-
4th July 2019, 10:52 PM
#491
Junior Member
Platinum Hubber
-
4th July 2019 10:52 PM
# ADS
Circuit advertisement
-
4th July 2019, 10:53 PM
#492
Junior Member
Platinum Hubber
-
4th July 2019, 10:55 PM
#493
Junior Member
Platinum Hubber
-
4th July 2019, 10:55 PM
#494
Junior Member
Platinum Hubber
-
4th July 2019, 10:58 PM
#495
Junior Member
Platinum Hubber
-
4th July 2019, 11:01 PM
#496
Junior Member
Platinum Hubber
நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பின் இடைவேளை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
-
4th July 2019, 11:03 PM
#497
Junior Member
Platinum Hubber
-
5th July 2019, 06:46 AM
#498
Junior Member
Diamond Hubber
மறு வெளியீடு காவியங்களின் வெற்றி வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "நாடோடி மன்னன்" , "அடிமைப்பெண்", மீண்டும் வலம் வருவது மிக்க மகிழ்ச்சி நம் பக்தர்களுக்கு......... என்றும் வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்.........
-
5th July 2019, 12:15 PM
#499
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ஒரு சிறிய தொகுப்பு உங்கள் பார்வைக்கு.....
1917. தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் பிறந்தார்
1920ம் ஆண்டில் தந்தை மருதூர் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார்.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
1940–ல் தனது 23 வயதில், தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.
1941ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு "அசோக்குமார்" படத்தின் மூலமாக கிடைத்தது.
1942. எம் ஜி ஆரின் முதல் மனைவி தங்கமணி இறப்பு &
எம்.ஜி.ஆர். சதானந்தவதி திருமணம் 1942ம் ஆண்டு ஆனி மாதம் 16ந்தேதி நடந்தது.
1946ல் பின்னணி பாடும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.
1947 முதல் கதாநாயகன் வேடம் : ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
1952. எம் ஜி யாருக்கு மிகவும் பிடித்த படமான "என் தங்கை" வெளியானது.
1956. எம் ஜி ஆர் பிக்சர்ஸ் துவக்கம்
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
1958 தனது முதல் தயாரிப்பான "நாடோடி மன்னன்" திரைப்படம் வெளியானது
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
1959. சீர்காழியில் "இன்பகனவு" நாடகத்தில் கால் முறிவு
1961. 50-வது படமான " நல்லவன் வாழ்வான் வெளியானது
1962. எம் ஜி ஆரின் இரண்டாவது மனைவி சதாந்தவதி மரணம் மற்றும் எம் ஜி ஆர் ஜானகி அம்மாள் திருமணம் ,
சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
1962 யுத்த நிதி அளித்தற்க்கு பிரதமரே கைபட எம் ஜி ஆருக்கு நன்றி கடிதம் எழுதினார்
1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1965இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
1966. "சமநீதி" பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.
1966 * அன்பே வா **- தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967 சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1967 எம் ஜி ஆர் எம் ஆர் ராதா அவர்களால் சுடப்பட்டார்.
1968. எம் ஜி ஆரின் 100-வது படமான "ஒளி விளக்கு" வெளிவந்தது
1971 . இந்தியாவின் சிறந்த நடிகர் எம் ஜி ஆருக்கு "பாரத்" விருது நல்கியது மத்திய அரசு
1969. எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவந்த படம் "அடிமைப் பெண்"
1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்*. -
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை துவங்கினார்.
@ சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
1973. எம் ஜி ஆரின் மூன்றாவது சொந்த தயாரிப்பில் வெளிவந்த படம் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியானது
1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
1974. கெளரவ டாக்டர் பட்டம் -
புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார்.
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்
1977. தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்றார்
1978. எம் ஜி ஆர் நடித்த கடைசி படம் " மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வெளிவந்தது.
1978 தேவரின் இல்லம் அமைந்திருந்த கோவை இராமநாதபுரத்திலிருந்து ந*ஞ்சுண்டாபுரம் ம*யானம் வ*ரை 3 கிலோ மீட்ட*ர் ந*ட*ந்தே வ*ந்து தேவ*ரின் இறுதி ஊர்வ*ல*த்தில் க*ல*ந்துகொண்டார். அனைத்து திரை ந*ட்ச*த்திர*ங்க*ளும் ந*ட*ந்தே சென்ற*ன*ர்.
1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக பதவி வகித்தார்.
1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
1982. சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது
1984. தலைவர் உடல் நிலை பாதிப்பு -
அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை.
1985 தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் , -
எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-85 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்
1986. மதுரையில் வெள்ளி செங்கோல் பரிசளிக்கபட்டது
1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார். -
1987 தமிழக முதல்வராக இருந்த போது மரணம் அடைந்தார்
1988. "பாரத் ரத்னா", விருது
1990. இந்திய தபால் துறை எம் ஜி ஆர் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
1996. ஜானகி ராமச்சந்திரன் மறைவு
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்..
இது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே..
விடுபட்ட செய்திகளை தெரியப்படுத்தவும்....
நன்றி.....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks wa.,
-
5th July 2019, 12:17 PM
#500
Junior Member
Diamond Hubber
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு மக்கள் திலகம்எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது.
மாலை அணிவிப்பதற்காக வந்தமக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படிமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.......... Thanks wa.,
Bookmarks