-
18th April 2020, 08:57 PM
#3191
Junior Member
Diamond Hubber
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 51
இரண்டு கண்கள் இல்லாதவனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்திருப்பார்
தர்மராஜா என்று பெயர் இருக்கும் ஆனால் எடுப்பதோ பிச்சை. .சிறுவயதிலேயே இறந்துள்ளார் பெயர் கேட்டா சிரஞ்சீவி என்பார்கள். .ஏழ்மையும் வறுமையும் உள்ளவனிடம் பெயர் கேட்டால் கோட்டீஸ்வரன் என்பான். இப்படி பெயருக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது. பலபேர்க்கு கிடைக்கும் பட்டங்களும் அப்படித்தான் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். .நேற்று இன்று நாளை படத்தில் வாத்தியார் கூறுவார். மற்றவர்களா பார்த்து கொடுப்பதுதான் பட்டம் நாமே வைத்துக் கொண்டால் அதற்கு பெயர் தம்பட்டம். .பலபேர் வைத்திருக்கும் பட்டமும் தம்பட்டம்தான். .வாத்தியார் தனது ஒவ்வொரு படத்திலும் கொள்கையை கடைபிடிப்பதால் அவரது நடிப்பு திறமை பல பேர் அறிவதில்லை. அதற்கு காரணம். அரசியல். பொதுசேவை சினிமா மூன்று விதமான வாழ்க்கைக்கும் பதில் சொல்லனும். அரசியலுக்காகவும் கொள்கைக்காகவும் பொழுதுபோக்குக்காவும் ஒவ்வொரு திரைப்படமும் தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. .வெறும் சினிமா மட்டுமே வாழ்க்கையா இருந்தால் அவர் ஆயிரக்கணக்கான படங்கள் நடித்திருப்பார் உலகிலேயே சிறந்த நடிகராக திகழ்ந்திருப்பார். ஆனால் சுயநலத்திற்காக சினிமாவில் நடிக்க வில்லை என்பதுதான். 100. /சதவீதம் உண்மையாகும். அப்படி இருந்தும் தனது நடிப்பு திறமையை பல படங்களில் நிருப்பித்துள்ளார். பல பேரை ஆச்சரியபடுத்தியுள்ளார். .அதிலே ஒரு திரைப்படம் தான் தாய்க்கு பின் தாரம் ....
சசுடுகாட்டில் தனது தந்தையின் உடல் எரிவதைக்கண்டு அழும் காட்சி பார்ப்பவர்கள் கண்கள் குளமாக்கி விடும். உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு தத்ரூபமாக நடித்துள்ளார். .இக்காட்சி எடுக்கும் போது படபிடிப்பில் இருந்த அனைவருக்கும் நெஞ்சு உருகியது. அதற்கு காரணம் என்னவென்றால். .இக்காட்சி எடுக்கப்படுவதற்கு முன் சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் ஏற்கனவே வந்த சில படங்களில் காட்சிகள் கூறி நடிக்க சொன்னார் ஆனால் வாத்தியார்க்கு அதில் உடன்பாடு இல்லை. .சிறிது யோசனைக்கு பிறகு சின்னப்பர் தேவர் வாத்தியாரிடம் அவரது முதல் மனைவி தங்கமணி இறப்பு நினைவு படுத்தினார். அதை கேட்டவுடன் வாத்தியார் முகம் வாடியது. பிறகு அந்த நினைவே அக்காட்சியில் நடிக்க தத்ரூபமாக அமைந்தது . (( வாத்தியார் முதல் மனைவி தங்கமணி பிரிவு பற்றி அவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் நான் ஏன் பிறந்தேன் சுயசரிதையில் எழுதியுள்ளார் ) ) படத்தில் இக்காட்சி பற்றி பல பத்திரிகைகளில் பாராட்டி எழுதினார்கள். ..இக்காட்சி பார்த்து தான் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அரண்மனைகிளி படத்தில் நடித்திருப்பார். அப்படத்தின் 100 வது நாள் விழாவில் ராஜ்கிரண் கூறியது. படத்தில் என்தாய் இறந்த செய்தி அறிந்து எப்படி நடிக்க போகிறேன் என்று தவித்தேன் உடனே இளையராஜா அவர்கள் கூறினார். தாய்க்கு பின் தாரம் படத்தில் வாத்தியார் நடிப்பை பார்த்து நடிக்க கற்றுக்கொள் என்றார். அதன்படி வாத்தியார் படத்தின் நடிப்பு பார்த்துதான் நடித்தேன். ஆனால் இந்த காட்சி இந்தளவுக்கு பேர் வாங்கும் என்று பாராட்டு பெறும் என்றும் நினைத்துக்கூட பார்க்க வில்லை. .இந்த பேர் புகழுக்கு வாத்தியார் தான் காரணம் என்று புகழாரம் சூட்டினார். .வாத்தியார் நடிப்புக்கு இப்படம் கலங்கரைக்விளக்கம் ஆகும். .
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நான் எழுதிய 51 பாகம் தொடர்ந்து படித்து அதற்கு லைக் கமெண்ட்ஸ் சேர் தந்து மேலும் உற்சாகம் தந்து ஆதரவு தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். .இத்தொடர் இத்துடன் முடிகிறது. .மீண்டும் சந்திப்போம். ...
மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....... Thanks...
-
18th April 2020 08:57 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2020, 08:59 PM
#3192
Junior Member
Diamond Hubber
அறிந்த தகவல் ... அறியாத செய்தி ......
புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...
இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ....... Thanks to GS.,
-
18th April 2020, 09:00 PM
#3193
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 52 . பேரறிஞர் அண்ணா
பெயரிலேயே மரியாதை உள்ள பெயர் அண்ணா. எல்லோரும் அன்புடன் அழைக்கப்படும் பெயர் அண்ணா. .உறவு இல்லாதவர்களுக்கு உறவோடு அழைக்கும் பெயர் அண்ணா. .ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிற வார்த்தையை கண்டறிந்தவர் அண்ணா. ....எதையும் தாங்கும் இதயம் உள்ளவர் அண்ணா. ..பேச்சிலே கனிவு. .செயலிலே தெளிவு. .முயற்சியிலே முடிவு. .சொல்லிலே சொல்மிக்கவர் அண்ணா. ..கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டவர் அண்ணா. ..எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தென்னாட்டு காந்தி அண்ணா. ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. ..திராவிட இயக்கத்தின் தலைவர் அண்ணா. ..தமிழகத்தில் விடிவெள்ளி அண்ணா...அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா..அடுக்கு மொழி பேசுவதில் அண்ணாவுக்கு இனை அண்ணாதான். .பொன்மனச்செம்மலை கண்டெடுத்த அண்ணா. ..பார்வேந்தரும் பார்கவிஞர்கள் போற்றும் அண்ணா. .தமிழுக்கு பெருமை சேர்த்த பெருமைமிக்க அண்ணா ..காஞ்சி மாநகரில் அவதரித்த எங்கள் மன்னவன் அண்ணா. .இப்படி அண்ணாவைப்பற்றி எத்தனையோ புகழ் மாலைகள் சூடிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட அண்ணா அவர்கள் அதிகமாக புகழ்ந்தது நமது பொன்மனச்செம்மலை த்தான். அப்படி அண்ணாவால் புகழப்பட்ட வார்த்தைகள் என்ன வரலாறு என்ன என்பதுதான் இத்தொடரின் முதல் அத்தியாயமாக தொடங்கிறேன். .இத்தொடர் விளக்கம் அண்ணா புரட்சித்தலைவர் பற்றி என்னன்ன சொன்னார். என்பதைப்பற்றி முதலில் பார்ப்போம். .??
ஒரு முறை அண்ணாவிடம் மா பொ. சிவஞானம். .நாவலர் நெடுஞ்செழியன். .
ஈ வி கே சம்பத். போன்றோர் ஒரு நிகழ்ச்சிக்கு நிதி வசூல் செய்ய வேண்டும் அதற்கு தாங்கள் வரவேண்டும். என்று கேட்டனர். அதற்கு அண்ணா கூறினார் தம்பி ரராமச்சந்திரனை அழைத்து செல்லுங்கள் என்றார். .அதற்கு அவர்கள் அண்ணாவிடம் சொன்னது. .ஐயா எம்ஜிஆரை நீங்கள் நிதி வசூல் செய்வதற்கும் .
தேர்தல் வேலை பார்ப்பதற்கும். .மாநாட்டில் கூட்டம் சேர்ப்பதற்கும்...இப்படி முக்கியமான நிகழ்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துகீறிர்களே மற்ற நேரங்களில் அவரை முக்கியமானவராக நினைப்பதில்லை யே. .என்று சிலர் உங்களை குறை கூறுகின்றனர். . அதனால் தாங்களே வரவேண்டும் என்றனர். .
அதற்கு பேரறிஞர் அண்ணா கூறியது என்ன வென்றால். .சிறிது காத்திருங்கள். அடுத்த பதிவில் பதில் வரும் தொடரும் தொடரும் தொடரும் ........ Thanks...
-
18th April 2020, 09:01 PM
#3194
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2. பாகம் 53. பேரறிஞர் அண்ணா. ..
அன்னை உலகில் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி..
இதன் பொருள் பலபேர் அறியாதது. . யாரெல்லாம் தாயைக் நேசிக்கிறார்களோ தாயைப் மதிக்கிறார்களோ .தாயைக் வணங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் தான். அவர்களை நானும் நேசிப்பேன் மதிக்கிறேன் வணங்குகிறேன். என்பதே இதன் அர்த்தம் ஆகும். . இதயதெய்வம் அண்ணாவை இதயத்தில் வைத்து பூஜித்தார். நமது வள்ளல் எம்ஜிஆர் ...அதேப்போல் பேரரறிஞரும் வள்ளலை தனது சகோதராக நினைத்துத்தான் ஒருநாளும் விட்டு கொடுத்தது இல்லை. ஈ. வி. கே மா பொ. சி. நாவலர். மூவரும் கேள்விக்கும். இதோ அண்ணா தந்த விளக்கம். ..
அண்ணா சிரித்துக்கொண்டே சொன்னார். .வெள்ளி சரிகைப்போட்ட விலை உயர்ந்த பட்டு புடவை போன்றவர் எம்ஜிஆர். . அவரை எல்லா நேரமும் பயன்படுத்தி அசிங்கம் படுத்தக்கூடாது. .திருமணம் திருவிழா போன்ற வைபவங்களுக்கு மட்டுமே உடுத்தி அழுகு பார்க்க வேண்டும். .மிக பெரிய துணிக்கடையில் கூட பட்டுப்புடவைகளை தனியாக வைத்துத்தான் அழுகு பார்ப்பார்கள். .மற்ற துணிகளுடன் சேர்த்துக்வைக்கமாட்டார்கள். .ஏன் என்றால் வாங்குபவர்களின் தரம் தெரியாமல் போய் விடும். .அதுபோன்றுதான் எம்ஜிஆர் மதிப்பு என்னவென்று என்போன்றோர்களுக்குத்த்ன் தெரியும். .அதுமட்டுமல்ல. உங்கள் நிகழ்ச்சிக்கு நான் வந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்காது. .எம் ஜி ஆர் வந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். .நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடக்கும்.
நான் எம்ஜிஆர் பற்றி என்ன நினைக்கிறேன் என்று எம் ஜி ஆர் ஒருவருக்குத்தான் தெரியும். .அதனால் மற்றவர்கள் நினைவைப்பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். .அதேப்போல் என்னைப் பற்றி தவறான தகவல் யார் எம்ஜிஆரிடம் போய் கூறினாலும். அவர் கூறும் காரணம், காது கேட்கல மீண்டும் கூறுங்கள் என்பார் மீண்டும் மீண்டும் கூறினாலும் அதே வார்த்தைகள்தான் வரும். என்னைப்பற்றி தவறான தகவல் யார் தந்தாலும் அதேநேரத்தில் மட்டும் காது கேளாத மனிதராக இருப்பார் அதுதான் அவர் என்மீது வைத்திருக்கும் உண்மையான பாசம். அப்படி இருக்கையில் நாம் மட்டும் இதுபோன்ற தவறான தகவல்களை காது கொடுத்து கேட்கலாமா. ?என்று கூறினார். .இதைக்கேட்டதும் மூவரும் பிரமித்துப் போய் விட்டார்கள் ..
பின்னே அண்ணாவின் இதயக்கனி அல்லவா நமது பொன்மனச்செம்மல் இப்படி பொன்மனச்செம்மலுக்கும் அண்ணாவுக்கும் உள்ள அன்பின் பரிமாற்றமே இத்தொடரின் குறிக்கோள் ஆகும். . இது போன்ற பல நிகழ்வுகளை காண்போம். .
தொடரும் தொடரும் தொடரும்...... Thanks...
-
18th April 2020, 09:02 PM
#3195
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் . 2 பாகம் 54. பேரரறிஞர் அண்ணா. ..
புரட்சித்தலைவர் தன் தாய் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாரோ. அதே அளவு அன்பு பாசமும் அண்ணா மீதும் வைத்திருந்தார். .எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பு கொண்டிருந்தார். .அதேப்போல் அண்ணாவும் எம்ஜிஆர் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டியிருந்தார். .என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை கொண்டாடினார்..ஒரு குடும்பத்தில் பல குழைந்தைகள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட குழந்தை மட்டும் செல்ல குழந்தையாக எல்லோருடைய அன்புக்கு உரியதாக இருப்பதைப்போல கழகத்தில் புரட்சித்தலைவர் இருந்தார். . என் தாயிடம் காணப்படும் மன்னிக்கும் மனப்பான்மை அறிஞர் அண்ணாவிடம் காண்கிறேன்.அதனால்தான் நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டேன்.என்று சொன்னவர் நமது புரட்சித்தலைவர். .
1967 ம் ஆண்டு சிறந்த படமாக காவல் காரன் படம் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட து. பரிசு தொகையாக 50. 000. ரூபாய் கிடைக்கும். .பரிசுக்கான தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த வெங்கட்ராமன் என்பவர்.அண்ணாவிடம் இந்த பட்டியலை காட்டிய போது எதற்கும் எம் ஜி ஆரிடம் காட்டி விடுங்கள் அவருடைய கருத்தையும் தெரிந்துக்கொண்டு வாருங்கள். என்றார் அண்ணா. . வெங்கட்ராமன் அவர்கள் பட்டியலை புரட்சித்தலைவர் விடம் காண்பிக்க புரட்சித்தலைவர் முதல் படமாக விவசாயி படத்தை தேர்ந்தெடுத்தார். .ஆனால் அண்ணா இல்லை காவல்காரன் படத்துக்கு தருவதுதான் சரியானது என்று நான் சொன்னதாக எம் ஜி ஆரிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்வி பட்ட எம் ஜி ஆர் அப்படியா ரொம்ப மகிழ்ச்சி என்று ஏற்றுக் கொண்டார். காவல்காரன் படத்தை நான் பரிந்துரை செய்யாதற்கு ஒரு காரணம் உண்டு என்று கூறினார். வீரப்பன் என்னிடம் வேலை செய்பவர் சத்யாமூவிஸ் என்னுடைய சொந்த நிறுவனம் போல இந்த நிலையில் நான் காவல்காரன் பரிந்துரை செய்திருந்தால். மற்றவர்கள் தவறாக நினைக்ககூடும். அதனால்தான் விவசாயி படத்திற்கு பரிந்துரை செய்தேன். மற்றபடி காவல்காரன் படத்திற்குதான் தரவேண்டும் என்று முதல்வர் பேரரறிஞர் அண்ணாவே சொல்லிவிட்டதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்..
1967. ம் ஆண்டு தமிழக அரசால் முதல் முதலாக தேசியவிருது பெற்ற முதல் படம் காவல்காரன் முதல் நடிகர் புரட்சித்தலைவர். .நாடோடிமன்னன் படத்திற்கு பிறகு வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே கருப்பு வெள்ளை படம் காவல்காரன். ..பேரரறிஞர் அண்ணா அவர்கள் தியேட்டர் சென்று பார்த்த ஒரே திரைப்படம் காவல்காரன் ..
இப்படி அண்ணா எம் ஜி ஆர் இருவரும் ஒருவருக்குள் ஒருவராக இருந்த அன்புக்கு இலக்கணமாக வேறு ஒருவரை உதாரணமாக கூற முடியாது. ........ Thanks...
-
18th April 2020, 09:03 PM
#3196
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 55. பேரரறிஞர் அண்ணா. .
30. 11. 1958. ஞாயிற்றுக்கிழமை. இந்திய திரையுலகமே எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி படமான நாடோடிமன்னன்.மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் வெற்றிவிழா நடைபெற்றது. 10. லட்சம் பொதுமக்கள் ரசிகர்கள் கலந்துக்கொண்ட ஒரே வெற்றிவிழா திரைப்படம் இதுதான். உலகிலேயே வேறு எந்த ஒரு திரைப்பட வெற்றிவிழாக்கும் இவ்வளவு லட்சம் மக்கள் கலந்துக்கொண்டதில்லை. மதுரையில் நடைபெற்றது போல் அதற்கு ஈடு இணையாக அதே பத்து லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட நாடோடிமன்னன் வெற்றிவிழா பேரரறிஞர் அண்ணா சார்பில் சென்னையில் எஸ். ஐ. ஏ. ஏ. திடல், மைதானத்தில். அண்ணாவின் தலைமையில் நடைபெற்றது. நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள்.அனைவருக்கும் கேடயங்கள் வழங்கி கெளரவித்தார்.பேரரறிஞர் அண்ணா அவர்கள். ...
நடனகுழு . ஸ்டண்ட் மாஸ்டர் நடிகர்கள் , ஒப்பனையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள்.எடிட்டிங் செய்பவர்கள். இப்படி தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும். அரை சவனில் மோதிரம் வழங்கப்பட்டது. அந்த மோதிரத்தில் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்துக்கள் ஆங்கிலத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பொறிக்கப்பட்டியிருந்தது. அனைவரது விரல்களிலும் மோதிரத்தை அணிவித்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ..விழாவில் கலந்துக்கொண்டு புரட்சித்தலைவர் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள். .நாவலர் நெடுஞ்செழியன், என் வி நடராஜன், சத்தியவாணி முத்து. மு. கருணாநிதி, மற்றும் பல தலைவர்கள் மற்ற கலைஞர்கள் அனைவரும் புரட்சித்தலைவரைப் பாராட்டி பேசினார்கள். ..
பேரரறிஞர் அண்ணா அவர்கள் எழுந்து பேசிய பொன்வார்த்தைகள் சில இதோ
மாமரத்தில் எத்தனையோ பழங்கள் இருக்கின்றன. அதில் ஒரு பழம் மட்டும் தங்கம் போல் ஜொலித்தது. இந்த பழம் எங்கள் மடியில் விழாதோ என்று பலரும் மடியை விரித்தனர். காமராஜரும் மடியை விரித்தார் நானும் மடியை விரித்தேன். .அந்த பழம் என் மடியில் விழுந்தது. அதை எடுத்து நான் என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். அந்த பழம்தான் இதோ இங்கே வீற்றிருக்கும் புரட்சிநடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் என் இதயக்கனி என்று எம் ஜி ஆரை புகழ்ந்து பேசினார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா அவர்கள் அப்படி கூறியதும் அவரின் பேச்சு கேட்டு மக்களின் கரவோலி அடங்க அரைமணி நேரம் ஆனது. பல பேர் புரட்சித்தலைவரைப் புகழந்து பேசினாலும் அங்கே அண்ணாவின் பேச்சுக்குத்தான் கரவோலி அதிகமாக கேட்டது. பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஒருவரை மனம் குளிர பாராட்டுகிறார் என்றால் அது புரட்சித்தலைவர் ஒருவரை மட்டும் தான் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று ஆகும். அதேப்போல் அண்ணாவின் பேச்சு கூடியிருந்த அனைவரையும் காந்தம் போல் இழுத்தது. புரட்சித்தலைவரும் அதேப்போல் அஅண்ணாவின் பேச்சைக் கேட்டு மயங்கியது உண்டு என்பதற்கு மற்றொரு நிகழ்வில் பார்ப்போம் ...... Thanks...
-
18th April 2020, 09:05 PM
#3197
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 56. பேரரறிஞர் அண்ணா. .
புரட்சித்தலைவர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் படபிடிப்பு வாகினி ஸ்டியோவில் நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணாவுக்கு உடல் நலம் குறைவு என்பதை கேள்வி பட்டு நுங்கம்பாக்கம் வில்லேஜ் ரோட்டில் உள்ள அண்ணாவின் வீட்டுக்கு சென்றார் புரட்சித்தலைவர். . எம்ஜிஆரை வரவேற்று சகஜமாக
உற்சாகமாக பேசினார் அண்ணா அவர்கள். .அப்போது அண்ணாவின் வளர்ப்பு மகன்கள் டாக்டர் பரிமளம் .இளங்கோ .மற்றும் சத்யாஸ்டியோ மானேஜர் பத்மநாபன். .புத்தூர் நடராஜன். ..அண்ணாவின் துணைவியார் ராணியம்மையார். .அனைவரும் அங்கு இருந்தனர். . அப்போது தேர்தல் பற்றி பேச்சு வந்தது. அப்போது அண்ணா அவர்கள் ஏற்கனவே நடந்த நிகழ்வு ஒன்றை நினைவூட்டினார். .அவை என்னவென்றால். .
அண்ணாவின் தலைமையில் 1967 ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக திமுக ஆட்சியில் அமர்ந்தது. அப்போது நடந்த தேர்தலில். தேர்தல் பிரசாரத்திற்காக. ஒரு காரில் அண்ணாதுரை. .மாயாவரம் தொகுதியில் திமுக வேட்பாளராக தேர்தலில் நின்ற.
கிட்டப்பா அவர்கள் மற்றும் இராம அரங்ண்ணல். .மதியழகன், .. என் வி நடராஜன்...
ஆகியோர் விழுப்புரம் வழியாக திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தற்காக சென்று கொண்டியிருந்தார். . விழுப்புரம் அருகே தீடிரென்று வண்டிநின்று விட்டது. என்னப்பா
மணி ((டிரைவர் பெயர் ))வண்டி ஏன் நின்று விட்டது என்று கேட்டார் அண்ணா அவர்கள். பெட்ரோல் தீர்ந்து விட்டது. கொஞ்சமா இருந்தது அடுத்த டவுனில் போய் போட்டுக்கலாம். என்று நினைத்து இருந்தேன் அதுக்குள்ளே டாங்க் காலியாகி விட்டது. என்றார். கொஞ்சம் பொறுங்கய்யா எதாவது வண்டி வந்தா பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்றார். டிரைவர். .அப்போதெல்லாம் கட்சி மூத்த தலைவர்கள் கூட புடைசூழ செல்லாமல் தனி காரிலே சென்றனர். .கார் நின்று போன இடத்தில் இருபக்கமும் வயல்கள். .நிறைய பேர் விவசாய வயல்களில் வேலைச்செய்துக் கொண்டியிருந்தார்கள் ஆண்களும் பெண்களும் காரை சூழ்ந்துக்கொண்டனர். .காரின் பேனட்டின் மீது பறந்துக்கொண்டிருந்த திமுக கொடியை பார்த்து காரை சுற்றி சுற்றி வந்தனர். . எம்ஜிஆர் கொடி பறக்குது எம் ஜி ஆர் இருக்காரு பாரு என்று ஆரவாரம் செய்தனர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். .காரை விட்டு இறங்கி அவர்களை சந்தித்தார் அண்ணா. . இது அவர் வண்டிதான் எம் ஜி ஆர் எங்களுடன் இல்லை. .திருச்சி வரை உள்ள கூட்டத்திற்கு போக சொல்லி எம் ஜி ஆர் தான் எங்களை அனுப்பினார் என்றார். .அது உண்மை இஇல்லையென்றாலும் எம் ஜி ஆரை நன்கு அறிந்திருந்த கிராம மக்கள் தன்னை திருச்சி சென்று, வர எம்ஜிஆர் பணிந்தார் என்று அண்ணா கூறியது. .அவரது பெருதன்மைய காட்டியது.. எம்ஜிஆர் காரில் பெட்ரோல் தீர்ந்து போச்சா இதோ ஒரு நிமிடத்தில் பெட்ரோல் கொண்டு வருகிறோம். .என்று கூறி சில இளைஞர்கள் தங்களுக்குள் கொஞ்சம் பணம் போட்டு சைக்கிளில் வேகமாக சென்று ஒரு டின்னில் பெட்ரோல் வாங்கி கொண்டு வந்து கொடுத்தனர். அண்ணாவும் மற்றவர்களும் அதற்கான பணம் கொடுக்க முன் வந்த போது பணத்தை வாங்க மறுத்து விட்டார்கள் .அந்தளவுக்கு எம் ஜி ஆர் மீது ரசிகர்கள் உயிரை வைத்திருந்தார்கள். .இந்த நிகழ்வு அண்ணா கூறி முடித்தார். என்னை அவங்களுக்கு தெரியல உங்கள் பெயர்தான். தெரிகிறது என்றார் அண்ணாஅவர்கள்? ...இதற்கு புரட்சித்தலைவர் சொன்ன பதில் அடுத்த பதிவில் பார்ப்போம். ....... Thanks...
-
18th April 2020, 09:05 PM
#3198
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 57. பேரரறிஞர் அண்ணா
அண்ணா அவர்கள் அப்படி பெருந்தன்மையுடன் கூறினாலும் எம் ஜி ஆர் அதை ஏற்க வில்லை. . அப்படி சொல்லாதீங்க அண்ணா உங்களை தெரியாமல் உங்கள் பேச்சைக் ரசிக்காமல் தமிழகத்தில் யாராவது இருக்க முடியுமா.?.என்றார். .எம்ஜிஆர் எந்த கூட்டத்தில் பேசினாலும் அவர் பேசியதும் கூட்டம் கலைந்து விடும். எனவே தேர்தல் பொதுக்கூட்டத்தற்காக தமிழகத்தில் எங்கு பேசினாலும் மற்ற எல்லா பேச்சாளர்களையும் பேசி முடித்தபின்னரே எம் ஜி ஆரை பேச அழைப்பார்கள். ஆனால் அண்ணா பேசும் கூட்டங்களில் எம் ஜி ஆர் பேசி முடித்த பின்னும் கூட்டம் கலைந்து போகாது. கூட்டம் தொடர்ந்து அப்படியேஇருக்கும். பேரரறிஞர் அண்ணா பேசி முடித்த பின்னர்தான் கூட்டம் கலையும். .தமிழக அரசியலில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத பெருமை அண்ணாவுக்கு எம்ஜிஆருக்கு உண்டு. இருவருக்கும் உள்ள
ஈடுபாடு அலாதியானது.
முதலில் காங்கிரஸ் கட்சியில் எம்ஜிஆர் இருந்தார். நெற்றியில் விபூதி கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிவார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டியிருந்தார்..திமுக கட்சியில் நீங்கள் எப்படி சேர்ந்தீர்கள் என்று ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு எம்ஜிஆர் தந்த பதில். பேரரறிஞர் அண்ணா எழுதிய சந்திரோதயம். .பணத்தோட்டம் ஆகிய இரு புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பால் ஈர்க்கப்பட்டேன். பிறகு அண்ணாவின் பேச்சைக் கேட்டேன் காந்தம் மாதிரி அவர் பேச்சு என்னை இழுத்தது அப்படித்தான் நான் திமுகவில் சேர்ந்தேன். என்று விளக்கம் அளித்துள்ளார். பிற்காலத்தில் அண்ணாவின் இதயத்தில் எம்ஜிஆர் காந்தம் போல் பதிந்தார்.
1962 ம் ஆண்டு சென்னை எஸ் ஐ. ஏ. ஏ. திடலில் நிதி திரட்டும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் கீழே நின்றுக்கொண்டு நிதி வழங்குபவர்களை வரிசையாக நிற்க வைத்து மேடைக்கு அனுப்பிக்கொண்டியிருந்தார் மேலே ஒலிபெருக்கின் முன்பே கருணாநிதி நின்று கொண்டியிருந்தார் நிதி வழங்குபவர்கள் தங்கள் பெயரை சொல்லி பணத்தை தந்தனர். அவர்கள் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்தார் கருணாநிதி. . அறிஞர் அண்ணா அந்த காணிக்கையை
பெற்றுக்கொண்டார் பேராசிரியர் அன்பழகன் கணக்கு புத்தகத்தோடு அமர்ந்து விபரத்தை எழுதிக்கொண்டார். .இதைத் தவிர ஐம்பது பேர் உண்டியலோடு மக்கள் மத்தியில் நிதி சேகரித்துக்கொண்டிருந்தனர். மாலை 6. 30. மணிக்கு தொடங்கி இரவு
9. 30. மணிக்கு நிதிவசூல் முடித்துக் கொள்ளப்பட்டது..அதன் பிறகு மக்கள் திலகம்
எம் ஜி ஆர் தனக்கு மதுரையில் மக்கள் தந்த 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் பாதுகாப்பு நிதிக்காக வழங்கினார்.
வரலாறு இனிமேல் தான் ஆரம்பம் அவசர படாதீங்க அடுத்த பதிவில் சந்திப்போம். ..... Thanks..........
-
18th April 2020, 09:06 PM
#3199
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 58. பேரரறிஞர் அண்ணா
ஒவ்வொரு முறையும் வாத்தியாரின் வள்ளல்தனமும் மனிதநேயமும் இயற்கையானது பிறவியிலேயே ஏற்பட்டது என்பதற்கு பல உதாரணங்கள் ஆதாரங்கள் அவரிடம் உதவிபெற்றவர்களால் மட்டுமே அறிய முடியும், பாதுகாப்பு நிதிக்காக 110. சவரன் தங்க வாளை பேரரறிஞர் அண்ணாவிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அண்ணா அவர்கள் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தங்கவாளை ஏலமிட்டார். பார்த்தால் பசி தீர்க்கும் பளப்பளப்போ கண்ணை பறிக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட வாள் இதிலே வெள்ளி இருக்கிறது. வேலைப்பாடுகள் நிறைந்திருக்கிறது. எம்ஜிஆர் வள்ளல் குணமும் வாங்குபவர்கள் மனமும் பார்ப்பவர்கள் இதயத்தில் மகிழ்வு உண்டாகும். முதல் முறையாக பதினோன்யிரம் அண்ணாவின் சொற்கள் கேட்டு எழுந்த ஆரவாரம் எல்லோருடைய இதயத்திலும் ஒலித்தது முடிவில் தங்கவாளை பதிமூன்றாயிரம் ரூபாய்க்கு வி. எஸ் இ. படநிறுவனத்தினர் ஏலத்தில் வாங்கினார்.பாதுகாப்பு நிதியாக எல்லாம் சேர்த்து 35. ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. இது தவிர தங்க நகைகள் பல ஆயிரக்கணக்கான மதிப்பு இருக்கும். .ஏலத்தில் எடுக்கப்பட்ட தங்கவாளை மீண்டும் விலைக்கொடுத்து மக்கள் திலகம் வாங்கினார். .அதனை கொல்லுரில் கோவில் கொண்ட மூகாம்பிகை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டார். தாயின் கையனைப்பில் தனயன் இருப்பது போல். தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கையில் இன்றும் உள்ளது. வாத்தியார் வள்ளல் தனத்துக்கு ஆதாரம் கேட்கும் சில மூடர்களுக்கு இதுவே ஆதாரம். செல்லுங்கள் மைசூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு இன்றும் அம்மன் கையில் இருக்கும் வாள் எங்கள் தெய்வம் பொன்மனச்செம்மல் தந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள் மனிதர்கள் இறக்கலாம் அவன் உடல் அழியலாம் ஆனால் அவன் செய்த தர்மமும் வள்ளல் தனமும் ஒரு நாளும் அழியாது அது இறைவனின் சன்னதியில் போய் சேரும் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும் ஆதாரம் ஆகும் .
இந்தியா சீனா போர் நிதிக்காக மக்கள் திலகம் அப்போதைய பிரதமர் நேருவிடம் உடனே பாதுகாப்பு நிதி என்று 75. ஆயிரம் வழங்கினார். பணம் எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஜவஹர்லால் நேரு. . நேருவின் உயர்ந்த உள்ளத்தை அது காட்டியது. . அதற்கு பதிலளித்துப் மக்கள் திலகம் பேசிய வைர வரிகள் சில. நேருவின் பேச்சைக் கேட்டு நான் உருகினேன் என்றால் அது யார் தந்த மனப்பண்பு அறிஞர் அண்ணாவின் வழியில் நடப்பதால் பெற்ற சிறப்பல்லவா. ரூபாய் 75 ஆயிரம் தந்தது எனக்கு பெருமையல்ல. . என் தாய் தந்தை குடும்பத்தினருக்கும் பெருமையல்ல. பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கு உரிய பெருமையிது. வாழ்க்கையை சுகமாக கழிக்க வளமிருக்கிறது என்றாலும். நான் மக்கள் மன்றத்தில் வருவதும் மக்களுக்குக்காக போராட நினைப்பதும், மக்கள் கருத்தை எடுத்து சொல்ல விரும்புவதும் அறிஞர் அண்ணாவின் தொண்டன் என்பதற்காகவும். அவரது கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்திற்குக்காவும். கொடுத்தேன். என்றார் மக்கள் திலகம் இதைக்கேட்டு அண்ணாவும். திமுக சேர்ந்த அனைவரும் பூரிப்பு அடைந்தனர். இப்படி அண்ணாவும் எம்ஜிஆரும் ஒருவர் மீது ஒருவர் பற்று வைத்திருந்தார்கள்
மேலும் தொடரும். தொடரும்.... Thanks...
-
18th April 2020, 09:07 PM
#3200
Junior Member
Diamond Hubber
வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 59. பேரரறிஞர் அண்ணா
எம்ஜிஆருக்கும் எனக்கு இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்ஜிஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வதாக கருதப்படும். உண்மைதானே எம்ஜிஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். .முல்லைக்கு மணம் உண்டு. என்பதை கூறவா வேண்டும். . இந்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர் பார்த்தனர். ஆனால் அது என் மடியில் வந்து விழுந்தது, என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். ( 1958. ம் ஆண்டு நாடோடிமன்னன் வெற்றிவிழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை ) ..
நமது எம்ஜிஆர் அவர்கள் பேசும் போது அழுகும் உள்ள உணர்ச்சியும் உள்ளதுதான் கவிதை என்று சொன்னார். இதை சொல்லும் போது நீங்கள் எல்லாம் கைத்தட்டி மகிழ்ந்தீர்கள். எதற்காக கைதட்டீர்கள் என்று எண்ணி பார்த்தேன். அப்போது தான் அவர் தன்னைப் பற்றி பேசினார் என்று புரிந்தது. அது அவர்க்கு மட்டுமே பொருந்தும் ( இரண்டாம் உலக தமிழ் மாநாடு 1968. ல் நடந்தபோது அண்ணாவின் புன்னகை உரை ) )
தமிழர் பண்பாடு அவதாரம் எடுத்து நா. மணக்க நடமாடிய நாவுக்கரசர் அறிஞர் அண்ணா அவர்கள். .நாடு இருந்தும் அதற்கு பெயரில்லாமல் தவிர்த்த ஒரு இனத்தின் மானத்தை காக்க தமிழ் நாடு என்று தான் பிறந்த மண்ணுக்கு பெயர் சூட்டிய தமிழ் தாயின் பண்பாட்டு தலைமகன் அறிஞர் அண்ணா ( அண்ணாவைப்பற்றி எம்ஜிஆர் கூறியது. )
புயல் மழையில் சேதம் வரும் இடங்களில் எல்லாம் எங்கள் புரட்சி நடிகர் உதவினை காணலாம். தன்னை தேடி வருகிறவன் கண்ணீரை துடைப்பவன் வள்ளல். .தன்னை தேடி வருகிறவனின் துன்பத்தை போக்குபவன் வள்ளல். . ஆனால் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அப்படி அல்ல சமுதாயத்தில் துன்பபடுகிறவன் எங்கே என்று தேடிபோய் அவன் கண்ணீரை துடைத்து கைக்கொடுக்கிற எம்ஜிஆர் வள்ளலுக்கெலாலாம் வள்ளல் ஆவார். ( 1961 . ம் ஆண்டு ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு வழங்கும் போது அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள். )
பேரரறிஞர் அண்ணா மறைந்த போது மக்கள் திலகம் பேசிய மணிமொழிகள். .நெஞ்சு பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டுள்ளனர் ..அண்ணா அவர்கள் புறத்தில் வேண்டுமானால் நம்மை விட்டு அகன்று இருக்கலாம். அகத்தில் நாம் சாகும் வரை இருந்துக்கொண்டுத்தான் இருப்பார். இருள் விலக அகல்விளக்காக இருந்ததாவது பயன் பட வேண்டும். என்பது பேரரறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் தந்த பாடம். எதையும் தாங்கும் இதயம் நம்மை விட்டு போகாமல் நமது இதயத்தில் தங்கி விட்டார்........ Thanks...
Bookmarks