-
26th April 2020, 03:21 PM
#3701
Junior Member
Diamond Hubber
இந்த போட்டோ 1985ல் நான் நடத்திய விழா.யோகேந்திர மக்வானா என்ற மத்திய மந்திரியும் அவரது மனைவியும் மேடையில் கௌரவிக்கப்படுகிறார்கள்.கௌரவிப்பது எனது மனைவி.இந்த மந்திரி நமது தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தலைவருக்கு நெருக்கடி அதிகம் கொடுத்தார்.தரக்குறைவாக விமர்சனமும் டெல்லியில் இருந்து செய்து வந்தார்.அவர் தமிழகம் வந்தார்.கன்னியாகுமரிக்கு மனைவியுடன் வந்தார்.தலைவர் தரப்பில் இருந்து எனக்கு உத்தரவு வந்து ,நான் அவர்களை குமரியில் சுற்றிக்காண்பித்து நான் நடத்திய அரசு விழாவில் அவர்களை கௌரவித்தேன்.சிறந்த விருந்தோம்பல்.மனம் குளிர்ந்து தமிழர்களின் விருந்தோம்பலை புகழ்ந்து மேடையில் பேசினார். பின்னர் சென்னை சென்று தலைவர் முதல்வரை சந்தித்தார்.முதல்வர் விருந்தோம்பலின் சக்கரவர்த்தி ஆயிற்றே. மக்வானா மனம் குளிர்ந்தார்.பின்னர் தமிழகத்தின் முதல்வர் எம்.ஜி.ஆர் புகழை டெல்லியில் பாடும் பக்தனானார் என்பது வரலாறு....... Thanks...
-
26th April 2020 03:21 PM
# ADS
Circuit advertisement
-
26th April 2020, 03:24 PM
#3702
Junior Member
Diamond Hubber
காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
ஒரு நாள் காலை பொழுது..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
"முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
"அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
"சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
புரட்சித்தலைவர் நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
#ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்..... Thanks...
-
26th April 2020, 03:30 PM
#3703
Junior Member
Diamond Hubber
உ. எம்ஜிஆர் துணை... அட்சயதிதி. கொடுப்பதும் கேட்பதும் பன்மடங்காக உயரும் நாள்... ..நினைவு தெரிந்த நாள் முதல் ஒரே உருவம்.ஒரே குரல்.ஒரே கொள்கை பரப்புதல். ஒரே புகழ் பாடுதல் என்று எல்லா நிலையிலும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் ஆகிய எங்களை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஆட் கொண்டு இருக்கும் எங்கள் இதய தெய்வமே.. மக்கள் திலகமே.... இன் நன்நாளில் வேண்டுவது.... (1) எதிர்கால சந்ததிகள் நல்ல பண்பாகவும் ஒழுக்கமாகவும் ஈவுகுணமாகவும் வளரவேண்டும் என்றாலும் மக்கள் தங்களை என்றும் வழிபடவேண்டும் என்றாலும் சரித்திர சாதனையாக விளங்கும் 136 படங்களில் ஒரு சிலவற்றை தவிர இருப்பதையாவது மெருகேற்றி பாதுகாக்க வழி ஏற்படவேண்டும். (2) தங்கள் பெயரில் பொதுவான பத்திரிகை தொலைகாட்சி அமையவேண்டும். (3) மெரினா கடற்கரையில் உள்ள நினைவு இல்லத்தில் ஒரு கோபுரம் அமைத்து அதன் உள் வழியாக பிறந்த நாளில் சூரிய ஒளி பட வேண்டும். (4) சென்னை அண்ணா சாலையில் ஒரு ஆலயம் எழுப்பி அதன் அருகிலேயே ஒரு சிறிய திரையரங்கு கட்டி அதில் தங்கள் திரைபடம் மட்டுமே திரையிட வேண்டும்.அதன் அருகிலேயே பக்தர்களின் தலைமை அலுவலகம் செயல்படவேண்டும்... (5). தங்கள் நாமமும் தங்கள் திருவுருவமும் தங்கள் கொள்கையையும் மட்டுமே பயன்படுத்துகிற நல்லாட்சி தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் உழைப்பால் அமையவேண்டும் என்று என் ஆசை. இது மட்டும் அல்லாமல் வேறு என்ன என்ன வேண்டினால் நல்லது என்று இதை படிக்கும் தலைவர் பக்தர்களாகிய உங்கள் ஆசையை தெரிந்தவற்றை (தமிழ் நாட்டிற்கே தலைவர் பெயர் வைக்கவேண்டும் என்று கூறாமல்) நியாயமானதாக கூறவேண்டும். இவன் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்..ஷிவபெருமாள்..... Thanks...
-
26th April 2020, 03:33 PM
#3704
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 03:48 PM
#3705
Junior Member
Diamond Hubber
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020
"இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
என்றேன்.
“நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
"நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
முதலில் நான் சொன்னது யோசனை.
ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
"காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
"நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
உண்டாக்குவது கட்டளை...!
ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
நினைத்தார் என்று சொல்ல முடியாது.
“நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
கட்டளையில்லாமல் வேறென்ன?
இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
வேண்டாமா?
ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
வடித்துத் திருந்தியவனாயிற்றே!
எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
மறக்கத்தான் கூடுமா?
"அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"
"வெற்றியும் தோல்வியும்"
அறிவுதான் ஒரு மனிதனுக்கு
வழிகாட்டியாக அமைகிறது.
அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
தோல்வி அடையும் போது 'முட்டாள்'
ஆகிறான்.
இவை புறத் தோற்றத்திற்கு.
ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
விடுகிறான். அதாவது மற்றவர்கள்
அவனைத் தோல்வி அடையச் செய்து
விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
கொள்ளமாட்டான்.
வேறொரு சமயம் அதே கலைஞன்
பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
கிறான். ஆனாலும் அப்போது, அவனது
லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
உணருவதால் அவனுடைய உள்ளம்
வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
விட்டேன்'' என்று.
பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
அதற்கு என்ன காரணம்?
நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.
"தலையை முட்டிக்கொண்ட பிறகு..."
திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
வேண்டும்!
நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
எண்ணம் என்ன?
"அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
என்பது ஒன்று.
மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
அல்லவா அது மாறிவிட்டது!
ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
நண்பர்களா? நயவஞ்சகர்களா?
"திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.......... Thanks.........
-
26th April 2020, 03:49 PM
#3706
Junior Member
Diamond Hubber
தருமம் செய்யும் குணம் உள்ளவர்கள்,
விளம்பரம் தேடுவதில்லை.
விளம்பரம் தேடுவோர்கள்...
யார் ? எங்கே ?
இலவசப் பொருள் தருகிறார்களோ...?
அங்கே இருப்பார்கள்
படம்பிடித்து
தனது பெயரை விளம்பர படுத்திக்கொள்ள ,
வலது கை கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இருப்பதே ,
தர்மம்...உயர்ந்த தர்மம்
சிறந்த தர்மம்.
பசித்த வயிறு வாயார வாழ்த்தினாலே ,
வாழ்வாங்கு வாழலாம்.
அதைத் தான் தருமம் தலைக் காக்கும்என்று சொன்னார்....
தரும மகாபிரபு
தர்மதேவன்
தங்கத்தலைவன்
எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்கள்.
அதுதான் பண்புள்ள தர்மம்........ Thanks...
-
26th April 2020, 03:52 PM
#3707
Junior Member
Diamond Hubber
முதல் முறையாக.....
நமது ,
" உழைக்கும் குரல் " தளம்
மற்றும் ,
ஆண்டவன் MGR குடும்பத் தளத்தில் ,
"இலங்கை நாளிதழ்கள்"
" வார மலர்கள்"
பார்த்து... படித்து...பரவசம்
அடையுங்கள்.
இந்த முயற்ச்சி ,
முழுக்க...முழுக்க நமது...
புரட்சித்தரைவரின் மீது உண்மை விசுவாசமுள்ள பக்தர்களாகிய உங்களுக்காக....!
நன்றியுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி
&
ஆர்.ஜி.சுதர்சன்........ Thanks.........
-
26th April 2020, 03:55 PM
#3708
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 04:00 PM
#3709
Junior Member
Diamond Hubber
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 11/04/2020
உடனே நான்.
"அந்தப் புதுமுகம் நான் கொடுக்கிற கால்ஷீட்டுகளில் வந்து
நடிக்கத் தயாராக இருக்கணும்! எந்த நேரத்தில் நான் கால்ஷீட்,
கொடுத்தாலும் வந்து நடிக்கணும். சேர்ந்தாற்போல் நான்
பத்துநாள் கால்ஷீட் தந்தாலும் நடிக்க வரணும். இந்த நிபந்தனை
யோட அந்தப் புதுமுகத்தை ஒப்பந்தம் செய்யணும்" என்றேன்.
அதற்கு ஏ.எஸ்.எஸ். அவர்களும் சம்மதித்தார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் என்னிடம்,
''ஒண்ணு செய்யலாமே! பத்மினி பிக்சர்ஸ் 'தங்கமலை
ரகசியம்' படத்துக்காக ஒரு 'குரூப்டான்ஸ்' காட்சியை நான்
இயக்கினேன். அதுலே ஆடின ஒரு பெண் நல்லாவே இருந்தது"
என்று சிபாரிசு செய்தார்.
"யார்?" என்று விவரம் கேட்டேன்?
"அந்தப் பொண்ணுக்கு சரோஜாதேவின்னு பேராம். இந்தப்
பக்கம் பார்த்தா வைஜயந்திமாலா மாதிரி இருக்கு. அந்தப்பக்கம்
பார்த்தா பத்மினி மாதிரி இருக்கு. தாய்மொழி கன்னடம், தமிழ்
பாஷை அவ்வளவாகத்தெரியாது. ஆனால் நாளடைவிலே
பேசிப்பேசிப் பழக்கிடலாம்! ஒரு நல்ல கதாநாயகியாக அந்தப்
பெண்ணை ஆக்கிட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
என்றார்.
இதற்கு முன்னால் சரோஜாதேவி அவர்களைப் பார்த்த நினைவு
எனக்கு வந்தது. நான் 'நாடோடி மன்னன்' படப்பிடிப்புத்
துவக்கியிருந்த நேரம்.
புது முகத்தின் அறிமுகம்!
இப்போது 'விஜயா ஸ்டூடியோ' என்று அழைக்கப்படும்
அப்போதைய 'ரேவதி' ஸ்டூடியோவில் இயக்குநர் திரு. கே. சுப்ப
மணியம் அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்
'கச்சதேவயானை' என்ற கன்னடப் படத்தின் படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்தது.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள் சொன்ன இதே பெ
(சரோஜா தேவி) அந்தப் படப்பிடிப்பில் தேவயானையாக
நடித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். ஒரு குடத்தை இடுப்பில்
எடுத்துச் சுமந்து கொண்டு, அவர் நடந்த காட்சி அப்போது படம்
பிடிக்கப்பட்டது. படத்தில் நடிப்பதற்குத் தேவையான தோற்றம்,
உடம்பு இருப்பதை அறிந்தேன்.
இரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் எனக்கு சரோஜா தேவியை
அறிமுகம் செய்து வைத்தார்.
நான் திருமதி சரோஜா தேவியிடம் "டான்ஸ் ஆடத்
தெரியுமா?" என்று கேட்டேன்.
"ஓ! ஆடுவேனே!" என்றார்.
"தமிழ் பேசத் தெரியுமா?" என்று கேட்டேன்.
"தெரியும்" என்றார்.
அப்போது சரியாகத் தமிழ் பேச வராது என்றாலும், ஆர்வத்தில்
அப்படிச் சொன்னார்.
இந்த நினைவு வரவே, நான் திரு.ப. நீலகண்டன் அவர்களிடம்
''நீங்க சொன்ன அந்த சரோஜாதேவி, "கச்சதேவயானை ”யிலே
நடிக்கிற பெண்தானே?" என்று கேட்டேன்.
"ஆமாம்" என்றார்.
"டெஸ்ட் எடுத்துப் பாருங்க” என்றேன்.
"செய்யறேன்! நான் பொறுப்பேத்துச் செய்யறேன்'' என்றார்.
திரு.ஏ.எல்.எஸ். அவர்கள், "தமிழ் பேசத் தெரியாத
பெண்ணைப் போட்டால், அப்புறம் சங்கடமாக இருக்குமே" -
என்றார்.
"இல்லைங்க. முதலில் டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்.
அப்புறம் முடிவு செய்யலாம்" என்றேன்.
தொடர்ந்து இருவரும் கலந்து பேசியதன் விளைவாக அவரை
நான் சம்மதிக்க வைத்தேன்.
மிரட்சியும், கவர்ச்சியும்
இன்றைக்கு இயக்குநராக உள்ள கதை. உரையாடல்
ஆசிரியரான திரு.மா. லட்சுமணனுடன் திருமதி சரோஜா
பர்கள் வந்த
தேவியை நடிக்க வைத்து (டெஸ்டுக்காக) ஒரு காட்சியைப்
எடுத்தார்கள்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு என்னிடம் அவர்கள் வ
போது, "டெஸ்ட் எடுத்ததிலே எப்படியிருக்கு?'' என்
கேட்டேன்.
"திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் "டயலாக்கு சரியா இல்லையே
நாம கன்னடப் படம் எடுக்கறதானா போடலாம்'' என்றும்
எப்போதும் போல மற்றவரைக் கேலி செய்கிறோமே என்பது
புரியாமல் கூறினார்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்கள்
"பரவாயில்லை! பேச்சு கொச்சையாக இருந்தாலும்
இயற்கையா இருக்கும். பழகப்பழகச் சரியாகிவிடும்'' என்றார்.
பிறகு நான் படத்தைப் போட்டுப் பார்த்தேன்.
தமிழ்ப் பேச்சு கொச்சையாகத்தான் இருந்தது.
தோற்றத்தில் ஒரு மிரட்சி இருந்தது என்றாலும் ஒரு கவர்ச்சியும்
இருக்கவே செய்தது.
நான் திரு.ஏ.எல்.எஸ். அவர்களிடம்,
( தொடரும்)
திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
"நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். .... Thanks...
-
26th April 2020, 07:09 PM
#3710
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.* வெகு விரைவாக குறுகிய*காலத்தில் 4000 பதிவுகள்*என்கிற*சிகரத்தை*தொட்டதற்கும், தனியொரு*பதிவாளராக*தற்போது* இந்த பாகம் வேகமெடுத்து பயணிக்க காரணகர்த்தாவாக இருப்பதற்கும், பல்வேறு சுவையான*தகவல்களை*பகிர்ந்து வருவதற்கும் எனது இதயங்கனிந்த , பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.*இதன் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில்*99000 பதிவுகள்*என்கிற*நிலையை*எட்டுவதற்கு தங்கள் பங்கும் கணிசமாக உயர்ந்து வருவது குறித்து*மட்டற்ற மகிழ்ச்சி.* விரைவில் தங்களின் பதிவுகள்*5000என்கிற சிகரத்தை அடையவும், ஒட்டு மொத்தமாக 1,00,000 பதிவுகள்*என்ற நிலையை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* திரி*அடைவதற்கும் அட்வான்ஸ்*வாழ்த்துக்கள்.*
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks