Page 322 of 402 FirstFirst ... 222272312320321322323324332372 ... LastLast
Results 3,211 to 3,220 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3211
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 68. பேரரறிஞர் அண்ணா

    திரையுலகில் அண்ணாவின் புகழ்.
    1. நாடோடிமன்னன் படத்தில் முதன் முதலாக அண்ணா கொடி காண்பித்தார் அதன் பிறகு அடிமைப்பெண் . உலகம் சுற்றும் வாலிபன் . நேற்று இன்று நாளை இதயக்கனி. . நாளை நமதே. . உழைக்கும் கரங்கள், . நவரத்தினம். .போன்ற திரைப்படங்களில் கட்சி கொடி அண்ணா கொடி காண்பித்தார்.
    2. அண்ணா நீ என் தெய்வம். அண்ணா பிறந்த நாடு. அண்ணா காட்டிய வழி. என்று படத்திற்கு பெயர் வைத்தார். ஆனால் படம் எடுக்காமல் பாதியில் நின்றது.

    3. . நான் செல்லுகின்ற பாதை பேரரறிஞர் காட்டும் பாதை என்று புதிய பூமி படத்திலும். 2. மேடையிலே முழங்க வேண்டும் அறிஞர் அண்ணா போல். என்று பெற்றதால் பிள்ளையா படத்திலும்.
    3. சந்தனபெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார். என்று எங்கள் தங்கம் படத்திலும்.
    4, அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் என்று இதயவீணை படத்திலும்
    5. அண்ணமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை என்று அண்ணமிட்ட கை படத்திலும். .
    6. நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். என்று நேற்று இன்று நாளை படத்திலும்.
    7. அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே கூறலாம். உரிமைக்குரல் படத்திலும்.
    8. அண்ணாவை என் உள்ளம் ஒருநாளும் மறவாது. .என்று நினைத்தைப் முடிப்பவன் படத்திலும்.
    9. எதையும் தாங்கிடும் இதயம் என்றும் மாறாது. என்று நாளை நமதே படத்திலும். .
    10. அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுவே சத்தியம் என்றும் , கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க உரிமைக்குரல் படத்திலும். .
    11. தென்னாட்டு காந்தி அண்ணாவே சொன்னார் என்று நம்நாடு படத்திலும்.
    12. அண்ணா சொன்ன வழி கண்டு நம்மை தேடுங்கள் என்று இதயக்கனி படத்திலும்.
    13, இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார். அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார். என்று பல்லாண்டு வாழ்க படத்திலும். .
    14. உங்களின் நம் அண்ணாவை பார்க்கிறேன் என்று நவரத்தினம் படத்திலும்.
    15. அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம் என்று மீணவநண்பன் படத்திலும் .
    16. கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து போனீர்களே என்று இன்று போல் என்றும் வாழ்க படத்திலும். இவையெல்லாம் அண்ணாவைப்பற்றி படத்தில் பாடிய பாடல்கள் ஆகும்.
    4, உலகம் சுற்றும் வாலிபன். எங்கள் தங்கம். இதயக்கனி. நேற்று இன்று நாளை. .பல்லாண்டு வாழ்க. .சிரித்து வாழ வேண்டும்..போன்ற திரைப்படங்களில் அண்ணாவின் பேச்சுகள் ஒலிக்கும். .
    5, சுமார் 40. திரைப்படங்களுக்கு மேல் அண்ணாவின் புகழ் பாடி வசனங்கள் அமைந்திருக்கும். .
    6. அண்ணாவின் கதை வசனம் எழுதிய தாய்மகளுக்கு கட்டிய தாலி நல்லவன் வாழ்வான். .இதில் நல்லவன் வாழ்வான் படம் சம்பளம் வாங்காமல் நடித்தார். .
    7. திரைப்படங்களில் அண்ணாவின் உருவம் காண்பித்தார் அண்ணாவின் காட்சிகளை காண்பித்தார்.
    8. அண்ணா கலந்துக்கொண்ட திரைப்படங்களின் நிகழ்ச்சிகள்.
    நாடோடிமன்னன் .எங்க வீட்டு பிள்ளை. ..காவல்காரன்..பெற்றால் தான் பிள்ளையா.
    குடியிந்தக்கோயில்.
    9. பாண்டிச்சேரியில் அண்ணா ஆட்சி நிறுவினார்.
    10. கட்சி ஆரம்பித்து முதல் முதலாக அண்ணா பிறந்த காஞ்சியிலே முதல் கூட்டம் நடத்தினார். .
    11. அண்ணா கண்காட்சி தொடங்கினார். .அண்ணா பிறந்த நாள் போட்டிகள். .பிறந்த நாள் பரிசுகள் வழங்கினார்.
    12. முடிவாக பேரரறிஞர் அண்ணா அருகிலேயே அமரரானர். .அண்ணாவும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். .பொன்மனச்செம்மலும் ஆட்சியில் இருக்கும் போதே மறைந்தார். ...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3212
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 69 பேரரறிஞர் அண்ணா.

    1967. ம் ஆண்டு திமுக கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக கூடிய சட்டசபையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் பற்றி சில வாக்கியங்கள் பேசிய பிறகுதான் சட்டசபை நடைபெற்றது. அப்போது பேரரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய சில முத்தான வாக்கியங்கள். .

    காந்தி சுடப்பட்டார் இறந்து போனார். கென்னடி சுடப்பட்டார் இறந்து போனார் .ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார் இறந்து போனார் .எம்ஜிஆர் சுடப்பட்டார் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன் நல்ல வேளை யார் செய்த முற்பயனோ உயிர் பிழைத்துக்கொண்டார். அவரை நாம் இழந்திருந்தால் அது ஒரு சாதாரண தனிமனிதனின் இழப்பாக இருந்திருக்காது. ஈகை குணம் கொண்ட ஒரு நல்ல மனிதரை. பண்பாளரை .ஒரு நல்ல நடிகரை. தேசப்பற்றுமிக்க மனிதரை. .நமது கட்சியின் போர் கொடி மக்களின் இதயத்தை தொட்டவர். இப்படி எத்தனையோ பேரை எம்ஜிஆர் என்ற தனிமனிதர் மூலம் இழந்திருக்க வேண்டியிருக்கும். .இந்த ஆட்சி அவர் மூலம் கிடைத்தது. அதனால் நாம் அவர்க்கு செய்யும் நன்றி கடனாக ஒரு முறை கரவோலி வீசுவோம் என்று சட்டசபையில் அண்ணா பேசிய பிறகு கரவோலி மூலம் எம்ஜிஆருக்கு நன்றி கூறிய பிறகு தான் சபை நடத்தப்பட்டது. அப்போது இருந்த அனைத்து கட்சியினரும் அதை வரவேற்று ஆமோதித்தனர்.

    ஒரு முறை அறிஞர் அண்ணாவுடன் எம்ஜிஆர் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். .அண்ணா வழக்கம் போல் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். .எம்ஜிஆர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். பெரம்பலூர்க்கு அப்பால் சென்ற பொழுது .காரை சாலையின் ஒரமாக நிறுத்தினார். .அப்போது அந்த பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டியிருந்த இளைஞர்கள் விவசாயிகள் முதியோர்கள். காரில் இருந்த திமுக கொடியை பார்த்து விட்டு எம்ஜிஆர் கார் என கூவிக்கொண்டு ஓடிவந்து எம்ஜிஆர் இருக்கிறாரா என எட்டிப் பார்த்தனர். அதற்குள் கிராம மக்களும் ஒடி வந்து காரை சூழ்ந்துக்கொண்டு எம்ஜிஆரை தேடினார்கள். முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவரை அண்ணா என்று தெரியாமல் எம்ஜிஆர் வந்திருக்கிறரா என்று கேட்டனர். அதற்கு அண்ணா முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் எம்ஜிஆர்,என்றுகூறி அண்ணா கீழே இறங்கி கார் கதவை திறந்து எம்ஜிஆரை வெளிவர செய்தார். எம்ஜிஆர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போனார்
    அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும். தன்னோடு இருப்பவர்கள் தன்னை விட மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருக்கும் போது. பொறாமை படுவதற்கு பதிலாக பெருமைப்பட்டார். அதை எண்ணி மனம் திகைத்தார். எம்ஜிஆர் இறுதி வரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணமாக விளங்குபவர் பேரரறிஞர் அண்ணா. என்றால் தகுதியான வாரிசுக்கு இலக்கணம் என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர்தான் என்பதற்கு இது ஒரு சான்றாகும்........ Thanks...

  4. #3213
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 70, பேரரறிஞர் அண்ணா. .

    ஒரு முறை அறிஞர் அண்ணா அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன். நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி. .ஆர் எம் வீரப்பன். ..எஸ் எஸ் ஆர்.ராஜேந்திரன், .முசிறி பித்தன். .கருணாநிதி. .நாவலர் நெடுஞ்செழியன். .மற்றும் சில முக்கிய நண்பர்களை கூப்பிட்டு எம்ஜிஆரை விட்டு எந்த காரணத்தைக் கொண்டும்.
    விலகி போகாதீர்கள் அவர் பக்கத்திலே எப்போதும் இருங்கள்.. ஏன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்களை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்டது தான் அவர் மன்றங்கள். . இந்த மன்றங்களில் பதினைந்து வயதில் இருந்து இருப்பத்தி நான்கு வயதுக்குள்ளான எதற்கும் அஞ்சாத எம்ஜிஆர்க்காக உயிரை தரக்கூடிய பத்து லட்சம் பேர் உறுப்பினர்களாகவும். மேலும் பத்து லட்சம் பேர் உறுப்பினர் இல்லாமல் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுதான் அவரது சொத்து அவரது உறவினர்கள். அவர் நம்மை விட்டு விலகினாலும் நாம் அவரை விட்டு விலகினாலும். அவரது சொத்துக்களான ரசிகர்களும் நம்மைவிட்டு விலகுவார்கள். என்று அண்ணா உணர்ச்சிவசப்பட்டு கூறினாலும். அண்ணாவின் அன்புக்கட்டளையே ஏற்று அதன் படி இன்றும் நாங்கள் எம்ஜிஆர் பக்கத்திலே இரூக்கின்றோம். .ஆனால் பலர் அண்ணா எம்ஜிஆரை மறந்து வேறு இடத்தில் உள்ளனர். என்ன செய்வது உலகத்திலேயே எந்த சினிமா நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றம் ஒரு தமிழ்பட நடிகரான எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே இருப்பது சரித்திரத்தில் இடம் பெற கூடிய சாதனையாகும். .( 1976 ம் ஆண்டு கல்கண்டு பத்திரிக்கையில் வந்த கட்டுரையில் எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர் முசிறி புத்தனின் மனதில் வந்த வார்த்தைகள் எழுத்துக்கள் ஆகும். )

    பேரரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நோயுடு போராடிக்கொண்டியிருந்த நேரம். அமெரிக்க நாட்டுக்கு அனுப்பி மீண்டும் வருவார் என்று ஏங்கியிருந்த நேரம். அன்றைக்கு பம்பாய் சாந்தா குரூஸ் விமான நிலையத்தில் அண்ணாவை வழி அனுப்ப எல்லாரும் பக்கத்தில் இருந்தார்கள். ஆனால் பேரரறிஞர் அண்ணா அவர்கள் நள்ளிரவு வேளையிலும். ஒருவரை தேடினார். அவரும் அடிக்கடி முந்திரிக்கொட்டைப்போல் முன்னாலே உட்கார்ந்து கொள்பவர் அல்லவா. ..அதைப்போலத்தான் அன்றைக்கும் தாளமுடியாத தாக்கத்தினால். கண்ணீரைத் துடைத்து கொண்டு. பேரரறிஞர் அண்ணா அவர்களை காலை ஐந்து மணிக்கு விமானத்தில் அனுப்ப போகிறமே அவர்கள் மீண்டும் நம்மிடத்தில் நலம்பெற்று வரவேண்டும். என்று எங்கேயோ உட்கார்ந்து தேம்பிக்கொண்டியிருக்கிற ஒருவரைத்தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் தேடிக்கொண்டிருந்தார். யார் அவர் என்றால் அந்த மூன்றெழுத்து மோகனவார்த்தைக்கு சொந்தக்காரர்.புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான் பேரரறிஞர் அண்ணா அவர்கள் எங்கே என்று கேட்டார்கள். தொண்டர்கள் ஒடிப்போய் அழைத்து வருகிறார்கள். அப்போது தான் அண்ணா தான் வாங்கிய புதிய ஆங்கில புத்தகத்திடைய அட்டையை கிழித்து எம்ஜிஆரிடம் கொடுத்தார்..அந்த அட்டையில் என்ன படம் என்றால். வலிமைமிக்க கரம் அந்த கரம் ஒரு ஸ்பானரைப் பிடித்திருக்கிறது. அந்த படத்தை ஏன் புரட்சித்தலைவரிடம் அண்ணா அவர்கள் கொடுத்தார்கள் என்பதற்கு இன்று வரை யாருக்கும் விளங்கவில்லை. அந்த படத்தைதான் அண்ணா அவர்கள் திமுக கழகத்தின் தொழிற்சங்க கொடியாக மாற்றினார். ( கட்சி பல்வேறு குழப்பங்கள் உள்ளது அதை நீதான் ஸ்பானரை கொண்டு சரி செய்ய வேண்டும். உங்கள் ஒருவரால் தான் அது முடியும் என்று பொருள் விளங்க கொடுத்தார். ) எம் ஜி ஆர் ஆற்றல் எப்படிப்பட்டது என்று யாராலும் கண்டுக்கொள்ள முடியாது. அண்ணா மட்டும் தான் அவர் ஆற்றலை கண்டுக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...

  5. #3214
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 71. .பேரரறிஞர் அண்ணா

    1967. ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக கட்சி தேர்தலில் போட்டியிட தயாரானது . . நாவலர் நெடுஞ்செழியன், .பேராசிரியர் அன்பழகன். .கருணாநிதி. . ஆர் எம் வீரப்பன். . என் வி சோமு. . என் வி சம்பத், . எஸ் எஸ் ஆர் ராஜேந்திரன். .நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி. .மதியழகன். .மற்றும் பல முன்னணி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் நிதி சேர்த்தனர். . அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் எவ்வளவு நிதி கேட்கலாம். அல்லது நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து அதில் எம்ஜிஆரை வரவேற்று கலந்து கொள்வது. அதன் மூலம் நிதி வசூல் செய்யலாம். அல்லது எம்ஜிஆர் நாடகம் அமைத்து நாடகம் மூலம் வசூல் செய்யலாம். .அதுவும் இல்லையென்றால் எம்ஜிஆர் திரைப்படங்கள் பல தியேட்டர்களில் போட்டு அதன் மூலம் வசூல் காணலாம். .இப்படி பல வகையான யோசனையில் எம்ஜிஆரை வைத்து எப்படியெல்லாம் நிதி வசூல் செய்யலாம் என எண்ணி யோசித்திருந்தனர். .எதற்கும் கட்சி தலைவர் அண்ணாவிடம் கேட்டு செய்வோம். என்று எண்ணி அண்ணாவிடம் சென்று எம்ஜிஆரிடம் எவ்வளவு வசூல் செய்யலாம் என கேட்டனர். . எம்ஜிஆரும் இந்த தகவலை தெரிந்து அண்ணா எவ்வளவு கேட்டாலும் நான் தர தயார் என்றார். .அதற்கு அண்ணா தந்த விளக்கம். ... எனது தம்பியும் நண்பர் எம் ஜி ஆர் அவர்கள் நான் கட்டளையிட்டால் ஒரு லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக தருவதாக கூறினார். .நான் கேட்டா ஒரு லட்சம் ரூபாய் என்ன ஐந்து லட்சம் கூட கொடுக்கக்கூடிய மனமும் திறமையும் படைத்தவர். .நான் இப்போது அவர்களிடத்தில் லட்சத்தில் பணத்தை எதிர் பார்க்க வில்லை. .அவர் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நாடெங்கும் ஒரு முறை சுற்றி வந்து அவரது இனிய முகத்தை பொதுமக்களிடம் காட்டினால் போதும் ..எனக்கு பல லட்சக்கணக்கான வாக்குகள் கிடைக்கும். . என்ற உறுதி பாடு உண்டு. கலைஞன் என்பவன் மிக நுணுக்கமானவன் மனிதர்களிடமிருந்து மாறுப்பட்டவன். உண்மையே உணர மறுப்பவர்களுக்கு உணர வைப்பவன். அப்படி உணர வைத்த கலைஞர்களில் தலைசிறந்தவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். அவர் வழியில் கருத்தாற்றலும் கடமையாற்றலும். .சிறந்த ஒரே கலைஞர் தம்பி எம்ஜிஆர் ஒருவர்தான். என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். .

    1969 ம் ஆண்டு என் தந்தை மறைந்த பிறகு நான் பரிமளம் பதிப்பகத்தின் மூலம் அண்ணாவின் நாடகங்களை. அண்ணாவின் சிறு கதைகள். .என்கின்ற தொகுப்புகளை கொண்டு வந்தேன். அதை விற்க தெரியாமல் கடன் ஏற்பட்டு. ஏ வி எம் அச்சகம் என் மீது வழக்கு தொடர்ந்தது. .இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்னை உரிமையோடு கண்டித்து. என்னிடம் ஏன் கூறவில்லை என்று கோபப்பட்டார். .ஊரில் பிறர்க்கு நான் செய்வது உதவி. .அண்ணாவின் குடும்பத்தினருக்கும் என் எஸ் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் நான் செய்வது கடமையாகும். .என்று கூறி கட்ட வேண்டிய அனைத்து தொகையும் திரு எம்ஜிஆர் அவர்கள் கட்டினார். அதுமட்டுமல்ல வழக்கு மன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து என்னை மீட்டனர். ..என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது. என்று படத்திற்காக மட்டும் அல்ல நிஜவாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர்.
    ( பேரரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மைந்தன் டாக்டர் பரிமளம் எழுதிய கட்டுரையில் )...... Thanks...

  6. #3215
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 72. பேரரறிஞர் அண்ணா

    பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியதும் அமைச்சர்களின் பட்டியலை தயாரிக்க அந்த பட்டியலில் எம்ஜிஆர் பெயர் இருந்தது. ஆனால் எம் ஜி ஆரோ அந்த பட்டியலில் இருந்து எனது பெயரை எடுத்து விடுங்கள் எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. வேண்டாம். என்றார். அதற்கான காரணம் சொன்னார். நான் நடிப்பு துறையில் இருக்கிறேன். மக்களை நம்பக்கம் வைக்க திரையுலகம் ஒரு சாதனை ஏடு அதை மக்களுக்காக நான் பயன்படுத்த வேண்டும். அதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் நம்மோடு கட்சியில் இருப்பவர்களுக்கு அந்த பதவியே கொடுங்கள் என்றார். அண்ணா கொடுத்த பதவியை மறுப்பது. அண்ணாவை மதிக்காதுப்போல் ஆகும் என்று கட்சியில் உள்ள ஒரு சிலர் குறை கூறினார்கள். இதை அறிந்த அண்ணா அவர்கள் தந்த விளக்கம். .
    எத்தனையோ பேர்கள் பதவிக்காக போட்டி போடுவார்கள் பதவி தரவில்லை என்பதற்காக கட்சி தாவுவார்கள். .பதவிக்காக பகையாளியாக மாறுபவர்கள் உண்டு ஏன் பதவிக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவர்கள் உண்டு. .இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில். பதவி வேண்டாம் என்று உதறி தள்ளும் எம்ஜிஆர் பெருதன்மைய காட்டுகிறது. அவரால் பெற்ற ஆட்சி இது அதற்காக தனது கொள்கையே தர்மம் செய்து உள்ளார். கட்சிக்காக தனது உழைப்பை தர்மம் செய்து உள்ளார். கட்சியில் உழைத்தவர்களுக்காக தனது பதவியை தர்மம் செய்து உள்ளார். இப்படியும் தர்மம் செய்யலாம் என்பதை கற்றுத் தந்துள்ளார். .தம்பி ராமச்சந்திரன் மக்கள் மனதில் மகா ராஜா திரையுலகுக்கு சக்கரவர்த்தி .அதனால் மந்திரி பதவி அவருக்கு பெரிய விஷயமல்ல. தம்பி எப்போதும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இருக்கட்டும். என்றார். .
    அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார். ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது. எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள் இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது. மறக்க முடியாத வார்த்தைகள் ஆகும். .தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி. . அரசியல். .விவகாரங்களில் கலந்துக்கொள்வதில்லை எப்பவும் நடிப்பிலே இருக்கிற சட்டசபை கூட்டத்துக்கு வர்றதில்லை. சொன்னாங்க. .? அவங்களுக்கு தெரியாது நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான் .. ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே ஒரு காட்சியிலே ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிற. .நீ ராமச்சந்திரன் ஆனால் வானத்துக்கும் சந்திரன் எட்டியிருந்து ஒளி கொடுக்கிறவன். நீ மற்றவங்களுக்கு கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்களும் வரத்தான் செய்யும்.
    எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks...

  7. #3216
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 73 . பேரரறிஞர் அண்ணா

    அண்ணா மீது அதிக பாசம் வைத்த எம்ஜிஆர் அண்ணா மரணம் அடைந்தபோது கதறி அழுதார். அழுதுக்கொண்டே இருந்தார். என் தந்தை இறந்த போது தெரியாது அப்போது நான் சிறுவன் தாயை இழந்த போது எனக்கு அதிகமாக துக்கம் இருந்தது. இருந்தாலும் என் கண்ணீரை அடக்கினேன். .அண்ணாவின் மரணம் என்னை கலங்க வைத்து விட்டது என் அழுகையை அடக்கமுடியல என்று தங்கதமிழ் மகனை வங்க கடலோரம் அடக்கிய பின் சொன்னார். என் பெரும் இழப்பு அண்ணாவின் இறப்பு என்று பலர் முன் புலம்பினார். .என்னை சந்திரன் என்றார்கள் அவர்களோ சூரியன். .சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ? என்று வருந்தினார். ஒப்பாரியில் மிகவும் ரசிக்கத்தக்கதும் வருனை மிகுந்ததும் ராவணன் மனைவி காந்தாரி புலம்பியதும் கம்பன் வருனையில் களைக்கட்டி நிற்கும். .தமிழ் என்னை உன் இதயத்தில் வைத்திருப்பதாக சொன்னீர்களே ராமபாணம் அந்த இதயத்தை துளைத்த போது என்னையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று பொய் சொன்னீர்களா என கேட்டு அழுதாராம். அப்படி இந்த கோமகனும் தனக்குள் புலம்பினார். நடந்துக்கொண்டே வேட்டிக்கட்டும் அழகு எப்போ பார்ப்பேன். .மேடையிலே பிரசாங்கம் செய்யப்போறப்போ யாருக்கும் தெரியாமல் பொடி போடற பக்குவம் யாருக்கு வரும். என் உடன்பிறந்தவர்கள் கூட தம்பி என்று கூப்பிடறது இல்லை. நீங்கதானே கூப்பிடுவீங்க இனிமேல் யார் என்னை கூப்பிடற போறாங்க. என்றார். .

    பேரரறிஞர் அண்ணா கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்ஜிஆர் நாடகம் மன்றம் சார்பில் இன்பகனவு, .இடிந்தக்கோயில். ,மற்றும் அட்வகேட் அமரன். முதலிய நாடகங்கள் நடத்தி கட்சிக்கு நிதி சேர்த்துக்கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதல்லாம் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் இனைந்து வெளியூர்களுக்கு சென்று சிறப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு கழகத்தின் கொள்கைகளை பிரசாரம் செய்தார். .எம்ஜிஆர் கலந்துக்கொண்ட சிறப்பு கூட்டங்களில் டிக்கெட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. .மக்களும் காசு கொடுத்து கூட்டம் கூட்டமாக அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் திரண்டு வந்தனர். .அந்த நிதி முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது. திமுக கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களின் முதன்மையானவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர் தான். முன்னப்போதும் கேள்வி படாத சரித்திர சாதனையாகும் இது? அதைப் பார்த்து அண்ணா பூரித்துப் போனார். அன்று நம்நாடு பத்திரிகைகளில் இப்படி எழுதினார். .
    நண்பர் எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை நாடு அறியும். எம்ஜிஆரை நான் பாராட்டுவது என்னை நானே பாராட்டி கொள்வது போன்றதாகும். ..
    அவர் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கை எது என்பதை நாடறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதை கூறவா வேண்டும். ? தி.மு.க கட்சியினால் எம்ஜிஆர். எம்ஜிஆரால் திமுக கட்சி. . இரவு பகல்.. உயர்வு தாழ்வு. ..கொடுப்பவன் வாங்குபவன். ..மேடு பள்ளம். .
    இவையெல்லாம் எப்படி இயற்கையில் மாற்ற முடியாதோ. அதுபோல் தான் எம் ஜி ஆர் இல்லையென்றால் கட்சி இல்லை. கட்சியில்லையென்றால் எம்ஜிஆர் இல்லை. கட்சியும் எம்ஜிஆரையும் மாற்ற முடியாது. .என்று காந்தகம் போல் ஆகிவிட்டது. .என்று அருமையாக எழுதியிருக்கார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். அதைவைத்துதான்எம்ஜிஆரை அண்ணாவின் இதயக்கனி என்று எல்லோரும் சொல்கிறார்கள்........ Thanks...

  8. #3217
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 74 பேரரறிஞர் அண்ணா. .

    அண்ணாவுக்கும்எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில
    1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். .
    2, நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள். .
    3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். .எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார். 4, இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள். .
    5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
    7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர். 8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்...
    9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில். அண்ணாவின் முமு பெயர் அண்ணாதுரை எம்ஜிஆர் முமு பெயர் எம் ஜி ராமச்சந்திரன்.
    10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்ஜிஆர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டிக்கு அறிஞர் அண்ணா என் வி நடராஜன் வுடன் பொதுக்கூட்டத்தற்காக செல்லும் போது கோவில்பட்டி அருகே அண்ணாவின் கார் ஒரு மரத்தடியில் அருகே நிறுத்தப்படுகிறது. வயல்வெளியில் தோட்டங்களில் வேலை பார்க்கும் விவசாயிகள் காரில் திமுக கொடி பறப்பதை கண்டு ஒடி வந்தனர். கார் அருகே வந்து நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் கட்சியா என்று அண்ணாவையும் நடராஜனையும் பார்த்து கேட்டனர். அதற்கு அண்ணாவும் ஆம் நாங்களெல்லாம் எம்ஜிஆர் கட்சித்தான் என்றவர் உங்களுக்கு எம்ஜிஆரை பிடிக்குமா? ? என்று கேட்டார்? ? .எம்ஜிஆர் எங்கள் உசுரு என்று சிலரும் அவர்தான் எங்கள் தலைவர் என்று சிலரும் எங்கள் வாத்தியார் அவர்தான் என்றும் அவரவர்க்கு தகுந்த பதில் கூறினார்கள். உடனே அங்குள்ள மக்கள் தாங்கள் வாங்கி வந்த பழங்கள் காய்கறிகள் டவல் துண்டுகள் யாவும் அண்ணாவிடம் கொடுத்து. இது எங்கள் தலைவர் எம்ஜிஆரிடம் கொடுங்கள் என்றார்கள். அவர்கள் அன்போடு கொடுத்ததை அண்ணா மறுக்காமல் வாங்கி கொண்டார். அதே நேரத்தில் அண்ணாவின் காரை துடைத்து தூய்மை படுத்தினார்கள். .எம்ஜிஆரிடம் நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் என்றனர்..தான் ஒரு திமுகவின் தலைவராக இருந்தும் தன்னை யாருக்கும் தெரியவில்லை. .திமுக கொடி எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் எம்ஜிஆர் கட்சி கொடி என்றுதான் சொல்கிறார்கள் தவிர திமுக வில் உள்ள மற்ற தலைவர்கள் யாரும் அவர்கள் மனதிலும் இல்லை பார்வையிலும் இல்லை. என்று நினைத்து பெருமைப்பட்டு என் வி நடராஜனிடம் கூறினார். எம்ஜிஆர் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதை அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தனை பேர்களுக்கும் முன்னாள் கூறினார். அதனால்தான் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும் எந்த பேச்சியிலும் செயலிலும் எம்ஜிஆரை விட்டு கொடுக்காமல் இருந்தார். .எம்ஜிஆரின் செல்வாக்கு எத்தகையற்றது என்பதை விளக்கும் இச்சம்பவம் ஆகுக..ககுருவின் பெயரையும் மிஞ்சி குருவுக்கு புகழ் தேடி தந்த உண்மையான சீடனாக எம்ஜிஆர் இருந்தார். ........ Thanks...

  9. #3218
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரை புதிய ஆண்டு தொடக்கமாக எழுதுகிறேன். .பார்த்தால்நீளமாக இருக்கும் படித்தால் சுலபமாக இருக்கும்

    சந்திரோதயம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் அறிவுரைகள்
    1. தற்கொலை கேவலமானது. பலவீனமானது. .கோழைதனமாது..

    2, குடை பிடித்தால் சூரியன் மறையாது மற்றவங்க பார்வையில் நாம் தான் மறைவோம்

    3. அநீதியின் போர்வையில் கொஞ்சநாள் மறைந்திருக்கலாம் நீதியின் பார்வையில் எப்பவும் தப்பிக்க முடியாது..

    4, ,வசதியுள்ளவங்க வாழ்க்கையில் நொறுங்கி போனவங்களுக்கு சுமை தாங்கி இருந்தா இங்கு மட்டும் அல்ல உலகத்தில் எங்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் இருக்கும். .

    5. ஏழைகளும் நம்மைப்போல பத்து மாதம் தான் ஆனால் உடல் கறுப்பு உள்ளம் வெண்மை உதிரம் சிவப்பு. .

    6. வீட்டுக் கூரையிலே ஒட்டடை படியனும் என்று யாரும் விரும்புவதில்லை. அது தானாகத்தாத்தான் படியும். அதுப்போல்தான் நமது வாழ்க்கையில் வரும் துன்பமும். .அதை மன உறுதியால் தான் போக்கனும். .

    7. வாழ்க்கையில் முன்னுக்கு வரனும் என்று முயற்சி பன்றது தப்பில்லை. அதற்காக குறுக்கு வழியில் கோபுரம் ஏறக்கூடாது. .

    8. பெண்களை தெய்வமாக மதிக்கிற நாடு இது. கல்விக்கு சரஸ்வதியும். .செல்வத்துக்கு லஷ்மியும். .பொறுமைக்கு பூமாதேவியும் குறிப்பிடுக்கிறோம். .அப்படிப்பட்ட நாட்டில் தான் பெண்ணை இழிவு படுத்துகிறார்கள்.

    9. தனிப்பட்ட விரோதத்திற்க்காகவும். .நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்துவது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யற மிகப்பெரிய துரோகம். ஆகும். .

    10. நாட்டிலே பெண்களுக்கு பஞ்சம் இல்லை பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம். அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத ஆண்களின் அறிவுக்குதான் பஞ்சம்

    11. கேவலம் பணத்துக்காக பண்பை பகுத்தறிவை மனிதாபிமானத்தை முறிக்க கூடாது.

    12. அசிங்கமான ஏழைகளின் பணத்தால்தான் பத்திரிகை வளர்கிறது பணக்காரர்களின் வாழ்வு மலருகிறது

    13. கூண்டுக்குள் போர்வையில் இருக்கிற புலிகள் எவ்வளவோ மேலானது. .வெளியே மனித உருவில் ஆயிரக்கணக்கான புலிகள் இருக்கின்றன அவங்க இதயத்தைப் போர்வையாக்கி இருக்கிறாங்க. .

    14. என்னதான் கருப்பாக இருந்தாலும் காகம் குயிலாக மாறாது. காரணம் நல்லா இருந்தா பொய்யைக்கூட அனுமதிக்கலாம். என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். .

    15. பெண்கள் முட்டைக்குள் இருக்கிற மஞ்சள் கரு மாதிரி. . என்ன நடந்தாலும் நான்கு சுவற்றுக்குள்தான் இருக்கனும். நான்கு சுவர் என்பது. அச்சம். .மடம். .நாணம். .பயிர்ப்பு. .பண்புகள் தான். .

    16. பெண்கள் கடவுள் சிலை மாதிரி கோயிலை விட்டு வெளியே போனால் வெறும் கல்தான் இறைவன் கழுத்தில் உள்ள மாலை போல் இருக்கிற வரைக்கும் மரியாதை செய்வார்கள் கும்பிடுவார்கள். அதே மாலை வெளியே வந்து விழுந்தா யார் வேண்டுமானாலும் மிதிப்பார்கள்.

    17. மனிதனின் முகம் இருக்கிற அதே இடத்தில் இதயம் இருந்தால் உலகத்திலேயே குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். . என்ன செய்யறது கண்ணுக்குத்தெரியாத இடத்தில் இருக்கிறதனால்தான் உலகத்தில் இத்தனை அக்கிரமம் நடக்கிறது. .

    18. மழைத்துளியில் எந்த வித்தியாசமும் இல்லை அதுவே நத்தையின் வாயிலே விழும் போது முத்தாக இருக்கிறது குப்பையில் விழும் போது சேறு ஆகிறது. .

    19. குப்பையில் விழுந்தாலும் அது மாணிக்கமாக இருந்தா குனிந்து எடுக்கிறோம் இல்லையா? ? .

    20. பத்திரிகையில் பொய்யான செய்தி வெளியிடுவதால் நாட்டினிலே எத்தனையோ குடும்பங்கள் திசை மாறி போய். ரத்தக்கண்ணீர் வடிக்கிறது. .

    21. இந்த நாட்டிலேயே இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் யாராவது ஒருவருக்கு தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் இருக்கிறார்கள் என்கிற கருத்து நமக்குள் இருக்க வேண்டும். .

    22. ஆண்டவன் நிரபராதிகளை கைவிடுவதில்லை. குறைந்த அறிவுள்ள கோழிக்கூட தன் குஞ்சுகளை அடைக்காத்து வளர்க்கிறது. .
    என்ன நண்பர்களே இந்த ஆண்டு வாத்தியார் கூறிய கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுங்கள் அதுவே இந்த ஆண்டு முதல் தொடக்கமாக இருக்கட்டும்.
    வாழ்க தமிழ் வளர்க புரட்சித்தலைவர் புகழ் தொடரட்டும் உங்கள் தொண்டு........ Thanks...

  10. #3219
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 75. பேரரறிஞர் அண்ணா

    மதுரையில் ஒரு தடவை பேரரறிஞர் அண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பற்றி கூறுகையில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது முமு அன்பு செலுத்துப்பவர். எங்கும் எதிலும் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பவர். அப்படி கூறுகையில் இடைமறித்து கருணாநிதி அண்ணாவிடம் கேட்டார். அப்படியானால் நாங்கெல்லாம் உங்கள் மீது குறைவான அன்பு செலுத்துபவர்களா அல்லது நாங்கள் வைத்திருக்கும் அன்பு பொய்யானாதா? ? என்று கேட்டார். அதற்கு அண்ணா கூறியது. மனித அளவில் நீங்கள் அன்பு செலுத்திகிற நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் என் மீது தெய்வீக அன்பு செலுத்துப்பவர் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு அவர் தாய் மீது கொண்ட அன்புக்கு இணையானது. என்று பதில் அளித்தார். .

    அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் 1962, ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது. காங்கிரஸ் வேட்பாளர் பஸ் அதிபர் நடேசன் முதலியார் என்பவரிடம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. .பொன்மனச்செம்மல் எம்ஜிஆரும் சோகத்தில் மூழ்கினார். அண்ணா அவர்கள் தமது தோல்வியே மறக்க கர்நாடகவில் உள்ள சிரவனவெலகுலா. என்ற இடத்திற்கு சென்று அங்கு தவமிருந்து முக்தி அடைந்த பாகுபலியின் 58. அடி உயர கல்லால் உருவாக்கப்பட்ட சிலையை கண்டு ஆறுதல் பெற்றார். இந்த நேரத்தில் தனது ஆறுதலை வெளிப்படுத்த வேண்டி கண்ணதாசனிடம் தனது மனநிலையை எடுத்து கூறி பாடல் எழுத சொன்னார். தர்மம் தலைக்காக்கும் என்ற படத்தில் வரும் மூடு பனி குளிரெடுத்து என்ற பாடலில் வரியை புகுத்தி எழுதியது. தேர்தலில் தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பது உண்டு காதலில் தோற்றவர்கள் ஜெயிப்பதில்லை. .என்று எழுதினார். .காதல் பாடலில் இப்படி ஆறுதல் தரும் வார்த்தையும் வரியும் எழுதியதற்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு நன்றி கூறினார். .தனக்காகத்தான் எம்ஜிஆர் இந்த வரியை ககண்ணதாசனிடம் எழுத சொல்லிருப்பார் என்பதை அண்ணாவும் புரிந்துக்கொண்டார். .

    புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் என்னிடம் தேர்தல் நிதிக்காக கணிசமான தொகை தருவதாக கூறினார். .ஆனால் நான் எம்ஜிஆரிடம் கூறினேன். நீங்கள் தரும் கணிசமான தொகையை விட உங்கள் முகத்தை மக்கள் பார்த்தால் 30 ஆயிரம் ஒட்டுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் எனக்கு கிடைக்கும். . உங்கள் பேச்சைக் மக்கள் கேட்டால் பத்து லட்சம் பேர் மனம் திரும்புவார்கள். ஆகையால் நீங்கள் ஜனவரியில் இருந்து பிப்ரவரி வரை எத்தனை நாட்கள் ஒதுக்க முடியும் என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர் கூறினார். ஜனவரி 20. முதல் பிப்ரவரி 13. வரை முழுக்க முழுக்க இந்த தேர்தல் பிரச்சாரம் பணியில் ஈடுப்படுகிறேன் என்றார். பல்லாவரம் தொகுதிக்கு மட்டும் அல்லாமல் மற்ற தொகுதிக்களுக்கும் வரவேண்டும் என்றேன். சரி என்று கூறி விட்டார். இப்போது நான் சொல்லவேண்டியவர்களிடம் கூறிவிட்டேன். அவரை பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியுள்ளார். (. 1967 ம் ஆண்டு விருகம்பாக்கம் தேர்தல் கூட்டத்தில் ஆற்றிய உரை ).
    திரையுலகில் பலரையும் நான் அறிவேன் அந்த உலகத்தில் செல்லும் யாருக்குமே ஒரு கணம் தலையைசுற்றும் அப்படிப்பட்ட அந்த உலகத்தில் அப்பமுக்கற்றவராக இருப்பவர் எம்ஜிஆர். தாய்மார்கள் சொல்வார்கள் நம்ப எம்ஜிஆர் நம்ப எம்ஜிஆர் என்றும் புரட்சிநடிகர் அவர்களை உங்கள் வீட்டில் உள்ள ஒருவரைப் போல் சொந்தத்துடன் பந்தத்துடன் பேசிகீறிர்கள். அப்படிப்பட்ட நல்லவர் நீங்கள் பெரியவராக இருந்தால் அவர் உங்கள் பிள்ளை சற்று வயதானவராக இருந்தால் அவர் உங்கள் தம்பி இளையவராக இருந்தால் அவர் உங்கள் அண்ணன் எம்ஜிஆர் அவர்களை விடவா நல்ல பிள்ளை நல்ல குணம் படைத்தவர் உங்களுக்கு கிடைக்க போகீறார்களா? ? . (10- 02 -1967
    பல்லாவரம் நகரில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து ) )....... Thanks...

  11. #3220
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 76. பேரரறிஞர் அண்ணா

    சென்னை காசினோ தியேட்டரில் எங்க வீட்டு பிள்ளை படத்தின் 175 வது நாள் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேரரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி. .தமிழ் திரைப்படவுலகில் முதல் முதலாக அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம் மதுரை வீரன் என்றார்கள். மதுரை வீரன் வசூலை நாடோடிமன்னன் வீராங்கன் மார்த்தாண்டன் முறியடித்தார்கள். நாடோடிமன்னன் படத்தின் வசூலை எங்கவீட்டுபிள்ளை படம் முறியடித்தது. என்றார்கள். . எம்ஜிஆர் திரைப்படத்தின் வசூலை யாராலும் முறியடிக்க முடியாது. அது ஒருவரால் தான் முடியும். அவர்தான் எம்ஜிஆர். .. எம்ஜிஆர் படத்தின் வசூலை முறியடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். எம்ஜிஆரை வெல்ல யாரால் முடியும் எம்ஜிஆரால் தான் முடியும். .?.

    இன்று மிகப்பெரிய ஜான்பாவான்கள் எல்லாம் எம்ஜிஆரை நாடி வந்துக்கொண்டியிருக்கிறார்கள். இது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமைப்படவிஷயம். எம்ஜிஆர் கட்சிக்கு மட்டும் பெருமை சேர்க்க வில்லை. தமிழுக்கும். தமிழக மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் திரைப்படவுலகிற்கும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகளுக்கும் தமிழ் இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கும் பெருமை மிக்க பெருமை சேர்த்து உள்ளார். இதை நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. அகில இந்தியாவிலே மிகப்பெரிய மதிக்கத்தக்க நடிகராக விளங்கும் எம்ஜிஆருக்கு எங்கவீட்டுபிள்ளை அவரது நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். .நான்கேள்விப்பட்டேன். எங்கவீட்டுபிள்ளை படத்தை பார்த்து விட்டு வட இந்தியா
    தென்னிந்தியா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆங்கில பட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் , அத்தனை பேர்களும் எம்ஜிஆர் வீட்டை படையெடுத்து. அவரவர் தகுதிக்கேற்ப கதை கூறி நடிக்க அழைத்தனர். .ஆனால் எம்ஜிஆர் யாருடைய மொழியிலும் நடிக்க விரும்பவில்லை. என்று கூறியுள்ளார். நான் தமிழ் மொழியில்தான் அறிமுகம் ஆனேன். தமிழில் நடித்துத்தான் பிரபலம் ஆனேன். .தமிழில் நடித்ததால் தான் என்னை உலகம் அறிந்தது. தமிழ் தான் எனக்கு பேரும் புகழும் தந்தது. அதனால் எனக்கு பேரும் புகழும் தமிழில் இருந்து கிடைக்கிறது என்றால் அது தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன். மாற்று மொழியில் நடித்துத்தான் எனக்கு எந்த வித பேரும் புகழும் பணமும் வேண்டாம். இந்த உலகம் என்னை தமிழ் நடிகராக த்தான் பார்க்க வேண்டும் தவிர அகில உலக நடிகராக பார்க்க எனக்கு விருப்பமில்லை. .என்று கூறி அனுப்பி விட்டார். இப்படி எத்தனை நடிகர்கள் கூறுவார்கள் இது போன்ற கொள்கையும். புரட்சியும் எந்த நடிகர்களுக்கு உண்டு. அதனால் தான் அவரை புரட்சிநடிகர் என்று கூறுகிறோம். .ஒருவகையில் பார்த்தால் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எம்ஜிஆர் ஒரு பொக்கிஷமாகும்.

    இன்று உலகளவில் எம்ஜிஆருக்கு மட்டுமே அதிக அளவில் ரசிகர் மன்றம் உள்ளது. .தமிழில் மட்டும் நடித்து ஒரு தமிழ் நடிகர்க்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டும் தான். இதைவிட நம் தமிழுக்கு என்ன பெருமை வேண்டும்? ?இன்று எங்கவீட்டுபிள்ளை படத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்து முஸ்லிம் கிருஸ்துவ மதம் ஜாதி எந்த வித வேறுபாடின்றி மக்கள் எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரை நேசித்து எங்கவீட்டுபிள்ளை படத்தை காண வருகின்றனர். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பெருமை வேண்டும். அது எம்ஜிஆர் ஒருவரால் தான் தர முடியும் என்பதற்கு எங்கவீட்டுபிள்ளை ஒரு சான்றாகும். எம்ஜிஆரை வாத்தியார் என்று கூறுகிறார்கள். ஆம் அதன் பொருள் இப்போது தான் புரிந்தது. எவன் ஒருவன் மற்றவர்கள் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் வழிகாட்டியாக விளங்குகிறாரோ அவர் தான் வாத்தியார். எங்கவீட்டுபிள்ளை எத்தனையோ பேர்களுக்கு. வழிக்காட்டியாகவும் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அதனால் அவரை வாத்தியார் என்று கூறுவது எந்தளவுக்கு பொருந்தும் என்பதை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். ஆம் இனி எம்ஜிஆர் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் அவங்க வீட்டு பிள்ளை தான்........ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •