Page 346 of 402 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3451
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காவல்துறையைப் #போற்றியவர்

    புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.

    தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.

    இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
    காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.

    காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.

    ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
    ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.

    தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் '#இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

    மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது............ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3452
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேர்தல் களத்தில் ...

    ஆளுங்கட்சியை வீழ்த்தி.! ஆட்சியை பிடிக்க எதிர்கட்சி என்ன செய்யும்...?

    ஆளும் கட்சியின் கொள்கையை விமர்சனம் செய்யும்.

    ஆளுங்கட்சி ஊழல் செய்திருந்தால் அதைப்பற்றி விமர்சனம் செய்யும்.

    ஆளும் கட்சியால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டிருந்தால் அதை பற்றி விமர்சனம் செய்யும்.

    ஆளும் கட்சியால் விலைவாசி உயர்ந்து இருந்தால் அதைப் பற்றி விமர்சனம்
    செய்யும்.

    இதுதானே யதார்த்த நடைமுறை.
    ஆனால்.......

    புரட்சித் தலைவர் அவர்கள். நோய்வாய்ப்பட்டு....
    அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில்....

    1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்த....

    1984-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். எவ்வாறு வாக்கு சேகரித்தார் தெரியுங்களா.....?

    "தமிழர்களே.! தமிழர்களே.! தமிழர்களே.!
    என்னிடம் ஆட்சியை தாருங்கள்.

    என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் எம்ஜிஆர் அவர்கள் நலமுடன் வந்தவுடன், நான் அவரிடம்இந்த ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன். " என்றார்..
    திரு. கலைஞர், கருணாநிதி அவர்கள்.

    ஆனால், மக்கள்.!! திரு.கருணாநிதியின் பேச்சில் மயங்காமல்....

    புரட்சித்தலைவரின் பக்கத்திலேயே விசுவாசமாக நின்றார்கள். வெற்றியும் தேடித் தந்தார்கள். மீண்டும் ஆட்சியும் அதிகாரத்தையும் தந்தார்கள்.

    திரு.கருணாநிதியின் ராஜதந்திரம் தோற்றுப்போனது. திமுக படுதோல்வியை சந்தித்தது.

    என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ...
    முதலமைச்சர் பதவிக்காகவும் .. ஆட்சி அதிகாரத்திற்காகவும் ... யாசகம் கேட்ட ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தார் என்றால்.. அவர் கலைஞர், கருணாநிதி அவர்கள் தான்........... Thanks.........

  4. #3453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...

    இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.

    அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.

    01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.

    02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
    20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.

    03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
    `#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது

    04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.

    05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.

    06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.

    07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.

    08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.

    10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.

    11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் ....பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.].......
    ...... Thanks.........

  5. #3454
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

    எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

    சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

    நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.

    தொடரும்.......... Thanks...

  6. #3455
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [உழைக்கும் வர்க்கத்தின் இருட்டை கழுவிய சூரியன்.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்..

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று. மொத்த வாழ்க்கை 29 ஆண்டுகளே. திரையுலக ஆட்சி 6 ஆண்டுகளே. படங்களின் வரிசை வெறும் 57, தான் வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய பணம் ஒரு லட்சத்து சொச்சம். இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு. திரையுலக இசையின் அறிவுசுடர்களாக, ஜாம்பவான்களான உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் நடுவே புயலாய் உள்ளே நுழைந்தவர் பட்டுக்கோட்டையார். மொழி சிறப்பு, காதல், வீரம், பக்தி, என்றிருந்த பாடல்களின் இடையே, புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றி காட்டியவர் பட்டுக்கோட்டையார். விரட்டிய வறுமை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற சின்ன கிராமத்தில் ஏப்ரல் 13, 1930ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். வறுமையின் பிடியில் சிக்கி, விவசாயம், மாடு மேய்ப்பது, மாம்பழம் விற்பது, உப்பளத் தொழில் என செய்தும் பொருளீட்ட வழி வழியின்றி, பாடல் எழுத எண்ணி சென்னை நோக்கி ஒரு பயணம். பட்டிதொட்டி புகழ் பல இன்னல்களுக்கு பின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 1955-ஆம் ஆண்டு வெளிவந்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் முதல் பாடல் வெளிவந்தது.

    "பாசவலை" என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. தொடர்ந்து குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதினார் சிந்தனை சிதறல் கல்யாண சுந்தரம். கம்யூனிச இயக்கத்தின் மேலிருந்த காதலால் ஒரு பக்கம் கட்சி பணி மற்றொரு பக்கம் பாடல் எழுதுவது.

    இவரது பாடல்கள் அனைத்தும் எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என வஞ்சனையில்லாமல் அனைத்தும் நிறைந்தே தென்பட்டன. தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன-நேசிக்கப்பட்டன.

    ''நான்காவது நாற்காலி மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய நாற்காலியில் ஒருகால் பட்டுக்கோட்டை என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வது உண்டாம்''

    'உழைப்பின் மேன்மை சொன்ன பாடல்,"காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்'. மூட நம்பிக்கைக்கு எதிராக பறைசாற்றிய பாடல், "வேப்பமர உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...

    வேலயற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே" அன்றே அம்பலம் மேடு பள்ளமற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டதே, "வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா-தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா-தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" இன்றுவரை சமுதாயத்திற்கு பொருந்தி போககூடிய பாடல்,

    ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' தனிமனித நம்பிக்கை சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைய, "குறுக்குவழியில் வாழ்வுதேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம் திருந்த மருந்து சொல்லடா".

    Cont..]........... Thanks...

  7. #3456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்

    #சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

    #எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.

    தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.

    அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.

    சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

    அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.

    காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.

    மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.

    தலைவருக்கு ஆச்சரியம்...!

    இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"

    அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

    உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

    மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...

  8. #3457
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    6.11.1984 இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் அமெரிக்க மருத்துவமனை ப்ருக்ளீன் வந்து சேர்ந்தார் நம் பொன்மனசெம்மல்.

    மீண்டும் எமனுடன் போராடி வெல்ல தயார் ஆனார் மன்னவர்.

    சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து நடிகை மஞ்சுளா ஏதோ ஒரு விஷயம் ஆக அமெரிக்காவில் இருந்தவர் தலைவர் அங்கு இருப்பதை தெரிந்து அவரை பார்க்க மருத்துவனை செல்ல.

    அங்கே வரவேற்பறையில் நீங்கள் யார் அவரை பார்க்க என்று கேட்க அவர் அவருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் என்று சொல்ல மேலும் கீழும் பார்த்த அவர்கள் அவர் வயது என்ன இவர் வயது என்ன என்று யோசித்து மேலே இருந்த அன்னை ஜானகி அவர்களிடம் கேட்க.

    அவர் அனுமதிக்க மேலே தலைவர் இருந்த அறைக்குள் சிறப்பு பார்வையாளர் நேரத்தில் போக.

    அங்கே தலைவர் இருந்த நிலை பார்த்து நிலைகுலைந்து போனார் மஞ்சுளா .

    அன்னை ஜானகி அவர்கள் மஞ்சுளா அவர்களை அறிமுகம் செய்ய தலைவருக்கு ஜானகி அம்மா குடும்ப மருத்துவர் பி.ஆர்.எஸ்.. தவிர யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

    மஞ்சுளா அவர்கள் பல ஜாடைகள் செய்து காட்டியும் தலைவருக்கு புரியவில்லை.

    அந்த வாரத்தில் தலைவர் இருதயம் தவிர மற்ற உறுப்புக்கள் செயல்பாடுகள் குறைந்து இருந்தது.

    கோடி நெஞ்சங்கள் வேண்டியதால் அவர் இருதயம் மட்டும் எதையும் தாங்கும் சக்தியுடன் இருந்தது.

    கொஞ்ச நேரம் கழித்து மஞ்சுளா அவர்கள் புறப்பட தயார் ஆன போது ஜானகி அம்மா சரி என்று சொல்ல தலைவரை நோக்கி அவர் கை கூப்ப..

    வெளியே நோக்கி நடக்க முயன்ற அவரை அன்னை ஜானகி மீண்டும் அழைக்க தலைவர் தன்னிடம் யாரோ உதவி கேட்டு வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து தலையணை கீழே இருந்த அமெரிக்க டாலர் கட்டு பணத்தை எடுத்து மஞ்சுளா பார்த்து நீட்ட.

    பொங்கிவரும் கண்ணீரை அடக்கி கொண்டு மஞ்சுளா வெளியேற.

    அனைத்து உடல் பாகங்களும் ஒத்து உழைக்க மறுத்த நேரத்திலும் அவரின் கொடை நெஞ்சம் மட்டும் செயல் பட்டது மிகவும் அறிய செயலே.

    விழியில் வழியும் நீருடன் விடை பெறும்.......உங்களில் ஒருவன் நெல்லை மணி...
    நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்.....தொடரும்... Thanks............

  9. #3458
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [#காவல்துறையைப் #போற்றியவர்

    புரட்சித்தலைவர், காவல்துறையின் மீதுள்ள மதிப்பினால், தான் காவல்துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து மேலும் பெருமை சேர்த்தார்.

    தனது முதல் படமான சதிலீலாவதியில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக என் கடமை, காவல்காரன், பல்லாண்டு வாழ்க மேலும் பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து அவர்களின் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்தியிருப்பார்.

    இவற்றில், பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில், இதுவரை திரையுலகில் யாருமே செய்யாத அருஞ்செயலை செய்து காவல்துறையை உச்சத்தில் வைத்திருப்பார். இப்படத்தில்,
    காவல்துறையை பொறுமையின் சிகரமாகவும், கொடூரமான கொலையாளி கைதிகளைத் திருத்தி அவர்களுக்கு நல்வாழ்வினை அளித்திடும் ஒரு #மகானாகவே காண்பித்திருப்பார்.

    காவல் அதிகாரி வேடத்தை ஏற்றுப் பல நடிகர்கள் கம்பீரமாக நடித்திருக்கலாம். பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.

    ஆனால் புரட்சித்தலைவர் இப்படி நடித்ததோடு நிற்கவில்லை.
    ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை அறிந்தவர் புரட்சித்தலைவர்.

    தான் காவல்துறையின் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தியதற்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம்...

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திரு. பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை முதல்வர் எம்ஜிஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் #'இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

    மேலும் அக்குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் ஒரு பெரிய தொகையையும், ஒரு கணிசமான தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்தும் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.]............ Thanks...

  10. #3459
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிறந்த நிர்வாகி:-

    M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

    காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

    அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

    எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

    ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

    அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

    அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

    உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

    படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

    ‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

    பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

    எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

    ‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

    என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

    ‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’

    படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.

    1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.............. Thanks..........

  11. #3460
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய மாலை வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    #புதியவர்களுக்கு_வாய்ப்பு

    முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

    மாடர்ன் தியேட்டர்ஸ்ன் தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •