Page 319 of 402 FirstFirst ... 219269309317318319320321329369 ... LastLast
Results 3,181 to 3,190 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3181
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    871-R-54

    மனித மன வள மேம்பாடு

    நம்பிக்கை

    Never give up HOPE

    இதற்கு
    திருவாளர்
    எம்ஜிஆர் ஒரு சிறந்த உதாரணம்

    1967ல்
    குண்டடிபட்டு
    ஆஸ்பத்திரியில் இருந்தபடி
    தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தார்

    மக்களின் அபரிமிதமான அன்பால்
    தேர்தலில் வென்றார்

    கட்டுமரத்தின் பேயாட்டத்தை
    தட்டிக்கேட்கிறார்
    தனிக்கட்சி துவங்குகிறார்

    பின்
    மூன்று முறை
    முதல்வர் ஆகிறார்

    இருபது ஆண்டுகள்
    அரசனாக ஆண்டார்

    இறந்தபின்பும்
    இறவாப்புகழ் பெற்றார்

    இன்றும்
    தேர்தலில் வெற்றி பெற
    இவரது
    பாட்டு
    கட்டவுட் போதும்

    உலகில்
    சத்தியா பெற்ற
    பிள்ளையைப் போல்
    ஓர் சத்திய பிள்ளையை கண்டதுண்டோ

    வெற்றியின் சொந்தக்காரன்
    ஏழைகளின் உறவுக்காரன்

    நமது வாத்தியார்......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3182
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராமாவரம் வீட்டில் வெகு இயல்பாக எம்.ஜி.ஆர்!
    https://www.thaaii.com/?p=35053

    ‘நாடோடி மன்னன்’ பட வெற்றிக்குப் பிறகு போரூர் சாலையோரத்தில் வாங்கப்பட்டது ராமாவரம் தோட்டம்.


    தமிழக முதல்வரான பிறகும் இந்த வீட்டிற்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாமல் கிணற்று நீர், சமையலுக்குச் சாண எரிவாயு என்று எளிமையான வாழ்க்கை.

    வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், பனியன், லுங்கிக்கு மாறுகிற எம்.ஜி.ஆருக்குத் தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடுவது தான் பிடித்தமானது.

    ராமாவரம் தோட்டத்தில் தான் வளர்த்த நாயுடன் கேஷூவலான உடையில் எம்.ஜி.ஆர்.

    #ராமாவரம்_தோட்டம் #எம்ஜிஆர் #நாடோடி_மன்னன் #Nadodi_Mannan #MGR #Ramapuram_Garden #TamilNadu #Chief_Minister #Makkal_Thilagam #PonmanaChemmal... Thanks...

  4. #3183
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீ வருவாய் என---
    ------------------------------------
    அ.தி.மு.க கட்சி நலனுக்கான பதிவு இது!!
    காலங்களாலே காரியம் நடக்கும்
    காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்!!
    உலகின் எந்தவொரு மூலையில் எது நடந்தாலும்,,அதற்கான காரணம் முன்னோ பின்னோ முழங்கியே தீரும் என்ற கண்ணதாசனின் வார்த்தைகள் நம்மைப் பொறுத்தவரை சத்தியம் கலந்த ஒன்றே!!
    கேட்ட கணக்கைக் கொடுத்திருந்தால் கலைஞரின்
    கெட்ட கணக்கு வெளி வந்திருக்குமா?
    கொரானா விஷயம் கூட--
    ஆட்சியாளர்களின் நிர்வாகத்தைப் பரீட்சை செய்யவும்-
    மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு இன்னமும் வளரவும் காலம் தந்த வினாப் பேப்பர் தானே?
    அடுத்த வருடம் அக்னி நட்சத்திரத்தோடு தேர்தல் அக்னியும் சேர்ந்தே நாட்டை தகிக்கும்!!
    எம்.ஜி.ஆர் பேனர்கள் கரிசனத்தோடு தூசி தட்டப்படும்?
    இவ்வளவு இடங்கள் வாங்கி தி.மு.க ஜெயிக்கும் என்ற வழக்கமான நக்கீரப் புளுகலை ஊடகங்கள் ஆதரிக்கும்?
    பூங்குன்றன் சங்கரலிங்கம்!!
    புலவர் சங்கரலிங்கம் பற்றியும்,,அவரது எம்.ஜி.ஆர் பக்தி பற்றியும் நாம் தனியாகவே பதிவிட இருப்பதால்-
    பூங்குன்றன் மட்டுமே இன்றையப் பதிவில்!
    ஜெ வால் மிகப் பாசத்தோடு பேணப்பட்டவர்!
    இளைய தலைமுறையின் இனிய வாரிசாம் இவரது எளிமையைப் பார்த்து நாம் வியந்திருக்கிறோம்!
    ஒரு சமயம் இவர் போயஸ் தோட்டத்தில் அலுவலில் இருந்த போது--
    சிவகாசியைச் சேர்ந்த சில எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தோட்டத்துக்கு வருகை தர--
    அவர்களிடமிருந்து ,, எம்.ஜி.ஆர் பற்றிய விபரங்களை தம்மை மறந்து பூங்குன்றன் கேட்டுக் கொண்டே இருந்தவர் பலமாக அதிர்ந்திருக்கிறார்?
    இவரைத் தொந்தரவு செய்யாமல்,,அதே சமயம் இவரிடம் ஒரு முக்கிய அலுவலுக்காக ஓ.பி.எஸ் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்??
    மனிதரை விட்டால் ஒரு கௌபீணத்தோடு இமயமலைப் போய் விடுவார் போல?
    அவ்வளவு ஆன்மிகப் பற்று!!
    இளைஞரான இவர்,,தம்மிலும் மூத்தவர்களைக் கண்டால் உரிய மரியாதை அளித்தல்--
    சராசரி மனிதனாகவே மற்றவர்களுடன் பழகுதல்-
    எம்.ஜி.ஆர் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள விழைதல்--
    எதையுமேக் கூர்மையாக கவனித்தல்--
    கவனித்தவற்றை ஆழமாக மனதில் பதித்துக் கொள்ளுதல்--
    இப்படிப் பல குணாதிசயங்களை இவரிடம் கண்டிருப்பதால்--
    இளைய சமுதாயத்திலிருந்து இவரைப் போன்றவர்கள் கட்சியில் இணைந்து,,கட்சியையும்,,கட்சி மூலம் ஆட்சியையும் சிறப்பாக்க தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பது நமது அவா!
    ஒன்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கும்?
    இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் முக நூலில் அலசிய ஒரு விஷயம் இன்னமும் பூங்குன்றன் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது?
    எம்.ஜி.ஆர் டி.வி!
    நம்மைப் பார்க்கும்போதெல்லாம் எந்த விஷயங்களை நாங்கள் பேசினாலும்,,கடைசியில் எம்.ஜி.ஆர் டி.வி விஷயத்தைப் பூங்குன்றன் தொடாமலேயே இருக்க மாட்டார்?
    போயஸ் தோட்டப் பூங்குன்றனை அடியேன் அறிந்ததில்லை?
    தமிழ்ப் புலவர்,,எம்.ஜி.ஆர் விசுவாசி திரு சங்கரலிங்கம் சந்ததியாகவே இவரைத் தெரியும்.
    போயஸ் தோட்டத்தில் இவர் கற்றுக் கொண்ட பாடங்களில்?? இருந்து இவர் இன்றைய தேதியில் பல படிப்பினைகளைக் கொண்டிருப்பார்!!
    முக நூலிலும்--
    சுஜீத்,,ரமேஷ்கோபால்,,சக்தி rdb,,ஸ்ரீ நாத்,,சுபாஷ்--இப்படிப் பல இளைஞர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி கலக்கி வருகிறார்கள்!1
    அவர்கள் வழியில் பூங்குன்றன் போன்றவர்கள் சிந்தித்தால் நல்லது!1
    வழக்கம் போல் நல்ல விஷயங்களில் மௌனம் காக்கும் அந்தக் கட்சியின் தலைமை இதிலாவது வேகம் காட்டும் என்றே நம்புகிறோம்!!
    ஊதுவது நம் கடமை!
    விழித்தெழுவது அவர்கள் உரிமை???....... Thanks...

  5. #3184
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகம்_எம்ஜிஆர்_அவர்கள் #பெற்ற_பட்டங்கள்.

    சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்று முதன் முதலில் அழைத்தவர் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆர் அவர்களின் உற்ற நண்பருமான கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான்.

    அன்று முதல் அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் எம்ஜிஆரை புரட்சி நடிகர் என்றே அழைத்து வந்தனர் .

    புரட்சி நடிகர் எம் ஜி ஆருக்கு இலங்கை ரசிகர்கள் நிருத்திய சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் ,

    சிங்கப்பூர் ரசிகர்கள் கலைவேந்தன் என்ற பட்டத்தையும் வழங்கினார்கள்.

    மக்கள் நடிகர் என்ற பட்டத்தை நாகர்கோவில் ரசிகர்களும் ,

    மக்கள் கலைஞன் என்ற பட்டத்தை காரைக்குடி ரசிகர்களும் வழங்கினார்கள்.

    மறைந்த தமிழ் எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் அவர்கள் எம்ஜிஆரை மக்கள் திலகம் என்று குறிப்பிட்டும் எழுதியும் வந்தார்.

    திருமுருக கிருபானந்த வாரியார் கரூரில் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி வாழ்த்தினார்.

    1983 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் எம்ஜிஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

    இந்தப் பட்டங்கள் எல்லாவற்றை காட்டிலும் தமிழ்நாட்டு தாய்குலமும் அவரது ரசிகர்களும் அன்போடு எம்ஜிஆரை எங்கவிட்டுபிள்ளை என்று தாய்ப்பாசத்துடன் அழைப்பதையே பெரிதாக மதித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை முதல்வர் எம் ஜி ஆருக்கு அவர் மறைவுக்குப் பின் மத்திய அரசு வழங்கி அந்த விருதுக்கு புதிய கௌரவத்தை கொடுத்தது .

    நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர் மூச்சு உள்ளவரை பாடுபட்டவர் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது .

    இதற்கு முன் தமிழகத்தை சேர்ந்த மூதறிஞர் ராஜாஜி கர்மவீரர் காமராஜர் ஆகிய இருவருக்கும் மட்டும்தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு இருந்தது.

    அன்றைய தினத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை பாரத ரத்னா விருது அலங்கரிக்கப்படும் மூன்றாவது தலைவர் எம்ஜிஆர் .

    அகில இந்திய அளவில் இந்த விருதை அணிந்துகொள்ளும் இரண்டாவது தலைவர் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் .

    ஜவஹர்லால் நேரு ராஜேந்திரப் பிரசாத் ஜாகீர்உசேன் லால் பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி அன்னை தெரசா எல்லைக் காந்தி கான் அப்துல் கபார்கான் , வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கும் மற்றும் ஒரு சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

    தமிழக திரைப்பட வானில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

    பின்னாளில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு சித்திரங்களாக கருதப்படாமல் சமுதாயத்தில் நிலவும் உண்மைகளை பிரதிபலிக்கும் கருத்துக் கருவூலங்கள் ஆக கருதப்பட்டன .

    அப்படி கருதப்பட்ட படங்கள் இவருக்குப் பெற்றுத் தந்த பரிசுகள் விபரம்

    படம் மலைக்கள்ளன் இந்திய அரசின் வெள்ளிப்பதக்கம் 1954 .

    படம் அலிபாபாவும் 40 திருடர்களும் சினிமா ரசிகர் சங்கப் பரிசு 1956.

    படம் நாடோடி மன்னன் சினிமா கதிர் சிறந்த இயக்குனர் பரிசு 1958 .

    படம் எங்க வீட்டுப் பிள்ளை சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1965 .

    படம் காவல்காரன் தமிழக அரசின் பரிசு 1967 .

    படம் குடியிருந்த கோயில் தமிழக அரசின் பரிசு 1968 .

    படம் நம் நாடு சினிமா ரசிகர் சங்கம் பரிசு 1969 .

    படம் அடிமைப்பெண் பிலிம்பேர் பரிசும் தமிழக அரசின் பரிசும் 1969 .

    படம் எங்கள் தங்கம் சிறந்த இரண்டாவது படத்திற்கான தமிழக அரசின் பரிசு 1970

    படம் ரிக்ஷாக்காரன் பாரத் விருது 1971.

    படம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழக அரசின் பரிசு 1978. அதற்கப்புறம் சர்வதேச - உலகளவில் " நோபல்" பரிசு விருது கமிட்டிக்கு 1986ம் வருடம் புரட்சி தலைவர் பெயர் தேர்வு செய்யும் குழுவினருக்கு சிபாரிசு செய்துள்ளது மிக முக்கியமான பெருமையான செய்திகள்............. Thanks.........

  6. #3185
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    ரசிகன் பக்தன்
    என்ற
    பெருமிதத்துடன்
    இந்த பதிவு

    த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
    ---------------------------------------------------------------
    குறு விவசாயிகளுக்கு
    --------------------------------------
    இலவச மின்சாரம்--
    விவசாயக் கடன் தள்ளுபடி--
    பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
    கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.

    பெரு விவசாயிகளுக்கு
    குந்தா மின் நிலையம்--
    TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
    பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
    காற்றாலை மின்சாரம்

    ஏழைகளுக்கு
    ------------------------
    குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
    TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
    நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
    சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
    6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.

    அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.

    விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.

    அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.

    இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
    வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.

    இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி

    காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
    காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.

    ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.

    புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.

    உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.

    த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.

    எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.

    15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.

    ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.

    முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.

    ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.

    ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.

    இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
    நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
    சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
    தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
    நினைவூட்ட விரும்புகிறோம்??
    எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
    இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
    எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!

    இனிய மதிய வ*ணக்கத்துட*ன்.......... Thanks...

  7. #3186
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 46.

    தங்கமும் தகரமும் தரையிலே கிடைத்தாலும் தகுதியிலே மலையும் மடுவும் போல. வாழ்க்கையை ஒரு போர்களம் அதிலே கோழைக்கு இடம் இல்லை. .
    உயிருக்கு உயிரான நண்பனாக இருந்தாலும் எந்த நேரத்திலும் விரோதியாக மாறலாம் என்று எச்சரிக்கையாக பழகக்கூடிய காலம் இது. ..
    இன்பமும் துன்பமும் எந்த தொழிலுக்கும் பொருந்தும். கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்து எடுப்பவன் நீண்ட நாள் ஆயுளுடன் இருக்கிறான். பணப்பெட்டியே பக்கத்தில் வைத்து எண்ணிக்கொண்டிருப்பவன் சீக்கிரமே மரணத்தைத் சந்திக்கிறான் ஆதலால் வாழ்க்கையில் மரணம் என்பது ஒரு விபத்து போல அது முடிவு அல்ல...
    நன்றி என்பது மனுசனை பொருத்தவரைக்கும் உணரக்கூடிய காலம் வரைக்கும் தான்.

    ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். என்ற பாடல் காட்சி எடுக்கும் முன்பு சில கழைக்கூத்தாடிகள் அழைத்து அவர்கள் காட்டும் வித்தைகளை சிலவற்றை கற்றார். .அதில் என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்.
    இப்பாடலை பார்க்காதவர்கள் இல்லை என்பது நான் அறிவேன். ஆனால் இப்பதிவு படித்தபிறகு மீண்டும் ஒரு முறை பாருங்கள் நான் சொல்வது உண்மை என்பது புரியும்.வாத்தியார் இரண்டு கைகளையும் கீழே ஊன்று கர்ணம் போடுவார்..
    இரண்டு கைகளையும் கீழே படியாமல் கர்ணம் போட முடியாது. .ஆனால் வாத்தியார் கைகள் இரண்டும் பூமியில் படமாள் தத்ரூபமாக கர்ணம் போட்டுகாண்பித்தார் .படபிடிப்பில் இருந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கும் மத்தியில் இக்காட்சி எடுக்கப்பட்டது வாத்தியாரின் அசத்தலான திறமைக்கண்டு கைத்தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. கற்றுத்தந்தவர்களே செய்யமுடியாததை வாத்தியார் செய்தார் அதிலும் 55 வயதில் இதை செய்வது ஆச்சரியமான விஷயம் ஆகும். கற்று தந்தவர்கள் சொல்படி செய்தால் அது கற்று தந்தவர்களுக்கு பெருமை. அதை விட நன்றாக செய்தால் அது கற்றுக் கொண்டதுக்கு பெருமையாகும். .இது தான் வாத்தியார் கொள்கையாகும். .பாடல் வரிகள் ஏற்றபடி வாத்தியார் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து இருப்பார். .ஒவ்வொரு வரிகள் அர்த்ததுக்கும் வாத்தியார் தனது நடிப்பால் நிருப்பித்திருப்பார். வாத்தியாரின் புன்னகையும் சுறுசுறுப்புக்கும் உழைப்பும் புலமைப்பித்தன் வாழ்க்கை வரிகள் ..
    T. M, செளந்தரராஜன் குரலில் கணீரும். கே வி மகாதேவன் இசையில் பாடல் சூப்பர் ஹிட் மெகா ஹிட் ஆனது. .பட்டித்தொட்டி எங்கும் இப்பாடல்தான் பேசப்பட்டது இப்பாடலை கேட்டுத்தான் நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார். .அண்ணனுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட பாடல்கள் அமைந்திருக்கு
    எனக்கு இது போன்ற பாடல் எழுத மாட்டாயா என புலமைப்பித்தன் பார்த்து கேட்டு உள்ளார். .அதுமட்டுமல்ல பாடலின் கருத்துக்கள் கூறி பாராட்டினார். .முரசொலி மாறனிடம் ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டதற்கு அவர் கூறுகையில் எம்ஜிஆர் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான் இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக ஒரு பாடல் குறிபிடுகிறேன் ஒடி ஒடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல்தான் என் மனதில் அடிக்கடி ரீங்காரம் இடும் என்று, கூறினார் . . ஒவ்வொரு மே தினம் அன்று இந்த பாடல்தான் அனைத்து தொலைக்காட்சி வானொலில் ஒளிபரப்பாகும். உழைப்பை பற்றி அதிகமாக பாடல்கள் வாத்தியார் படத்தில் தான் காண முடியும். ........

    இன்னும் முடியலங்க... மேலும் சாதனைகள்... தொடரும் ...தொடரும் ...தொடரும்... Thanks...

  8. #3187
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 47.

    சந்தேகம் என்பது பேயை விடப்பயங்கரமானது நோயை விடக் கொடுமையாது
    கண்ணு குருடாகலாம் கருத்து குருடாகக் கூடாது. .
    உத்தமர்களின் தியாகத்தை அவங்க இறந்த பிறகு தான் இந்த உலகம் ஏற்றுக் கொள்கிறது,
    நல்ல நேரம் படத்தில் முமு பாடல்களும் ஆரம்பத்தில் கவியரசு கண்ணதாசன்தான் எழுதினார். ஏற்கனவே உழைப்பு பற்றி தனிபிறவி படத்தில் கண்ணதாசன் எழுதி இருந்தார். அதனால் வேறு ஒரு கவிஞரிடம் ஒப்படையுங்கள் என்றார். அதன் பிறகு ஆலங்குடி சோமு தேர்ந்தெடுத்தார் அதற்கும் வாத்தியார் ஒப்புதல் கொடுக்கவில்லை. .ஏற்கனவே அவரும் உழைப்பு பற்றி தொழிலாளி படத்தில் எழுதி இருந்ததால். அதற்கு காரணம் ஆகும். .பிறகு வாத்தியாரே புலவர் புலமைப்பித்தன் அழைத்து வந்து. சின்னப்பர் தேவரிடம் இவர் உங்கள் படத்தில் பாடல் எழுத வில்லை. சிறுவயதிலேயே திறமையான கவிஞர் அதனால் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.என்றார். சின்னப்பர் தேவருக்கு கண்ணதாசன் பாடல் எழுதினால் தான் விருப்பம். இருந்தாலும் வாத்தியாரே நேரில் அழைத்து கூறும் போது. அவரால் மறுப்பு சொல்ல முடியல.
    வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர்
    வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி
    இந்த வரிகள்தான் முதலில் எழுதி வாத்தியாரிடம் காட்டினார் அதற்கு வாத்தியார் கூறினார் உன்னுடைய திறமையை நான் அறிவேன். முதலாளியிடம் காட்டு என்றார். புலமைப்பித்தன் அவர்கள் சின்னப்பர் தேவரிடம் இந்த பாடல் வரிகள் காட்டியதும். சின்னப்பர் தேவரால் ஒன்று பேச முடியல மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார்
    ஆண்டவன் ஆண்டவன்தான். .புரட்சியில் நீ புலவன்தான் என்று பாராட்டினார். .
    வாத்தியாரால் அறிமுகம் படுத்த பட்ட எந்த கவிஞரும் சோடை போனதில்லை..என்பதற்கு இப்பாடல் ஒர் சமர்ப்பணம் உதாரணம் ஆகும். .
    அதிலும் குறிப்பாக ஒரு வரி கூறனும் என்றால்...
    அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தால் இனிக்கும். ...இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
    அத்தனையும் சொல்லிப்போடு.
    இந்த வரியைத்தான் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் உதாரணமாக கூறுவார்கள் ஏன் ஒவ்வொரு குடும்பத்திலும் மனித வாழ்க்கையிலும் இந்த வரிகள் தான் உதாரணமாக திகழ்கிறது. . இன்னும் சொல்லனும் என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் இந்த பாடல் வரிகள்தான் குறிப்பிட்டு கூறுவார்கள். .அந்தளவுக்கு இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மனித சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது. . அவ்வளவு கருத்தாழமிக்க பாடல் ஆகும் மேலும் எனது அடுத்த பதிவில்
    தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் தொடரும் தொடரும் தொடரும் ... Thanks...

  9. #3188
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 48. .

    முகம்நக நட்பது நட்பன்று. .நெஞ்சத்து
    அகம்நக நட்பது நட்பு. .
    சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் கொண்ட நட்பு எத்தகையது என்பதற்கு இந்த குறள் உதாரணமாக கூறலாம். .1945. ம் ஆண்டு வெளிவந்த சாலிவாஹனன் என்ற திரைப்படம் தான் வாத்தியாருடன் சின்னப்பர் தேவர் நட்பு ஏற்பட்டது. . வாத்தியார்க்கு இது 12 . வது திரைப்படம். .சின்னப்பர் தேவர்க்கு இது தான் முதல் அறிமுகமான படம். .முதல் படம் முதல் சந்திப்பு இருவரும் நட்பு இரும்பும் காந்தகம் போல் இனைந்து கொண்டனர்.
    கதாநாயகன் ரஞ்சன் சாலிவாஹனாகவும் எம்ஜிஆர் விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பர் தேவரும் நடித்தார்கள். .படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்ஜிஆரும் ராஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது. கதையில் ரஞ்சனின் கை ஒங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமரா ஒடிக்கொண்டிருக்கும் போது ரஞ்சனை விட எம்ஜிஆரின் வாள் வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்ஜிஆருக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. அதனால் கேமிராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன் டைரக்டர் பி என் ராவிடம் எம்ஜிஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார். என்று புகார் செய்தார். டைரக்டர் எம்ஜிஆரை அழைத்து விசாரிக்க எம்ஜிஆர் தான் செய்தது சரி என்று விளக்கினார்
    அதன் பிறகு ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும் படி எம்ஜிஆருக்கு டைரக்டர் யோசனை கூறினார். .எம்ஜிஆர் மனம் நொந்து போனார். தமது உண்மையான திறமையை எப்படித்தான் வெளிபடுத்துவது. .என்று சின்னப்பர் தேவரிடம் கூறி வேதனைப்பட்டார். .அதற்கு சின்னப்பர் தேவர் கூறினார் உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடம் உள்ள ஒரு நாள் உலகுக்கு தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். .

    அன்று தொடங்கிய நட்பு சின்னப்பர் தேவர் இறுதி ஊர்வலம் வரை நீடித்தது..வாத்தியாரின் அழகும் இளமையும் சின்னப்பர் தேவரை கவர்ந்தது அதேப்போல் சின்னப்பர் தேவரின் கம்பீரமான தோற்றமும் கட்டுமஸ்தான உடலும் வாத்தியாரை கவர்ந்தது. . இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். வாத்தியார்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் சின்னப்பர் தேவர்க்கு கற்றுக் கொடுத்தார். .சின்னப்பர் தேவர்க்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் வாத்தியாருக்கு கற்றுக் கொடுத்தார். . இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் அல்ல இரண்டு மலைகளும் மோதுவது போல் இருவரது பயிற்சி இருந்தது. நட்பும் நகமும் சதையும் போல் இருந்தார்கள். .

    இந்த சூழ்நிலையில் தான் வாத்தியாருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. .அந்த படம்தான் ராஜகுமாரி. படமும் வேகமாக வளர்ந்தது படத்தில் வாத்தியாருடன் மோதுவதுக்கு வட இந்திய நடிகர் ஒருவரை அழைத்து வந்தார்கள் ஆனால் அதிலே சிறிது கூட சம்பந்தம் இல்லை. படத்தின் இயக்குனர் A S சாமியிடம் சென்று தமிழ் நடிகர்களில் பல பேர் திறமையானவர்கள் இருக்கும் போது வேறு மாநிலங்களில் இருந்து ஏன் அழைத்து வந்தீர்கள் என்றார். எனக்கு தெரிந்து திறமையான நடிகர் ஒருவர் இருக்கிறார் அவரை போடுங்கள் என்றார். உடனே இயக்குநர் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம் நீங்கள் இன்னொருவர்க்கு வாய்ப்பு கேட்கீர்கள் என்று கூறி வாத்தியாரை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பிறகு வட இந்திய நடிகர் சரியாக படப்பிடிப்புக்கு வராது அப்படியே வந்தால் போதையில் வருவது. இதனால் படபிடிப்பில் சரியாக நடத்த முடியல. பிறகு வாத்தியாரே கூப்பிட்டு நீங்கள் கூறிய நடிகரை அழைத்து வாருங்கள் என்றார் சின்னப்பர் தேவரை அழைத்து வந்து படத்தில் நடிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்தார். .தொடரும் தொடரும் தொடரும்.......... Thanks...

  10. #3189
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 49. .

    தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம். ...இதை ஆரம்பம் முதல் தனது கடைசி மூச்சு வரை கடைப்பிடித்தார். .
    அதனால் தான் அவர் புரட்சி நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்தார். .
    அன்று முதல் இன்று வரை அனைத்து நடிகர்களும். எம்ஜிஆர் போல் புகழ் பெற வேண்டும். எம் ஜி ஆரை போற்றுவது போல் நம்மையும் போற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர எம்ஜிஆர் போல் வாழ வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அதனால் தான் அவர்கள் வாழ்க்கை கனவு போல் களவு போகிறது. வாத்தியார்க்கு வந்த எதிர்ப்பு வதந்தி விமர்சனம் போல் எந்த நடிகர்களுக்கும் இல்லை அப்படி இருந்தால் விலாசம் இல்லாமல் போயிருப்பார்கள் மக்கள் செல்வாக்கு வள்ளல்தனம் உழைப்பு ஒழுக்கம் இது தான் அவர் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தனது நண்பர் சாண்டோ சின்னப்பர் தேவர்க்கு பல படங்கள் வாய்ப்பு தேடி தந்தார். .ராஜகுமாரி. .மருதநாட்டு இளவரசி. ..மோகினி. .
    சர்வாதிகாரி. .நாம் குலேபகாவலி மதுரை வீரன் அரசிளங்குமரி போன்ற படங்கள் வாத்தியார் சிபாரிசு செய்து சின்னப்பர் தேவர்க்கு கிடைத்த வாய்ப்புகள் ஆகும். .

    சாதாரண நடிகராக சில காட்சிகளில் மட்டும் நடித்து வந்த சின்னப்பர் தேவரை மிக பெரிய தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை வாத்தியாரே சேரும். .அன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து படம் எடுத்து ஆயிரக்கணக்கான பணம் வருமானம் கூட வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்து கடன்காரனாக மாறிய பல தயாரிப்பாளர்கள் மத்தியில் வெரும் 45 , ஆயிரம் ரூபாய் செலவில் படம் எடுத்து லட்சக்கணக்கான பணம் வருமானம் பார்த்த ஒரே தயாரிப்பாளர். சின்னப்பர் தேவர் தான். .அதற்கு
    மூல காரணம் முதல் காரணம் வாத்தியார்தான். .இத்தனைக்கும் வாத்தியார் கால்ஷீட் தர முடியாத அளவுக்கு அதிகமாக படங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார். மலைக்கள்ளன் குலேபகாவலி மதுரை வீரன் அலிபாபாவும் 40 திருடர்களும் என தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். . அவருக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் பல பேர். .இருந்தாலும் நட்புக்கும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற நடித்து கொடுத்தார். .
    படத்தின் தயாரிப்பாளர் சின்னப்பர் தேவர் கதாநாயகியாக நடிக்க யாரை போடலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்போது வாத்தியார் வெற்றி ஜோடியாக திகழ்ந்த பானுமதி அணுகினார். பானுமதியும் மிகவும் பிசியாக இருந்தார். சம்பளம் அதிகமாக கேட்டார். உடனே வாத்தியார் தலையிட்டு பானுமதியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்தார். ..படபிடிப்பும் குறுகிய காலத்தில் நடத்தி 21 -09- 1956 ம் ஆண்டு "தாய்க்கு பின் தாரம்", படம் வெளிவந்தது. .பலவிதமான சாதனையை படைத்து மாபெரும் வெற்றி பெற்று சின்னப்பர் தேவர் வாழ்வில் மிக பெரிய அந்தஸ்து பெற்று உயர்வுக்கு வழி காட்டியது........

    தாய்க்கு பின் தாரம் படத்தின் வெற்றியும் சாதனையும் அடுத்த பதிவில் காண்போம் தொடரும் தொடரும் தொடரும்... Thanks...

  11. #3190
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 50.

    திறமையுள்ளவர் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. திறமைக்கான தகுதி இருக்க வேண்டும். எல்லோரும் திறமைசாலிகள்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளோ ஒவ்வொரு திறமை இருக்கிறது. ஆனால் அதை அவன் பயன்படுத்தும் விதமும் அதை செயல்படுத்தும் முறையும் சரியாக இருந்தால் அவன் வாழ்க்கையும் சரியாக இருக்கும். அதற்க்கான தகுதியும் பேரும் புகழும் அவனை தேடிவரும். அதேப்போல் தான் நம்ம வாத்தியார். அவருக்குள் உள்ள திறமையை எங்கே எப்போ எப்படி பயன்படுத்தனுமோ செயல்படுத்தனுமோ அதை அந்தந்த நேரத்தில் முறையா செய்ததால்தான் இன்று வரை அவரது பேரும் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது .அதைக்கண்டு பல தகர டப்பாக்கள் பொறாமை கொள்கிறது. அதனால் தான் அவை துரும்பு பிடித்து உள்ளது. .
    சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் ஒளிவிளக்கா வந்த படம் தான் 21. 9. 1956 ம் ஆண்டு வெளிவந்த தாய்க்கு பின் தாரம். வெரும் 45 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 45 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது. சென்னையில் சித்ரா கிருஷ்ணா உமா மூன்று தியேட்டரிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. மதுரையில் முதல் முதலாக இரண்டு தியேட்டரில் வெளியிடப்பட்ட முதல் படம். .தேவி சந்திரா இரண்டிலும் 100 நாட்கள் மேல் ஒடியது. .படத்தில் வாத்தியார் காளையே அடக்குவார். மிகவும் தத்ரூபமாக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. வாத்தியார் அதற்க்கான பயிற்சியில் ஈடுபட்டு பிறகு எடுக்கப்பட்டது.1957 .ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சின்னம் காளையாக இருந்தது. .திமுகவில் தேர்தல் பிரசாரத்துக்கு தாய்க்கு பின் தாரம் ஒரு விளம்பரமாக அமைந்தது. காளைகளை அடக்க வந்த புரட்சி நடிகர் என்றும். .காளைகளை அடக்க வந்த காங்கேயம் புரட்சி நடிகர் என்றும். பிரச்சாரம் செய்து ஓட்டுகள் அள்ளினார்கள். .

    படத்தில் A . மருதகாசி எமுதிய மனுசனை மனுசன் சாப்பிடறான்டா தம்பி பயலே என்ற பாடல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர் நகரங்களிலும் மெகா ஹிட் சூப்பர் ஹிட் இன்னும் சொல்லனும் என்றால் இந்த பாடல் முனுமுனுக்காத உதடுகள் இல்லை. அன்று முதல் இன்று வரை இனிவரும் தலைமுறைக்கு ஒர் உதாரணம் வாழ்க்கை பாடமாகும். பள்ளி பாடத்திலும் இப்பாடல் இடம் பெற்றுள்ளது
    ஒவ்வொரு வரிகளும் மனிதனின் குற்றத்தை உணர்த்தும் உண்ணதகாவிய பாடல் ஆகும். குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்த வரி அறிவுள்ளது அடங்கிடக்கிறது வீட்டிலே எதற்கும் ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே. தவறான பாதையில் போறவங்களை பார்க்கும் போதும் தவறு செய்பவர்களை காணும் போதும் இந்த பாடல் வரிகள்தான் ஞாபகம் வரும். பாடலில் வரும் ஒவ்வொரு அடி வரிகளுக்கும் ஒவ்வொரு பக்கம் கருத்துக்கள் எமுத வேண்டியிருக்கும் அந்தளவுக்கு கருத்தாழமிக்க ஒர் அற்புதமான பகுத்தறிவு மிக்க கொள்கை பாடல் ஆகும். .

    படத்தில் சாண்டோ சின்னப்பர் தேவரும் வாத்தியாரும் மோதுவது போல் எடுக்கப்பட்ட சிலம்பாட்டம் சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபளமாக பேசப்பட்டது கேமரா ஓடவிட்டு இருவரும் மோதும் காட்சி சிங்கமும் சிங்கமும் மோதுவது போல் இருக்கும். மலையும் மலையும் மோதுவது போல் இருக்கும். இரண்டு மதயானைகள் மோதுவது போல் இருக்கும் அவ்வளவு சூப்பர் சிலம்பாட்டம்.
    படத்தில் ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட் பாட்டுக்காக பைட்டுக்காக காளையே அடக்கும் காட்சிக்காக வாத்தியார் அழகுக்காக இப்படி இதற்காகத்தான் படம் சூப்பர் ஹிட் வசூல் மழை பொழிந்தது என்று குறிப்பிட்டு கூறமுடியாது. .

    பொதுவாக தாய்பற்றித்தான் பாடல்கள் நிறைய உண்டு ஆனால் முதல் முதலாக தந்தையைப் பற்றி வந்த முதல் படம் பாடல் இடம் பெற்றது இதுதான். அதிலும் சுடுகாட்டில் தந்தை பிணத்தை பார்த்து அழும் காட்சி படம் பார்க்கும் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரும். . இந்த காட்சியினை பற்றி அடுத்த பதிவில் விரிவாக கூறுகிறேன். .தொடரும் தொடரும் தொடரும்... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •