-
9th October 2019, 01:35 PM
#11
Senior Member
Devoted Hubber
Originally Posted by
SUNDARA PANDIYAN
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை
தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.
வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.
நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.
அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th October 2019 01:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks