்ஜிஆர் உடல் நலம் பெற வேண்டி அவரவர் வழியில் வழி பாடு செய்து தனது விசுவாசித்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்
    இவையெல்லாம் சராசரி மனிதன் வாழ்வில் நடப்பது சாத்தியம் ஆகாது ஆனால் எம்ஜிஆர் வாழ்வில் நடந்தது ஆச்சரியம் அதிசயம் ஆகும்.அதனால்தான் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள். அதேப்போல் தான் சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் அவர் தெய்வமாக கருதினர். பூஜை அறையில் இருந்த தனது போட்டோ பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வாத்தியார்.
    இது என்ன அநியாயம் சாமி படத்துக்கு நடுவில் என் படத்தை ஏன் வைத்தீர்கள் நான் சராசரி மனிதன் என்னை கடவுளுடன் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொ*ண்டு*ள்ளா*ர்.அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை உன் அண்ணனுக்கு தெரிந்தால் ஏற்றுக்கொள்ளக்மாட்டார்.என்று நான் எவ்வளவோ சொல்லியும் கேட்க வவில்லை இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று என் மனைவி கூறியுள்ளார் நீங்களே கேளுங்கள் என்றார்.

    வாத்தியார் சின்னப்பர் தேவர் மனைவி மாரி முத்தம்மாளிடம் என்னம்மா உங்கள் வீட்டுக்காரர் சொல்வது உண்மையா என்றார். ?
    அதற்கு அவங்க கூறிய பதில் அண்ணே உங்களுக்கு தெரியாது எங்க வீட்டுக்காரர் இழந்த கெளரவத்தை மீட்டு கொடுத்தது நீங்கள் அதனால் உங்களிடம் கூறுகிறேன். அவர் கடன் கேட்க போய் எத்தனை முறை அவமானத்தால் திரும்பி வந்தார். வேதனைப்பட்டார் .எங்களை ஏராளமான பார்த்தவர்கள் உண்டு இழிவாக நினைத்தவர்கள் உண்டு. ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் போது அவனுக்கு பெரும் உதவி செய்து அவன் துன்பத்தை போக்கி அவனை உயர்ந்த ஸ்தானத்தில் உயர்த்தி பார்ப்பவன் எவனோ அவனே இறைவனாக கருதப்படுகிறது அந்த வகையில் எங்களைப் பொருத்தவரைக்கும் நீங்கள்தான் எங்களுக்கு கடவுள் அதனால் எங்கள் நம்பிக்கையில் மறுப்பு சொல்லாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார் மாரி முத்தம்மாள் மட்டும் கலங்க வில்லை உடன் இருந்த சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் தன்னை அறியாமல் கலங்கினார்கள்.

    இப்படித்தான் வாத்தியார் பல பேர் வியர்ந்து ஆச்சரியம் அடையற போல் உதவி செய்து வள்ளலாகவும் தெய்வமாக திகழ்கிறார்.அவர் கொடைவள்ளத்தனம் நமக்கு தெரிந்தது 100/,25/சதவீதம் தான் மீதி 75/சதவீதம் நாம் அறியவில்லை. அதை அறிந்து இருந்தால் வாத்தியார் தவிர வேறு ஒருவரை நேசிக்க மாட்டார்கள். என்பது தான் உண்மை. .

    அடுத்தது தாயைக் காத்த தனயன் சாதனை தொடரும், ....தொடரும். ......தொடரும்... Thanks...

  11. #3110
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M, M.A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் எண் 10

    இது மற்றவர்களை மட்டம் தட்டனும் என்பதற்காகவோஉதாசீனம் படுத்தனும் என்பதற்காகவும் எமுத வில்லை ஒர் உதாரணம் காட்டவேண்டும் என்பதற்காக எமுதிகிறேன் தவறாக கருத வேண்டாம்.அப்படி தவறு இருந்தால். மன்னிக்கவும். ....எத்தனையோ தலைவர்கள் பகையே மனதில் வைத்து எதிரணியே,. எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் அதற்கு உதாரணமாக சிலர், ,

    தந்தை பெரியார் கண்ணதாசன் கருணாநிதி ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அனைவரும் எதாவது ஒரு கூட்டம் அல்லது மேடை பேச்சு அல்லது பேட்டியில் தனது எதிராளி எதிர்த்து காழ்ப்புணர்ச்சி தனம் காட்டி யுள்ளனர் தரக்குறைவாக பேசியுள்ளார்கள்.
    மகாகவி பாரதியார் என் எஸ் கிருஷ்ணன் மக்கள் திலகம் எம் ஜி ஆர் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் யாரையும் எப்பவும் தரக்குறைவாக பேசியதாக இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
    மகாகவி பாரதியார் வெள்ளையனை எதிராக குரல் கொடுத்தார் தனது புரட்சி கவிதை மூலம். ஆனால் ஒரு முறை கூட தனது காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை.
    என் எஸ் கிருஷ்ணன் .தன்னை தர குறைவாக எமுதி கொலை வழக்கில் சிக்க வைத்த லட்சுமி காந்தன் பற்றி எங்கும் எப்போதும் தர குறைவாக பேசியது இல்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை
    மக்கள் திலகம் எம் ஜி ஆர் சினிமாவில் M.R.ராதா சிவாஜி அரசியலில் கண்ணதாசன் கருணாநிதி தன்னைப் பற்றி தர குறைவாக பேசினாலும் அவர்கள் மட்டும் அல்ல வேறு யாரையும் எங்கும் எப்போமுதும் தர குறைவாக பேசியதில்லை காழ்ப்புணர்ச்சிதனம் காட்டியது இல்லை. பகையே மனதில் வைத்து பழிவாங்கும் குணமும் அவரிடம் இருந்தது இல்லை,
    வாத்தியார் பற்றி நன்றாக அறிந்தவர்கள் புரிந்தவர்கள் அவரை தெய்வபிறவியாக கருதுகிறார்கள், தெரியாதவர்கள் புரியாதாவர்கள்தான் வதந்திகள் நம்பி தவறான கருத்துக்கள் கூறுகிறார்கள், தாய்சொல்லைத்தட்டாதே படத்தின் வெற்றி மட்டும் அவர் குணம் அறிய வில்லை. ஏற்கனவே எடுத்த தோல்வி படங்கள் மூலம் தான் கண்ட அனுபவத்தால் வாத்தியார் குணம் அறிந்து வேதனை பட்ட காலம் உண்டு, 7.11.1961 அன்று படம் வெளிவந்து வெற்றி மாலை சூடியது
    13.4.1962.அன்று தாயைக் காத்த தனயன் தமிழர் திருநாள் வெளிவந்தது சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் மற்றொரு மறுமலர்ச்சி மகிழ்ச்சி ஏற்பட்டது அது என்ன? ??
    தொடரும். ....தொடரும். ...தொடரும். ..... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •