Page 339 of 402 FirstFirst ... 239289329337338339340341349389 ... LastLast
Results 3,381 to 3,390 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3381
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #லதா

    எனக்கு, 'கலையரசி', 'கலைமாமணி' என எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும்.....
    #எம்ஜிஆர் #லதா என மக்கள் அழைப்பதைத் தான் நான் மிகவும் உயர்ந்ததாக நினைக்கிறேன்...

    ஆஸ்கர் விருதையெல்லாம் விட மிக உயரிய விருதாக 'எம்ஜிஆர் லதா' என்று என்னை அழைப்பதைக் கருதுகிறேன்..!

    எனக்குக் கிடைத்திருக்கும் அனைத்து புகழுக்கும் புரட்சித்தலைவர் தான் காரணம்...������������

    புரட்சித்தலைவரையும், என்னையும் தேவையில் லாமல் ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு கண்டனங்கள் தெரிவித்த என் பாசத்துக்குரிய எம்ஜிஆர் பக்தர்களை நினைத்து பூரிப்படைகிறேன்...������������

    புரட்சித்தலைவரை யாரும் 'டச்' பண்ணக்கூடமுடியாது...
    எந்த கொம்பனாலயும் அவரிடத்தைப் பிடிக்கவே முடியாது...
    ஒரே ஒரு சூரியன்
    ஒரே ஒரு சந்திரன்
    ஒரே ஒரு இராமச்சந்திரன்...
    ����������

    நேற்று சென்னையில் மிகச் சிறப்பாக நடந்த அடிமைப்பெண் 50 ஆவது ஆண்டு விழாவில் எம்ஜிஆர் லதாம்மாவின் உருக்கமான, நெகிழ்ச்சியான, அதிரடியான உரை..
    ��������������������������������......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3382
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பட்டங்களுக்குப் #பெருமை

    கல்மனம் நிறைய உண்டு...நன்மனம் பார்ப்பது அரிது...அதிலும் அரிது #பொன்மனம் #தரம் #குறையாதது...பெண்ணும் பொன்னும் மாற்றுக்குறையாமல் இருக்கவேண்டுமென்பது விதி..அந்த நன்மனம், பொன்மனம் எப்படி நெகிழ்ந்தது...மகிழ்ந்தது ...!!!

    பொன்மனச்செம்மல் பட்டம், தமிழ் வளர்த்த பெரியார் வாரியார் அவர்களால் வழங்கப்பட்டதை அறிவோம்...
    #வாரியார் #என்ற #பெயருக்கே பொன்மனச்செம்மல் அளித்த விளக்கம் : "தமிழ்ச்சுவையை வாரி வாரி வழங்குவதால், அப்பெரியார்க்கு அப்பெயர்" என்றார்.

    பொன்மனச்செம்மல் #நகைச்சுவை #உணர்வு மிகுந்தவர்...
    ஓர் முறை ராமாவரத்திலிருந்து வரும் போது நல்ல மழை. கார் போரூரை நோக்கி கார் போய்க்கொண்டிருந்தது...அப்போது ஒரு கார் வேகமாகக் கடந்து சென்றது. வேகத்தில் சேற்றை அவரது காரின் மீது இறைத்தது...

    அப்போது மக்கள்திலகம் சிரித்துக்கொண்டே சொன்னார்:
    "பாரி வள்ளல் வாரிக்கொடுத்தான் அக்காலத்தில்...
    காரில் போகிறவர்களும் வாரியடிக்கிறார்கள் இக்காலத்தில்...இவர்களையும் "வாரியார்" என்றே சொல்லலாம்...

    உலகில் ஒருவர் மற்றவரை மதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த நபர் '#கொடுக்கிறார்' என்றே பொருள். அதாவது மதிப்புக்கும் விலை கொடுக்கவேண்டும். ஆனால் பொன்மனச்செம்மல், வாரியார் அவர்களை நமக்கு பட்டம் தரவேண்டும் என்பதற்காக மதிக்கவில்லை...

    இதற்கு ஒரு சிறு உதாரணம் :

    வாரியார் சுவாமிகள் பிரபலமாகாமலிருந்த போதே அவரது தமிழ்ச்சேவைக்காக மக்கள்திலகம் மதித்தார்.

    1954- ல் பொருட்காட்சியில் "இன்ப கனவு" நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெருங்கூட்டம். அந்நாடகத்தில் வில்லன் வேடமேற்று நடித்த சேதுபதி என்பவர் ஒரு கட்டத்தில் "கிருபானந்த வாரியார் காலட்சேபத்துக்கு சுண்டல் வாங்கப் போனேன்" என்று சொல்வதற்கு பதில் '#கிருக்கானந்தவாரியார்' #உம்ஹும் '#கிருபானந்தவாரியார்' என்று கிண்டலடிப்பார். கூட்டத்தில் பலர் சிரித்தனர்...

    மேடை மேல் ஓரமாக நின்ற மக்கள்திலகம் முகம் சிவந்தார். நாடகம் முடிந்ததும் கண்டிக்கப்பட்டார்.

    "மன்னிச்சுக்கங்க அண்ணா. சும்மா தமாசுக்கு சொன்னேன். ஜனங்களை சிரிக்கவைக்க" ன்னார் சேதுபதி.

    அப்ப மக்கள்திலகம், "அப்ப அண்ணா பேரு, காந்தி பேரு, காமராசர் பேரு வந்தாக்கூட இப்படித்தான் கிண்டல் பண்ணுவியா??? #மத்தவங்களை #சிரிக்கவைக்க #மகான்களின் #பெயரை #இழுக்கக்கூடாது...அது மிகவும் #இழிவான #செயல்" என்று பொட்டிலடித்தாற் போலக் கூறினார்.

    பட்டங்களால் சிறப்பு பெறுபவர் பலர் உண்டு...!!!

    அந்தப் #பட்டங்களே #சிறப்புபெறுவது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுக்கு சூடியதால் மட்டுமே என்பதை யாரால் மறுக்கமுடியும் !!!......... Thanks...

  4. #3383
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.சோ அவர்கள் குறிப்பிட்டார்
    எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் தான் இருக்கிறார்கள்.
    ஆனால் புரட்சி தலைவர் ஒருவருக்குதான் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றார்.
    அதனால் தான் இன்றும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வமாக தலைவர் திகழ்கிறார்.
    இனிய காலை வணக்கம் ... Thanks......

  5. #3384
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [கலைமாமணி கே. ரவீந்தர் எழுதிய "விழா நாயகன் எம்.ஜி.ஆர்" என்ற புத்தகத்தில் இருந்து]

    #எம்ஜிஆரின் #தசாவதாரம்

    கலைமாமணி ரவீந்தர் திரைக்கதை எழுதி எம்ஜிஆர் நடிக்க ' தசாவதாரம்' என்ற படம் எடுக்க முயற்சித்தபோது தலைவர் எம்ஜிஆர் கூறியதாக ரவீந்தர் எழுதியது.

    டி.ஆர்.நாயுடு என்ற கன்னட கதையாசிரியர் எழுதிய 'அவதார மகிமைகள்' என்ற கதையின் தமிழ் மொழியாக்கத்தை செம்மலிடம்(எம்ஜிஆர்) கொண்டு சென்றேன். படித்தார். மூக்கை கசக்கினார். அவர் சிந்திக்கிறார் என்பதற்கு அறிகுறி அச்செயல். செம்மல் தந்த விளக்கம் நாத்திகர் மூளையையும் உலுக்கும்.

    செம்மல் கூறினார்-- இந்த பத்து அவதாரமும் நமக்குள்ளே இருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய குணங்கள்.
    சுறுசுறுப்புக்கு மீன்,
    அடக்கத்திற்கு ஆமை,
    முயற்சிக்கு கூர்மம்,
    ருத்ரத்திற்கு நரசிம்மம்,
    வைராக்கியத்திற்கு பரசுராமர்,
    கடமைக்கு ராமன்,
    காதலுக்கும், அரசியலுக்கும் கண்ணன், கடைசியிலே கல்கி. மனிதன் புத்தியாலே வாழ முடியாது.கத்தியாலேதான் வாழ முடியும்னு காட்டுகிறது.இது ஆயுத முகம்.இதை சொல்லவே அந்த அவதாரத்தின் தோற்றமே கையில் கத்தியுடன் இருக்கும்.
    இந்த குணங்களை சிச்சுவேஷன் மூலம் வெளிப்படும் அளவுக்கு ஹீரோ இருக்கட்டும்.கடைசியில் பலர் அவனுக்கு கொடுத்த தொல்லைகள் தாங்காமல் ஆயுதத்தை தூக்கினான் என்பதை க்ளைமாக்ஸாக வச்சு தசாவதாரத்தை முடியும்" என்றார்.
    சரியென சொல்லி எழுதினேன். ஆனால் படமாகவில்லை........ Thanks VN.,

  6. #3385
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சொந்தப் படமெடுத்து சொத்தை இழந்தவர்களில் நடிகை சாவித்திரி அவர்களும் ஒருவர்.

    சென்னை ஹபிபுல்லா சாலையில் இருந்த சாவித்திரியின் பெரிய மாளிகையும் ஏலத்தில் போனது. இப்படி தன்னிடமிருந்த ஒவ்வொரு பொருளும் கைவிட்டு போய் மிகவும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இந்த நிலையில் ஒரு நாள் எம்ஜிஆரின் மாம்பலம் அலுவலகத்திற்குச் சென்று தலைவரை சந்தித்தார் சாவித்திரி. தலைவரோ சாவித்திரி வசம் ஒருபையில் பணத்தை வைத்துக் கொடுத்ததுடன், சாவித்திரி தங்குவதற்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.

    அந்தப் பையில் இருந்ததோ பணம் ஒரு லட்சம். ஆனால் சாவித்திரி அதை வைத்து முன்னேறப்போவது கிடையாது. சாவித்திரி எப்படி செலவழிப்பார் என்பதும் தலைவருக்கு நன்றாகவே தெரியும்.

    இருப்பினும் மாபெரும் நடிகை வந்துக் கேட்கும்போது உதவாமல் இருக்கவும் முடியாது, உதவினார். இது தலைவரின் மனித நேயத்தை காட்டுகிறது......... Thanks...

  7. #3386
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் பக்தவத்சலம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது சிறந்த சினிமா கலைஞர்களுக்காக கொடுக்கப்படும் N S K விருது மக்கள் திலகத்திற்கு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
    பாரத் பட்டம் சிபாரிசின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக புலம்பும் மாற்று அணி ரசிகர்கள்
    காமராஜர் ஆட்சி காலத்தில் யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு விருது கிடைத்தது. அந்த பட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதும் அதை தூக்கி எறிந்தார். பாரத் பட்டத்தை உதறித்தள்ளிய எம்ஜிஆர் என்ற புதிய பட்டம் அவருடன் சேர்ந்து கொண்டது.

    பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது யாருடைய சிபாரிசில் எம்ஜிஆருக்கு கிடைத்தது. அப்படி சிபாரிசில் கிடைத்திருந்தால் அதுவும் ஊழல் ஆட்சியா? ஒரு படம் நடிப்பு,இசை,ஒளிப்பதிவு. இப்படி எல்லா அம்சங்களும் சிறந்து இருந்தால்தான் சிறந்த படமாக தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் அகில இந்தியாவிலும் சிறந்த படமாக மலைக்கள்ளனை தேர்ந்து எடுத்த மைய அரசு வெள்ளி பதக்கம் பரிசாக கொடுத்ததும் சிபாரிசின் அடிப்படையிலா?

    இந்த கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். 1967 ல் காவல்காரனுக்கு கிடைத்த தமிழக அரசு விருது 1968 ல். குடியிருந்த கோயிலுக்கு கிடைத்த தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது
    மக்கள் திலகத்தின் இயற்கையான
    நடிப்புக்கு கிடைத்த விருது.
    மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் நமது மக்கள் திலகம்.
    அதனால்தான் அவரை நடிகப்பேரரசர் என்று நாம் அழைத்து பெருமைபடுகிறோம்.

    நேற்று சன் டிவியில் திரையிடப்பட்ட
    "அன்பேவா" படம் பார்த்திருப்பீர்கள்.
    அந்த J B பாத்திரத்துக்கு மக்கள் திலகத்தை விட பொருத்தமானவர் யார் இருக்கிறார்கள். சும்மா அநாயசமாக மிக இயல்பாக நடித்து அந்த பாத்திரத்துக்கே மெருகேற்றியிருப்பார்......... Thanks.........

  8. #3387
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் இரத்தத்தின்
    இரத்தமான அன்பு
    உடன்ப்பிறப்புகளுக்கு
    வணக்கம் ....

    கவிஞர் மருதகாசி அவர்கள்
    பத்தாண்டு இடைவெளிக்கு
    பிறகு தலைவருக்கு
    எழுதிய பாடல்
    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    என்ற பாடல்....

    குள்ளநரி கூட்டம்
    வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை
    தந்து மடக்கிடும்
    என்ற பாடல் வரிகள்
    ரஞ்சனுக்காக எழுதிய
    காரணத்தினால்
    தலைவரை கோபப்படுத்தியது.....

    மருதகாசி பாடல்
    எழுத வாய்ப்பு இல்லாமல்
    போன காரணத்தினால்
    வறுமையில் வாடினார்...

    நினைத்ததை முடிப்பவன்
    பட தயாரிப்பாளர்
    அவர்கள்
    தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
    மருதகாசிக்கு வாய்ப்பு
    தருகிறார்.....

    மன்னரின் இசையில்
    பாடல் பதிவு முடிந்து
    தலைவருக்கு பாடலை
    போட்டு காண்பிக்க
    தயாரிப்பாளர்
    மற்றும் மெல்லிசை மன்னரும்
    தோட்டத்திற்கு செல்கின்றனர்
    தலைவர் பாடலை கேட்டவுடன்
    இந்த பாடலை
    எழுதியது மருதகாசியா என்று
    கேட்டு அசத்திவிட்டார்...

    திகைத்துப்போன தயாரிப்பாளரும்
    மெல்லிசை மன்னரும்
    பாடல் பிடிக்கவில்லை என்றால்
    மாற்றிவிடலாம் என்று கூற
    தலைவர் பாடல்
    படத்தில் இருந்து போகட்டும்
    கூறி மருதகாசியை தன்னை
    வந்து பார்க்குமாறு கூறினார்...

    வித்வான் வே லட்சுமணனனோடு
    தலைவரை பார்க்க வந்த
    மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
    தலைவருக்கு கொடுத்தார்
    அதை வாங்கி பார்த்த
    தலைவர்
    பக்கத்தில் வைத்துக்கொண்டார்...

    வெளியில் வந்த
    வித்வான் வே லட்சுமணன்
    என்னையா தலைவருக்கு
    கொடுத்தாய் என்று
    கேட்க
    மருதகாசி அவல் பொட்டலத்தை
    கொடுத்தேன் என்றார்....

    மகாபாரதத்தில் குசேலன்
    கண்ணனுக்கு அவல் கொடுத்து
    அடுத்த கணமே
    குபேரனானதை படித்துள்ளோம்..
    ஆனால் நிச வாழ்க்கையில்
    மருதகாசியின் அனைத்து
    கடன்களையும் அடைத்து
    அவரின் வாழ்க்கை தரத்தை
    உயர்த்தியவர்
    புரட்சித்தலைவர்....

    இப்போது பாடலுக்கு
    வருகிறேன்....
    1973 இல் மிகப்பெரிய செட்
    போட்டு எடுத்த பாடல்
    கண்ணை நம்பாதே என்ற
    பாடல்....

    ரோமாபுரி அரசன் அரசி.....
    கிரேக்க அரசன் அரசி.....
    முகலாய அரசர் அரசி.....
    சீன அரசர்...
    இங்கிலாந்து அரசர் அரசி...
    சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
    கடற்கொள்ளைக்காரன்...
    அரபு நாட்டு சேக்...
    ஜப்பானிய பெண்...
    ஆப்கானியர்...
    அலெக்ஸாண்டர்...
    சாமியார்...
    பிச்சைக்காரன்.....
    மராத்தி
    குஜராத்தி
    ஆந்திரா
    கர்நாடகா
    கேரளா பெண்கள்....
    பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
    மேற்க்கத்திய தீவு பெண்கள்...
    கோட் சூட் அணிந்த
    இசைக்கலைஞர்கள்
    என
    பல தரப்பட்ட வேடங்களை
    இப்பாடலில் சேர்த்திருப்பது
    தனி சிறப்பு....

    பாடல் முடியும் வரை
    தலைவர் முழு செட்டையும்
    தனது ஆடலில்
    ஓடி ஆடி
    அசத்தியிருப்பது
    கூடுதல் சிறப்பு....

    பொன் பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்து விட்டு
    கண் முன்னே
    போகிறவர் போகட்டுமே
    என்ற வரிகளில்
    தலைவர் ஓடி வந்து
    உட்காரும் சோபா
    கறுப்பு சிவப்பு நிறத்தில்
    இருக்கும்..
    தலைவரின் அறிவு சார்ந்த
    அரசியல் கூர்மை இது...

    இறுதியில் நான் கூற வந்தது
    மருதகாசி அவர்கள்
    தலைவருக்கு தந்த
    ஈர துணிப்பையை
    தலைவர் மறக்காமல்
    இப்பாடலில் தனது
    இடுப்பில் கட்டி
    ஆடியிருப்பது
    தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..

    கணனி மூலம் மெருகேற்றுப்பட்ட
    பாடல்...

    நன்றி...
    பொன்மனம் பேரவை...
    சென்னை........... Thanks.........

  9. #3388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எழுகவே!!
    ----------------
    முன்பே அறிவித்து விட்டேன்!
    இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
    எம்.ஜி.ஆரே சாரதி!!
    கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
    குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
    குறிப் பார்த்து நடத்தும் போர்!!
    இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
    உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
    எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
    எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
    1977க்குப் பிறகோ அல்லது-
    1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
    கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
    எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
    ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
    அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
    நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
    1958இல் கால் முறிவு!
    நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
    எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
    அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
    ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
    ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
    வருடாதே துன்பமே என் சிந்தையை என-
    திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
    1967!
    தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
    தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
    இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
    பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
    எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
    கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
    இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
    கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
    வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
    நான் குணம் பெறுவேன் என்று--
    சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
    துள்ளி எழுந்தார்!!
    1972!
    சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
    கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
    நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
    1984!
    அரசியல் உலகமே அன்று-
    எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
    மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
    தாயம் விழுந்து கொண்டிருந்தது?
    காயம் பட வைத்த காலனின்
    சாயம் தானே வெளுத்தது?
    ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
    எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
    மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
    நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
    அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
    கொரானா--
    வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
    வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
    மரணம் எப்போது வரும்?--தெரியாது!
    மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
    இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
    மரணத்தை எண்ணி மருகுவதை விட-
    மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
    விண் இரக்கம் கொண்டாலும்--
    மண் இரக்கம் கொண்டாலும்-
    மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
    தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
    உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
    உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
    ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!....... Thanks...

  10. #3389
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    யார் தலைவன்?
    ----------------------------
    ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
    வசமான பதிவும் கூட!
    சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
    அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
    கண்ணியத்தின் அடி தொட்டு-
    விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
    மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
    வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
    சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
    மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
    செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
    உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
    எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
    பதிவுக்குள் புகுவோமா??
    பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
    எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
    இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
    அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
    முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
    இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
    அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
    காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
    மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
    கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
    இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
    கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
    அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
    அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
    குளத்தில்--
    சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
    இங்கோ--
    செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
    நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
    அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
    ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
    பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
    எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
    பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
    ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
    பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
    நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
    வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
    இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???......... Thanks..........

  11. #3390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எம்.ஜி.ஆர் வழி!!
    ---------------------------------
    அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
    திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
    பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் (நடந்தேறிய பின்பு பதிந்தது) எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
    அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
    வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
    வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
    விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
    சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
    அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
    எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
    எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
    வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
    உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
    சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
    அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
    அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
    தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
    அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
    மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
    அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
    அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
    அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
    உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
    மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
    என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
    நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
    ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
    அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
    அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
    ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
    என் பாலிஸி இது தான்!
    உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
    உங்களுக்கு???....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •